தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

3 posters

Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Fri Aug 31, 2012 11:37 pm

தேவகானம் .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 120


கவிக்கோ என்றாலே பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல்
ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க
கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக
இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல்
எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில்
ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள்
சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக் கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .


நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு
.ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க
வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு
சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ இரா
மோகன் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அந்த விழாவில்
தான்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை சந்தித்தேன் .அன்று முதல் தொலைபேசி வழி அவர் அன்பு தொடர்கின்றது .தமிழ்த்தேனீ
இரா மோகன் அவர்களின் மணி விழா மலருக்கு கவிதை கேட்டதும் அனுப்பி
வைத்தார்கள் .சிறந்த கவிஞர் என்பதையும் தாண்டி, இனிமையான மனிதர்.
கவிக்கோ என்ற செருக்கு என்றும் இல்லாதவர் .
நூலில் உள்ள அவர் கவிதைகளில் பதச் சோறாக சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு .

உருவ மற்ற ஈசனுக்கு
உருவம் வைக்கும் பேதையே !
உருவம் ஈசற் குண்டேனில்
ஒன்னு தானே இருந்திடும்
உருவம் ஆயிரங்கள் ஏன் ?
உலகினில் படைப்புக்கே
உருவ முண்டு படை
த்தவற்கு
உருவம் இல்லை இல்லையே !


சித்தர்களின் பாடலான
நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
என்ற வரிகளை மேற்கோள் காட்டி
நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல்
ரகுமான் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் .நவீன சித்தராக நூலில்
கவிதைகள் எழுதி உள்ளார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் ,அவரது கவி
நயம் கண்டு வியந்து படித்தேன் .கவிதைகள் படி தேன் என்றால் மிகை அன்று .

பக்தர்கள் கடவுளிடம் எனக்கு நீ இவைகளைக் கொடு .பதிலுக்கு நான் இவைகளை
உனக்குச் செய்கிறேன் என்று பேரம் பேசும் பிராத்தனையை சாடும் விட்டிஹமாக ஒரு
கவிதை இதோ !

என்னை நான் கொடுக்கிறேன்
எனக்குனைக் கொடு எனப்
பன்னி உன்னைக் கேட்பது
பண்டமாற்று அல்லவோ
பின்னை ஆழ்ந்த பக்தியில்
பேரம் பேசல் நியாயமா ?
உன்னை நீகொ டுப்பது
உனது கடமை அல்லவோ ?


கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் கத்தி கூச்லிட்டு பஜனை செய்யும் முறையையும் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை ஒன்று .

மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி .


ஆன்மிகத்தில் எந்த மதமாக இருந்தாலும் ஆர்பாட்டம் ,ஆரவாரம் வேண்டாம்
அமைதி போதும் என்கிறார் கவிக்கோ .கடவுளின் பெயரால் சண்டை சச்சரவுகள்
வேண்டாம் என்கிறார் .கவிதையின் மூலம்.

முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும்
பயனிலை
தன்னை வருத்தி நான்
தவங்கள் செய்தும்
பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்த
ன்என் ஈசனே !

நீட்டலும் மழித்தலும் வேண்டாம் என்ற திருவள்ளுவரின் திருக்குறளின் குரலை வழி மொழியும் விதமாக எது ? உண்மையான பக்தி என்பதற்கு ,விளக்கம் சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளது .
நூல் முழுவதும் தத்துவ கருத்துக்கள் நிறைய உள்ளது .ஆன்மிக வாதிகள் அனைவரும் படித்து தெளிய வேண்டிய நூல் இது .



ஆன்மிகம் என்ற பெயரில் ஏமாற்றும் போலிகளின் முகத்திரையை கிழிக்கும்
வண்ணம் கவிதைகள் உள்ளது .பாராட்டுக்கள் .கடவுள் மனிதனை காப்பதை விட இன்று
போலி மனிதர்களிடம் இருந்து கடவுளை காக்க வேண்டி உள்ளது என்று எள்ளல்
சுவையுடன் கவிதை வடித்துள்ளார் .
மனிதன் தன்னை மீட்அம் மகேசன் தோன்று வான் எனப்
புனித நூல்கள் கூறிடும்
புனைக தைகள் கேட்டன
ன்
மனிதன் கையில் சிக்கிய
மகேசன் தன்னை மீட்பதே
புனித மான ப
ணியெனப்
புகலு வேஎன் தோழரே !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் .ஏற்றத்தாழ்வு வேண்டாம் .மத பேதம் வேண்டாம் என்று வலியுறுத்தும் கவிதை .

முந்து வானம் காற்று நீ
மூண்ட நீரும் பூமியும்
உந்து மீன் பறப்பன
ஊர்வன நடப்பன

இந்து முஸ்லிம் கிறித்து யூதன்
என்று ரைப்பதில்லையே
இந்த மக்கள் மட்டும்
ஏன் ?
இந்து முஸ்லிம் என்கின்றார் .

எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை வழிமொழிந்து எழுதி உள்ளார் .

தூங்கு கின்ற மானுடர்
தூங்கிடா உனக்கென
ங்குப் பள்ளி எழுச்சியாம்
இசையைப் பாடி நிற்கிறார்
ஏங்கிப் பாடும் இவர்களுக்கு
க்
கிதுவும் ஓர் உறக்கமே
ஓங்கும் அன்பி னாய் ! இவர்
உறக்கம் யாவும் நீக்குவாய் !

நல்ல நாள் ,கெட்ட நாள் எதுவுமில்லை .நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று பகுத்தறிவு போதிக்கும் விதமாக ஒரு கவிதை .

நாள்களும் கோள்களும்
நாய கன்கைப்
பந்துகள்
நாள்களும் கோள்களும்
நம்மைப் போல அலைவன
நாள்களும் கோள்களும்
நமை யலைப்ப தில்லையே
நாள்களும் கோள்களும்
நல்ல நல்ல நல்லவே !

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை
இருந்தபோதும் மதங்களின் பெயரால் மோதல்கள் வேண்டாம் .வீண் சடங்குகள்
வேண்டாம் ஆர்பாட்டம் வேண்டாம் என்று கவிதைகள் மூலம் உணர்த்தி மனித நேயம்
கற்பித்துள்ளார் .பாராட்டுக்கள் .கவிக்கோ கவிக்கோ என்பதை கவிதைகளால்
நிருபித்து உள்ளார் .




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 03, 2012 12:02 pm

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Sep 03, 2012 4:29 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Mon Sep 03, 2012 5:02 pm

நூல் விமரசனம் தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  800522
-------------------------------
மவ்னமே ஆதியாம்
மவ்னமே அந்தமாம்
மவ்னமே இறைமொழி
மவ்னமே பரவசம்
மவ்னமே பெருந்தவம்
மவ்னமே பெருவரம்
மவ்னமே மகத்துவ
மகேசனின் முகவரி ....
--
மவ்னமே என்பது மவுனமே அல்லது மௌனமே என
இருக்க வேண்டுமென எண்ணுகிறேன்...

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Sep 03, 2012 6:44 pm

மௌனமே என்பதே சரி என் கணினியில் அடிக்க வரவில்லை என்பதால் மவ்னமே இதை பயன் படுத்தி உள்ளேன் .பொருள் புரியும்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

தேவகானம் .  நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பித்தன் ! நூல் ஆசிரியர் : கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum