தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
நாச்சியார் விமர்சனம்
Page 1 of 1
நாச்சியார் விமர்சனம்
[You must be registered and logged in to see this image.]
-
வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,
இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம்,
அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு...
என்ற களத்தை நூறு நிமிடப் படமாகப் பேச முயல்கிறது,
'நாச்சியார்' திரைப்படம்.
நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகாவிடம் (நாச்சியார்),
மைனர் சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்த வழக்கு
விசாரணைக்கு வருகிறது. அதில் தொடர்புடையதாகக்
கருதப்படும் ஜி.வி.பிரகாஷை காவல்துறை வளைத்துப் பிடிக்கிறது.
விசாரணைக்குப் பிறகு, ஜி.வி கூர்நோக்கு இல்லத்தில் அடைபட,
கர்ப்பமாக இருக்கும் அந்தச் சிறுமியை ஜோதிகாவே தத்தெடுத்துப்
பார்த்துக்கொள்கிறார். சில நாள்களில் அந்தச் சிறுமியின்
குழந்தையும் பூமியைத் தொடுகிறது.
என்ன இது... பாலா படம் மாதிரியே இல்லையே, என்கிறீர்களா?
அதேதான்! முதல்பாதியில் எங்குமே படைப்பாளி பாலாவை
நீங்கள் பார்க்கமுடியாது. இடைவேளையின்போது ஓர் உண்மை
உடைய, இரண்டாம்பாதியில் அது பற்றிய விசாரணையில்
களமிறங்குகிறார், ஜோதிகா.
இந்த இரண்டு மைனர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்
கொண்டவர்கள் யார் என்பது 'நாச்சியாரி'ன் மீதிக்கதை.
அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும்
சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என
அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக
சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை
பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம்,
யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும்
போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.
-
வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,
இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம்,
அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு...
என்ற களத்தை நூறு நிமிடப் படமாகப் பேச முயல்கிறது,
'நாச்சியார்' திரைப்படம்.
நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகாவிடம் (நாச்சியார்),
மைனர் சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்த வழக்கு
விசாரணைக்கு வருகிறது. அதில் தொடர்புடையதாகக்
கருதப்படும் ஜி.வி.பிரகாஷை காவல்துறை வளைத்துப் பிடிக்கிறது.
விசாரணைக்குப் பிறகு, ஜி.வி கூர்நோக்கு இல்லத்தில் அடைபட,
கர்ப்பமாக இருக்கும் அந்தச் சிறுமியை ஜோதிகாவே தத்தெடுத்துப்
பார்த்துக்கொள்கிறார். சில நாள்களில் அந்தச் சிறுமியின்
குழந்தையும் பூமியைத் தொடுகிறது.
என்ன இது... பாலா படம் மாதிரியே இல்லையே, என்கிறீர்களா?
அதேதான்! முதல்பாதியில் எங்குமே படைப்பாளி பாலாவை
நீங்கள் பார்க்கமுடியாது. இடைவேளையின்போது ஓர் உண்மை
உடைய, இரண்டாம்பாதியில் அது பற்றிய விசாரணையில்
களமிறங்குகிறார், ஜோதிகா.
இந்த இரண்டு மைனர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்
கொண்டவர்கள் யார் என்பது 'நாச்சியாரி'ன் மீதிக்கதை.
அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும்
சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என
அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக
சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை
பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம்,
யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும்
போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நாச்சியார் விமர்சனம்
[You must be registered and logged in to see this image.]
ஒரே மாதிரியான கதைகளிலும் கேரக்டர்களிலும் மட்டுமே
நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம்
வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்
கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர்
என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம்
'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார்.
நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும்
இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார்.
சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு
இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும்
இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப்
பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!
முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, படத்தில் வரும்
‘இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான்’ (ராக்லைன் வெங்கடேஷ்),
டாக்டர் குரு, பாட்டி கொளப்புள்ளி லீலா, வழக்குரைஞரராக
வரும் மை.பா.நாராயணன்... நடித்த பெரும்பாலான நடிகர்கள்
கதாபாத்திரத்துடன் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள்;
தேவையான அளவு நடித்தும் இருக்கிறார்கள்.
ஒரே மாதிரியான கதைகளிலும் கேரக்டர்களிலும் மட்டுமே
நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம்
வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்
கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர்
என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம்
'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார்.
நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும்
இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார்.
சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு
இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும்
இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப்
பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!
முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, படத்தில் வரும்
‘இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான்’ (ராக்லைன் வெங்கடேஷ்),
டாக்டர் குரு, பாட்டி கொளப்புள்ளி லீலா, வழக்குரைஞரராக
வரும் மை.பா.நாராயணன்... நடித்த பெரும்பாலான நடிகர்கள்
கதாபாத்திரத்துடன் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்கள்;
தேவையான அளவு நடித்தும் இருக்கிறார்கள்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நாச்சியார் விமர்சனம்
[You must be registered and logged in to see this image.]
'எளியவர்களைச் சுரண்டும் வலியவர்கள், இரு துருவங்களையும்
சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் முடிவு' என்ற ஒன்லைனை
அழுத்தமான கதையாகச் சொல்கிறார், இயக்குநர் பாலா.
வழக்கமான பாலாவின் படங்களில் இருந்து இது வித்தியாசமான
அனுபவம் தருகிறது. இரண்டாம் பாதியை த்ரில்லராக தர
முனைந்ததெல்லாம் சரிதான். ஆனால், அந்த இன்டர்வெல்
ட்விஸ்ட்டை காலங்காலமாக கோலிவுட்டை கவனித்துவரும்
ரசிகன் ஈஸியாக கணித்துவிடுவானே!.
தவிர, பாலா படங்களின் பலமே அதிலுள்ள காட்சிகள் கோபம்,
வெறுப்பு, குரோதம், நகைச்சுவை... என ஏதேனும் ஓர்
உணர்ச்சியையாவது ரசிகனுக்குக் கடத்துவது. அது இந்தப்
படத்தில் மிஸ்ஸிங்.
படத்தின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் ஃப்ளாஷ்பேக்
காட்சியில் அழுத்தம் இல்லை. காவல்துறையை நல்லவர்கள்
புழங்கும் இடமாகவும் சென்னையின் பூர்வகுடிகளை சந்தேகக்
கண்ணோட்டத்தோடும் அணுகும் படங்களை இன்னமும் எ
த்தனை காலத்திற்குப் பார்ப்பது?
குற்றம் செய்தவனுக்கு சட்டத்தில் இருந்து விலகி, தானாகவே
கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் நாச்சியாரை
காவல்துறை 'ஜஸ்ட் லைக் தட்'டாக அணுகுவது, படத்தில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் 'சென்னை மொழி', நீதிமன்றம்,
சமூக சீர்திருத்தப்பள்ளி தொடங்கி,கல்யாண வீடு,
டெபுடி கமிஷனர் அருகில் இருந்துகொண்டு உதவி கமிஷனரை
விரட்டும் போலீஸ் ஏட்டம்மா, மருத்துவமனை ஆயா வரை...
இயல்பில் இருந்து விலகி நிற்கும் இடங்கள் அதிகம்.
முக்கியமாக, 'ஆணவக்கொலை நடக்கும் இடங்களுக்கு உன்னை
ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன்' என உயரதிகாரி நாச்சியாரிடம்
சொல்வது, ஃபேஸ்புக் புரட்சியாக இருக்கிறது. தவிர, போலீஸ்
'விசாரணையை' நியாயப்படுத்துவது, மனித உரிமைகள்
ஆணையத்தை நக்கலடிப்பது போன்றவையெல்லாம் இனியும்
வேண்டாமே!.
'எளியவர்களைச் சுரண்டும் வலியவர்கள், இரு துருவங்களையும்
சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் முடிவு' என்ற ஒன்லைனை
அழுத்தமான கதையாகச் சொல்கிறார், இயக்குநர் பாலா.
வழக்கமான பாலாவின் படங்களில் இருந்து இது வித்தியாசமான
அனுபவம் தருகிறது. இரண்டாம் பாதியை த்ரில்லராக தர
முனைந்ததெல்லாம் சரிதான். ஆனால், அந்த இன்டர்வெல்
ட்விஸ்ட்டை காலங்காலமாக கோலிவுட்டை கவனித்துவரும்
ரசிகன் ஈஸியாக கணித்துவிடுவானே!.
தவிர, பாலா படங்களின் பலமே அதிலுள்ள காட்சிகள் கோபம்,
வெறுப்பு, குரோதம், நகைச்சுவை... என ஏதேனும் ஓர்
உணர்ச்சியையாவது ரசிகனுக்குக் கடத்துவது. அது இந்தப்
படத்தில் மிஸ்ஸிங்.
படத்தின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் ஃப்ளாஷ்பேக்
காட்சியில் அழுத்தம் இல்லை. காவல்துறையை நல்லவர்கள்
புழங்கும் இடமாகவும் சென்னையின் பூர்வகுடிகளை சந்தேகக்
கண்ணோட்டத்தோடும் அணுகும் படங்களை இன்னமும் எ
த்தனை காலத்திற்குப் பார்ப்பது?
குற்றம் செய்தவனுக்கு சட்டத்தில் இருந்து விலகி, தானாகவே
கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் நாச்சியாரை
காவல்துறை 'ஜஸ்ட் லைக் தட்'டாக அணுகுவது, படத்தில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் 'சென்னை மொழி', நீதிமன்றம்,
சமூக சீர்திருத்தப்பள்ளி தொடங்கி,கல்யாண வீடு,
டெபுடி கமிஷனர் அருகில் இருந்துகொண்டு உதவி கமிஷனரை
விரட்டும் போலீஸ் ஏட்டம்மா, மருத்துவமனை ஆயா வரை...
இயல்பில் இருந்து விலகி நிற்கும் இடங்கள் அதிகம்.
முக்கியமாக, 'ஆணவக்கொலை நடக்கும் இடங்களுக்கு உன்னை
ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன்' என உயரதிகாரி நாச்சியாரிடம்
சொல்வது, ஃபேஸ்புக் புரட்சியாக இருக்கிறது. தவிர, போலீஸ்
'விசாரணையை' நியாயப்படுத்துவது, மனித உரிமைகள்
ஆணையத்தை நக்கலடிப்பது போன்றவையெல்லாம் இனியும்
வேண்டாமே!.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நாச்சியார் விமர்சனம்
குப்பை மேடுகளின் புழுதியில் இருந்து எழும் ஈஸ்வரின் கேமரா
குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின்
இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு
இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது.
இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக
ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவது
போல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு
ஒத்துழைத்திருக்கிறது.
இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக்
கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும்
பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா
ஒரு கடவுள் பண்ணிப்போம்’, '
'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை
சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை,
தாயார் தென்கலை’, 'அருள்தரும் அரபு நாட்டினிலே’
என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...'
எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு
லைக்ஸ்!
பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள்,
இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.
-
--------------------------------------
விகடன் விமர்சனக் குழு
-விகடன்
\
குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின்
இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு
இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது.
இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக
ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவது
போல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு
ஒத்துழைத்திருக்கிறது.
இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக்
கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும்
பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா
ஒரு கடவுள் பண்ணிப்போம்’, '
'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை
சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை,
தாயார் தென்கலை’, 'அருள்தரும் அரபு நாட்டினிலே’
என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...'
எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு
லைக்ஸ்!
பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள்,
இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.
-
--------------------------------------
விகடன் விமர்சனக் குழு
-விகடன்
\
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
» நாச்சியார்' சர்ச்சை குறித்து ஜோதிகா
» 100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: 'நாச்சியார்' பட அப்டேட்
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
» நாச்சியார்' சர்ச்சை குறித்து ஜோதிகா
» 100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: 'நாச்சியார்' பட அப்டேட்
» வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!
» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|