தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்களே! இது உங்களுக்கான கோவில்

2 posters

Go down

பெண்களே! இது உங்களுக்கான கோவில் Empty பெண்களே! இது உங்களுக்கான கோவில்

Post by அ.இராமநாதன் Mon Oct 24, 2016 9:52 pm

பெண்களே! இது உங்களுக்கான கோவில் Large_114957878

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும்.
இப்படி ஒரு சமயம் பார்வதிதேவிக்கே இடது கண் 
துடித்து பிரிந்த கணவர் சிவனுடன் இணையும் பாக்கியம் 
கிடைத்தது. 
-
இது நடந்த இடம் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் 
கோவில். இங்கே போய் வரலாமா! 
-
தல வரலாறு : 
-
பூலோகத்தில் வந்து தங்கி உயிர்களை ஆட்கொள்ள சிவன் 
விரும்பினார். இதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார். 
ஒரு சமயம் பார்வதிதேவியுடன் சொக்கட்டான் ஆடினார். 
பலமுறை ஆடியும் பெருமான் தோற்றார். 
ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறி அடம் பிடித்தார். 
-
அவருடன் ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை 
சிறிது நேரம் மூடினாள். சிவனின் கண்களாக சூரிய சந்திரர் 
உள்ளனர். அவை இருண்டதால், உலகம் இருண்டு அனைத்து 
செயல்களும் நின்று போயின. 
-
தன் விளையாட்டான செயலால், உலக உயிர்கள் சற்று நேரம் 
பட்ட இன்னல் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு 
வேண்டினாள். 
-
அதற்கு சிவன், “நீ பூலோகம் சென்று அங்குள்ள சிவத்தலங்களை 
பூஜித்து வா. எந்த தலத்தில், உன் இடது கண்ணும், இடது தோளும்
 துடிக்கிறதோ அந்தத் தலத்திற்கு வந்து, உன்னோடு நான் 
இணைவேன்,” என்றார். 
-
தேவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இங்கு வந்தபோது 
இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் அங்கே தங்கி 
சிவனை பூஜித்தாள். சிவனும் அங்கு வந்து அவளுடன் இணைந்தார். 
---------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களே! இது உங்களுக்கான கோவில் Empty Re: பெண்களே! இது உங்களுக்கான கோவில்

Post by அ.இராமநாதன் Mon Oct 24, 2016 9:52 pm

சிறப்பம்சம்: 
இந்தக் கோவிலிலுள்ள சிவகரைத்தீர்த்த நீரை தெளித்துக் 
கொண்டால் நினைத்தது நிறைவேறும். குழந்தை வரம் 
வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். நாவுக்கரசரை 
மற்ற எந்தக் கோவிலிலும் உழவாரக் கருவியுடன் நின்ற 
நிலையிலேயே பார்க்க முடியும். 

இங்கு மட்டுமே சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் தனி சன்னிதியில் 
காட்சி தருகிறார். இது கிடைப்பதற்கரிய காட்சியாகும். 
சப்தமாதர்கள் சந்நிதி கோவிலை ஒட்டி இருக்கிறது.

பள்ளியறை சிறப்பு: 
பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியை 
ஒட்டியே இருக்கும். இந்தக் கோவிலில் சுவாமி சன்னிதியை ஒட்டி 
உள்ளது. தினமும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது 
எங்குமில்லாத் தனிச்சிறப்பு. இங்கே சிவனுக்கே மதிப்பு அதிகம். 

அவர் ஆயிரங்கலைகளோடு கூடிய சந்திரனை தலையில் சூடி 
தங்கியுள்ள இடம். எனவே அவரை எண்ணி தவமிருக்க அம்பாள் 
தேர்ந்தெடுத்த தலம் இது. எனவே அன்னையே பள்ளியறைக்கு 
எழுந்தருள்கிறாள். 

இங்குள்ள விநாயகரின் கரங்களில் ஆயுதம் ஏதும் கிடையாது. 
பாதிரி மலர்க் கொத்துக்கள் மட்டுமே உள்ளது. இத்தகைய 
சிலையை பார்ப்பது அரிது.

தெருவடச்சான் நிகழ்ச்சி: இந்தக் கோவிலில் வைகாசி விசாகம் 
10 நாட்கள் நடக்கும். இதில் ஐந்தாம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி 
நடக்கும். அதாவது இங்குள்ள தேர் அகலமாக இருப்பதால், யாரும் 
தெருவில் நடந்து செல்ல முடியாது. 

அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லும். எனவே இந்த 
நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு பெயர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்
கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தை அமாவாசை, மாசி மகம் 
ஆகிய நாட்களில் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பவுர்ணமியன்று 
பஞ்சபிரகார வலம் வருதல் என்ற நிகழ்ச்சி நடக்கும். 

திருநாவுக்கரசர் கரையேறிய கதை: திருநாவுக்கரசரை, 
மகேந்திரவர்ம மன்னன் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளிய
போது அவர் 'கற்றுணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும், 
நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அந்தக் கல் 
தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கரையேறியது. மக்கள் 
பரவசமடைந்து அவரை வரவேற்கச் சென்றார்கள். 

நாவுக்கரசர் கடலிலிருந்து கரையேறிய இடம்
 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயருடன் 
விளங்குகிறது. அவரை முதன்முதலில் 'அப்பர்' என்று ஞானசம்பந்தர் 
அழைத்தது இத்தலத்தில் தான்.

சிவகரை தீர்த்த சிறப்பு : 
இந்தக் கோவிலிலுள்ள தீர்த்தத்தை சிவகரை தீர்த்தம் என்கின்றனர். 
சிவன் சித்தராக உருக்கொண்டு வந்து கை வைத்த இடம் இது. 
இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய 
மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்துக்கு சக்தி 
அதிகம். 

இங்குள்ள அம்மனை பெரிய நாயகி என்கின்றனர். 
கணவரைப் பிரிந்த பெண்கள், மீண்டும் இணைய இவளுக்கு 
பட்டு சாத்தி வழிபடுகின்றனர். அருணகிரிநாதர் இத்தலத்து 
முருகப்பெருமானை பாடியுள்ளார். 

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், 
ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். புலிக்கால் 
முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே 
இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

இருப்பிடம்: 
விழுப்புரத்தில் இருந்து கடலூர் 50 கி.மீ., பேருந்து 
நிலையத்திலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோவில்.
நேரம்: காலை 6:00 - 11:00, மாலை 4:00 - 8:30 மணி.
தொலைபேசி: 04142 - 236 728
-
-----------------------------
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களே! இது உங்களுக்கான கோவில் Empty Re: பெண்களே! இது உங்களுக்கான கோவில்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 26, 2016 10:16 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களே! இது உங்களுக்கான கோவில் Empty Re: பெண்களே! இது உங்களுக்கான கோவில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum