தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நட்சத்திரங்கள் விழும் இரவினில் -

Go down

நட்சத்திரங்கள் விழும் இரவினில் -  Empty நட்சத்திரங்கள் விழும் இரவினில் -

Post by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 7:04 pm

[You must be registered and logged in to see this link.]
கடந்த வாரத் தலைப்பு ‘நட்சத்திரங்கள் விழும் இரவினில்’வாசகர்களின் கவிதைகள் பகுதி 2
By கவிதைமணி  |   Published on : 25th August 2018 04:08 PM  |   அ+அ அ-   |  

நட்சத்திரங்கள் விழும் இரவினில் -  F8835d29926d0f8c6f1ebe3e6592c9f1_s

நட்சத்திரங்கள் விழும் இரவினில்!
நட்சத்திரங்கள் விழும் இரவினில்
நட்சத்திரமாய் நீயும் நானும்.
நம்முள்ளே ஈர்க்கவும் எரிக்கவும் 
தெரிந்த விசையிலிருந்து
எதை தேர்வு செய்ய?
நெருங்கி விலகி,
விலகி நெருங்கி
சுவாரசியமானது விண்வெளி விளையாட்டு.
சட்டென்று ஈர்ப்பேதும் 
இல்லாத இடத்தில்
விலகி நகர்ந்தோம்
எதிர் திசையில்.
விழாமல் இருவரும் ஆனோம்
சூரியனாய் 
சந்திரனாய்!
- சுபர்ணா.
**
யாருமற்ற இரவினிலே
மின்மினிக்கும் கரையினிலே!
இரவு வானில் மின்னிடும்
நட்சத்திரங்கள்! நிலவு வானில்
பளிச்சிடும் முத்துச் சிதறல்கள்!
என்னில் தோன்றிடும் அளவிலா
ஆசைகள்! எண்ண முடியா
நட்சத்திர குவியல்கள்!
மல்லிகையும் மணம் வீசுதடி!
எங்கோ மீட்டிடும் வீணையொலி
காதில் கேட்குதடி! மெல்லவே
தென்றல் காற்று வீசுதடி!
மயக்கத்தில் மெளனமொழி பேசுதடி!
சித்திரப்பாவை உன் முகம்
எனது சிந்தனையில் குளிருதடி!
மார்கழி மாதப் பனி போலே!
மின்னி மின்னி ஒளிருதடி!
அது கண்ணை கண்ணைச் சிமிட்டுதடி!
ஆசையலை அடிக்குதடி!
கரையைத் தொட்டு மோதுதடி!
ஆவலில் அள்ளிக் கொள்ள மனம்
துடிக்குதடி! விண்ணுக்கும் 
மண்ணுக்குமான உறவிதுவோ!
விந்தைகளும், விசித்திரங்களும்
நிகழுதடி! நட்சத்திரங்கள் விழும்
இரவினிலே! கனவோ
நினைவோ இது நிஜமோ!
- ஏ.கே.சேகர், ஆகாசம்பட்டு
**
நட்சத் திரங்கள் விழுமிரவாம்
       நடுநி சிநேரம் காத்திருப்பேன்..!
லட்ச மாய்நட் சத்திரமும்
       லாவ கமாய்ச் சூழ்ந்துவர..!
அட்ச தூரம் அதிகம்தான்
       அவளும் வருவாள் நிலாவாக..!
பட்சி களுமே விழித்திருக்கும்
       பசித் திருக்கும் வேளையிலே..!
எட்ட நின்று பார்த்தாலும்
       எப்போ துமவள் அழகேதான்..!
வட்ட வடிவ நிலாவவளாம்
       வளைய வருவாள் சிரித்தபடி..!
வெட்ட வெளியில் உலாவருவாள்
       வெளிச்சம் தந்து வாழவைப்பாள்..!
இட்ட தெய்வம் போலவந்து
       எவ்வு யிர்க்கும் அருளிடுவாள்..!
மண்ணில் வாழும் மனிதருக்கு
       மனதைக் கொண்டுச் சிந்திக்க..!
விண்ணில் நிகழும் அதிசயங்கள்
       வியப்பாய் அதுவும் அமைந்ததுவே..!
எண்ணம் எழவும் வைக்குமன்றோ
       எதையும் அன்பால் நேசித்தால்..!
திண்ணம் உண்டு நம்மனதில்
       திடமாய் எழுத மஹாகவிபோல்..!
- பெருவை பார்த்தசாரதி
**
நினைத்தது நடக்குமாம்
நட்சத்திரங்கள் வீழும் போது..!!
நான் வேண்டிக் கொள்கிறேன் !
இப்போது விழும் நட்சத்திரத்தைப் பார்த்து..!!
இயற்கை அன்னையே 
கேரளாவிற்கு உதவிக் கரம் நீட்டு !
உன் கோபத்தை குறைத்துக் கோள் !
உனது தடயங்களைத் தேடி அலைந்து திரிந்தது போதும் !
சற்று நிதானம் கொள் !
உன் கோபத்தை நீரின்றி தவிக்கும் 
வறண்ட மாநிலங்களின் 
நிலங்களில் செலுத்து ! 
அந்த நிலங்கள் செழிக்கட்டும் !
விவசாயம் வளரட்டும் !
தொழில்வளம் பெருகட்டும் !
அணைகள் நிரம்பட்டும் ! 
ஒரு போதும் உன்னை 
வேண்டாமென்று நாங்கள்
சொல்லவில்லை !
நீயின்றி நீரின்றி ஏது உலகு !
இப்போதைக்கு சென்று விடு
மனிதம் தழைக்க..!!
- மகேஷ் சேந்தலிங்கம் 
நட்சத்திரங்கள் விழும் இரவினில் -  Images_(1)
**
நட்சத்திரக் கண் சிமிட்டலில்
  நிலவும் நாணம் கொள்ளுதோ...
மேகத்திற்குள் ஒளிந்து கொண்டு
  முகத்தைக் காட்ட தவிக்குதோ...
நட்சத்திரப் பூக்கள் சேர்ந்து
  நிலவுக்கு மாலை சூடியதோ..
நிலவைச் சுற்றி வந்து
  நினைவில் ஏக்கம் கொள்ளுதோ..
வான்வெளியில் வெள்ளித் தோரணமாய்
  விண்மீன்களும் ஒளி வீசுதோ..
புள்ளிகள் வைத்த கோலமாய்
  புன்னகை முகத்தில் பேசியதோ
மேகக்கூட்டங்கள் ஒன்றாய் சேர்ந்து
  வானில் கூட்டம் போடுதோ..
வண்ண நிலவைத் தேடி
  வான்வீதியில் ஊர்வலம் போகுதோ..
இரவுநதியில் விண்மீன்களும் நீந்தி
  இன்பமாய் துள்ளி விளையாடுதோ..
வான்கடலில் முழுவதும் கலந்து
  விண்ணின் முத்துக்களாய் மாறியதோ..
                                      
- கவிஞர் நா.நடராசு
**
குடிசை வீட்டுச் சிறுமியின்
கூந்தலில் மின்ன
இறங்கி வருகின்றனவோ...
இரங்கி வருகின்றனவோ...
மீன்
துள்ளி விளையாடும் தடாகத்தின்
அல்லி மலர்மீது காதல்கொண்டு
நிலம்நோக்கி
குளம்நோக்கிப் பாய்ந்ததில்
இடம்மாறி
தடம்மாறி விழுகின்றனவோ...
    
நளினச் சொற்களுக்குப் பதிலாக
நட்சத்திரங்களை அடுக்கியொரு கவியெழுத
அழைத்தேன் 
அதற்காக வருகின்றனவோ...
நட்சத்திங்களை
நிராகரித்துவிட்டு
நிலவை மட்டுமே பாடும் கவிஞர்களிடம்
நீதி கேட்டு
நெடும்பயணமோ...
நட்சத்திரங்கள்
விழுந்த இடம்தேடி
விஞ்ஞானிகளும்  செல்வதில்லை
மெய்ஞானிகளும் சொல்வதில்லை
பாவ பூமியில்விழ அஞ்சிப்
பாதியிலே சாம்பலாகிக் கரைகின்றனவோ...
உச்சி நட்சத்திரங்கள் விழும் 
ஒவ்வோர் இரவும்
உணர்த்துகின்றதோ...
ஒவ்வொன்றாய் என் கனவுகள்
உடைந்து நொறுங்குவதை?
-கோ. மன்றவாணன்

**
நட்சத்தி ரங்கள் நடுநிசிப் பொழுதில்
தலைகீழாய் வீழ்ந்து தற்கொலை செய்து
பள்ளத் தாக்கில் மறைவது போல
உள்ளம் தாக்கி உறைந்து போனேன்
வாழ்க்கை என்னும் வேட்கை அற்று
யாழ் கைக்கொண்டு அவலம்  பாடி
என்னை மூடிய இருண்ட இரவின்
கண்ணீர்த் துளிகளாய்க் கண்சிமிட் டிவிழும்
விண்மீன்கள் என்னை கொத்தித் தின்னும்
கனவுகள் மிச்ச உடலை மேய்ந்து உண்ணும்
நட்சத்திரங்கள் விழுந்திடும் இரவுப் போதுகளில்
ஈரத்துளிகள் உன்இமை களிலிருந்து விழுந்திடுமா?
நட்சத்திரங்கள் விழும் இரவினில் -  Stars
- கவிஞர் மஹாரதி
**
நிலத்தின்
அருவியெனப் பாயும் நதியில்
துடுப்பற்று 
படகாக நீந்துகிறது வான்நிலாவின்
பிம்பம்
தங்க ஒளி பரவும் 
மங்கிய இருளின் வெளியில்
துள்ளும் அலைகள் ;
கெண்டைகளென மின்னித் தெரிக்கும்
பூமியின் நட்சத்திரங்களாய்
இருளைத் துளைக்கும்
மின்மினிக்களின் களைப்புத் தீர
வேய்ங்குழல் மேவி வரும்
மனவோடத்தில்
துடுப்புகளற்று எண்ணங்களின் வழி
பயணம் பட
வருடிக் கொண்டிருக்கிறது
தென்றல்
பாடிக்கொண்டிருக்கிற
குயில்களின் நாதத்தில் மயங்கி
சுருங்கிக் கொண்டிருந்தது
வானம்
நிசப்த கணத்தில்
இசைக் கருவியென எழுந்து 
இலாவகமாய் சுழன்று
ஒத்திசைத்துக் கொண்டிருந்த
அலைகளோடு
துள்ளித் துள்ளி நடனமாடும்
மீன்கள்
தன் குஞ்சுகள்தான்
கடல் வீழ்ந்ததென அலறிப்புடைத்து
அகால இரவில்
குஞ்சுகளைத் தோளேற்ற 
நெகிழ்ந்த நெஞ்சோடு நழுவி
விழுந்து கொண்டிருந்த
நட்சத்திரங்களுக்கு
வெளிச்சம் காட்ட புலர்ந்து கொண்டிருந்தது
கிழக்கு....
- கவிஞர்.கா.அமீர்ஜான்
**
நடந்தேறிய நிகழ்வுகளில் நனைந்திருக்கிறேன்
நிகழவிருக்கும் நிகழ்வுகளை நினைந்திருக்கிறேன்
விழும் பனியிலும் நனைத்திருக்கிறேன் ஏனெனில்
செழுமை நிறை அமெரிக்கா நான் இருப்பது 
நீ இருப்பதோ இந்தியா தற்போது பகற்காலம்
நீ இருப்பதோ பணியிடை கிட்டும் இடைக்காலம்
விடும் விண்வழி மின்னஞ்சல் என் கைபேசியில்
விழும் இரவில் நிலம் விழும் விண்மீன் போல்
விழித்திருக்கையில் உன் நினைவு அலைமோதுகிறதே
விரைவில் வருகிறேன் உன் கரம் பற்றவே காதலியே! 
- மீனா தேவராஜன்
**

நிறங்கள் தொலைந்த நீண்ட இரவினிலே
சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து
கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்..
நிதர்சனக் கோப்பைக்குள் விழும்
நிழல்களைக் கடத்தி வந்து
கரிசனம் ஏதுமின்றி காயப்படுத்திக்
கொண்டிருக்கின்றன இரவை..
அடர்ந்த கரிய நெடி ஒன்று
துருவ நட்சத்திரத்திலும் படர்ந்து விட
துளித்துளியாய் உதிர ஆரம்பிக்கின்றது அதுவும்..
வால் முளைத்த இன்னொன்று பெருவெளி கடந்து
அடுத்து உதிர்ந்து விழ ஆயத்தமாகிகிறது
என் கவிதைக்கு கருவாக..
- கீர்த்தி கிருஷ்
**
நட்சத்திரங்கள் விழும் இரவினில் -  Images1
இயந்திரமயமான வாழ்க்கையிலிருந்து விடுபடுங்கள்
இரவினில் வாணத்தை இனிதே ரசியுங்கள்!
வானம் போதிமரம் என்றார் கவியரசு வைரமுத்து
வானம் உங்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரும்!
வானில் தோன்றிடும் வானவில் அழகுதான் மறையும்  
வானிலிருந்து சில நிமிடங்களில் ! அழகு நிரந்தரமன்று!
வானத்தில் தெரியும் நிலவோ அழகோ அழகு
வான்நிலவை மேகங்கள் மறைத்து விளையாடும்!
நிலவென்னும் இளவரசியின் தோழிகளாக நட்சத்திரங்கள்
நிதமும் தோன்றும் வெவ்வேறு விதமாக!
எண்ணிப் பார்த்து தோற்றுவிடுகிறோம் நட்சத்திரங்களை
எண்ணிலடங்கா மகிழ்ச்சியை மலர்வித்து மகிழ்கின்றன !
வானை ரசிக்க பொறுமையும் ரசனையும் வேண்டும்
வானின் வண்ணங்களை ரசிப்பது தரும் இன்பம்!
இரவு மிக நீளமானது கவலையில் வாடுவோருக்கு
இரவு மிக சுருக்கமானது ரசித்து வாழுவோருக்கு !
தேய்வது போல தோன்றும் தேய்வதில்லை நிலவு
வளர்வது போல தோன்றும் வளரவுமில்லை நிலவு!
அமாவாசையன்று வானில் தெரிவதில்லை நிலவு
அமாவாசையன்றும் நிலவு இருப்பது உண்மை!
முழுநிலவு நாளில் காணக் கண் இரண்டு போதாது
முழுவதுமாகக் கொள்ளை அடித்து விடும் மனதை!
பசித்தவனுக்கு தோசையாகத் தெரியும் நிலவு
புசித்தவனுக்கு விளக்காகத் தெரியும் நிலவு!
சூரியனின் ஒளியைப் பகிர்ந்திடும் நிலவு
சுந்தரமாக சுண்டி இழுக்கும் வனப்பு நிலவு!
இனியாவது இரவில் ரசியுங்கள் வானத்தை
இயந்திர வாழ்வு இனிமையாக அமையும்!
- கவிஞர் இரா. இரவி
**
நட்சத்திரங்கள் விழும் இரவினில்
நதி கரைதாண்டும் அழகினில்
இங்குமங்கும் அசைந்தாடும் படகாய்
அலைமோதி ஆர்பரிக்கும் உன்நினைவுகளில்
கரைசேர காத்திருக்கிறேன் - த(க)ண்ணீரில் 
தள்ளாடும் நிலவாய் நானும் ...
- மூர்த்தி 
**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum