தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
2 posters
Page 1 of 1
நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
முட்டாள் மாற மாட்டான்
-------------------------------------
ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.
”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து
வாங்கிக்றீயா”
” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்
மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று
கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்
“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”
கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து
கடையில்லை”
“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக்கடையா மாத்திட்டீங்களா”
“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”
“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”
“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”
வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார்.
தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும்
“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக்
கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே
ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி
சொல்லிடுங்க”
நன்றி ;நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
( பல தளங்கள் )
-------------------------------------
ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார்.
”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து
வாங்கிக்றீயா”
” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான்
மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று
கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இருந்த கடையில் நுழைந்தான்
“ஏங்க நான் இரவு மருந்து வாங்கினேன் 20 ரூபா பாகி தரணும் நீங்க”
கடைக்காரர், “ நீங்க கடை மாறி வந்திட்டீங்க. இது மளிகைக் கடை. மருந்து
கடையில்லை”
“அட 20 ரூபாயை ஏமாத்த மருந்து கடையை ராத்திரியோட ராத்திரியா மளிகைக்கடையா மாத்திட்டீங்களா”
“ அட யார்யா இது.. இது ரொம்ப வருஷமா மளிகைக் கடை தான். நேத்தி ராத்திரி நீ என்னையா பார்த்தே”
“இத பார்யா. நீ தாடி ஒட்டி வச்சிகிட்டு வேஷம் போட்டாலும் என்னை ஏமாத்த முடியாது. எடு 20 ரூபாயை”
“இது என்னடா வம்பு. நான் பல வருஷமா தாடி வச்சிருக்கேன்யா. இது நிஜ தாடி. நம்புயா. ராத்திரி நீ இங்க வரலையா. அது வேற கடையா இருக்க்கும் நல்லா யோசிச்சு பாருயா”
வேலையாள் திடீரென பாய்ந்து கடைக்காரரின் தாடியைப் பிடித்து இழுத்தார்.
தாடி கையோடு வரவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. வரவில்லை ஆனாலும்
“ இத பாருங்க நீங்க 20 ரூபா தர வேணாம். ராத்திரியோட ராத்திரியா மருந்துக்
கடையை மளிகைக் கடையா மாத்தினது எப்படினும் சொல்ல வேண்டாம். ஆனா ஒரே
ராத்திரி எப்படி இப்படி தாடி வளர்த்தீங்க அத மட்டும் தயவு செஞ்சி
சொல்லிடுங்க”
நன்றி ;நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
( பல தளங்கள் )
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும். தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான். ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.
வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”
“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”
நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி
(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)
வேட்டைக்காரன் நணபனைப் பார்த்து “எப்படி என் நாய் ”
“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே”
நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி
(ஷிவ் கேராவின் You Can Win புத்தகத்திலிருந்து)
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
பிறவிக் குணம்
----------------------
காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.
கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.
தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது.
----------------------
காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.
கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.
தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது.
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
ஊழ் (விதி)
//////////////////////
நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” அவன் இல்லை என்று தலையாட்டினான்.
செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா என்ற கால அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்த்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.
அன்றைக்கு நல்ல தூக்கம். ராத்திரியின் காவல் நடை ஷூ சப்தங்கள் கூட கேட்கவில்லை. முதுகில் குறுகுறு. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் த்ரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் க்லைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” எறும்பு பேசியது !!!. தரைக்குக் குனிந்தான். ”நாந்தாம்பா பேசினேன்- கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்”
உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
பிரமிப்பு நீங்காமல் கேட்டான், “ ஆமா.. நீ எப்படி பேசறே”
”அதெல்லாம் உணக்கு எதுக்கு- நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உணக்கு பேச்சு துணையா”
தனிமை தொலந்த சந்தோஷம் !! பேசும் எறும்பு !! அவனுக்கு தூக்கம் வரவில்லை. வெளியில் போனதும் இந்த எறும்பை வச்சே பெரிசா சம்பாதிக்கனும். யோசனை விரிவாகி மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் லெவலுக்கு எறும்பு தேறி விட்டது.
விடுதலை ஆனான். முதல் வேலையாய் எறும்பு ஷோ நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான் சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான்.
இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “லுக் அட் திஸ்” என்றான் பெருமையாக.
சர்வர் ஷண நேரம் தாமதிக்காமல் நாலு விரலையும் சேர்த்து ”டப்” என்று அந்த எறும்பை அடித்தார். அது நசுங்கி செத்துப் போனது
நன்றி ; mowleeswaran
//////////////////////
நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” அவன் இல்லை என்று தலையாட்டினான்.
செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா என்ற கால அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்த்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.
அன்றைக்கு நல்ல தூக்கம். ராத்திரியின் காவல் நடை ஷூ சப்தங்கள் கூட கேட்கவில்லை. முதுகில் குறுகுறு. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் த்ரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் க்லைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” எறும்பு பேசியது !!!. தரைக்குக் குனிந்தான். ”நாந்தாம்பா பேசினேன்- கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்”
உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
பிரமிப்பு நீங்காமல் கேட்டான், “ ஆமா.. நீ எப்படி பேசறே”
”அதெல்லாம் உணக்கு எதுக்கு- நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உணக்கு பேச்சு துணையா”
தனிமை தொலந்த சந்தோஷம் !! பேசும் எறும்பு !! அவனுக்கு தூக்கம் வரவில்லை. வெளியில் போனதும் இந்த எறும்பை வச்சே பெரிசா சம்பாதிக்கனும். யோசனை விரிவாகி மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் லெவலுக்கு எறும்பு தேறி விட்டது.
விடுதலை ஆனான். முதல் வேலையாய் எறும்பு ஷோ நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான் சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான்.
இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “லுக் அட் திஸ்” என்றான் பெருமையாக.
சர்வர் ஷண நேரம் தாமதிக்காமல் நாலு விரலையும் சேர்த்து ”டப்” என்று அந்த எறும்பை அடித்தார். அது நசுங்கி செத்துப் போனது
நன்றி ; mowleeswaran
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: நான் ரசித்த தொகுத்த குட்டி கதைகள்
ஆசை
////////////
முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து தனது யூஷுவலான கேள்வியைக் கேட்டார்.
“உனது பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும்?”
“பிரபோ !! தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்”
“நீ மாறவேயில்லை” என்று சிரித்துவிட்டு, கடவுள் , “பக்தா !! நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்க கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளி கையை அசைத்தார். அந்த மாஜிக் மரம் அங்கே. கடவுள் ஆசிர்வாதம் கலந்த ”டாட்டா” காண்பித்துக் கொண்டே மறைந்தார்.
மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது . இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்ற லைனில் சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
வரம் தரும் போது கடவுள் வார்த்தைகளில் ஒரு பிசகு செய்துவிட்டார். “அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று சொன்னாரே தவிர முனிவர் நினத்தால் என சொல்லவில்லை. அந்த மரமும் அந்த காட்டில் யாரவது தனக்கடியில் வந்து நின்று நினைப்பார்கள் என்று காத்திருந்தது.
ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு ஒரு இளைஞன் வந்தான். ”அந்த” மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினத்தான்.
படுத்துக் கொண்டே யோசித்தான், “ இது என்ன பொழைப்பு; தினம் தினம் இத்தனை தூரம் இத்தனை ஆட்டையும் மேய்ச்சிட்டுக்கு வந்து பத்திரமா கொண்டு போய்- ச்சை !! ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. இந்த ராஜா ராணியெல்லாம் அரண்மனையில் சாப்பிடற விருந்த்து மாதிரி சாப்பாடு ஒரு தடவை கிடைச்சா தேவலை”
மாஜிக் மரம் தன்னுடைய முதல் அனுக்கிரஹத்தை லேட் இல்லாமல் செய்தது. அவன் கண் முன்னே ஒரு ராஜோபசார விருந்து. அவன் பயந்தே போய் விட்டான். இது ஏதோ பிசாசு வேலை என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். பயம் தெளிந்து அந்த விருந்தை ஒரு பிடி பிடித்தான்.
மீண்டும் யோசித்தான், “ இப்படி வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ராஜா ராணியெல்லாம் ஒசத்தியான கட்டிலில் ஆளுக விசிறிக்கிட்டே தூங்குவாங்க; நமக்கும் அப்படி கிடைச்சா நல்லாயிருக்கும்”
மரம் இந்த தடவையும் ஸ்பீடாய்.
மீண்டும் யோசித்தான், “ ஆமா ! நாம நடுக்காட்ல இப்படி படுத்திருகோமே. புலி வந்து அடிச்சா ….”. மரம் வழக்கத்தை போல ஸ்பீடாய்
—————–
ஆசை ஒன்றைத் தொடர்ந்து ஒன்று தீயாய் எறிந்து நம்மை அழித்துவிடும் என்று சொல்லி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது
////////////
முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து தனது யூஷுவலான கேள்வியைக் கேட்டார்.
“உனது பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும்?”
“பிரபோ !! தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்”
“நீ மாறவேயில்லை” என்று சிரித்துவிட்டு, கடவுள் , “பக்தா !! நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்க கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளி கையை அசைத்தார். அந்த மாஜிக் மரம் அங்கே. கடவுள் ஆசிர்வாதம் கலந்த ”டாட்டா” காண்பித்துக் கொண்டே மறைந்தார்.
மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது . இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்ற லைனில் சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
வரம் தரும் போது கடவுள் வார்த்தைகளில் ஒரு பிசகு செய்துவிட்டார். “அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று சொன்னாரே தவிர முனிவர் நினத்தால் என சொல்லவில்லை. அந்த மரமும் அந்த காட்டில் யாரவது தனக்கடியில் வந்து நின்று நினைப்பார்கள் என்று காத்திருந்தது.
ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு ஒரு இளைஞன் வந்தான். ”அந்த” மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினத்தான்.
படுத்துக் கொண்டே யோசித்தான், “ இது என்ன பொழைப்பு; தினம் தினம் இத்தனை தூரம் இத்தனை ஆட்டையும் மேய்ச்சிட்டுக்கு வந்து பத்திரமா கொண்டு போய்- ச்சை !! ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. இந்த ராஜா ராணியெல்லாம் அரண்மனையில் சாப்பிடற விருந்த்து மாதிரி சாப்பாடு ஒரு தடவை கிடைச்சா தேவலை”
மாஜிக் மரம் தன்னுடைய முதல் அனுக்கிரஹத்தை லேட் இல்லாமல் செய்தது. அவன் கண் முன்னே ஒரு ராஜோபசார விருந்து. அவன் பயந்தே போய் விட்டான். இது ஏதோ பிசாசு வேலை என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். பயம் தெளிந்து அந்த விருந்தை ஒரு பிடி பிடித்தான்.
மீண்டும் யோசித்தான், “ இப்படி வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ராஜா ராணியெல்லாம் ஒசத்தியான கட்டிலில் ஆளுக விசிறிக்கிட்டே தூங்குவாங்க; நமக்கும் அப்படி கிடைச்சா நல்லாயிருக்கும்”
மரம் இந்த தடவையும் ஸ்பீடாய்.
மீண்டும் யோசித்தான், “ ஆமா ! நாம நடுக்காட்ல இப்படி படுத்திருகோமே. புலி வந்து அடிச்சா ….”. மரம் வழக்கத்தை போல ஸ்பீடாய்
—————–
ஆசை ஒன்றைத் தொடர்ந்து ஒன்று தீயாய் எறிந்து நம்மை அழித்துவிடும் என்று சொல்லி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» தொகுத்த முல்லாவின் கதைகள்
» தொகுத்த கடுகு கதைகள்
» தொகுத்த முல்லாவின் கதைகள்
» ரசித்த ஒரு பக்க கதைகள்
» குட்டி கதைகள்
» தொகுத்த கடுகு கதைகள்
» தொகுத்த முல்லாவின் கதைகள்
» ரசித்த ஒரு பக்க கதைகள்
» குட்டி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|