தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Yesterday at 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
2 posters
Page 1 of 1
மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
மழையின் கையெழுத்து !
ஆங்கில மொழி பெயர்ப்புடன் !
SIGN OF RIAN HAIKUS
வெளியீடு நிவேதிதா 822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003.
செல் 9443126025
நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி
விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில்
எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக
திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை
பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு
இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .
இவரது ஹைக்கூ கவிதைகள்
மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக
தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ
கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி
பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் பாரதியின்
வரிகளின் படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிட வழி செய்துள்ளார் .
ஹைக்கூ
கவிதை வடிப்பதில் தமிழ் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை
சாற்றும் விதமாக வந்துள்ளது .பக்கத்திற்கு ஒரு ஹைக்கூ இடது புறம் தமிழில்
வலது புறம் ஆங்கிலத்தில் உள்ளது .மிக நேர்த்தியான வடிவமைப்பு .
நூல்
கிடைத்ததும் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை
செல்பேசியில்அழைத்து பாராட்டி பேசியபோது இந்த நூலின் அடுத்த பதிப்பு
ஓவியங்களுடன் அச்சாகி வருவதாக சொன்னார்கள் .இந்த நூல் இன்னும் சிறப்பாக
அமையும் .பாராட்டுக்கள் .
ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் போல நூலில் இருந்து சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்தவர்களுக்கு அவரவர் காதலி நினைவு கட்டாயம் வரும் .என்று அறுதி இட்டு சொல்லலாம் .
விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
துசி வெளியேற உள்ளே நீ .
.YOU BLEW INTO MY EYES
THE DUST FLEW OFF
YOU BLEW IN.
அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவசியம் பார்த்து இருப்பார்கள்
.முதலுதவிப் பெட்டி மிக மோசமாக இருக்கும் .தற்போது சில பேருந்துகளில்
அதுவும் இருப்பதில்லை .எள்ளல் சுவையுடன் படைத்த ஹைக்கூ .
பேருந்தில் இருக்கிற
முதலுதவிப் பெட்டி
இறக்கிற நிலையில் !
THE BUS HAS A FIRST AIID BOX
WHAT WILL HAPPEN
WHEN IT BECOMES MORIBOND ?
இந்த ஹைக்கூ பல்வேறு பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டிட நானே கேட்டு
இருக்கிறேன் .பட்டிமன்ற சுவைஞர்களுக்கும் , பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும்
சொந்த அனுபவும் உண்டு .
பட்டிமன்றம் முடிந்து
தாமதமாக வீடு வந்தேன்
வழக்காடு மன்றம்!
THE LITERARY DEPATE OVER
REACHED HOME LATE
TO ACRIMONIOUS CHARGE - SHEETS.
இன்று மனிதத்தொல்லையை விட கொசுத்தொல்லை பெருகி விட்டது .நோய்களும் பெருகி வருகின்றது .
மருத்துவமனையில்
ஆரோக்கியமாக
கொசுக்கள் !
MOSQUITOES- THE ONLY
HEALTHY INMATES
OF HOSPITALS.
காதல் நினைவுகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை .அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ .
துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய் !
LIKE STUBBORN COB- WEBS
YOUR MEMORIES
BAFFLE ALL SCRUBS.
எள்ளல் சுவையுடன் நம் ஊர் சாலைகள் பற்றி ஒரு ஹைக்கூ .
சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு !
DIMPLES APPEAR
ON OUR ROADS
EVEN WITHOUT SMILE
அரசு அலுவலங்களில் நடக்கும் லஞ்சம் பற்றி நேரடியாக இல்லாமல் குறியீடாக உள்ள நல்ல ஹைக்கூ ஒன்று .
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் !
JUST FOUR LEGS
BUT MANY HANDS
TABLES OF PUBLIC SERVANTS
இது வரை எந்த ஒரு கவிதையும் தாய் மொழியில் இருந்து மிகச்சரியாக பிற
மொழியில் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பதே உண்மை .நாம் படித்துப்
பார்த்தால் வேறுபாடு விளங்கும் .எந்த ஒரு மொழி
பெயர்பாளருக்கும் படைப்பாளியின் மூலத்தை அப்படியே மொழி பெயர்ப்பில்
கொண்டு வந்து விட முடியாது .அதனால்தான் அறிஞர்கள் பலர் தாய் மொழியில்
சிந்தித்தார்கள் தாய் மொழியில் எழுதினார்கள் .
குழந்தையின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .
பட்டாம் பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு !
ஆனால் மகளுக்கு சிறகு முளைக்கும் .பட்டாம் பூச்சி சிறகை இழந்து விடும் .
CAUGHT A BUTTERFLY
GAVE IT TO THE KID
SHE GREWWINGS.
ஆங்கிலத்தில் ( DAUGHTER ) என்று வரவேண்டிய சொல் ( KID ) என்று வந்துள்ளதைப் பாருங்கள் ..
மொழி பெயர்ப்பில் இப்படி நிகழ்வது இயல்புதான் .அதனால்தான் காந்தியடிகள்
திருக்குறளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் படித்து திருப்தி
அடையாமல் திருக்குறளை மூல மொழியான தமிழில் படிக்க அடுத்த பிறவி இருந்தால்
தமிழனாப் பிறக்க வேண்டும் ."என்று ஆசைப் பட்டார் .
அன்று காமராசர் காலத்தில் பெரும் பணக்காரர்கள் கல்விக்கு சேவை செய்ய
வந்தார்கள் .ஆனால் இன்று பெரும் பணக்காரர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே
கல்வித்துறைக்கு வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
வயல்கள் அழித்துக்
கல்லூரி கட்டினார்கள்
நல்ல அறுவடை !
THEY FALLOWED THE LAND
BUILT COLLEGES
SECURED A GOOD HARVEST.
இன்பம் துன்பம் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .துன்பம் வந்தால் மனம் கவலை
கொள் ளாதீர்கள் என்ற வாழ்வியல் தத்துவம் குறியீடாக விளக்கும் ஹைக்கூ .
இரவின் வலிகள்
பொறுத்தால்
பகலின் பிரசவம் !
BEAR PAINS
AT NIGHT
THE DAY IS A NEW BIRTH .
ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் விதமாக இயற்கையையும் ஹைகூவில் வடித்துள்ளார் .
இரவுக் கூட்டுக்குள்
நட்சத்திரக் குஞ்சுகள்
இறைதேடி அலையும் நிலா !
BIRDLING STARS
IN THE NESTING DARKNESS
THE MOON IS AFTER ITS PREY.
இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் நந்தவனத்தில் நடந்து வந்த
உணர்வு இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களுக்கு பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
ஆங்கில மொழி பெயர்ப்புடன் !
SIGN OF RIAN HAIKUS
வெளியீடு நிவேதிதா 822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003.
செல் 9443126025
நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி
விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில்
எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக
திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை
பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு
இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .
இவரது ஹைக்கூ கவிதைகள்
மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக
தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ
கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி
பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் பாரதியின்
வரிகளின் படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிட வழி செய்துள்ளார் .
ஹைக்கூ
கவிதை வடிப்பதில் தமிழ் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறை
சாற்றும் விதமாக வந்துள்ளது .பக்கத்திற்கு ஒரு ஹைக்கூ இடது புறம் தமிழில்
வலது புறம் ஆங்கிலத்தில் உள்ளது .மிக நேர்த்தியான வடிவமைப்பு .
நூல்
கிடைத்ததும் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை
செல்பேசியில்அழைத்து பாராட்டி பேசியபோது இந்த நூலின் அடுத்த பதிப்பு
ஓவியங்களுடன் அச்சாகி வருவதாக சொன்னார்கள் .இந்த நூல் இன்னும் சிறப்பாக
அமையும் .பாராட்டுக்கள் .
ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் போல நூலில் இருந்து சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ !
இந்த ஹைக்கூ படித்தவுடன் படித்தவர்களுக்கு அவரவர் காதலி நினைவு கட்டாயம் வரும் .என்று அறுதி இட்டு சொல்லலாம் .
விழிகளில் ஊதி
தூசி எடுத்தாய்
துசி வெளியேற உள்ளே நீ .
.YOU BLEW INTO MY EYES
THE DUST FLEW OFF
YOU BLEW IN.
அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அவசியம் பார்த்து இருப்பார்கள்
.முதலுதவிப் பெட்டி மிக மோசமாக இருக்கும் .தற்போது சில பேருந்துகளில்
அதுவும் இருப்பதில்லை .எள்ளல் சுவையுடன் படைத்த ஹைக்கூ .
பேருந்தில் இருக்கிற
முதலுதவிப் பெட்டி
இறக்கிற நிலையில் !
THE BUS HAS A FIRST AIID BOX
WHAT WILL HAPPEN
WHEN IT BECOMES MORIBOND ?
இந்த ஹைக்கூ பல்வேறு பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டிட நானே கேட்டு
இருக்கிறேன் .பட்டிமன்ற சுவைஞர்களுக்கும் , பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும்
சொந்த அனுபவும் உண்டு .
பட்டிமன்றம் முடிந்து
தாமதமாக வீடு வந்தேன்
வழக்காடு மன்றம்!
THE LITERARY DEPATE OVER
REACHED HOME LATE
TO ACRIMONIOUS CHARGE - SHEETS.
இன்று மனிதத்தொல்லையை விட கொசுத்தொல்லை பெருகி விட்டது .நோய்களும் பெருகி வருகின்றது .
மருத்துவமனையில்
ஆரோக்கியமாக
கொசுக்கள் !
MOSQUITOES- THE ONLY
HEALTHY INMATES
OF HOSPITALS.
காதல் நினைவுகளை நாம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லை .அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ .
துடைக்கத் துடைக்க
உன் நினைவுகள்
ஒட்டடையாய் !
LIKE STUBBORN COB- WEBS
YOUR MEMORIES
BAFFLE ALL SCRUBS.
எள்ளல் சுவையுடன் நம் ஊர் சாலைகள் பற்றி ஒரு ஹைக்கூ .
சிரிக்காமலே
குழி விழுகிறது
எங்களூர்ச் சாலைகளுக்கு !
DIMPLES APPEAR
ON OUR ROADS
EVEN WITHOUT SMILE
அரசு அலுவலங்களில் நடக்கும் லஞ்சம் பற்றி நேரடியாக இல்லாமல் குறியீடாக உள்ள நல்ல ஹைக்கூ ஒன்று .
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் !
JUST FOUR LEGS
BUT MANY HANDS
TABLES OF PUBLIC SERVANTS
இது வரை எந்த ஒரு கவிதையும் தாய் மொழியில் இருந்து மிகச்சரியாக பிற
மொழியில் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பதே உண்மை .நாம் படித்துப்
பார்த்தால் வேறுபாடு விளங்கும் .எந்த ஒரு மொழி
பெயர்பாளருக்கும் படைப்பாளியின் மூலத்தை அப்படியே மொழி பெயர்ப்பில்
கொண்டு வந்து விட முடியாது .அதனால்தான் அறிஞர்கள் பலர் தாய் மொழியில்
சிந்தித்தார்கள் தாய் மொழியில் எழுதினார்கள் .
குழந்தையின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .
பட்டாம் பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு !
ஆனால் மகளுக்கு சிறகு முளைக்கும் .பட்டாம் பூச்சி சிறகை இழந்து விடும் .
CAUGHT A BUTTERFLY
GAVE IT TO THE KID
SHE GREWWINGS.
ஆங்கிலத்தில் ( DAUGHTER ) என்று வரவேண்டிய சொல் ( KID ) என்று வந்துள்ளதைப் பாருங்கள் ..
மொழி பெயர்ப்பில் இப்படி நிகழ்வது இயல்புதான் .அதனால்தான் காந்தியடிகள்
திருக்குறளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் படித்து திருப்தி
அடையாமல் திருக்குறளை மூல மொழியான தமிழில் படிக்க அடுத்த பிறவி இருந்தால்
தமிழனாப் பிறக்க வேண்டும் ."என்று ஆசைப் பட்டார் .
அன்று காமராசர் காலத்தில் பெரும் பணக்காரர்கள் கல்விக்கு சேவை செய்ய
வந்தார்கள் .ஆனால் இன்று பெரும் பணக்காரர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காகவே
கல்வித்துறைக்கு வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
வயல்கள் அழித்துக்
கல்லூரி கட்டினார்கள்
நல்ல அறுவடை !
THEY FALLOWED THE LAND
BUILT COLLEGES
SECURED A GOOD HARVEST.
இன்பம் துன்பம் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை .துன்பம் வந்தால் மனம் கவலை
கொள் ளாதீர்கள் என்ற வாழ்வியல் தத்துவம் குறியீடாக விளக்கும் ஹைக்கூ .
இரவின் வலிகள்
பொறுத்தால்
பகலின் பிரசவம் !
BEAR PAINS
AT NIGHT
THE DAY IS A NEW BIRTH .
ஜப்பானிய கவிஞர்களுக்கு தமிழ் கவிஞர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் விதமாக இயற்கையையும் ஹைகூவில் வடித்துள்ளார் .
இரவுக் கூட்டுக்குள்
நட்சத்திரக் குஞ்சுகள்
இறைதேடி அலையும் நிலா !
BIRDLING STARS
IN THE NESTING DARKNESS
THE MOON IS AFTER ITS PREY.
இந்த நூலைப் படித்து முடித்ததும் மொத்தத்தில் நந்தவனத்தில் நடந்து வந்த
உணர்வு இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களுக்கு பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
தொடரும் விமர்சனங்கள்... அழகு..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» “வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
» மழையின் மனதிலே ! நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» “வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் இரா . இரவி நூல் மதிப்புரை கவிஞர். சி. விநாயகா மூர்த்தி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|