தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு.. (கவிதை) வித்யாசாகர்!
3 posters
Page 1 of 1
ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு.. (கவிதை) வித்யாசாகர்!
1
உள்ளூர இருக்கிறது அந்த வலி
தாய்வீடு பற்றி -
பெண்களைப்போல ஆண்களுக்கும்;
என்னதான் உயிரோடு ஒன்றினாலும்
தேனில் கலக்கும் கசப்புபோல்
கலந்துதான் போகிறது அந்த விஷம்,
என் அப்பா என் அம்மா
என் வீடென – என்னதான் பார்த்தாலும்
தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு
முன்னதாகியே விடுகிறது;
அதுசரி, அக்கறைதானே என்றுதான்
விட்டுவிட்டேன் நானும், அதனாலோ என்னவோ
என் வீட்டு உறவுகளின்னும்
பிரிந்தேக் கிடக்கின்றன!!
-----------------
2
நீ செருப்பு வாங்கிக் கொண்டாய்
உன் தங்கைக்கும்
சேர்த்து நான் வாங்கினேன்,
உனக்கென ஒரு
புடவை எடுத்துக் கொண்டாய்
உன் அம்மாவிற்கும் ஒரு புடவை எடுத்தேன்,
அப்பாவிற்கு வேட்டியும் சட்டையும்
வேண்டுமென்றார், உன் அப்பாவிற்கும் ஒன்றைச்
சேர்த்தே வாங்கினேன்,
எதிலும் எனக்குப் பாகுபாடில்லை – உனக்கு
எல்லாவற்றிலும் இருக்கிறதென்பதை – நீ அந்த
சட்டையை பிரித்து
திருப்பி திருப்பிப் பார்க்கையில்
புரிந்துக் கொண்டேன்!
-------------------
3
அப்பாவிற்கு நீயென்றால்
கொல்லைப் பாசம்,
ஆனால் ஒரு குரல்போட்டு அழைத்ததும்
நீ ஓடிச்சென்று நின்ற இடம்; உன்
அப்பா அழைத்த
இடமாகவே இருந்தது!
-----------------
4
ஊருக்குப் போகையில்
எல்லோருக்கும் என்னென்னவோ
வாங்கத் தோணும்,
எனக்குப் போலவே உனக்கும்
கனவுகள் கூடும்..,
ஆனாலும்,
அதிலும் அடிப்பட்டுப் போயிருக்கும்
என் கனவுகள்..
------------------
5
என் பொண்ணு
என் பொண்ணுன்னு சொல்ற
என் அம்மாவைவிட –
உனைப் பெற்றவளாக உன்
முன்வந்து நிற்கும் நம் அம்மாவிடம்
எனக்கெந்த வேறுபாடுமில்லை,
ஆனாலும்,
என்னம்மா பாவம் என்பதான ஒரு
வருத்தமெனக்கு!!
-------------------
6
வேளைவேளைக்கு
சோறு போட்டாய்,
தண்ணீர் சுடவைத்து காலாற
ஊற்றினாய்,
உடம்பு வலித்தால் தைலம் தடவி
சுலுக்கெடுத்துவிட்டாய்,
வீடுவாசல் பெருக்கி கோலமிட்டு
அழகுபடுத்தினாய் –
ஆனாலும்
உன் வியர்வையால் நனைந்த நம் வீடு
பாசத்தால் அத்தனை
நிறையவேயில்லை..
--------------------
7
நீ மூச்சுக்கு முன்னூறுமுறை காட்டினாய் – நீ
வீட்டிலிருந்து கொண்டுவந்தப்
பொருட்களை,
நான் ஒருமுறையேனும்
கேட்டுவிட நினைக்கிறேன் – அம்மா
வாங்கித் தந்த அந்த புடவைப் பற்றி,
உனக்குப் பிடித்த நிறம்தான் என்றாலும்
உனக்குப் பிடித்த புடவைதான் என்றாலும்
அதில் வேறு ஏதோ ஒன்று உனக்கு
ஒட்டவேயில்லை,
உண்மையில்,
நீ உடுத்தாத அந்த புடவையிலிருந்துதான்
கிழிகிறது –
அந்த அம்மாவின் பிள்ளைக்கான மனசு!!
-----------------------
8
என்னதான் சிரித்து சிரித்துப்
பேசினாலும்
பழகினாலும்
உன் அன்பின் உயிர்ப்பு நிறைந்த அந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் –
அவர்களின் காலடியிலேயேச் சொட்டியது,
நான் –
அதையும் இயல்பென்று கடந்துசெல்கிறேன்..
----------------------
9
‘போதும் போதும்மா
பொழுதுபோயி தலையில தண்ணி ஊத்தாதன்னு
எத்தனை முறைம்மா உனக்குச் சொல்றது’ன்னு வருந்தி
துண்டெடுத்து உன் தலை துவட்டிவிட்ட என்
அம்மாவின் வார்த்தைகள் உன்
தூக்கத்தைக் கெடுத்தன;
‘என்னடி மணியிப்போ...., வா வா
உடம்பொன்னும் ஊசிப் போகாது
நாளைக்குக் குளி’ என்று சொல்லி
அதட்டிக் கதவடைத்துவிட்டுப் போன
உன் அம்மாவின் வார்த்தைகள் உனக்கு
அக்கறை யாயின’ எனும்
மனப்போக்கில்தான் –
ஒரு காலபெருவெள்ளம் பிளவு பட்டிருக்கவேண்டும்!
------------------------
10
தண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும் தானிருக்கிறது – நம்மிரு
குடும்பத்திற்கான மனசு;
என் வீட்டுத் தோட்டத்தைக்
காட்டிலும், அழகான பூக்கள் உனக்கு
உன் வீட்டு வாசலிலில் மட்டுமேப்
பூத்துக்கிடந்தன;
என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட – உனக்கு
உன் வீட்டு ஜன்னல் வழியேத் தெரியும் வெளிச்சம்
மிக பிரகாசமாக இருந்தது;
இங்கே தேனில் அரிசி வேகவைத்து
சமைத்தாலும், அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து சிந்தும்
சோற்றுப் பருக்கைகூட உனக்கு இனிப்பாகவே பட்டன;
எதற்குத் தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாக கட்டப்பட்டதோ - இக்
குடும்பத்தின் மூலச் சங்கிலி...’ என்று அழாமல்
உடையும் மனசை விதியென்று
தேற்றிக்கொள்ள முடியவில்லை என்னால்
எங்கேனும் அறுபட்டு
எங்கேனும் போய்த்தொலையட்டும் அதற்கான
அதன் புள்ளியில்’ என விட்டேவிட்டேன்;
அது சாய்ந்து
அதன் விளக்கு சாய்ந்து
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கிறது வீடுகள்..
------------------------
வித்யாசாகர்
உள்ளூர இருக்கிறது அந்த வலி
தாய்வீடு பற்றி -
பெண்களைப்போல ஆண்களுக்கும்;
என்னதான் உயிரோடு ஒன்றினாலும்
தேனில் கலக்கும் கசப்புபோல்
கலந்துதான் போகிறது அந்த விஷம்,
என் அப்பா என் அம்மா
என் வீடென – என்னதான் பார்த்தாலும்
தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு
முன்னதாகியே விடுகிறது;
அதுசரி, அக்கறைதானே என்றுதான்
விட்டுவிட்டேன் நானும், அதனாலோ என்னவோ
என் வீட்டு உறவுகளின்னும்
பிரிந்தேக் கிடக்கின்றன!!
-----------------
2
நீ செருப்பு வாங்கிக் கொண்டாய்
உன் தங்கைக்கும்
சேர்த்து நான் வாங்கினேன்,
உனக்கென ஒரு
புடவை எடுத்துக் கொண்டாய்
உன் அம்மாவிற்கும் ஒரு புடவை எடுத்தேன்,
அப்பாவிற்கு வேட்டியும் சட்டையும்
வேண்டுமென்றார், உன் அப்பாவிற்கும் ஒன்றைச்
சேர்த்தே வாங்கினேன்,
எதிலும் எனக்குப் பாகுபாடில்லை – உனக்கு
எல்லாவற்றிலும் இருக்கிறதென்பதை – நீ அந்த
சட்டையை பிரித்து
திருப்பி திருப்பிப் பார்க்கையில்
புரிந்துக் கொண்டேன்!
-------------------
3
அப்பாவிற்கு நீயென்றால்
கொல்லைப் பாசம்,
ஆனால் ஒரு குரல்போட்டு அழைத்ததும்
நீ ஓடிச்சென்று நின்ற இடம்; உன்
அப்பா அழைத்த
இடமாகவே இருந்தது!
-----------------
4
ஊருக்குப் போகையில்
எல்லோருக்கும் என்னென்னவோ
வாங்கத் தோணும்,
எனக்குப் போலவே உனக்கும்
கனவுகள் கூடும்..,
ஆனாலும்,
அதிலும் அடிப்பட்டுப் போயிருக்கும்
என் கனவுகள்..
------------------
5
என் பொண்ணு
என் பொண்ணுன்னு சொல்ற
என் அம்மாவைவிட –
உனைப் பெற்றவளாக உன்
முன்வந்து நிற்கும் நம் அம்மாவிடம்
எனக்கெந்த வேறுபாடுமில்லை,
ஆனாலும்,
என்னம்மா பாவம் என்பதான ஒரு
வருத்தமெனக்கு!!
-------------------
6
வேளைவேளைக்கு
சோறு போட்டாய்,
தண்ணீர் சுடவைத்து காலாற
ஊற்றினாய்,
உடம்பு வலித்தால் தைலம் தடவி
சுலுக்கெடுத்துவிட்டாய்,
வீடுவாசல் பெருக்கி கோலமிட்டு
அழகுபடுத்தினாய் –
ஆனாலும்
உன் வியர்வையால் நனைந்த நம் வீடு
பாசத்தால் அத்தனை
நிறையவேயில்லை..
--------------------
7
நீ மூச்சுக்கு முன்னூறுமுறை காட்டினாய் – நீ
வீட்டிலிருந்து கொண்டுவந்தப்
பொருட்களை,
நான் ஒருமுறையேனும்
கேட்டுவிட நினைக்கிறேன் – அம்மா
வாங்கித் தந்த அந்த புடவைப் பற்றி,
உனக்குப் பிடித்த நிறம்தான் என்றாலும்
உனக்குப் பிடித்த புடவைதான் என்றாலும்
அதில் வேறு ஏதோ ஒன்று உனக்கு
ஒட்டவேயில்லை,
உண்மையில்,
நீ உடுத்தாத அந்த புடவையிலிருந்துதான்
கிழிகிறது –
அந்த அம்மாவின் பிள்ளைக்கான மனசு!!
-----------------------
8
என்னதான் சிரித்து சிரித்துப்
பேசினாலும்
பழகினாலும்
உன் அன்பின் உயிர்ப்பு நிறைந்த அந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் –
அவர்களின் காலடியிலேயேச் சொட்டியது,
நான் –
அதையும் இயல்பென்று கடந்துசெல்கிறேன்..
----------------------
9
‘போதும் போதும்மா
பொழுதுபோயி தலையில தண்ணி ஊத்தாதன்னு
எத்தனை முறைம்மா உனக்குச் சொல்றது’ன்னு வருந்தி
துண்டெடுத்து உன் தலை துவட்டிவிட்ட என்
அம்மாவின் வார்த்தைகள் உன்
தூக்கத்தைக் கெடுத்தன;
‘என்னடி மணியிப்போ...., வா வா
உடம்பொன்னும் ஊசிப் போகாது
நாளைக்குக் குளி’ என்று சொல்லி
அதட்டிக் கதவடைத்துவிட்டுப் போன
உன் அம்மாவின் வார்த்தைகள் உனக்கு
அக்கறை யாயின’ எனும்
மனப்போக்கில்தான் –
ஒரு காலபெருவெள்ளம் பிளவு பட்டிருக்கவேண்டும்!
------------------------
10
தண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும் தானிருக்கிறது – நம்மிரு
குடும்பத்திற்கான மனசு;
என் வீட்டுத் தோட்டத்தைக்
காட்டிலும், அழகான பூக்கள் உனக்கு
உன் வீட்டு வாசலிலில் மட்டுமேப்
பூத்துக்கிடந்தன;
என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட – உனக்கு
உன் வீட்டு ஜன்னல் வழியேத் தெரியும் வெளிச்சம்
மிக பிரகாசமாக இருந்தது;
இங்கே தேனில் அரிசி வேகவைத்து
சமைத்தாலும், அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து சிந்தும்
சோற்றுப் பருக்கைகூட உனக்கு இனிப்பாகவே பட்டன;
எதற்குத் தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாக கட்டப்பட்டதோ - இக்
குடும்பத்தின் மூலச் சங்கிலி...’ என்று அழாமல்
உடையும் மனசை விதியென்று
தேற்றிக்கொள்ள முடியவில்லை என்னால்
எங்கேனும் அறுபட்டு
எங்கேனும் போய்த்தொலையட்டும் அதற்கான
அதன் புள்ளியில்’ என விட்டேவிட்டேன்;
அது சாய்ந்து
அதன் விளக்கு சாய்ந்து
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கிறது வீடுகள்..
------------------------
வித்யாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு.. (கவிதை) வித்யாசாகர்!
கவிஞருக்கு வாழ்த்துகள். பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு.. (கவிதை) வித்யாசாகர்!
வித்யாசாகரின் கனவு மாமியார் இல்லம் அழகாக உள்ளது . இந்த கனவு எப்போது பலிக்குமாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Similar topics
» ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு
» என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்.. (வித்யாசாகர்)
» கவிதை தெரியாதவன் - வித்யாசாகர்!
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
» வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள் - வித்யாசாகர்!
» என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்.. (வித்யாசாகர்)
» கவிதை தெரியாதவன் - வித்யாசாகர்!
» எனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்!
» வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள் - வித்யாசாகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|