தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

2 posters

Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 12:51 pm

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே 
காட்டும் விவசாய பாரதி -நீ 
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க 
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு 
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட..... 
 யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்..... 
தன் கையில் நஞ்சை அருந்தாத...... 
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!

( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 1:15 pm

உடல் நாற்றம் மறைக்க 
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன் 
உண்மை அழகை கெடுக்கும் 
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு 
உடைந்து விட்டால் -உன் 
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!

கழிவு அகற்றும் தொழிலாளியை 
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை 
தன் கழிவாக தன்னுடல் மேல் 
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும் 
சந்திர ஒளியனைபார் ....!!!

மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை 
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக 
பார்க்காதே ...!!!

செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்.. 
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை  
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள் 
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!

( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை 
சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 6:15 pm

சிற்பங்களை 
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும் 
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!

எத்தனை எத்தனை 
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை 
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய் 
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!

நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன் 
கைவண்ணத்தில் 
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன் 
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!

செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ 
செதுக்கும் போது வருவது.... 
ஓசையல்ல... 
உயிருக்கு உடல் ...!!!

(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 23, 2013 4:44 pm

நித்தம் நித்தம் வேலை செய்து 
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம் 
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற 
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி 
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!

மழை பெய்தால் வேலையில்லை 
கடும் காற்றாடித்தால் வேலையில்லை 
முதலாளி வராவிட்டால் வேலையில்லை 
வேலையில்லாவிட்டால் வேலையில்லை 
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும் 
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!

ஆலயம் செல்வதில்லை -ஆனாலும் 
ஆண்டவனிடம் மன்றாடுவோம் 
இன்று மழைவரக்கூடாது 
கடும் காற்று அடிக்க கூடாது 
முதலாளி சுகநலத்தோடு வாழனும் 
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம் 

நோய் என்று இருக்க மாட்டோம் 
வந்தாலும் சோரமாட்டோம் 
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே 
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள் 
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!

எங்களுக்கும் காலம் வரும் 
தேர்தல் வரும் காலம் பொற்காலம் 
இலவச உணவு உடுக்க உடை 
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர் 
எங்களின் இயலாமையை நன்றாக பயன் 
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!

ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும் 
ஒருசட்டம் கூட தினக்கூலியை 
காப்பாற்றவில்லை 
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும் 
விரும்புவதுமில்லை.....!!!

எம் மத்தியில் 
ஒருவன் வீறு கொண்டு எழுவான் 
தலைவனாவான் காலப்போக்கில் 
அவனின் காது தங்க காதாகிவிடும் 
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 8:26 pm

வாழ்க்கையின் பயணத்துக்கு 
இறைவன் பார்த்த சாரதி 
சாரதியாய் இருக்கிறார் 
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!

நாளாந்த பிழைப்புக்காய் 
நாம் பயணிக்கும் வாகன சாரதி 
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை 
தன் அடியில் தாங்கி 
வீதியோரம் வரும் தூசியை 
விரும்பாமல் கண்ணில் வாங்கி 
முறையற்ற முறையில் வீதியில் 
பயணிக்கும் பயணிகளின் 
துன்பத்தை தன் இதயத்தில்    
ஏற்று -எம் பயணம் வரை 
எம் உயிரை பாதுகாக்கும் 
வாகன சாரதிதான் -நான் 
கண்ட பார்த்த சாரதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 30, 2013 5:07 pm

அனைத்தும் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 7:24 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள் Empty Re: கே இனியவன் உழைப்பாளர் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum