தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

4 posters

Go down

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல் Empty கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 30, 2011 10:00 am

[You must be registered and logged in to see this image.]
""அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், கூடங்குளம் அணு உலைக்கு பிரிவினை சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணு உலையில், டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை துவக்கியிருக்கலாம். ஆனால், பிரிவினை சக்தி போராட்டங்களால், மின் நிலையத்திற்குள் செல்லவே முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும், அடிப்படைத் தேவைகளை சிரமப்பட்டு பராமரிக்கிறோம்.அணு உலையில், "ஹாட் ரன்' எனப்படும் தொழில்நுட்பப் பணி முடிந்ததால், அங்கு குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்கு தண்ணீர் சுழற்சி, மின்சாரம் மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகள் தேவை. இல்லையென்றால், குளிரூட்டும் இயந்திரத்தில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படும்.

வெளிநாட்டு சக்தி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாடுகளிலிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினரின் பின்னணியில், இந்த போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் பகுதியைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் வசிக்கும் பிரிவினை சக்திகள் உதயகுமார் என்பவரின் தலைமையில், அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சில கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அதை சேர்ந்தவர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.

நினைத்தவுடன் மூட கார் தொழிற்சாலையல்ல...
கூடங்குளம் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளன. மத்திய அணுசக்தி கமிஷன் மற்றும் ஒழுங்கு முறை கமிஷனின் வழிகாட்டுதல்படி, கூடங்குளத்தில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இது, பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க நடத்தப்பட்ட ஒத்திகை. ஆனால், பிரிவினை சக்திகள் இதை பயன்படுத்தி, அங்குள்ள கிராமங்களில், "மக்களை இங்கிருந்து காலி செய்து விடுவர்' எனக் கூறி, பீதியை ஏற்படுத்திவிட்டனர். இந்த உண்மைக்கு மாறான வதந்தியால் பீதியடைந்த மக்களை பயன்படுத்தி, போராட்டம் நடத்துகின்றனர். கூடங்குளத்தைச் சுற்றி 27 கிராமங்கள் உள்ளன. இதில், 22 கிராமத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்காமல், திட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர்.அணு உலையை பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் நிறுவவும், மூடவும் கார் தொழிற்சாலை கிடையாது. இதற்கென பல தொழில்நுட்பப் பணிகள் உள்ளன. ஒரு இடத்தில் அணு உலை நிறுவப்பட்டால், அதை பராமரிக்க மட்டுமே முடியும். மாறாக, நினைத்த நேரத்தில் மூட முடியாது. அவ்வாறு மூடினால், பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தற்போதைய நிலையில், அணு உலையை மூடுவதற்கு சாத்தியமே இல்லை.இவ்வாறு ஜெயின் கூறினார்.

மத்திய நிபுணர் குழுவுடன் அணு விஞ்ஞானிகள் ஆலோசனை *அடுக்கடுக்காக கேள்வி கேட்ட உறுப்பினர்கள்

கூடங்குளம் விவகாரத்தில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், இந்திய அணுமின் கழக தலைவர் ஜெயின், அணுசக்தி இயக்குனரக செயலர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பங்கேற்று, நிபுணர் குழுவின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்க, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்த 15 நிபுணர்கள் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து, கடலியல் மற்றும் விண்வெளித் துறை விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, வாழ்வியல் அறிவியல் துறை பேராசிரியர் சுகுமாறன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.இக்குழுவினரின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிபுணர் குழுவினர் அனைவரும் தனித்தனியாக அறிமுகம் செய்யப்பட்டனர்.இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையிலுள்ள இந்திய அணுமின் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி தொழில்நுட்ப இயக்குனர் பரத்வாஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, கூடங்குளம் அணு உலை குறித்து, நிபுணர் குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.

அணுமின் விஞ்ஞானிகளிடம் நிபுணர் குழுவினர், பொதுமக்களின் அச்சம் குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், தங்களது அச்சம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த மனுக்களின் பிரதிகள், ஒவ்வொரு நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்ட அச்சம் தொடர்பான பதில்களையும், அவை தொடர்பான ஆய்வு புத்தகங்கள், உலக அளவில் வெளியான குறிப்புகள் ஆகியவற்றின் நகல்களையும், அணுமின் கழக அதிகாரிகள், நிபுணர் குழுவினருக்கு வழங்கினர்.

இதுதொடர்பாக நிபுணர் குழுவினர், தாங்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகள் தொடர்பான காரணங்களுக்கு ஆய்வு செய்து, குறிப்புகள் தயார் செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசிடம் பேசி, விரைவில் மாநில கமிட்டி அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டியினரும் மத்திய நிபுணர் குழுவினருடன் இணைந்து செயல்படுவர் என, அணுமின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மீண்டும் அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும்.

முதல்வரை சந்திக்க முடியாத விஞ்ஞானிகள்:
கூடங்குளம் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, அணுமின் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்காததால், விஞ்ஞானிகள் காத்திருந்து விட்டு, மும்பைக்கு திரும்பி விட்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவது ஆபத்தை ஏற்படுத்தும் =இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி எச்சரிக்கை

""கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு, மின் உற்பத்திக்கான ஒத்திகை நடந்து வருகிறது. இந்த நேரத்தில், அணுமின் நிலையத்தை மூடினால், அது பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, அணுமின் நிலையம் செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. முதல் அணு உலையில், யுரேனியம் நிரப்பப்பட்டுவிட்டது. உயர் மின்அழுத்த இணைப்புக்களும் கொடுக்கப்பட்டுவிட்டன. தற்போது, அணு உலை இயக்கப்பட்டு, மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அணு மின் நிலையத்தை மூடுவது பேராபத்தை விளைவிக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், அணுமின் நிலையத்தை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து என்பது வதந்தி. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு தர முன்வர வேண்டும்,இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.

அசம்பாவிதம் தடுக்க தமிழக போலீஸ் பாதுகாப்பு தேவை:
கூடங்குளம் அணு உலையை நிறுத்த முடியாத அளவுக்கு, 99 சதவீத தொழில்நுட்ப பணிகள் முடிந்து விட்டன. ரியாக்டரை சுற்றி, குளிரூட்டு பணி நடக்கிறது. இதற்கு சீரான மின்சாரம், தொழில்நுட்ப கட்டுப்பாட்டு பணிகள், சுழற்சிமுறை நீர் வினியோகம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தேவை. ஆனால், இதை மேற்கொள்ள அணுமின் அதிகாரிகள், அணு உலை வளாகத்துக்குள் செல்ல முடியவில்லை.அவர்களது வாகனங்களை, அணு எதிர்ப்பாளர்கள் மறித்தனர். இதனால், கடந்த ஒரு வாரமாக விஞ்ஞானிகள், அணு உலை பகுதிக்குச் செல்லவில்லை. யுரேனிய எரிபொருள் இருப்பு வைக்கப்பட்ட நிலையத்திற்கு, அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அங்கு மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினரும் கண்காணிக்கின்றனர்.மாநில போலீசாரோ, நிர்வாகமோ இதை கண்டுகொள்ளவில்லை. உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், மாநில அரசுக்கும் சுற்றியுள்ள மக்களுக்கும் தான் பெரும் பாதிப்பு ஏற்படும். இதன் பின்விளைவுகளுக்கு, மாநில அரசு தான் முதல்கட்ட பொறுப்பு ஏற்கும் நிலை வரும்.எனவே, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையில் மாநில அரசு தலையிட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பாதையை மறிக்கும் எதிர்ப்பாளர்களை, பாதுகாப்பு கருதி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே, நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

-நமது சிறப்பு நிருபர்- நன்றி தினமலர்
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல் Empty Re: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

Post by அ.இராமநாதன் Sun Oct 30, 2011 10:29 am

(லண்டன் மாநகரம் நூற்றி இருபது வருடங்களுக்கு
முன் சகிக்க முடியாமல் இருந்தது. அவ்வளவு மாசு!
குதிரைகளின் சாணம் ஊரையே நாசமாகியது.

தொழிற்சாலைகளின் மாசு படு பயங்கரம்!
தேம்சு நதி கூவத்தை விட பல மடங்கு கொடுமை !
ஏறக்குறைய அந்த நாளைய எல்லா தொழில்
நகரங்களின் நலைமையும் இதேதான்.

ஆனால் அது நடந்ததால் தான் உலகம் அடுத்த
கட்டத்திற்கு வந்தது!

இந்தியர்களும் அடுத்த கட்டத்திற்கு வர வேண்டும்!

அதற்க்கு நமக்கு மின்சாரம் இப்போதைய தேவை!
அணு சக்த்தியை தள்ளி வைப்பதால் நஷ்டம்
எழைகளுக்குதான்!! )
-
=================================
>பதரி சேஷாத்ரி









அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல் Empty Re: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 30, 2011 10:45 am

இந்தியர்களும் அடுத்த கட்டத்திற்கு வர வேண்டும்!
ஆதரிக்கிறோம் இல்லை் என்று சொல்லவில்லை.

அதற்க்கு நமக்கு மின்சாரம் இப்போதைய தேவை!
அணு சக்த்தியை தள்ளி வைப்பதால் நஷ்டம்
எழைகளுக்குதான்!!

அதனால் ஆதரிக்கிறோம் இல்லை் என்று சொல்லவில்லை. ஆனாலும் எப்போதுமே எல்லாமே நஷ்டம் எழைகளுக்குதான்!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல் Empty Re: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

Post by thaliranna Sun Oct 30, 2011 9:17 pm

இதற்கு தீர்வுதான் என்ன? [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல் Empty Re: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum