தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
2 posters
Page 1 of 1
தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பிறகு, அவ்வப்போது சிறிய அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணியாற்றாத மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை சரிவர கையாளாதவர்கள் மாற்றப்படுவர் என்ற பேச்சு இருந்தது.
அதற்கேற்ப, அமைச்சரவையில் இருந்து ஆறு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்று, உத்தரவிட்டார். இவர்களுக்கு பதிலாக, ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் நாள், தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
போனது ஏன்? வந்தது ஏன்? தமிழக அமைச்சரவையிலிருந்து ஆறு பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கத்திற்கான காரணம் பல்வேறு யூகங்களை கிளப்பிவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று பதவியேற்ற ஐந்து மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் பெரியளவில் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார்சிக்கலான
சட்டம்: மே மாதம் அமைச்சரவை பதவியேற்றபோது, சட்டத்துறை அமைச்சராக இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஒரு மாதமே பதவி வகித்தார். ஜூன் மாதம் இவர் பதவி இழந்தார். இவர் வகித்த சட்டத்துறை இலாகா, செந்தமிழன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, செந்தமிழனும் பதவி இழந்துள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும், தி.நகரில் போலீசார் கைது செய்த கட்சி தொண்டர்களை விடுவிக்கும்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சி தொண்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில், இவரது தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ள விவகாரம், ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி இடைத்தேர்தலில், சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை என்பதோடு, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது புகார்கள் எழுந்ததன் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காரணங்களால் சிவபதி பதவி இழந்ததாக கூறப்படுகிறது.
தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், திருச்சி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க பெரியளவில் பேனர்களை வைத்து, ஜெ.,யின் கண்டிப்புக்கு உள்ளானார். மேலும், இவரது குடும்பத்தார் மீது ஊழல் புகார்கள் கட்சிக்கு தலைமைக்கு சென்றதும் காரணமாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியில் அனுபவம் மிக்கவர்களை புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
நீலகிரியை சேர்ந்த புத்திசந்திரன் செயல்பாடு குறித்து மாவட்ட அளவில் கடும் அதிருப்தி நிலவியது.
சண்முகவேலுக்கு இரண்டு முறை இலாகா மாற்றியும், நிர்வாகத்திறன் குறைவாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்களின் செயல்பாடு, நிர்வாக ரீதியாக சரியாக இல்லை என்ற புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
வந்தது ஏன்? சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார். இவர், ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு அறநிலையத்துறை கிடைத்துள்ளது என, ஸ்ரீரங்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பரமக்குடியில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில், பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ், அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.
திடீர் அறிவிப்புக்குகாரணம் என்ன?தமிழக அமைச்சரவை மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இருப்பினும், கலெக்டர்கள் மாநாட்டிற்கு பின்புதான் அறிவிப்பு வரலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால், நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் பலரும், மழைசேத பகுதிகளை பார்வையிட சென்று இருந்தனர். சிலர், இப்படியொரு அறிவிப்பு வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று மதியம், சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தொடர்ந்த மனு மீதான தீர்ப்பும் வந்தது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தடைவிதிக்கக் கோரி ஜெ., தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த இரு தீர்ப்பும், தமிழக அரசுக்கு எதிராக அமைந்தது.
இந்நிலையில் இந்த செய்திகள் மீடியாக்களில் பிரதானமாக இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்தது. இதையடுத்து, "டிவி' சேனல்கள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கின. இந்த அறிவிப்பை மதியமே வெளியிடப்பட இருந்தது. இருப்பினும், எந்த அறிவிப்பாக இருந்தாலும், நல்ல நேரம் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். அந்த வகையில் நேற்று நவமி, மாலை 4 மணிவரை இருந்ததால், அதன் பிறகே 6 அமைச்சர்கள் நீக்கம், மற்றும் புதிய அமைச்சர்கள் சேர்ப்பு அடங்கிய பட்டியல், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
நன்றி தினமலர்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பிறகு, அவ்வப்போது சிறிய அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணியாற்றாத மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை சரிவர கையாளாதவர்கள் மாற்றப்படுவர் என்ற பேச்சு இருந்தது.
அதற்கேற்ப, அமைச்சரவையில் இருந்து ஆறு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்று, உத்தரவிட்டார். இவர்களுக்கு பதிலாக, ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் நாள், தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
போனது ஏன்? வந்தது ஏன்? தமிழக அமைச்சரவையிலிருந்து ஆறு பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கத்திற்கான காரணம் பல்வேறு யூகங்களை கிளப்பிவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று பதவியேற்ற ஐந்து மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் பெரியளவில் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார்சிக்கலான
சட்டம்: மே மாதம் அமைச்சரவை பதவியேற்றபோது, சட்டத்துறை அமைச்சராக இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஒரு மாதமே பதவி வகித்தார். ஜூன் மாதம் இவர் பதவி இழந்தார். இவர் வகித்த சட்டத்துறை இலாகா, செந்தமிழன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, செந்தமிழனும் பதவி இழந்துள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும், தி.நகரில் போலீசார் கைது செய்த கட்சி தொண்டர்களை விடுவிக்கும்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சி தொண்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில், இவரது தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ள விவகாரம், ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி இடைத்தேர்தலில், சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை என்பதோடு, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது புகார்கள் எழுந்ததன் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காரணங்களால் சிவபதி பதவி இழந்ததாக கூறப்படுகிறது.
தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், திருச்சி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க பெரியளவில் பேனர்களை வைத்து, ஜெ.,யின் கண்டிப்புக்கு உள்ளானார். மேலும், இவரது குடும்பத்தார் மீது ஊழல் புகார்கள் கட்சிக்கு தலைமைக்கு சென்றதும் காரணமாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியில் அனுபவம் மிக்கவர்களை புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
நீலகிரியை சேர்ந்த புத்திசந்திரன் செயல்பாடு குறித்து மாவட்ட அளவில் கடும் அதிருப்தி நிலவியது.
சண்முகவேலுக்கு இரண்டு முறை இலாகா மாற்றியும், நிர்வாகத்திறன் குறைவாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்களின் செயல்பாடு, நிர்வாக ரீதியாக சரியாக இல்லை என்ற புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
வந்தது ஏன்? சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார். இவர், ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு அறநிலையத்துறை கிடைத்துள்ளது என, ஸ்ரீரங்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பரமக்குடியில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில், பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ், அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.
திடீர் அறிவிப்புக்குகாரணம் என்ன?தமிழக அமைச்சரவை மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இருப்பினும், கலெக்டர்கள் மாநாட்டிற்கு பின்புதான் அறிவிப்பு வரலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால், நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் பலரும், மழைசேத பகுதிகளை பார்வையிட சென்று இருந்தனர். சிலர், இப்படியொரு அறிவிப்பு வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று மதியம், சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தொடர்ந்த மனு மீதான தீர்ப்பும் வந்தது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தடைவிதிக்கக் கோரி ஜெ., தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த இரு தீர்ப்பும், தமிழக அரசுக்கு எதிராக அமைந்தது.
இந்நிலையில் இந்த செய்திகள் மீடியாக்களில் பிரதானமாக இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்தது. இதையடுத்து, "டிவி' சேனல்கள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கின. இந்த அறிவிப்பை மதியமே வெளியிடப்பட இருந்தது. இருப்பினும், எந்த அறிவிப்பாக இருந்தாலும், நல்ல நேரம் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். அந்த வகையில் நேற்று நவமி, மாலை 4 மணிவரை இருந்ததால், அதன் பிறகே 6 அமைச்சர்கள் நீக்கம், மற்றும் புதிய அமைச்சர்கள் சேர்ப்பு அடங்கிய பட்டியல், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கம்
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
» மண்ணைக் கவ்வும் மந்திரிகள்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
» மண்ணைக் கவ்வும் மந்திரிகள்
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|