தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

சுயமரியாதை !  நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sun Apr 16, 2017 6:21 pm

சுயமரியாதை !

நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நேசம் பதிப்பகம் !
(மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஓர் அங்கம்) 
எண்.9 ஜி.ஏ.ரோடு, சென்னை-600 021. nesambublication@gmail.com 
25980044, 94443 61136,               பக்கம் 64   விலை 30.

**********
      ‘சுயமரியாதை’ என்ற தலைப்பே எல்லோரும் விரும்பிடும் நல்ல தலைப்பு. நூல் ஆசிரியர் நேர்மையான முதன்மைச் செயலர் எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட முதுமுனைவர் வெ. இறையன்பு.  நூலை வாங்கிப் படித்துப் பார்த்தேன்.  1 மணி நேரத்தில் ஒரேயடியாக படித்து முடித்துவிட்டேன்.

      தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. சமுதாயத்திற்கு, தனிமனிதனுக்கு அறநெறி கூறும் நல்ல நூல். சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பின்பு தான் நமது தமிழகத்தில் கல்வியும், பதவியும் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை வந்தது. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையான ஒன்று. 

மனிதனுக்கு அழகு சுயமரியாதையோடு வாழ்வது தான்.  எந்த ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ்வாங்கு வாழ்கிறானோ அந்த மனிதனுக்கு மற்றவர்கள்  மரியாதை தந்து மதிப்பு நடப்பார்கள்.

      காந்தியடிகளிடம் ஒரு பெண் வந்து என் குழந்தை இனிப்பு நிறைய உண்கிறது கண்டியுங்கள் கேட்டபோது, 1வாரம் கழித்து வரச்சொல்லி விட்டு, பின்பு குழந்தையிடம் அதிகம் இனிப்பு உண்ணுவது கூடாது என ஆலோசனை வழங்கினாராம்.  இதனை ஏன் அன்றே கூறவில்லை என்று கேட்டபோது. இனிப்பு உண்ணும் பழக்கம் எனக்கும் இருந்தது. அப்போது ஆலோசனை வழங்கிட எனக்குத் தகுதி இல்லை.  இப்போது இனிப்பு உண்ணும் பழக்கத்தை விட்டுவிட்டேன்.  இனி எனக்கு தகுதி உண்டு என்றாராம் காந்தியடிகள்.

      முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்கு சுயமரியாதை பற்றி நூல் எழுதிட முழுத்தகுதியும் உண்டு. காரணம் அவர் சுயமரியாதை மிக்க மனிதர்.  எதற்காகவும் நேர்மையை, ஒழுக்கத்தை, பண்பை விட்டுக் கொடுக்காமல் கௌரவமாக வாழ்ந்து வரும் உயர்ந்த மனிதர். 

  இன்றைய இளைஞர்கள்  பலரால் நேசிக்கப்படக் கூடியவர்.  நிலவொளி பள்ளியின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்.  மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மாமனிதர்.பேசியபடியும் எழுதும்படியும் வாழ்ந்து வரும் நல்லவர் .பேச்சுக்கும்,  எழுத்துக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாத சிறந்த மனிதர் .

      நூலிலிருந்து பதச்சோறாக சில கருத்துக்கள் இதோ! 

“ஒருவரிடம் மட்டும் எவ்வளவு வேண்டுமானால் தனி அறையில் அவமானப்பட்டுக் கொள்ளலாம்.  மற்றவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று சுயமரியாதையை, கழற்றிவிடும் செருப்பு போல கையாளுபவர்கள் இருக்கிறார்கள்.  உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் எதற்காகவும் அசிங்கப்படத் தயாராக இருக்க மாட்டான்.  அவனே குனிய நினைத்தாலும் அது அவனால் முடியாது. அவனுடைய பண்புகள் அவனைத் தூக்கிப்பிடிக்கும்.”

      இன்று பதவிக்காகவும் பணத்திற்காகவும் சுயமரியாதையை இழந்து கொத்தடிமைகளாக மாறி பின் கோடிகள் ஈட்டி கைதாக கம்பி எண்ணும் அவலங்கள் நாட்டில் நடந்து வருவதை தினமும் ஊடகத்தின் வழி அறிகின்றோம்.இப்படிப்பட்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பார்த்து நாடே சிறிது வருகின்றது .

      “சுயத்தின் மரியாதை குறையாமல் நடப்பதே சுயமரியாதை சுயத்தையே உணராதவன் அப்படி இருக்க முடியாது.  அதற்கு மனரீதியான பயிற்சி வேண்டும். சுயம் என்பது ஒட்டிக் கொண்ட பதவிகளாலோ, சேர்த்துக் கொண்ட பணத்தினாலோ, வைத்துக் கொண்ட பெயரினாலோ அறியப்படுவது அல்ல.  அது நம் பண்புகளாலும், தூய நடத்தையாலும் ஏற்படுகிற தெளிந்த உள்ளுணர்வு.  அதை ஆழ்ந்து அறிந்து கொண்டால் புற நிகழ்வுகளுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை”

      சுயமரியாதை என்பது உள்ளுணர்வு.  தன்னம்பிக்கை தருவது.  சுயமரியாதைக்கும் ஆணவத்திற்கும் உள்ள வேற்றுமையை அறிந்து கொள்ள வேண்டும்.  நான் என்ற அகந்தை அழித்து விடும்.  இதுபோன்ற பல சிந்தனைகளை விதைக்கும் நூல். உயர்ந்த குலத்தில் பிறந்துவிட்டோம் என்ற ஆணவத்தில் திரியும் மனிதர்களை இன்றும் காண்கிறோம் நாட்டில். 

      “உயர்வு என்பது பிறப்பால் வருவது என்று இன்னமும் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.  எனவே உயிரியல் விபத்தால் சமூகம் உயர்ந்ததாகக் கருதும் வகுப்பில் பிறந்ததால் அது ஒன்றையே பதாகையாகத் தாங்கி எல்லா வகையிலும் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று எண்ணிக் கொள்ளுகிற சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்களைக் கூட பிறப்பு என்கிற கட்டளைக் கல்லில் உரசிப்பார்த்து தரம் பிரித்து மகிழ்வார்கள்.  உண்மையான சுயமரியாதை உணர்வு உள்ளவர்கள் யாரும் தான் உயர்ந்தவன் என்று நினைப்பதில்லை”

      எந்த ஒரு மனிதன் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் என்று எண்ணுகின்றானோ அவனே சிறந்த மனிதன்.  தன்னைப் போல பிறரை நேசிக்கும் உள்ளம் உள்ளவர்களே நல்லவர்கள்.  இப்படி பல சிந்தனைகளை விதைத்து நூல் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் நல்ல எண்ணத்தை நடவு செய்து உள்ளார் நூல் ஆசிரியர்.

      “தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியதோ சின்னக் குழந்தைகளைக் கூட எழுந்து நின்று வரவேற்கும் பெருந்தன்மை கொண்டவர்.  இளைஞர்களைக் கூட ‘அய்யா’ என்று அழைக்கின்ற பரந்த மனம் கொண்டவர் என்பதை இவர்கள் அறிவது இல்லை”

      பெயர் குறிப்பிடாவிட்டாலும் தந்தை பெரியார்தான் அத்தகைய பண்பாளர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.  இறுதி மூச்சு உள்ளவரை சுயமரியாதைக்காக உழைத்தவர் தந்தை பெரியார்.  கடவுள் நம்பிக்கை இல்லாத போதும் ‘வைக்கம்’ போராட்டம் நடத்தியவர் இந்த மண்ணில் சுயமரியாதை இயக்கம் தோற்றிவித்து மண்ணின் மைந்தர்களுக்கு சுயமரியாதையை அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார்.  இட ஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தை முதன்முதலில் திருத்த வைத்து வெற்றி கண்ட மாமனிதர் ‘சுயமரியாதை’ என்ற சொல்லிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் பெரியார்.

நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் எட்டாவது படிக்கும் போது,சிறுவனாக இருந்தபோது  அருகில் உள்ள அச்சகத்திற்கு சென்றபோது அங்கு இருந்த இசுலாமியர் வாங்க என்று மரியாதையாக அழைத்ததை நூலில் குறிப்பிட்டுள்ளார் .இத்தனை ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கின்றது அவர் தந்த மரியாதை .அப்படியே   அச்சுக்  கோர்க்க பழகியதையும் மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள் .

      இந்த நூலில் பெயர் குறிப்பிடாமல் சிலர் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும் அவர்கள் யார் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். எழுத்தாளர் ஜெயகாந்தன் சுயமரியாதை பற்றியும் எழுதுவதை நிறுத்தி விட்ட போதும் விருது தேடி வந்தது அவருக்கு. அவர் பற்றியும் நூலில் உள்ளது.

      “நாம் இன்றைய அறிவு உலகத்தில் யாரும் புறக்கணிக்க முடியாதபடி திகழ்வதற்கு அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது அவசியம்”

      உண்மை. பிரபல இதழ்கள் என்னை புறக்கணித்த போது எனக்கென இணையம் www.kavimalar.com  தொடங்கி வளர்ந்துவிட்ட போது பிரபல இதழ்கள் எனது நேர்முகம்  பிரசுரம் செய்தன.  புறக்கணிப்பிற்காக வருந்தாமல் ,சோர்ந்துவிடாமல் திறமை வளர்த்துக் கொண்டால் நம்மைத்தேடி வருவார்கள் என்பது நான் கண்ட உண்மை.

      “நாம் நிறைய அவமானப்பட்டால் தான் சுயமரியாதை உணர்வை முழுமையாக்கிக் கொள்ள முடியும்.  பழுக்கக் காய்ச்சிய இரும்பை சம்மட்டியால் அடுத்து சீர்படுத்துவது போல சமூகம் பலவேறு வகைகளில் நம்மை செதுக்கிப் பண்பட வைக்கிறது” 

வாழ்வியல் நெறி கற்பிக்கும் நூல் இது.  சுயமரியாதை என்றால் என்ன?  எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்.  பிறர் மரியாதை தரும் அளவில் வாழ சுயமரியாதை வாழ்வு அவசியம். மரியாதை என்பதை கேட்டுப் பெறுவதாக இருத்தல் கூடாது. நமது செயலால் தானாகக் கிடைப்பதாக இருக்க வேண்டும் மரியாதை.

      “நம்மை சரியாக  அமர வைக்காமல் கூட சிலர் அலட்சியப்படுத்தும் போதுதான் அவர்கள் முன், கால் மீது கால்போட்டு உட்காரும் நிலையை அடைய வேண்டும் என்கிற உந்துதல் பிறக்கிறது.”

      நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், சொந்த வாழ்வில் கண்டு உணர்ந்த உணர்வுகளை நூலாக வடித்து உள்ளார்.  பாராட்டுக்கள்.

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அச்சம் தவிர்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» இல்லறம் இனிக்க! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ .ப . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum