தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்
2 posters
Page 1 of 1
சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்
சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்
நூல் ஆசிரியர் : முனைவர் நிர்மலா மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்படம் வித்தியாசமான இயற்கைக் காட்சியாக உள்ளது. மதுரை
செந்தமிழ் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே, இலக்கியத்
துணையாக மட்டுமின்றி இல்லத் துணைவராக இருக்கும் முனைவர் இரா. மோகன்
அவர்களுடன் பட்டிமன்றங்களிலும், கருத்தரங்குகளிலும், உரையாற்றி, முத்திரை
பதித்து வரும் முனைவர் நிர்மலா மோகன் உரையாற்றிய 7 கட்டுரைகளின் தொகுப்பு
நூல் இது. தமிழ் இலக்கியத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது.
சங்க இலக்கியம் என்றால் கற்றறிந்த புலவர்களுக்கு மட்டுமே விளங்கும்.
நமக்கு விளங்காது என்று விளங்கிக் கொள்ளவும் பலர் முயற்சி செய்வதே இல்லை.
ஆனால் சங்கத்தமிழ் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக, மிக எளிமையாகவும்,
இனிமையாகவும் எழுதி உள்ளார்கள். நூலாசிரியர் திருமதி. நிர்மலா மோகன்
காதலித்து முனைவர் இரா. மோகன் அவர்களின் கரம் பிடித்து, காதல்
திருமணத்தின் இலக்கணமாக வாழந்து வரும் மணி விழா கண்ட தம்பதியர்கள். நல்ல
குறுந்தொகையில் உள்ள உலகப்புகழ் பெற்ற பாடலின் விளக்கம் மிக அருமை.
யாயும் ஞாயும் யாரோ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
இதற்கு முன் என் தாயும், நின் தாயும் எத்தகைய தொடர்பேனும் உடையவரா? என்
தந்தையும், எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரை ஒருவர் எப்படி
அறிந்து கொண்டோம்? செம் மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து
அதன் நிறத்தையும், சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல் அன்புடைய நம்
நெஞ்சம் தாமே இயற்கையாகக் கலந்தன என்கிறான் தலைவன். சிறப்பான பாடலுக்கு
மிகச் சிறப்பான விளக்கம். இந்தப் பாடலை உலகக் காதலர்களுக்கு காதல் பாடலாக
அங்கீகரிக்கலாம். காதலைப் பற்றி இவ்வளவு அற்புதமாக எந்தப் பாடலிலும்
இதுவரை கூறவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
நற்றிணைப் பாடல்
விளையோடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மரத்தை சகுந்தலை நீருற்றி மட்டுமே வளர்த்தாள். நற்றிணைப் பாடலில் வரும்
தமிழ்மகளோ பாலும், தேனும் ஊற்றி வளர்க்கிறாள். இயற்கையுடனான உறவைத் தான்
மட்டுமின்றித் தன் மகளும் கொண்டாடுமாறு செய்கிறாள்.
இயற்கையை நேசிக்கும் தமிழ்ப்பண்பை உணர்த்தும் பாடல். தன் தாயால்
வளர்க்கப்பட்ட மரத்தை அக்காவாகக் கருதி அந்த மரத்தின் முன் தலைவன் கரம்
பிடிக்கத் தயங்குகிறாள். மிகச்சிறந்த இயற்கை நேசத்தை பண்பாட்டை
விளக்கிடும் அருமையான பாடலின் விளக்கம் மிக அருமை. இதைப் படித்த போது சங்க
காலத்தில் வாழ்ந்த பெண்ணிற்கும், இன்றைக்கு நாட்டில் நடக்கும்
அவலத்திற்கும் ஒப்பீடு செய்து பார்த்தேன். சங்க காலம் இங்கே மீண்டும்
திரும்ப வேண்டும்.
ஒவ்வொரு சொல்லிலும், தொடரிலும் ஆழ்ந்த கருத்தின் திட்பமும் வாழ்க்கை
அனுபவத் தெளிவும் விளங்கக் கணியன் ப+ங்குன்றனார் பாடிய ஒரே பாடல் இன்றும்
நிலைத்து நிற்கின்றது. உலக ஐக்கிய நாடுகளின் சபையிலும் அப்பாடல் வரி இடம்
பெற்றுள்ளது என்றால் தமிழரின் பெருமை நினைத்து நினைத்து போற்றுதற்குரியது.
அப்புறப்பாடல் வருமாறு,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உலக மனிதர்களை எல்லாம் உற்றவர்களாக, உறவினர்களாக பார்க்கும் பரந்த பார்வை
தமிழனைத் தவிர உலகில் யாருக்கும் இல்லை. அதனால் தான் உலகம் முழுவதும்
பரந்து விரிந்து தமிழினம் வாழ்கின்றது.
அகம் புறம் அற்புதமாகப் பாடினார்கள் நம் சங்கப் புலவர்கள். பல்லாயிரம்
பாடல்களில் தேர்ந்தெடுத்த முத்துமாலையாக வழங்கி உள்ளார் நூலாசிரியர்
முனைவர் நிர்மலா மோகன். இலக்கிய ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக நூல் உள்ளது.
சங்கத்தமிழ் என்ற கனியிலிருந்து அற்புத கனிச்சாறாக நூலை வழங்கி உள்ளார்கள்.
சங்கத்தமிழ் முழுவதையும், படிக்க முடியாதவர்களுக்கும், பொருள்
விளங்காதவர்களுக்கும், இலக்கிய விருந்தாக வந்துள்ளது. உரையின் தொகுப்பு
நூல் என்றாலும், உரை போல் இல்லை, கட்டுரை போல் தௌ;ளத் தெளிவாக உள்ளது.
மலரிலிருந்து தேன் எடுப்பது போல சங்கத்தமிழ் நூல்கள் எனும்
மலர்களிலிருந்து தேன் எடுத்து வழங்கி உள்ளார்கள்.
சங்க இலக்கியம் தந்த சான்றோர்கள் ஒவ்வொருவரும் கல்விச்சிறப்பின் காரணமாகச்
சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெற்றவர்களாக செல்வாக்கும், சொல்வாக்கும்
நிறைந்தவர்களாக விளங்கினார்கள்.
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வியழகே அழகு
என்பதற்கேற்ப நல்லவர்களாக, நடுநிலையாளராக விளங்கினார்கள். புவியாளும்
மன்னர்களால் போற்றப்பட்டார்கள். கவியாளும் புலவரால் பாராட்டப்படுவதையே
மன்னர்களும் விரும்பினார்கள். இந்த நிலை இன்றும் தொடர்வதைக் காண்கின்றோம்.
அன்றைய நக்கீரன் போல இன்றைக்கும் சமரசத்திற்கு இடமின்றி ஆட்சியாளர் தவறு
செய்தால் தட்டிக் கேட்கும் கவிஞர்கள் சிலர் உண்டு. மொத்தத்தில் தமிழர்
யாவரும் தமிழராகப் பிறந்ததற்கு பெருமை கொள்ளும் விதமாக நூல் உள்ளது.அன்புடன் இரா .இரவி
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.comhttp://wtrfm.com/?p=10502
http://www.tamilauthors.com/4.html
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Re: சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்
***இதைப் படித்த போது சங்க காலத்தில் வாழ்ந்த பெண்ணிற்கும், இன்றைக்கு நாட்டில் நடக்கும் அவலத்திற்கும் ஒப்பீடு செய்து பார்த்தேன். சங்க காலம் இங்கே மீண்டும் திரும்ப வேண்டும்.***
உண்மை!
கழகக்கால இலக்கியங்களை தமிழறிந்தோர் குறிப்பாக எழுத்தாளர்களும் இலக்கிய ஈடுபாட்டாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டும்.
உண்மை!
கழகக்கால இலக்கியங்களை தமிழறிந்தோர் குறிப்பாக எழுத்தாளர்களும் இலக்கிய ஈடுபாட்டாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டும்.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்
கவிஞர் இரா.இரவியுடன் ஒரு நேர்காணல்.
https://www.youtube.com/watch?v=JMw3gwx7abo
https://www.youtube.com/user/tamilauthors#p/a/u/1/BMxhIzbEtbA
https://www.youtube.com/watch?v=n8iffIR9xvo
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
www.tamilauthors.com
http://www.tamilthottam.in/-f16/-f16.htm
https://www.youtube.com/watch?v=JMw3gwx7abo
https://www.youtube.com/user/tamilauthors#p/a/u/1/BMxhIzbEtbA
https://www.youtube.com/watch?v=n8iffIR9xvo
www.kavimalar.com
http://eraeravi.blogspot.com/
http://eraeravi.wordpress.com/
www.tamilauthors.com
http://www.tamilthottam.in/-f16/-f16.htm
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Similar topics
» திரு.வெ.இறையன்பு இஆப அவர்களின் ஆளுமைத் திறன்
» தமிழ்ச் சான்றோர்
» சான்றோர் சிந்தனை
» திறன்
» முடிவெடுக்கும் திறன் முக்கியம்!!!
» தமிழ்ச் சான்றோர்
» சான்றோர் சிந்தனை
» திறன்
» முடிவெடுக்கும் திறன் முக்கியம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|