தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மழலைகள் உலகம் மகத்தானது

4 posters

Go down

மழலைகள் உலகம் மகத்தானது  Empty மழலைகள் உலகம் மகத்தானது

Post by kowsy2010 Sat Nov 19, 2011 3:48 am

தேன் வந்து காதில் பாய
சிந்திய சிரிப்பில் எந்தனை மறந்து – என்
இதழ்கள் என்னை அறியாது விரிய
இதயப் பெட்டகம் இன்ப அருவியில்
மூழ்கிப் பெருக்கெடுத்து
ஓடியது[/center][/center]
[/center]
வான் மழையில் நனைந்தால் குளிர் எடுக்கும் மழலை மொழியில் நனைந்தால் சுவை எடுக்கும். தேன்சுவை மிகைப்படின் திகட்டும். மழலைத்தேன் மிகைப்படத் தித்திக்கும்.

கவிதையும் காவியமும் இலக்கியமும் படைக்கப்படலாம் அவற்றில் சுவை ததும்பும். ஆயினும் சிறுகுழந்தை தனது குரலெடுத்து உதிர்க்கும் வார்த்தைகள், இதயத்தில் இன்ப உணர்ச்சியை தூண்டி கவலைக்கு விடைகொடுக்கும்.

உயர்ந்த கருத்தை ஏற்க உள்ளம் ஒன்றி நிற்க வேண்டும். ஆனால், மழலை மொழி தானாகவே செவிபுலன்களைக் கவர்ந்துவிடும். எவ்வளவோ பரபரப்பான வேலையின் ஈடுபாட்டையும் குறைத்துவிடும். உடம்பின் இரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் அனைத்தையும் ஒருவகை ஒழுங்குமுறைக்கு இயைபுபடுத்தி இயங்க வைக்கும் சக்தி மழலைமொழிக்கு உண்டு. குழலிசையிலும் குயிலிசையிலும் அருவி இசையிலும் கேட்டுணர முடியாத ஒரு நுண்ணிய வேறுபாட்டை மழலைமொழியில் காண்கின்றேன்.

எவ்வாறு மழலைமொழியில் மகத்தான சக்தி படைக்கப்பட்டுள்ளது. அடிக்க உயர்த்திய கைகளையும் அணைக்க வைக்கும் அபாரசக்தி அதற்குண்டு. அம்மா என வாயெடுத்து முதல்மொழி தொடுக்க இதயராகம் இன்பஇசை மீட்டத்தொடங்கும். சொல் இணைத்து வாக்கியம் வடிக்க சுவை தொடராய் வடிந்து வரும். களங்கமில்லா மனதிற்கு எடுத்துக்காட்டு அவர்கள் எண்ணங்களில் வடிக்கும் சொல்லோவியம். குழந்தைகள் வளர்கின்ற போது அவர்கள் எண்ணங்களில் வில்லங்கம் தோன்றும் போதுதான் குரலிலும் கரகரப்பும் மாற்றங்களும் ஏற்படுகின்றது போலும்.

மழலை மொழியில் மயங்கி நிற்கும் யாம், அதன் அழகுச் சிரிப்பில் மதிமயங்கி நிற்பது ஒன்றும் வேடிக்கை இல்லையே. இங்கு நான் தந்திருக்கும் கிளிப்பை அழுத்திப் பாருங்கள். ஒரு சில நிமிடங்கள் உங்களை மறக்கின்றீர்கள் அல்லவா? உங்களை அறியாமலே உங்கள் உள்ளங்களும் உதடுகளும் சிரிக்கின்றன அல்லவா? இந்த அபார சக்தியை என்னென்று யாம் அழைப்பது. இவ்வாறான மழலைகள் உலகத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் என் பறக்கும் முத்தங்களைப் பறக்கவிடுகின்றேன்.

இவ்வாறான சக்தி படைத்த குழந்தைகளில் சில, குமரனாய், குமரியாய், முழுமனிதனாய் மாறுகின்ற போது குணநலன்கள், போக்குகள், பேச்சுகள், நடத்தைகள் அனைத்தும் மாறுபட்டு சில சமயங்களில் பெற்றோரால் தாக்குப்பட்டு சில சமயங்களில் மற்றோரால் ஏச்சுப்பட்டு, உலகப்பார்வையில் ஓரங்கட்டப்படுகின்றமைக்கு யார் காரணம்? கள்ளங்கபடமற்ற பிஞ்சு உள்ளம் கள்ளம் நிறைந்த வஞ்ச உள்ளமாய் வடிவெடுப்பதற்கு யார் காரணம்? எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் உலகில் அவதரிக்கும் குழந்தை மூளை என்னும் பாத்திரத்தில் நிரப்புகின்ற அநுபவ உணவுகள்தான் எவை?

குழந்தையாய் தவளும்போது அன்பாய் அனைத்த பெற்றோர், அக்குழந்தை வளருகின்ற போது தமது பல அபிலாசைகளை அக் குழந்தைமேல் புகுத்துகின்றனர். வயலின் இசையைப் பிள்ளை இரசிக்கின்றதா? அநுபவிக்கின்றது? முழு ஈடுபாட்டுடன் அவ் இசையில் இருக்கின்றதா? என்பதைப் பரிசீலனை செய்யாமலே அப்பிள்ளை வயலின் வித்துவானாய் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் போது வீட்டில் சிக்கல் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு முடிகின்றது உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை? என்றால், அப்பிள்ளை வேறு இப்பிள்ளை வேறு என்று பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவதில்லை. இங்கு பெற்றோரின் முதல் தவறு தென்படுகின்றது. ஒரு பிள்ளையுடன் தன் பிள்ளையை ஒப்பீட்டுப் பார்க்கும் போது பிள்ளையின் மனதில் வஞ்சனை வளர்கிறது. பெற்றோரின் நிராகரிப்பும், காட்டும் வெறுப்பும் பிள்ளையின் நடத்தையைச் சீர்குழைக்கும் என்பதும் உண்மையே.

நல்ல வளர்ப்பு முறையில் வளருகின்ற பிள்ளை தவறுகளைச் சந்திக்கின்றது என்றால், அங்கு சூழலும் நட்பும் ஆட்சி புரிகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூழல் பிள்ளையின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்றால், பெற்றோர் சூழலை மாற்றுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பிள்ளையின் சுதந்திரத்தைக் அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதை விட்டு அவர்கள் போக்கில் சென்று மனமாற்றத்தை ஏற்படுத்தும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும். சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல, அதன் பொருளுக்கேற்ற வலிமையும் இருக்கின்றது. இதைத்தான் கட்டுரைத்தல் என்பார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளைச் சரியாக அறிந்து கொள்ளாததும், அவர்களை மதிக்காததும், அவர்கள் நிலையில் மாறுதல் காணப்படுவதற்குக் காரணமாகின்றது. அவர்களைப் போற்றிப்பாருங்கள். சொற்களின் வலிமையைப் புரிந்து கொள்வீர்கள். மனமானது ஒரு சக்தி நிலையம். அதன் சக்தியை அதிகப்படுத்துவதும் குறைப்பதும் பெற்றோர் கையிலேயே தங்கியுள்ளது. இளம்வயதிலே குற்றவாளிகள் உருவாகுவதற்கு பாரம்பரியம், சுற்றப்புற சூழல், உடல் அமைப்புக் குறைபாடு, மூளையில் ஏற்படும் இரசாயணப் பொருள்களின் மாற்றங்கள் போன்றவையும் பொதுக் காரணங்களாக அமைகின்றன. இவற்றிலும் கூடிய அக்கறை காட்ட வேண்டியது வளர்ந்தோர் கடமையாகும்.
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றோரில் சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது.


avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

மழலைகள் உலகம் மகத்தானது  Empty Re: மழலைகள் உலகம் மகத்தானது

Post by அ.இராமநாதன் Sat Nov 19, 2011 7:40 am

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல.
பெற்றேரில் சிலர்...
பெற்றோரில் என திருத்துக..
-
மழலைகள் உலகம் மகத்தானது  548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மழலைகள் உலகம் மகத்தானது  Empty Re: மழலைகள் உலகம் மகத்தானது

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 19, 2011 10:02 am

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றோரில் சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது.
- உண்மைதான். விழிப்புணர்வு

பாராட்டுகள் KOWSY2010
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

மழலைகள் உலகம் மகத்தானது  Empty Re: மழலைகள் உலகம் மகத்தானது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 19, 2011 11:29 am

திருத்தம் செய்துள்ளேன் ஐயா...

ரொம்ப அருமையான விழிப்புணர்வு பகிர்வு... பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மழலைகள் உலகம் மகத்தானது  Empty Re: மழலைகள் உலகம் மகத்தானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum