தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

யாருமில்லை என்றான போது !  நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Mar 20, 2012 10:38 am

யாருமில்லை என்றான போது !

நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்

விலை ரூபாய் 75 . நந்தினி பதிப்பகம் கோவை

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இது வெறும் கவிதை நூல் அல்ல .ஈழத்தின் உரிமைக் குரல்
.புத்தக வடிவில் உள்ள கேள்விக் கணைகள் .நூலைப் படித்து முடித்தவுடன் நூல்
ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுடன் செல்லிடப் பேசியில்
பாராட்டி விட்டு நீங்கள் ஈழத் தமிழரா ?என்று கேட்டேன். அவர் இல்லை நான்
கோவையில் பிறந்த தமிழ் நாட்டுத் தமிழர் .என்றார் .மதுரையில் உள்ள
பேராசிரியர் முனைவர் இ .கி .
ராமசாமி அவர்களின் வகுப்புத் தோழர் என்றார் .இந்த நூலை எனக்கு அறிமுகம் செய்தவர் முனைவர் இ .கி .ராமசாமி.
அச்சாகி வெளி வந்தவுடன் நான் அனுப்பும் முதல் நூல் இது .கெழுதகை நண்பர்
இ .கி .ரா .அவர்களுக்கு என்று
எழுதிய காரணத்தால் முனைவர். இ .கி .ராமசாமி அவர்கள் ,நூலை எனக்கு
அனுப்பாமல், படி எடுத்து அனுப்பி வைத்தார்கள் விமர்சனத்திற்கு.
புகழ்ப் பெற்ற கவிஞர்களான சிற்பி ,தமிழன்பன், புவியரசு ஆகியோரின் அணிந்துரை கவிதை நடையிலேயே மிகச் சிறப்பாக உள்ளது .


சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியபின் இன்று உலகம் அறிந்தது
ஈழப்படுகொலையை .அனால் அன்றே இன உணர்வாளர்கள் பலர் குரல் கொடுத்தப்
போதும். இந்த உலகம் குறிப்பாக நம் நாடு கண்டு கொள்ள வில்லை .வேடிக்கை
பார்த்த குற்றவாளிகளின் கன்னத்தில் அறைவதுப் போல இந்த நூல் கவிதைகள் உள்ளது
.உள்ளத்து உணர்வை ,கொதிப்பை ,கோபத்தை ,மனித நேயத்தை கவிதையாக்கி உள்ள
நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .இவரது இயற்ப்பெயர் சந்திர சேகர் .ஈழத் தமிழருக்கு நடந்த கொடுமைகள் கண்டு குமுறும் எரிமலையாக் கவிதை வடித்துள்ளார் .



யாருமில்லை என்றான போது என்ற இந்த நூலை ஈழத் தமிழரைக் காக்க யாருமில்லை என்றான போது தமிழ் இனத்தையே கொன்று குவித்த கொடூரத்தை சுட்டும் விதமாக உள்ளது .

என்ன செய்வதாக !

அடக்கினீர்கள் , ஒடுக்கி
னீர்கள், பறித்தீர்கள்
எரித்தீர்கள் , வெட்டி
னீர்கள் ,விரட்டினீர்கள்
சுட்டீர்கள் ,அழித்தீர்
கள் இன்னும்
என்னவெல்லாமோ செய்தீர்கள்
நாங்கள் அப்படியே இருக்கிறோம்
நாங்கள் இன்னும் வலுவாக இருக்கிறோம் !

ஈழத் தமிழரின் விடுதலைக்கான உரிமைக் குரலாகவே ஒலிக்கின்றது கவிதைகள் !

சாதல் என்பது வாழ்தல் !

நாங்கள் செத்துக் கொன்
டிருந்ததாலேயே
நாங்கள் செத்துப் போனோம் என்பதல்ல பொருள்
நாங்கள் சாகவில்லை என்பது பொருள்
உங்களால் அழிக்க முடியாது என்று
பொருள்
நாங்கள் வலிமையாக எழுவோம் என்பது
பொருள்

எல்லாம் நல்லபடியாக !

எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன
சாமியார்கள் பஜனை செய்து
கொண்டிருக்கிறார்கள்
நடிகைகள் காதல் காட்டிக்
கொண்டிக்கிறார்கள்
தலைவர்கள் மேடை
ளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்
முதலாளிய நிறுவனங்கள் கொழுத்துக்
கொண்டிருக்கின்றன
அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கிறார்கள்
சாராயக் கடைகள் கோயில் குளங்கள் கடைத் தெருக்கள்
விளையாட்டுக்களங்கள் இன்னும்
இன்னும் எல்லாமும்
ல்லபடியாகவே நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன
எங்களையும் கொன்று
கொண்டிருக்கிறார்கள்
நாங்களும் செத்துக்
கொண்டிருக்கிறோம்
நீங்களும் பார்த்துக்
கொண்டிருங்கள் நல்லபடியாக !


ஈழத் தமிழர் படுகொலையின் பொது எனக்கென்ன என்று சராசரி வாழ்க்கை
வாழ்ந்து கொண்டு இருந்த தமிழ்நாட்டுத் தமிழரின் நிலையைப் படம்
பிடித்துக் காட்டி உள்ளார்
.நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம் .

இங்குள்ள உண்மையான தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் ,மனித நேயம் மிக்கவர்கள் ஈழத்
தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர் .
ஆனால் ஒரு சில அரசியல் வாதிகள் முதலை
கண்ணீர் வடித்து நாடகம் நடத்தினார்கள் .அதனை குறிப்பிடும் கவிதை இதோ !

அறிவிப்பு வேண்டாம் என அறிவிப்பு !

உங்களிடம் ஒரு வேண்டுகோள்
எங்களுக்கு உதவுவதாக அறிவிக்காதீர்கள்
எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவிக்காதீர்கள்
நாங்கள் உங்கள் இனம் என்று
எங்களுக்காக
ப் போராடுவதாக அறிவிக்காதீர்கள்
அறிவிப்பு என்ற சொல்லே எங்களுக்கு
அருவெறுப்பாக இருக்கிறது .

ஈழத் தமிழரின் உள்ளக் குமுறலை ஈழத் தமிழர்
கூற்றுப் போலவே கவிதையைப் பதிவு செய்துள்ளார் .இலங்கையில் தமிழினம் அழிய எல்லா உதவிகளும் செய்துவிட்டு இன்று அமைதி
மறுவாழ்வு என்று போலி வசனம் பேசும் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும்
வண்ணம் கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
அமைதியின் பெயர்
நல்லது
எங்கள் சாம்பல் காடுகளுக்கு இனி
உணவு கொடுக்கலாம் உடை கொடுக்கலாம்
அமைதி வந்துவிட்டது எனவே எல்லாமே தரலாம்
!

அயல் நாட்டில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி இன்று உலகிற்கு அம்பலப் படுத்து உள்ளது .ஆனால் தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் ஈழச் செய்தி வர விடாமல் கவனமாக இருந்து தமிழ் இனத் துரோகம் செய்ததை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது .



ஈழத் தமிழர்கள் என்ன கேட்டார்கள் விடுதலை கேட்டார்கள் .விடுதலை கேட்பது குற்றமா ? காந்தியடிகள் விடுதலை கேட்டது குற்றமா ? சிந்திக்க வைக்கும் கவிதைகள் நூலில் உள்ளது .

நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு ஒரு வீடு ஒரு நாடு
நாங்கள் பேசுவதற்கு ஒரு மொழி ஒரு இனம்
நாங்கள் உழைப்பதற்கு ஒரு நிலம்
நாங்கள் உண்பதற்கு ஒரு கவளம்
நாங்கள் மூச்சு விட வேண்டும் அதற்காக ஒரு உரிமை

மக்கள் அற்ற தேசம் !

யுத்தம் முடிந்துவிட்டது அமைதி வந்துவிட்டது
கலவரங்கள் அடங்கி விட்டன
கொல்லப் பட்டவர்கள் எரிந்த நெருப்பின் வாசம்
திசைகள் முழுவதும் வெப்பமாகக் கவிழ்ந்திரு
ந்தது !

இப்படி நூல் முழுவதும் இலங்கையில் நடந்த கொடூரத்தை கவிதைகளால் படம்
பிடித்துக் காட்டி உள்ளார் .மனித நேயத்துடன் ஒரு படைப்பாளியின் கடமையை மிக
சிறப்பாகச் செய்துள்ளா
ர்.பாராட்டுக்கள் .தமிழ் இனத்தை திட்டமிட்டு கொடூரமாக அழித்த இலங்கைக் கொடூரன் ராஜபட்சே
உலக அரங்கில் தண்டிக்கப் படும் நாளை ,இந்த நூல் ஆசிரியர் உள்பட உலகத்
தமிழர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து உள்ளோம் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

யாருமில்லை என்றான போது !  நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 20, 2012 2:26 pm

யாருமில்லை என்றான போது !  நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
»  எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum