தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
+2
கவியருவி ம. ரமேஷ்
yarlpavanan
6 posters
Page 1 of 1
புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே! மரபுக் கவிதையில் முதலடியில் தொடங்கிய சீரும் ஈற்றடியில் முடியும் சீரும் ஒன்றாக அமைதலையே அந்தாதி என்கிறார்கள். அதாவது, முடிகின்ற சீராலே தொடங்கியோ தொடக்கிய சீராலே முடித்தோ பா புனையும் திறன் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்றழைக்கப்படுகிறது. மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல, அதிலும் இவ்வகைப் பாக்களை புனைவது இலகுவாக அமைய வாய்ப்பில்லை.
புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை தொடங்கிய சீரில் ஈற்றுச் சீர் அமையும் வண்ணம்(அதாவது தொடங்கிய சொல்லாலே முடித்து) முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாப்புனைய முயன்று பாருங்களேன். வழமை போல எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாக்களைப் புதுக்கவிதையில் புனையும் போதும் வெற்றி கிட்டும். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து நினைத்து
படித்தபின் மறந்து மறந்து
பயன்படுத்த முனையும் போதுதான்
பயனீட்ட மறந்ததை நினைவூட்டி
படித்தவர்களைப் பார்த்துப் படிக்க!
"அந்தாதி கவிதை - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்" என்ற பதிவுக்கு வழங்கிய கருத்தில் சில மாற்றங்களைச் செய்து இப்பதிவை ஆக்கியுள்ளேன்.
புதுக்கவிதை விரும்பிகள் பலர் மரபுக் கவிதை அமைப்பைப் பேணி வருவதை நாம் அறிவோம், அந்த வகையில் புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே! வழமை போன்று புதுக்கவிதை புனையும் வேளை தொடங்கிய சீரில் ஈற்றுச் சீர் அமையும் வண்ணம்(அதாவது தொடங்கிய சொல்லாலே முடித்து) முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாப்புனைய முயன்று பாருங்களேன். வழமை போல எதுகை, மோனை அமையப் பாப்புனைந்தால் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பாக்களைப் புதுக்கவிதையில் புனையும் போதும் வெற்றி கிட்டும். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து நினைத்து
படித்தபின் மறந்து மறந்து
பயன்படுத்த முனையும் போதுதான்
பயனீட்ட மறந்ததை நினைவூட்டி
படித்தவர்களைப் பார்த்துப் படிக்க!
"அந்தாதி கவிதை - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்" என்ற பதிவுக்கு வழங்கிய கருத்தில் சில மாற்றங்களைச் செய்து இப்பதிவை ஆக்கியுள்ளேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
மரபுக் கவிதை புனைவது இலகுவானதல்ல என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனாலும் நாம் எளிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம் என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். மரபில் நமக்கு இப்போது பயிற்சியும் முயற்சியும் இன்மை இதற்குக் காரணமாகலாம்.
நான் தமிழ் இலக்கியம் பயின்றவன் என்ற போதிலும் நான் மரபில் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன் என்பது உண்மையே. எனக்கு - என் புதுக்கவிதை வகைமைகளுக்கு புதுக்கவிதை வடிவமே போதுமானதாக இருப்பதும் காரணமாகலாம்.
நண்பர்கள் எழுதுவார்கள்... தங்களுக்கும் எழுதுபவர்களுக்கும் பாராட்டுகள்.
நான் தமிழ் இலக்கியம் பயின்றவன் என்ற போதிலும் நான் மரபில் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன் என்பது உண்மையே. எனக்கு - என் புதுக்கவிதை வகைமைகளுக்கு புதுக்கவிதை வடிவமே போதுமானதாக இருப்பதும் காரணமாகலாம்.
நண்பர்கள் எழுதுவார்கள்... தங்களுக்கும் எழுதுபவர்களுக்கும் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா?
நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க
உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு
மென்பொருள்.
இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும்
அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும்
திறன் கொண்டது.
கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை
பதிவிறக்கிக்கொள்ளலாம்.
நன்றி: இணையம்
-
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க
உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு
மென்பொருள்.
இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும்
அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும்
திறன் கொண்டது.
கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை
பதிவிறக்கிக்கொள்ளலாம்.
நன்றி: இணையம்
-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மூவருக்கும் எனது நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
கவியருவி ம. ரமேஷ், அ.இராமநாதன் ஆகியோரது கருத்துக்கள் பயன்தரும் தகவல். thaliranna, தமிழ்த்தோட்டம் (யூஜின்) ஆகியோரது கருத்துக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும். இதோ இன்னோர் எடுத்துக்காட்டு:
தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!
தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
இதில் எப்படி தொடங்கவேண்டும் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
மக்களுக்குள்ளே தப்பிக்க இயலாதப்பா
ஹிஷாலீ wrote:இதில் எப்படி தொடங்கவேண்டும் நண்பரே
முதலில் பாவின் தலைப்பைத் தேர்ந்தெடுங்கள்.
எடுத்துக்காட்டாக:
"மக்களுக்குள்ளே தப்பிக்க இயலாதப்பா" என்பதைத் தலைப்பாகக் கொள்ளுங்கள்.
புதுக்கவிதையை எழுத முன் கற்பனை செய்வோம்...
மக்கள் முன்னே நம்மாளுகள் தவறு செய்து போட்டுத் தப்பிக்க இயலாது என்பதை விளக்குவதாக இருக்கட்டும்.
மக்கள்............
..........................
.............மக்கள்
என்றவாறு முதற் சீரிலும் ஈற்றுச் சீரிலும் "மக்கள்" என்றமையப் புதுக்கவிதையைப் புனையத் தொடங்குவோம்.
மக்கள் முன்னே
நம்மாளுகள் எப்படி நடித்தாலும்
"என்ன தவறு செய்தனர்
இப்படி நடிக்கிறார்களே" என்று
தவறையும் தவறிழைத்தவர்களையும்
எப்படியோ
கண்டுபிடிப்பவர்கள் நம் மக்கள்!
இவ்வாறு புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய ஒரு புதிய பார்வையை எனது பதிவு ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன். மரபுக் கவிதையின் இறுக்கம் புதுக்கவிதையில் இல்லை. ஆயினும் புதுக்கவிதையில் முடிவுத் தொடங்கி (அந்தாதி) என எழுத விட்டால் ஓர் இறுக்கம் பேணலாம் என்பதற்காக "முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும்." எனச் சில எடுத்துக் காட்டுகளை முன்வைத்திருந்தேன்.
அறிஞர் ஒருவர் முடிவுத்தொடங்கி(அந்தாதி) இதுவல்ல. "முதற் பாட்டின் ஈற்றுச் சீரும் அடுத்த பாட்டின் முதற் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும்." என விளக்கமளித்தார். அவரது கருத்தில் தவறில்லை. எனது முயற்சி தான் புதியது. எப்படியாயினும் புதிய பாவலர்களுக்கும் வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த இது பற்றிய நிறைவான தகவலைக் கீழே தருகின்றேன்.
"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்." என்பதற்கு [You must be registered and logged in to see this link.] என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.
முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது மரபுக்கவிதை அமைப்பாகும். அது
பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக:
ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி
மரபுக்கவிதையில் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது எப்படியிருக்கும் என்பதை அறிய [You must be registered and logged in to see this link.] தளத்தில் அறிஞர் இளம்பூரணர் அவர்களின் விளக்கத்தை போட்டிருந்தார்கள். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி
மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.
1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.
3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.
அறிஞர் ஒருவர் முடிவுத்தொடங்கி(அந்தாதி) இதுவல்ல. "முதற் பாட்டின் ஈற்றுச் சீரும் அடுத்த பாட்டின் முதற் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும்." என விளக்கமளித்தார். அவரது கருத்தில் தவறில்லை. எனது முயற்சி தான் புதியது. எப்படியாயினும் புதிய பாவலர்களுக்கும் வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த இது பற்றிய நிறைவான தகவலைக் கீழே தருகின்றேன்.
"ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்." என்பதற்கு [You must be registered and logged in to see this link.] என்னும் விக்கிப்பீடியா தமிழ்ப் பதிப்பில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.
முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது மரபுக்கவிதை அமைப்பாகும். அது
பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக:
ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி
மரபுக்கவிதையில் முடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது எப்படியிருக்கும் என்பதை அறிய [You must be registered and logged in to see this link.] தளத்தில் அறிஞர் இளம்பூரணர் அவர்களின் விளக்கத்தை போட்டிருந்தார்கள். அதனைக் கீழே தருகின்றேன். அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே
மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி
மரபுக்கவிதையில் பேணப்படும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய தெளிவைப் பெற்ற உங்களுக்கு அதிகம் பேசப்படும் பக்திப் பாடல்களில் 'அபிராமி அந்தாதி' ஐ மறந்திருக்க மாட்டியள். அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக அதில் முதல் மூன்று பாடல்களைத் தருகின்றேன்.
1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.
3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) எழுத முயற்சி செய்யும் போது சற்று இறுக்கமாகப் புனைவீர்கள் என நம்புகின்றேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
நினைவு வந்து கொஞ்சும்
கொஞ்சும் நினைவுகள் கெஞ்சும்
கெஞ்சும் பாசத்தில் நீடிக்கும்
நீடித்திருக்கும் நம் காதல்
காதல் ஓய்ந்ததில்லை
இல்லை என்ற காதலிலும் நினைவு
நண்பரே... இது எப்படி இருக்கிறது?
கொஞ்சும் நினைவுகள் கெஞ்சும்
கெஞ்சும் பாசத்தில் நீடிக்கும்
நீடித்திருக்கும் நம் காதல்
காதல் ஓய்ந்ததில்லை
இல்லை என்ற காதலிலும் நினைவு
நண்பரே... இது எப்படி இருக்கிறது?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: புதுக்கவிதையிலும் முடிவுத்தொடங்கி(அந்தாதி) புனையலாமே!
கவியருவி ம. ரமேஷ் wrote:நினைவு வந்து கொஞ்சும்
கொஞ்சும் நினைவுகள் கெஞ்சும்
கெஞ்சும் பாசத்தில் நீடிக்கும்
நீடித்திருக்கும் நம் காதல்
காதல் ஓய்ந்ததில்லை
இல்லை என்ற காதலிலும் நினைவு
நண்பரே... இது எப்படி இருக்கிறது?
சிறந்த அந்தாதித் தொடை
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Similar topics
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|