தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மன்மதன் அம்பு -
Page 1 of 1
மன்மதன் அம்பு -
[You must be registered and logged in to see this image.]
ஒரு நடிகையை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை காமெடியோடு சொல்லியிருப்பதுதான் இப்படத்தின் கதை!
மன்(கமல்), மதன்(மாதவன்), அம்பு(த்ரிஷா) என்று மூவரையும் தனித்தனியாகப்
பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என
சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும்
கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... த்ரிஷா
ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க...
படத்திலயும் நடிகையாவே வர்றாங்க... அவங்களைக் காதலிக்கற தொழிலதிபர் மாதவன்.
படம் ஆரம்பிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கற அவங்களைப் பார்க்க
மாதவனோட குடும்பம் வருது.. அங்க அவங்க சூர்யாவோட (நடிகர் சூர்யாவேதான்)
கட்டிப்பிடிச்சு... ஆடறதைப் பார்க்க சகிக்காம மாதவனோட அம்மா எழுந்து
போயிடறாங்க... சூர்யாவோட பொண்ணோட கான்ஃபிரன்ஸ் ஹால்ல த்ரிஷா பேசறதை,
முத்தம் கொடுக்கறதை... சூர்யாவுக்குக் கொடுக்கறதா மாதவன் தப்பா
நினைச்சுடறார்.. அப்புறம் ஒரே கேரவன்ல வேற வேற பகுதிகள்ல... ஒரே நேரத்துல
சூர்யாவும், த்ரிஷாவும் உள்ளே போறதை ஒன்னா போறதா நினைச்சுக்கறார் மாதவன்...
இதனால த்ரிஷா மேல சந்தேகமும் கோபமும் அதிகமாகுது அவருக்கு... அதை கார்ல
போய்க்கிட்டே மாதவன் த்ரிஷாகிட்ட கேக்க... அந்த ஆத்திரத்துலயும்,
கோவத்துலயும் வண்டி ஓட்டிட்டு வரும் போது எதிர்ல வர்ற ஒரு கார் மேல
மோதிடறாங்க த்ரிஷா... அப்ப கோபத்தோட ரெண்டு பேரும் தற்காலிகமா
பிரியறாங்க... அப்புறம் மூனு வருசம் கழிச்சி த்ரிஷா... அமைதியா
இருக்கணும்ங்கறதுக்காக.. அவங்களோட தோழி சங்கீதாவோடு பாரிஸ் போயி அங்க
இருந்து கிளம்பர ஒரு சொகுசுக் கப்பல்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு
கிளம்பறாங்க.... அங்க அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதை வேவு பாக்க
ஒருத்தரை நியமிக்கறார் மாதவன்... அப்படி வேவு பாக்க நியமிக்கப்
படறவர்தான்.. முன்னால் இராணுவ வீரரான கமல்... சொகுசு கப்பலில் செல்லும்
த்ரிஷாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய
கமல்ஹாசனை அதே கப்பலில் அனுப்பி வைக்கிறார் தொழிலதிபர் காதலன் மாதவன்.
இதற்காக பெரும் தொகையை சம்பளமாகக் கேட்கும் கமல்ஹாசன், அந்த பணத்தை தனது
நண்பர் ரமேஷ் அரவிந்தின் கேன்சர் சிகிச்சைக்கு பயன்படுத்த நினைக்கிறார்.
கமிட் ஆன பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் கமல்ஹாசன், த்ரிஷா ரொம்ப
நல்லவர்தான். அவருக்கு வேறு யாருடனும் தொடர்பு இல்லை, என்று
சான்றழிக்கிறார். அதைக் கேட்கும் மாதவன், நல்லவள்தான் என்று சொல்வதற்கு
நான் ஏன் உனக்கு பணம் கொடுக்க வேண்டும்? என கேட்கிறார். இதனால் மனம்
வெறுத்துப் போகும் டிடெக்டிவ் கமல், த்ரிஷாவுக்கும் இன்னொரு ஆளுக்கும்
தொடர்பு இருப்பதா பொய் சொல்கிறார். மாதவனிடம் தகிடு தத்தோம் ஆடும் அந்த
இடத்தில் ஆரம்பிக்கும் கலகலப்பு... அடுத்தடுத்த பொய்களால் அரங்கமே அதிரும்
அளவுக்கு சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. சந்தேக காதலனை த்ரிஷா ஏற்றுக்
கொண்டாரா? கமல்ஹசன் என்ன ஆனார்? அம்புவை அடைந்தது யார்? போன்ற சில பல
கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நகைச்சுவையுடன் கூடிய க்ளைமாக்ஸ்.
தன் வயதிற்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்திருப்பதற்காகவே கமல்ஹாசனை
பாராட்டலாம். கமல்ஹாசனின் நடிப்பை வர்ணிப்பது சூரியனுக்கே ஃபோக்கஸ் லைட்
வச்ச மாதிரியாயிடும். ஆனால், அவரின் இளமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
மனுஷன் எப்படித்தான் இப்படி ஜொலிக்கிறார்னே தெரியல....?!
கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல்
தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். அழகோவியமாக வந்து
அசத்தியிருக்கிறார். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம்
வருகிறார். அவரது தொடை, மார்பு, டாட்டூஸ் தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு
தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு வாலிப சமூகம் சார்பாக சிரம்
தாழ்ந்த வணக்கங்கள்...
படத்துல கமலையும் மீறி ஸ்கோர் பண்றாங்கன்னா அது சங்கீதாதான். த்ரிஷாவோட
தோழியா வர்றாங்க.. ஆனா படம் முழுக்க த்ரிஷாவைவிட இவங்களுக்குதான்
நடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம்... அதையும் நல்லா பயன்படுத்திக்கிட்டு
அசால்ட்டா நடிச்சிருக்காங்க. பிண்ணிட்டீங்க...
மாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார். மாதவனின்
இயல்பான உருவம் மல்டி மில்லியனர் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறது. மனுஷன்
பாரில் குழறியபடி பேசும் பேச்சு சரி காமெடி. சான்ஸே இல்ல...
சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம் போடுகிறார். கொஞ்சம்கூட
தான் ஒரு ஸ்டார் என்ற அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டுச் செல்கிறார்.
அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக்
காட்டிவிட்டு திருப்தியாகிறார். கே.எஸ்.ரவிக்குமார் முதல் காட்சியிலேயே
தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால் படம் முடியும் போது கடைசி
காட்சியில் மிஸ்சிங். தேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி
வருகின்றார். மாதவனின் அம்மாவாக உஷா உதூப் சரியான சாய்ஸ். முறைப்பெண்ணாக
ஓவியா.. பாவங்க.. இவங்கள கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிட்டாங்க!
இவர்கள் தவிர, கேன்சர் நோயாளியாக வரும் ரமேஷ் அரவிந்த், அவரின் மனைவியாக
ஊர்வசி வழக்கம் போல.. கமலின் பேவரிட்.. சொல்லவே வேணாம்.. நெகிழ்ச்சி!
கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி
செல்கிறார் அழகான ஜூலியட். டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்.
யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது
பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது. புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம்
ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை. வெற்றிப்
படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடிதான்.
சங்கீதாவின் குழந்தைகளாக வரும் குட்டிப் பெண் மற்றும் குட்டிப் பையன்
உள்ளிட்ட எல்லோருமே பாத்திரத்திற்கு ஏற்ற பளீச் தேர்வு.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
கமலின் என்ட்ரி. படத்தில் ஒரு கப்பலைக் காட்டி இருக்கின்றார்கள்.. அது
படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலப்
படங்களில் பார்த்து இருந்தாலும் இந்தப் படம் தமிழில் பிரம்மாண்டம்தான்.
இந்த படத்தில் த்ரிஷா தமிழ் பேசி நடிக்கவும் செய்திருக்கிறார். நெருக்கமான
காட்சிகள் இல்லை. பாத்திரங்களின் தேர்வு கனகச்சிதம். இந்தப் படம் நாடகம்
போல ரிகர்சல் செய்து விட்டு எடுத்த படம்.. படத்தின் பிரேம்களில் ரிச்நெஸ்
தெரிகின்றது. படத்தோட ப்ளாஷ் பேக் நாட், முன் பாதியோட முடிச்சு போட்ட விதம்
கமலின் திரைக்கதைக்கு ஒரு கைதட்டல். ரசிக்கும்படியான ஒரே ஒரு
சண்டைக்காட்சி. 'நீல வானம்' பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கலக்கல்.
அதில் ஒரு சீனில் ஒரு செடி தனது இலைகளாக குழந்தையின் பாதங்களை
வைத்திருப்பது ஒன்டர்ஃபுல் கற்பனை. ஜே.கேயின் பிரமாதமான ஆர்ட் டைரக்ஷன்.
கமலின் வசனங்கள் நச். ரொம்ப ஷார்ப். வசனங்களின் இடையே திரையுலகம், சமூகம்,
திருமணத்தின் சில முட்டாள்தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன் எண்ணம்,
மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன
பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய
விடாததும், அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.
கண்களைக் குளிர்விக்கும் ஒளிப்பதிவு. கதையோட்டத்தில் கண்ணுக்கு
விருந்தான அழகான இடங்களையெல்லாம், உல்லாசக் கப்பலின் அழகானப் பகுதிகளை
இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவர். முதல் படத்திலேயே
கவர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன்
என்பது கூடுதல் தகவல். வாழ்த்துக்கள்! ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ்
சினிமாவில் வழக்கமே என்றாலும், இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதி
எனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல், சுவையாக சொல்வதில் ஜெயிக்க
வேண்டுமே.. அதில் கமலும், இயக்குநர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி
நாட்டியுள்ளார்கள்.
கமலுக்கும், த்ரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை
சொல்லும் காட்சி தூக்கப்பட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம்
இன்னும் தேவையாக இருக்கின்றது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் 2 பாடல்கள்
நினைவில் நிற்கின்றன. ஆள் மாறாட்ட காமெடி உள்ளிட்ட பல காட்சிகள்
சிரிக்கும்படி இருந்தாலும் கிரேஸி மோகனின் இடம் காலியாக இருப்பது மைனஸ்.
நல்ல வசனங்களாயிருந்தாலும் படத்தில் வள வள என வசன மழை பொழிந்துகொண்டே
இருப்பது பெரிய மைனஸ், அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகம். கமல் பொதுவாகவே
தனது மேதாவிலாசத்தை காண்பிப்பார், இதில் வசனகர்த்தா வேற கேக்கணுமா? சில
இடங்களில் ஏற்படும் தொய்வு படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்தானா?
என்று சந்தேகப்படவும் வைக்கிறது. எடிட்டர் ஷான் மொஹமத் இன்னும் கொஞ்சம்
காட்சிகளைக் கவனித்து கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் செல்போனில் பேசியபடியே
நகர்வதால், முதல் பாதியின் தொய்வை தவிர்க்க காட்சிகள் இல்லாததாலும்,
கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. என்ன தான் க்ளாஸான மேக்கிங், ஷார்ப்பான
வசனங்கள், சங்கீதா, மாதவன், கமல் ஆகியோரின் சிறந்த நடிப்பு, உறுத்தாத
ஒளிப்பதிவு, தொந்தரவு செய்யாத பாடல்கள், லாஜிக்கில்லாத மேஜிக்காய்
க்ளைமாக்ஸ் பட்டாசு காமெடி என்று பல பாஸிட்டிவான விஷயங்கள் இருந்தாலும் ஏதோ
ஒரு குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
மன்மதன் அம்பு - கரும்பு ஜூஸ்
ஒரு நடிகையை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை காமெடியோடு சொல்லியிருப்பதுதான் இப்படத்தின் கதை!
மன்(கமல்), மதன்(மாதவன்), அம்பு(த்ரிஷா) என்று மூவரையும் தனித்தனியாகப்
பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என
சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும்
கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... த்ரிஷா
ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க...
படத்திலயும் நடிகையாவே வர்றாங்க... அவங்களைக் காதலிக்கற தொழிலதிபர் மாதவன்.
படம் ஆரம்பிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கற அவங்களைப் பார்க்க
மாதவனோட குடும்பம் வருது.. அங்க அவங்க சூர்யாவோட (நடிகர் சூர்யாவேதான்)
கட்டிப்பிடிச்சு... ஆடறதைப் பார்க்க சகிக்காம மாதவனோட அம்மா எழுந்து
போயிடறாங்க... சூர்யாவோட பொண்ணோட கான்ஃபிரன்ஸ் ஹால்ல த்ரிஷா பேசறதை,
முத்தம் கொடுக்கறதை... சூர்யாவுக்குக் கொடுக்கறதா மாதவன் தப்பா
நினைச்சுடறார்.. அப்புறம் ஒரே கேரவன்ல வேற வேற பகுதிகள்ல... ஒரே நேரத்துல
சூர்யாவும், த்ரிஷாவும் உள்ளே போறதை ஒன்னா போறதா நினைச்சுக்கறார் மாதவன்...
இதனால த்ரிஷா மேல சந்தேகமும் கோபமும் அதிகமாகுது அவருக்கு... அதை கார்ல
போய்க்கிட்டே மாதவன் த்ரிஷாகிட்ட கேக்க... அந்த ஆத்திரத்துலயும்,
கோவத்துலயும் வண்டி ஓட்டிட்டு வரும் போது எதிர்ல வர்ற ஒரு கார் மேல
மோதிடறாங்க த்ரிஷா... அப்ப கோபத்தோட ரெண்டு பேரும் தற்காலிகமா
பிரியறாங்க... அப்புறம் மூனு வருசம் கழிச்சி த்ரிஷா... அமைதியா
இருக்கணும்ங்கறதுக்காக.. அவங்களோட தோழி சங்கீதாவோடு பாரிஸ் போயி அங்க
இருந்து கிளம்பர ஒரு சொகுசுக் கப்பல்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு
கிளம்பறாங்க.... அங்க அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதை வேவு பாக்க
ஒருத்தரை நியமிக்கறார் மாதவன்... அப்படி வேவு பாக்க நியமிக்கப்
படறவர்தான்.. முன்னால் இராணுவ வீரரான கமல்... சொகுசு கப்பலில் செல்லும்
த்ரிஷாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய
கமல்ஹாசனை அதே கப்பலில் அனுப்பி வைக்கிறார் தொழிலதிபர் காதலன் மாதவன்.
இதற்காக பெரும் தொகையை சம்பளமாகக் கேட்கும் கமல்ஹாசன், அந்த பணத்தை தனது
நண்பர் ரமேஷ் அரவிந்தின் கேன்சர் சிகிச்சைக்கு பயன்படுத்த நினைக்கிறார்.
கமிட் ஆன பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் கமல்ஹாசன், த்ரிஷா ரொம்ப
நல்லவர்தான். அவருக்கு வேறு யாருடனும் தொடர்பு இல்லை, என்று
சான்றழிக்கிறார். அதைக் கேட்கும் மாதவன், நல்லவள்தான் என்று சொல்வதற்கு
நான் ஏன் உனக்கு பணம் கொடுக்க வேண்டும்? என கேட்கிறார். இதனால் மனம்
வெறுத்துப் போகும் டிடெக்டிவ் கமல், த்ரிஷாவுக்கும் இன்னொரு ஆளுக்கும்
தொடர்பு இருப்பதா பொய் சொல்கிறார். மாதவனிடம் தகிடு தத்தோம் ஆடும் அந்த
இடத்தில் ஆரம்பிக்கும் கலகலப்பு... அடுத்தடுத்த பொய்களால் அரங்கமே அதிரும்
அளவுக்கு சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. சந்தேக காதலனை த்ரிஷா ஏற்றுக்
கொண்டாரா? கமல்ஹசன் என்ன ஆனார்? அம்புவை அடைந்தது யார்? போன்ற சில பல
கேள்விகளுக்கு பதில் சொல்கிறது நகைச்சுவையுடன் கூடிய க்ளைமாக்ஸ்.
தன் வயதிற்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்திருப்பதற்காகவே கமல்ஹாசனை
பாராட்டலாம். கமல்ஹாசனின் நடிப்பை வர்ணிப்பது சூரியனுக்கே ஃபோக்கஸ் லைட்
வச்ச மாதிரியாயிடும். ஆனால், அவரின் இளமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
மனுஷன் எப்படித்தான் இப்படி ஜொலிக்கிறார்னே தெரியல....?!
கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல்
தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். அழகோவியமாக வந்து
அசத்தியிருக்கிறார். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம்
வருகிறார். அவரது தொடை, மார்பு, டாட்டூஸ் தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு
தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு வாலிப சமூகம் சார்பாக சிரம்
தாழ்ந்த வணக்கங்கள்...
படத்துல கமலையும் மீறி ஸ்கோர் பண்றாங்கன்னா அது சங்கீதாதான். த்ரிஷாவோட
தோழியா வர்றாங்க.. ஆனா படம் முழுக்க த்ரிஷாவைவிட இவங்களுக்குதான்
நடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம்... அதையும் நல்லா பயன்படுத்திக்கிட்டு
அசால்ட்டா நடிச்சிருக்காங்க. பிண்ணிட்டீங்க...
மாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார். மாதவனின்
இயல்பான உருவம் மல்டி மில்லியனர் கேரக்டரில் சரியாக சூட் ஆகிறது. மனுஷன்
பாரில் குழறியபடி பேசும் பேச்சு சரி காமெடி. சான்ஸே இல்ல...
சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம் போடுகிறார். கொஞ்சம்கூட
தான் ஒரு ஸ்டார் என்ற அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டுச் செல்கிறார்.
அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக்
காட்டிவிட்டு திருப்தியாகிறார். கே.எஸ்.ரவிக்குமார் முதல் காட்சியிலேயே
தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால் படம் முடியும் போது கடைசி
காட்சியில் மிஸ்சிங். தேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி
வருகின்றார். மாதவனின் அம்மாவாக உஷா உதூப் சரியான சாய்ஸ். முறைப்பெண்ணாக
ஓவியா.. பாவங்க.. இவங்கள கொஞ்சம் ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிட்டாங்க!
இவர்கள் தவிர, கேன்சர் நோயாளியாக வரும் ரமேஷ் அரவிந்த், அவரின் மனைவியாக
ஊர்வசி வழக்கம் போல.. கமலின் பேவரிட்.. சொல்லவே வேணாம்.. நெகிழ்ச்சி!
கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி
செல்கிறார் அழகான ஜூலியட். டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்.
யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது
பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது. புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம்
ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை. வெற்றிப்
படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடிதான்.
சங்கீதாவின் குழந்தைகளாக வரும் குட்டிப் பெண் மற்றும் குட்டிப் பையன்
உள்ளிட்ட எல்லோருமே பாத்திரத்திற்கு ஏற்ற பளீச் தேர்வு.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
கமலின் என்ட்ரி. படத்தில் ஒரு கப்பலைக் காட்டி இருக்கின்றார்கள்.. அது
படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலப்
படங்களில் பார்த்து இருந்தாலும் இந்தப் படம் தமிழில் பிரம்மாண்டம்தான்.
இந்த படத்தில் த்ரிஷா தமிழ் பேசி நடிக்கவும் செய்திருக்கிறார். நெருக்கமான
காட்சிகள் இல்லை. பாத்திரங்களின் தேர்வு கனகச்சிதம். இந்தப் படம் நாடகம்
போல ரிகர்சல் செய்து விட்டு எடுத்த படம்.. படத்தின் பிரேம்களில் ரிச்நெஸ்
தெரிகின்றது. படத்தோட ப்ளாஷ் பேக் நாட், முன் பாதியோட முடிச்சு போட்ட விதம்
கமலின் திரைக்கதைக்கு ஒரு கைதட்டல். ரசிக்கும்படியான ஒரே ஒரு
சண்டைக்காட்சி. 'நீல வானம்' பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கலக்கல்.
அதில் ஒரு சீனில் ஒரு செடி தனது இலைகளாக குழந்தையின் பாதங்களை
வைத்திருப்பது ஒன்டர்ஃபுல் கற்பனை. ஜே.கேயின் பிரமாதமான ஆர்ட் டைரக்ஷன்.
கமலின் வசனங்கள் நச். ரொம்ப ஷார்ப். வசனங்களின் இடையே திரையுலகம், சமூகம்,
திருமணத்தின் சில முட்டாள்தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன் எண்ணம்,
மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன
பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய
விடாததும், அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.
கண்களைக் குளிர்விக்கும் ஒளிப்பதிவு. கதையோட்டத்தில் கண்ணுக்கு
விருந்தான அழகான இடங்களையெல்லாம், உல்லாசக் கப்பலின் அழகானப் பகுதிகளை
இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவர். முதல் படத்திலேயே
கவர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன்
என்பது கூடுதல் தகவல். வாழ்த்துக்கள்! ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ்
சினிமாவில் வழக்கமே என்றாலும், இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதி
எனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல், சுவையாக சொல்வதில் ஜெயிக்க
வேண்டுமே.. அதில் கமலும், இயக்குநர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி
நாட்டியுள்ளார்கள்.
கமலுக்கும், த்ரிஷாவுக்குமான காதலின் அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை
சொல்லும் காட்சி தூக்கப்பட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம்
இன்னும் தேவையாக இருக்கின்றது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் 2 பாடல்கள்
நினைவில் நிற்கின்றன. ஆள் மாறாட்ட காமெடி உள்ளிட்ட பல காட்சிகள்
சிரிக்கும்படி இருந்தாலும் கிரேஸி மோகனின் இடம் காலியாக இருப்பது மைனஸ்.
நல்ல வசனங்களாயிருந்தாலும் படத்தில் வள வள என வசன மழை பொழிந்துகொண்டே
இருப்பது பெரிய மைனஸ், அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகம். கமல் பொதுவாகவே
தனது மேதாவிலாசத்தை காண்பிப்பார், இதில் வசனகர்த்தா வேற கேக்கணுமா? சில
இடங்களில் ஏற்படும் தொய்வு படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்தானா?
என்று சந்தேகப்படவும் வைக்கிறது. எடிட்டர் ஷான் மொஹமத் இன்னும் கொஞ்சம்
காட்சிகளைக் கவனித்து கத்திரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் செல்போனில் பேசியபடியே
நகர்வதால், முதல் பாதியின் தொய்வை தவிர்க்க காட்சிகள் இல்லாததாலும்,
கொஞ்சம் சலிப்பாகவே இருக்கிறது. என்ன தான் க்ளாஸான மேக்கிங், ஷார்ப்பான
வசனங்கள், சங்கீதா, மாதவன், கமல் ஆகியோரின் சிறந்த நடிப்பு, உறுத்தாத
ஒளிப்பதிவு, தொந்தரவு செய்யாத பாடல்கள், லாஜிக்கில்லாத மேஜிக்காய்
க்ளைமாக்ஸ் பட்டாசு காமெடி என்று பல பாஸிட்டிவான விஷயங்கள் இருந்தாலும் ஏதோ
ஒரு குறைவான உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
மன்மதன் அம்பு - கரும்பு ஜூஸ்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மன்மதன் அம்பு மனசை நோகடித்துவிட்டது-ஓவியா
» மன்மதன் அம்பு: சர்ச்சைக்குரிய பாடலை நீக்கம்-கமல் அறிவிப்பு
» திருக்கோவில்களில் ரதி-மன்மதன்
» 13ஆயிரம் பதிவுகளைத்தாண்டும் நமது மன்மதன் யுஜினைவாழ்த்தலாம் வாருங்கள்
» அம்பு பாலம்!
» மன்மதன் அம்பு: சர்ச்சைக்குரிய பாடலை நீக்கம்-கமல் அறிவிப்பு
» திருக்கோவில்களில் ரதி-மன்மதன்
» 13ஆயிரம் பதிவுகளைத்தாண்டும் நமது மன்மதன் யுஜினைவாழ்த்தலாம் வாருங்கள்
» அம்பு பாலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|