தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
3 posters
Page 1 of 1
கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
* நூலின் பெயர் : கனவு மெய்ப்பட வேண்டும் *
நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
மகாகவி பாரதியின் புதிய சொல்லான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழைப்பேசும் பொழுது அருவியென
கொட்டுவதால் தான் இவருக்கு தமிழருவிமணியன் என்பது காரணப்பெயராகவே இருக்க
வேண்டும். இவருடைய பேச்சு தெளிந்த நீரோடை போல இருக்கும். சிறந்த பேச்சாளரான
இவருக்கு பாரதிவிருது வழங்கிய காரணத்தால் “பாரதியைப் பற்றி பேசுவதோடு நில்லாமல்
எழுதவும் வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த நூல்” என்று நூலாசிரியர்
மதுரையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் குறிப்பிட்டார்கள்.
பாரதி பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் இதில் பெரும்பாலும் பலர் பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டி
இருக்கின்றனர். ஆனால் இந்த நூலில் பாரதியின் கட்டுரை வரிகளும் பல மேற்கோள்
காட்டி பாரதி வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை விளக்குகின்றார்.
இந்நூலிற்கு ஓவியம் வரைந்த ஓவியர். ம.செ.சிறந்த ஓவியர் அட்டைப்பட ஓவியத்தை மிக
அற்புதமாக வரைந்து இருக்கிறார். நம் கண்முன்னே விவேகானந்தரையும், பாரதியையும்
கொண்டு வந்த விட்ட உயிரோட்டமான ஓவியம். இந்நுõலை பதிப்பித்த
திரு.மை.பா.நாராயணன் பாராட்டுக்குரியவர். பாரதி பற்றிய பரிமாணங்களை இலக்கிய
உலகிற்கு எடுத்துக்காட்டும் இனிய முயற்சிக்கு துணை நின்ற பணி
போற்றுதலக்குரியது.
அரசியல்வாதிகள் பற்றி மக்களிடையே மதிப்பை விட வெறுப்பே அதிகமாகிவரும். இந்த
காலத்தில் விதிவிலக்காக குறிஞ்சிப் பூ போல, அத்திப் பூ போல நேர்மையான விரல்
விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் திரு.தமிழருவிமணியன். அவர்
காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுதிலும், காங்கிரஸ் கட்சியில் தவறு நடந்தால்
சுட்டிக்காட்டத் தயங்காதவர். இன்றைய வெற்றி பெற்ற அரசியல்வாதிகளின்
தகடுதத்தங்களை வெறுப்பவர். காந்தியவழியில் காமராசரால் பாராட்டு பெற்ற நல்ல
அரசியல்வாதியின் அற்புதப்படைப்பு இந்த நூல். அரசியலை விட்டுவிட்டு முழு நேர
இலக்கியவாதியாக இவர் மாறினால் இலக்கியத்தின் உயர்ந்த விருதுகள் இவருக்கு
கிடைக்க வாய்ப்பு ஏற்படும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வைர வரிகளில் மகுடம்
சூட்டி உள்ளார். மகாகவியின் வைர வரிகளுக்கு இவர் போல வேறு யாரும் இப்படி
விளக்கம் சொன்னதில்லை. “சொல்புதிது” எனப் புதிய சொற்களைத் தேடித் தேடி பாடி
தமிழுக்குப் பெருமை சேர்த்ததைப் போல நூலாசிரியர் பாரதியின் வரிகளுக்கு புதிய
பொருளைத் தேடித்தேடி பதிவு செய்து உள்ளார்.
சொல்வேந்தர், நூலாசிரியரின் இனிய நண்பர் திரு.சுகிசிவம் குறிப்பிட்டது போல இந்த
நூலை இவர் எழுதவில்லை. சிற்பி சிலை செதுக்குவது போல சொற்களால் செதுக்கி
இருக்கிறார். இதில் தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை. கட்டுரையை அழகிய கவிதை போல
வார்த்துத் தந்துள்ளார். கவிதைக்கு உரிய சொற்ச்சிக்கனம் கட்டுரையில் உள்ளது.
இந்த நூலை படித்து முடித்தவுடன் பாரதியைப் பற்றி புரிதல் இல்லாதவர்களுக்கு
புரிதல் உண்டாகும். பாரதியை சாதிக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்தவர்கள்
தங்கள் கருத்தை உடன்மாற்றிக் கொள்வார்கள். அது தான் நூலின் வெற்றி, பாரதியின்
வாழ்வில் நடந்த புரட்சிக்கரமான நிகழ்வுகள் கனகலிங்கத்துப் பூணுõல் அணிவித்தது,
தாழ்த்தப்பட்ட சகோதர்களுக்கு விருந்து அளித்தது, கோவிலில் அவர்களை அனுமதிக்க
வேண்டுமென்ற “கோவில் திருத்தம்” என்ற நோட்டீஸ் எழுதி துணிவுடன் அன்றைய
காலத்திலேயே வெளியிட்டது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நூலாசிரியர் பாரதி
தொடர்பான அனைத்து நூல்களையும் தேடி அலைந்து திரட்டி நமக்கு திரட்டுப்பால்,
இலக்கியப்பால் வழங்கி உள்ளார். நூலைப்படித்து முடித்தால் வாசகரைப் பண்படுத்தும்
உயர்ந்த நூல்
மகாகவி பாரதியின் கொள்கையான உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சமம். பகிர்ந்து
அளிக்க வேண்டுமென்ற பொதுவுடமைக் கொள்கை, ஆதிக்கத்தை எதிர்ப்பது இப்படி
பாரதியின் நோக்கத்தை, வீரத்தை, வீரியத்தை தன்னம்பிக்கையை, தொலைநோக்கு சிந்தனையை
சுயமரியாதையை, ஆற்றலை, கம்பீரத்தை மிக ஆழகாக படம்பிடித்து காட்டி உள்ளார்.
கவிமன்னராக அறியப்பட்ட மகாகவி பாரதியை கவிச்சக்கரவர்த்தி நிலைக்கு உயர்த்திக்
காட்டி இருக்கிறார். இதுவெறும் நூல் அல்ல கல்வெட்டு, வரலாற்று ஆவணம், இலக்கிய
இன்பம், காலப்பெட்டகம், கருத்துக்களஞ்சியம்
நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
மகாகவி பாரதியின் புதிய சொல்லான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழைப்பேசும் பொழுது அருவியென
கொட்டுவதால் தான் இவருக்கு தமிழருவிமணியன் என்பது காரணப்பெயராகவே இருக்க
வேண்டும். இவருடைய பேச்சு தெளிந்த நீரோடை போல இருக்கும். சிறந்த பேச்சாளரான
இவருக்கு பாரதிவிருது வழங்கிய காரணத்தால் “பாரதியைப் பற்றி பேசுவதோடு நில்லாமல்
எழுதவும் வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த நூல்” என்று நூலாசிரியர்
மதுரையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் குறிப்பிட்டார்கள்.
பாரதி பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. எத்தனையோ பேர் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் இதில் பெரும்பாலும் பலர் பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டி
இருக்கின்றனர். ஆனால் இந்த நூலில் பாரதியின் கட்டுரை வரிகளும் பல மேற்கோள்
காட்டி பாரதி வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை விளக்குகின்றார்.
இந்நூலிற்கு ஓவியம் வரைந்த ஓவியர். ம.செ.சிறந்த ஓவியர் அட்டைப்பட ஓவியத்தை மிக
அற்புதமாக வரைந்து இருக்கிறார். நம் கண்முன்னே விவேகானந்தரையும், பாரதியையும்
கொண்டு வந்த விட்ட உயிரோட்டமான ஓவியம். இந்நுõலை பதிப்பித்த
திரு.மை.பா.நாராயணன் பாராட்டுக்குரியவர். பாரதி பற்றிய பரிமாணங்களை இலக்கிய
உலகிற்கு எடுத்துக்காட்டும் இனிய முயற்சிக்கு துணை நின்ற பணி
போற்றுதலக்குரியது.
அரசியல்வாதிகள் பற்றி மக்களிடையே மதிப்பை விட வெறுப்பே அதிகமாகிவரும். இந்த
காலத்தில் விதிவிலக்காக குறிஞ்சிப் பூ போல, அத்திப் பூ போல நேர்மையான விரல்
விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் திரு.தமிழருவிமணியன். அவர்
காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுதிலும், காங்கிரஸ் கட்சியில் தவறு நடந்தால்
சுட்டிக்காட்டத் தயங்காதவர். இன்றைய வெற்றி பெற்ற அரசியல்வாதிகளின்
தகடுதத்தங்களை வெறுப்பவர். காந்தியவழியில் காமராசரால் பாராட்டு பெற்ற நல்ல
அரசியல்வாதியின் அற்புதப்படைப்பு இந்த நூல். அரசியலை விட்டுவிட்டு முழு நேர
இலக்கியவாதியாக இவர் மாறினால் இலக்கியத்தின் உயர்ந்த விருதுகள் இவருக்கு
கிடைக்க வாய்ப்பு ஏற்படும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வைர வரிகளில் மகுடம்
சூட்டி உள்ளார். மகாகவியின் வைர வரிகளுக்கு இவர் போல வேறு யாரும் இப்படி
விளக்கம் சொன்னதில்லை. “சொல்புதிது” எனப் புதிய சொற்களைத் தேடித் தேடி பாடி
தமிழுக்குப் பெருமை சேர்த்ததைப் போல நூலாசிரியர் பாரதியின் வரிகளுக்கு புதிய
பொருளைத் தேடித்தேடி பதிவு செய்து உள்ளார்.
சொல்வேந்தர், நூலாசிரியரின் இனிய நண்பர் திரு.சுகிசிவம் குறிப்பிட்டது போல இந்த
நூலை இவர் எழுதவில்லை. சிற்பி சிலை செதுக்குவது போல சொற்களால் செதுக்கி
இருக்கிறார். இதில் தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை. கட்டுரையை அழகிய கவிதை போல
வார்த்துத் தந்துள்ளார். கவிதைக்கு உரிய சொற்ச்சிக்கனம் கட்டுரையில் உள்ளது.
இந்த நூலை படித்து முடித்தவுடன் பாரதியைப் பற்றி புரிதல் இல்லாதவர்களுக்கு
புரிதல் உண்டாகும். பாரதியை சாதிக் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்தவர்கள்
தங்கள் கருத்தை உடன்மாற்றிக் கொள்வார்கள். அது தான் நூலின் வெற்றி, பாரதியின்
வாழ்வில் நடந்த புரட்சிக்கரமான நிகழ்வுகள் கனகலிங்கத்துப் பூணுõல் அணிவித்தது,
தாழ்த்தப்பட்ட சகோதர்களுக்கு விருந்து அளித்தது, கோவிலில் அவர்களை அனுமதிக்க
வேண்டுமென்ற “கோவில் திருத்தம்” என்ற நோட்டீஸ் எழுதி துணிவுடன் அன்றைய
காலத்திலேயே வெளியிட்டது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நூலாசிரியர் பாரதி
தொடர்பான அனைத்து நூல்களையும் தேடி அலைந்து திரட்டி நமக்கு திரட்டுப்பால்,
இலக்கியப்பால் வழங்கி உள்ளார். நூலைப்படித்து முடித்தால் வாசகரைப் பண்படுத்தும்
உயர்ந்த நூல்
மகாகவி பாரதியின் கொள்கையான உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சமம். பகிர்ந்து
அளிக்க வேண்டுமென்ற பொதுவுடமைக் கொள்கை, ஆதிக்கத்தை எதிர்ப்பது இப்படி
பாரதியின் நோக்கத்தை, வீரத்தை, வீரியத்தை தன்னம்பிக்கையை, தொலைநோக்கு சிந்தனையை
சுயமரியாதையை, ஆற்றலை, கம்பீரத்தை மிக ஆழகாக படம்பிடித்து காட்டி உள்ளார்.
கவிமன்னராக அறியப்பட்ட மகாகவி பாரதியை கவிச்சக்கரவர்த்தி நிலைக்கு உயர்த்திக்
காட்டி இருக்கிறார். இதுவெறும் நூல் அல்ல கல்வெட்டு, வரலாற்று ஆவணம், இலக்கிய
இன்பம், காலப்பெட்டகம், கருத்துக்களஞ்சியம்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
கனவுகள் மெய்பட வேண்டும் பாரதியின் வரிகள், எதிர்கால நிகழ்வுகளின் நிகழ்கால துவக்கங்கள் கனவுகள், பாரதியின் மெய்பட வேண்டிய கனவுகள் ஏராளம் , தங்களின் அரிய தொகுப்பின் மூலம் மிக உயரிய கொள்கைகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
தங்களின் அரிய தொகுப்பின் மூலம் மிக உயரிய கொள்கைகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: கனவு மெய்ப்பட வேண்டும்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி.நூல் ஆசிரியர் : சொல்வேந்தர் தமிழருவிமணியன்
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கடவுளின் கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி* நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு, இஆப
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கடவுளின் கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏ.எஸ். பிரான்சிஸ், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» பணிப் பண்பாடு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி* நூல் ஆசிரியர் : முனைவர் வெ. இறையன்பு, இஆப
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|