தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Sep 22, 2013 5:57 pm

ஒரு வானம் இரு சிறகு ! 

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதா வெளியீடு .த  பெ .எண் 6123. 
8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை   600017.தொலைபேசி 044-24364243.

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை  தாத்தா என்று செல்லமாக  அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா  மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது  கவிவேந்தர் மு .மேத்தா இல்லம்  சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து  விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .

நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

சூரிய சந்திரரும் 
சும்மா இருக்கையில் 
விளக்கிற்குக் கேட்குதாம் விளம்பரம் ...

இந்தக் கவிதை படித்தவுடன் குறை குடம் கூத்தாடும் .என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது .

இந்த நூலில் கவிவேந்தர் மு .மேத்தா  அவர்கள் ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார்கள் .அவர் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளன .

பதவிக்காக வலை விரிக்கப்பட்டது 
பதவியும் வலையாய்  விரிக்கப்பட்டது 
கண் விழித்தால் இந்தியாவைக் காணவில்லை ! 

இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவை விலைபேசி விற்றாலும் விற்று விடுவார்கள் .

நீதித் துறையிலும் சிலரிடம் நேர்மை குறிந்து வருவதை உணர்த்தும் விதமான கவிதை ஒன்று .மிக நன்று .

நீதி !

நியாயங்களின் விலை 
இங்கே 
அதிகமாகி விட்டது !
எனவேதான் 
ஏழைகளால் 
அதை வாங்க இயலவில்லை !
சட்டம் என்பது 
வசதி படைத்தவர்களுக்கு 
வகுத்துக் கொடுத்த 
சௌகரியமாகிவிட்டது !

இன்றைய கல்வி முறை குழந்தைகளைக் கசக்கிப் பிழியும் விதமாக உள்ளன .கழுதை பொதி சுமப்பதைப்  போல குழந்தைகள்  பொதி சுமக்கும் அவலம் .எறும்பைப்  போல தன்  எடையை விட கூடுதலான எடை  சுமக்கும் பிஞ்சுகள் .மனிதாபிமானமற்ற கல்வி முறை மாற வேண்டும்  .மழலை மொட்டுகளின் சிரமத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை 

முதுகில் ஒரு மூட்டை !

மேதைகள் 
ஒப்போது 
சீதைகள் மாதிரி 
சிறையிருக்கிறார்கள் 
அசோகவனத்தில்  !

கல்வி இங்கே 
இதயத்தில் சுமக்கும் 
இனிமையாய் இல்லாமல் 


முதுகில்  சுமக்கும் மூட்டையாகிவிட்டது 
கொடுமை என்னவென்றால் 
குழந்தைகலெல்லாம்  கூனிகளாயினர் !

கலைமகளின் வீணையை 
ஏலம் போடுகிறார்கள் 
அன்பான அரசியல்வாதிகள் ! 

பட்டிமன்ற   மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை .

விழாத விழா !

இங்கே மரம்நடு விழாக்களை 
நடத்த வேண்டாம் !
இனிமேல் 
மனிதர்களை நடுகிற   
விழாக்களை  நடத்துவோம் 
சிலரை விட்டு வைப்பதை விட 
நட்டு வைப்பதே நல்லது .

ஊடகங்கள் நமது பண்பாட்டை சிதைத்து வருகின்றன .ஆண்கள் சிலர் காமுகர்களாக மாறி வருகின்றனர் .நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக 
வலியுறுத்தினார் .பண்பாடு போதிக்கும் விதமான கவிதை .

தலைகள் !

இராமனாகத்தான் வீட்டிலிருந்து 
வெளியே வந்தான் 
வீதியில் 
அடுத்தவீட்டு சீதைகள் 
அசைந்து நடந்த 
அழகைப் பார்த்ததும் 
தயங்கித் தயங்கி 
தலைகள் முளைக்கவே 
இராவணன் ஆனான் !

பத்துத்தலை இராவணனாவது 
தன் மனத்தில் 
ஒரு சீதையை 
ஒளித்து  வைத்திருந்தான்   
இந்த ஒரு தலை 
இராவணர்களின் 
உள்  மனதில் 
எத்தனை  சீதைகள் 
இருக்கிறார்களோ ?

இன்று குடி குடியை பெருமளவில் கெடுத்து வருகின்றது .மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் கவலை கொள்ளும் விதமாக சமுதாயத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் சீருடையோடு மதுக்கடை சென்று மது அருந்தும்  பழக்கம் நோய் போல பரவி  வருகிறது .  நாட்டில் மதுவிலக்கு  வராதா ? என குடும்பத்தில்  உள்ளோர் ஏங்கி வருகின்றனர் . மதுவின்  கொடுமை பற்றிய கவிதை .

தீபங்கள் தீ வைக்கலாமா ?

சுதந்திர பூமியில் 
அவர்கள் 
மதுவின் அடிமைகள் 
மதுக்குவளையை 
அவர்கள் காலி செய்கிறார்கள் !

அதற்கு பதிலாக 
அவர்கள் குடும்பத்தாரின் 
கண்ணீரை 
அது நிரப்பிக் கொள்கிறது !

காந்தியடிகளை தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று .
செவிகளின் சிம்மாசனம் !

உள்ளங்கள் தோறும் 
உள்ளவர் - எங்கள் 
வள்ளுவர் !

ஒன்றே முக்கால் அடியால் 
உலகை அளந்த 
வல்லவர் !

அணுகும் உணர்ச்சிகளை 
அடக்கி வாசித்துப்      
பொய்யென்ற  
புணுகு பூசாத புலவர் !

இலக்கிய உலகத்தின் எவரெஸ்ட் !    

உடலால் மறைந்தபோதும் பாடலால் என்றும் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை மிக நன்று .

பாரதி - என் தந்தை !

ஒவ்வொரு முறை 
படிக்கும்போதும் 
ஒவ்வொரு விதமாய் 
தருமமாய் 
தைரியமாய் 
ஞானமாய் 
நாணமாய் 
ஓ 
புரிகிறது 
அவன் ஒரு 
புத்தகமல்ல 
புத்தகசாலை ! 

சிந்திக்க வைக்கும் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எப்படி ? எழுத  வேண்டும் என்ற வகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  அவர்களுக்கு பாராட்டுக்கள் .சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எழுதி வரும் அவரது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar Tue Sep 24, 2013 6:51 pm

கவிஞரின் கவிச் சிறப்பு மேலும் உயர்ந்து பறக்க 
வானளாவிய வாழ்த்து . அன்புடன், மனோகர்
Ponmudi Manohar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 178
Points : 226
Join date : 30/03/2013
Age : 67
Location : NAGERCOIL

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 25, 2013 1:01 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Oct 14, 2013 9:07 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by mravikrishna Wed Oct 16, 2013 8:39 pm

சியர்ஸ் சியர்ஸ்
mravikrishna
mravikrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 24
Join date : 03/06/2012
Age : 60
Location : Tiruvannamalai

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by mravikrishna Wed Oct 16, 2013 8:39 pm

சியர்ஸ் சியர்ஸ்
mravikrishna
mravikrishna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 22
Points : 24
Join date : 03/06/2012
Age : 60
Location : Tiruvannamalai

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 8:54 am

இப்போது மு. மேத்தாவைத்தான் படித்து வருகிறேன்...

தக்க சமயத்தில் நல்லதொரு பதிவு... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Oct 17, 2013 9:58 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

 ஒரு வானம் இரு சிறகு !  நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum