தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள்

2 posters

Go down

சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் Empty சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள்

Post by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 6:03 pm

________________________________________

Title: Re: வரலாற்று தகவல்கள்

Post by: தணுஜா on November 21, 2013, 10:25:52 PM

________________________________________

வலைக்கு வழி!

 

சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில்
சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.
சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக
இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக்
கொசு வலை கொடுத்திருந்தார்கள்.
-
 அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால்,
வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை
என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
-
"வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு
என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக
ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார்.
-
அதற்கு சிறை அதிகாரி, ""ஆர்டர் கொடுத்துள்ளோம்.
இன்னும் கொசு வலை வந்தபாடில்லை..!'' என்றார்.
-
படேல் மிகவும் துணிவுடன், ""சிறைக்கு நானாக
வரவில்லை என்று உனது மேலதிகாரியிடம் கூறு.
சிறைக்கதவை திறந்து விடுங்கள். வலை வந்ததும்
தகவல் தரவும். மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறேன்...''
என்றார்.
-
சில மணி நேரங்களில் சிறைக்கு புதிய கொசு
வலை வந்து சேர்ந்தது.
-
-------------------------------
-கலவை பா.வரதன். (தினமணி)

 

உழைப்பு... உழைப்பு...

 

ஒரு சமயம் வானொலி நிலையப் பேட்டியில்
பெரியாரிடம், ""ஐயா, நீங்கள் அந்தக் காலத்திலேயே
பெரிய தியாகம் செய்திருக்கிறீர்களே?'' என்று
பேட்டியாளர் கேட்டார்.
-
"நான் பெரிசா ஒண்ணும் செய்யலீங்க...'' என்று
அடக்கத்துடன் பதில் கூறினார் பெரியார்.
-
அடுத்ததாக, ""இந்தத் தள்ளாத வயதிலும்கூட நீங்கள்
ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று
அந்தப் பேட்டியாளர் கேட்டார்.
-
அதற்கு பெரியார், ""மூன்று வேளை சாப்பிடுகிறேன்.
என்னுடைய துணிமணிகளுக்கு நான் செலவு செய்ய
வேண்டியிருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது
செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா?
தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக்
கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்குத்
தண்டமாக அல்லவா இருப்பேன்?
சமுதாயத்துக்கு இதைவிட வேறு தண்டனை
வேண்டுமா?'' என்று கேட்டார்.
-
--------------------------------------
-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)

 

பொன்னான காலம்!

 தனது மோட்டார் தொழிற்சாலையில் ஒருநாள்,
ஃபோர்ட், தொழிலாளிகளின் வேலையைப் பார்வை
இட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தொழிலாளி
செய்து கொண்டிருந்த வேலை அவரது கவனத்தை ஈர்த்தது.
-
கார் என்ஜினின் இடப்பக்கம் பொருத்த வேண்டிய
பொருளை எடுக்க பொருள் இருக்குமிடத்திலுள்ள
வலப் பக்க அலமாரிக்கும், என்ஜினின் வலப்புறம்
பொருத்த வேண்டியிருந்த பொருளை எடுக்க அந்த
அறையின் இடது கோடியிலிருந்த ஒரு அலமாரிக்கும்
சென்று அந்தத் தொழிலாளி எடுத்து வந்து பொருத்திக்
கொண்டிருந்தார்.
-
இப்படி அந்த மனிதர் ஒவ்வொரு முறை சென்று
வருவதற்கும் இரண்டு நிமிடங்கள் ஆவதைக்
கணக்கிட்டார் ஃபோர்ட். இப்படி ஒரு மணி நேரத்துக்கு
ஐந்து நிமிடங்கள் வீணானால் எட்டு மணி நேரத்தில்
நாற்பது நிமிடங்கள் வீணாகப் போவதையும்
கணக்கிட்டார்.
-
இதன் மூலம் மனித உழைப்பு வீணாவதுடன் நேரமும்
வீணாகப் போகிறதே என்று வருந்தினார்.-
-
உடனே, தொழிலாளிக்கு வேண்டிய உபகரணங்களையும்
பொருட்களையும் அவர் வேலை செய்யும் இடத்திலேயே
வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
-
இதனால் உழைப்பும் நேரமும் வீணாகப் போவது
தடுக்கப்பட்டது.
-
--------------------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
-
 

கட்டளை!

 

காந்தியடிகள் நடத்தி வந்த வார்தா ஆசிரமத்தில்
எவரும் உழைக்காமல் ஒரு பருக்கைச் சோறுகூட
உண்ண முடியாது. அந்த உழைப்புக்குச் 'சிரமதானம்'
என்று பெயர்.
-
காந்தியடிகளைக் காண பெரிய பெரிய தலைவர்கள்
எல்லாம் ஆசிரமத்துக்கு வந்தபடியே இருப்பார்கள்.
எவ்வளவு பெரிய தலைவர்களாயினும் உழைக்காமல்
உணவு உண்ணக் கூடாதென்பது விதி.
-
ஒருமுறை ஜவாஹர்லால் நேரு, உழைப்புக் கொடை
வழங்காமல், நேரே உணவருந்தும் பகுதிக்குப் போய்
விட்டார்.
-
உடனே அங்கிருந்த தொண்டர் ஒருவர் நேருவுக்கு
அதை நினைவூட்டினார்.
-
அவசரத்தில் மறந்து போய் அங்கே வந்துவிட்டாலும்,
நேரு உடனே எழுந்து சென்று, ஆசிரமத்துக்குப் பின்
புறம் குவித்து வைத்திருந்த தட்டுகளைக் கழுவிச்
சுத்தம் செய்யும் பணியைச் சிறிது நேரம் செய்து
விட்டு வந்தார்.
-
அதன்பிறகுதான் நேருவுக்கு உணவு உண்ண
அங்கே அனுமதி கிடைத்தது.
-
------------------------------------------
-சு.இலக்குமணசுவாமி, மதுரை. (தினமணி)

மன உறுதி!

 

மாவீரன் நெப்போலியன், ஒருமுறை தனது
தளபதியிடம், ""நம்மிடம் லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள்
அல்லவா?'' என்று கேட்டார்.
-
அதற்கு, அந்தத் தளபதி, ""அறுபதாயிரம் பேர்தான்
உள்ளனர்'' என்றார்.
-
உடனே நெப்போலியன், ""அவர்களோடு என்னையும்
சேர்த்துக் கொள். ஒரு லட்சமாகி விடும்...'' என்றார்.
-
 தனது வீரத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்
நெப்போலியன்.
-
------------------------------------------
-
-நெ.இராமன், சென்னை. (தினமணி(

-

பண்பு!

 

விவேகானந்தர் இந்து மதம் பற்றி மேலை நாடுகளில்
சொற்பொழிவாற்றியபின், தாயகம் திரும்புகையில்
இலங்கை வழியாக இராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.
-
மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை
வரவேற்கச் சென்றிருந்தார்.
-
சுவாமிஜியிடம் மன்னர், ""படகிலிருந்து என் தலை
மீது கால் வைத்து, அதன்பிறகுதான் தாங்கள் மண்ணில்
கால் வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
-
 ஆனால் சுவாமிஜி, அதனை ஏற்க மறுத்து விட்டார்.
-
உடனே மன்னர், ""துறவிக்கு முன் வேந்தன் தூசு'' என்றார்.
-
இதைக் கேட்டு சற்றுத் தயங்கிய சுவாமிஜி, ""சரி,
தாங்கள் தலைப்பாகை கட்டிக் கொள்ளுங்கள், அதன்
மீது கால் வைத்து நான் இறங்குகிறேன்'' என்றார்.
-
மன்னர் தலைப்பாகை கட்டிக் கொண்டிருக்கும்
போது திடீரென்று விவேகானந்தர் தரையில் குதித்து
மண்ணில் தனது காலை வைத்து இறங்கிவிட்டார்.
-
என்னே விவேகானந்தரின் அடக்கம்!
-
------------------------------------------
-மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை. (தினமணி)



பற்று!

 

அயல் நாட்டிலிருந்து தமிழகம் வந்த
சப் பெஸ்கி அடிகளார், தமிழின்பால் ஏற்பட்ட
ஈர்ப்பு காரணமாகத் தமிழைக் கற்றுத் தனது
பெயரையும் "வீரமாமுனிவர்' என்று மாற்றிக்
கொண்டதாகத்தான் நாம் அறிந்துள்ளோம்.
-
ஆனால், வீரமாமுனிவர் என்ற பெயர் மாற்றத்துக்கு
முன்பு அவர் தனது பெயரை "தைரியநாதன்' என்று
தான் வைத்திருந்தாராம்.
-
சிறிது காலத்துக்குப் பிறகு, தனித்தமிழ்பால்
கொண்ட பற்று காரணமாகவே அப்பெயரை தூய
தமிழில் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டாராம்.
அதன் பின்னர்தான் பலரும் தங்கள் பெயர்களைத்
தூய தமிழில் மாற்றிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டதாம்.
-

 -மறைமலையடிகளின் பேரர் மறை.திரு.தாயுமானவன்
சொல்லக் கேட்டவர்
-
மு.தனகோபாலன், திருவாரூர்.
-
-------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் Empty Re: சரித்திர நாயகர்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jul 26, 2014 8:31 pm

அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum