தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
2 posters
Page 1 of 1
உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
மலை மீது அமைந்த ஒரு கிராமம்!
நள்ளிரவு நேரம்
ஊரே உறங்கிக் கிடக்கிறது! ஒருவன் மட்டும் உறங்காமல், அரவம் எதுவும் இல்லாமல், ஒதுங்கி ஒதுங்கி, பதுங்கி பதுங்கி, பையப் பைய நடந்து, ஊரைக் கடந்து ஒதுக்குப் புறமாய் உள்ள ஓடைக் கரை ஒன்றுக்கு வந்தான்.
ஆம்!
அந்த இடம் தான் அவனும் அவன் காதலியும் இரவு நேரங்களில் சந்தித்து இன்பம் பெறும் தளம் ஆகும் - இரவுக் குறிக்கான இடம் ஆகும்.
எப்பொழுதும் அந்த இடத்திற்குக் காதலி தோழியோடு வருவது வழக்கம்.
ஆனால் ...............?
அன்று தோழி மட்டும் அந்த இடத்திலே இருந்தாள்!
அன்புக் காதலியைக் காண்கின்ற ஆவலிலே வந்த அவன் காதலியைக் காணாது கலங்கி நின்றான் - தோழி மட்டும் நிற்பதைக் கண்டு துவண்டு நின்றான்.
“தோழி! தலைவி எங்கே? ஏன் நீ மட்டும் இங்கு நிற்கிறாய்? அவள் எங்கே இருக்கிறாள்? ஒரு வேளை ஒளிந்து கொண்டு வேடிக்கை காட்டுறாளா? வெளியே வரச் சொல்! நான் பல இடையூறுகளைக் கடந்து எவ்வளவு ஆவலுடன் இங்கே வந்துள்ளேன்! அவளை இங்கே அழைப்பாயாக!” என்று படபடவெனப் பேசினான்.
அத்தனையையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் நின்ற தோழி,
“தலைவா! மன்னிக்கவும்! நடந்ததைக் கூறுவதற்குத் தயக்கமாக ................ உள்ளது .................!”
“என்ன? என்ன? ஏன் தயக்கம்? தயங்காமல் கூறு” என்று அச்சத்துடன் - நடக்கக் கூடாதது ஏதோ நடந்துவிட்டதோ என்ற கலக்கத்துடன் கேட்டான்.
“தலைவா! தலைவியை அவளுடைய பெற்றோர்கள் இரவு நேரங்களில் எங்கும் செல்லக் கூடாது எனத் தடை பிறப்பித்து உள்ளனர். காவலும் கடுமையாக இடப்பட்டுள்ளது. அதாவது இற்செறிக்கப்பட்டுள்ளாள். அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
“தங்கள் மீதும் ஒரு குறை உள்ளது!”
“என்ன என் மீதா? என்ன குறை? சொல்!”
“இப்படி இரவு நேரங்களில் அவளைச் சந்தித்து இன்பம் காண்பதிலேயேதான் காலத்தைக் கழிக்க நினைக்கிறீர்! எப்பொழுதும் பிரியாமல் இருக்கக் கூடி திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறீர். எனவே, இனிமேல் இரவு குறியாமல் - இரவு நேரங்களில் இந்த ஓடைக்கரையில் அவளைத் தாங்கள் சந்திக்க இயலாது. அவள் வர மாட்டாள். இனியாவது மணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!” தோழி உள்ள நிலையை - தலைவியின் உள்ள நிலையைப் பக்குவமாய்ப் பகர்ந்தாள்.
இதனைக் கேட்டு இடிந்துபோன தலைவன் சோர்ந்து போன முகத்துடன், சோகம் தோய்ந்த முகத்துடன் - தளர்ந்து போன நடையுடன் திரும்பினான்.
திரும்புகிறவன் மனம் நொந்து, தனக்குத்தானே பலவாறு புலம்பிக் கொண்டே வந்தான்.
“ஏ! மனமே! இன்று உனக்கு ஏற்பட்ட சோதனையைப் பார்த்தாயா?”
இரவுக் குறிக்கு வருகிறேன் - வர உடன்படுகிறேன் என்று இனிய நல்ல சொற்களைக் கூறாமல், வரமாட்டேன் - வர உடன் பட மாட்டேன் என்னும் தீய சொற்களைத் தலைவியின் தோழி கூறி விட்டாளே! அந்தச் சொற்களை அந்தச் சொற்களை இன்று நீ கேட்க வேண்டியது ஆயிற்றே!
இரவுக் குறிக்கு உடன்படத் தலைவி மறுத்துவிட்டாளே! தகுமா இது? பச்சை மண்ணால் செய்து வேக வைக்கப்படாத மண்பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்?
மழையை எதிர்க்க முடியாத - மழை நீரில் கரைந்து போகக் கூடிய பச்சை மண் பாண்டம் போல் உன்னால் அடைய முடியாத ஆசையை உள்ளத்தில் உண்டாக்கி வளர்த்துக் கொண்டாய் - உன்னால் பெற முடியாத ஒன்றைப் பெற முனைந்தாய் - தாங்கிக் கொள்ள முடியாத ஆர்வத்தை உருவாக்கி வைத்தாய்!
வேக வைக்கப்படாத பச்சை மண் பாண்டம்! அதற்குள் தண்ணீரை ஊற்றினாலே போதும். அது தாங்கிக் கொள்ளாது - சிதைந்து போகும்.
அப்படிப் பட்ட பசு மண் பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்?
அதைப்போல், இரவுக் குறிச் சந்திப்புக்கும் பகல் குறிச் சந்திப்புக்கும் ஏற்பட்ட இடையூறையே தாங்கிக் கொள்ள முடியாத நீ கூடவே இல்லாத - சந்திப்பே இல்லாத - குறிமறுப்பை எப்படித் தாங்கிக் கொள்வாய?
உயர்ந்த மரக்கிளை! அந்த மரக்கிளையில் ஒரு மந்தி! குட்டி தன்னைக் கவ்விக் கொள்ள அதனையும் தாங்கிக் கொண்டே வலிமையுடன் செல்லும்!
அந்த மந்தியைப் போல் அன்புடன் உன்னை அரவணைத்துக் கொள்ள யாருமே இல்லையே! - ஆறுதல் சொல்ல ஆதரவு காட்ட யாருமே இல்லையே!
உனக்கு ஆதரவு காட்டி, அரவணைத்துக் கொள்ளும் அன்பு கொண்டவர்கள் யாரேனும் இருநதால், அவர்கள் முன்னே நீ இப்படிப் புலம்பினால் அவர்கள் தேற்றி உன் துன்பத்தைப் போக்குவர். நீ புலம்புவதால் நன்மை உண்டாகும்.
ஆனால், அப்படிப்பட்டவர் தாம் யாருமே இப்பொழுது இல்லையே! எனவே நீ புலம்புவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? ஆகவே உன் புலம்பல் வீணானது தான். எனவே புலம்பாதே!
தனியே தலைவி இருக்கிறாளே, அவள் கல்நெஞ்சக்காரி! நீ ஆறுதல் பெறாமைக்கு - அமைதி பெறாமைக்குக் காரணம் அவளுடைய கன்னெஞ்சமே ஆகும்.
காக்க வேண்டிய குட்டியைத் தாங்கி உள்ள மந்தியானது அதற்காக மரத்தை மிக உறுதியாகப் பற்றித் தழுவுவது போல் - தாவுவதுபோல் போற்ற வேண்டிய அன்பினைப் பெற்றுள்ள தலைவி என்னைச் சேர்ந்திருந்தால் தானே என் துயர் தீரும்!
அப்படி அவள் இல்லையே!
ஆகவே நீ வீணே புலம்புவதால் எப்பயனும் இல்லை! என்று தன்னிரக்க உரையாக, தனக்குத்தானே புலம்பிக் கொண்டு, தன்னையே தேற்றிக் கொண்டு சென்றான்.
“நல்உரை இகந்து, புல்உரை தா அய்,
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அலாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகன்உறத் தரீஇக் கேட்குநர்ப் பெறினே!
குறுந்தொகை 29
எழுத்து : டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 558286.
நள்ளிரவு நேரம்
ஊரே உறங்கிக் கிடக்கிறது! ஒருவன் மட்டும் உறங்காமல், அரவம் எதுவும் இல்லாமல், ஒதுங்கி ஒதுங்கி, பதுங்கி பதுங்கி, பையப் பைய நடந்து, ஊரைக் கடந்து ஒதுக்குப் புறமாய் உள்ள ஓடைக் கரை ஒன்றுக்கு வந்தான்.
ஆம்!
அந்த இடம் தான் அவனும் அவன் காதலியும் இரவு நேரங்களில் சந்தித்து இன்பம் பெறும் தளம் ஆகும் - இரவுக் குறிக்கான இடம் ஆகும்.
எப்பொழுதும் அந்த இடத்திற்குக் காதலி தோழியோடு வருவது வழக்கம்.
ஆனால் ...............?
அன்று தோழி மட்டும் அந்த இடத்திலே இருந்தாள்!
அன்புக் காதலியைக் காண்கின்ற ஆவலிலே வந்த அவன் காதலியைக் காணாது கலங்கி நின்றான் - தோழி மட்டும் நிற்பதைக் கண்டு துவண்டு நின்றான்.
“தோழி! தலைவி எங்கே? ஏன் நீ மட்டும் இங்கு நிற்கிறாய்? அவள் எங்கே இருக்கிறாள்? ஒரு வேளை ஒளிந்து கொண்டு வேடிக்கை காட்டுறாளா? வெளியே வரச் சொல்! நான் பல இடையூறுகளைக் கடந்து எவ்வளவு ஆவலுடன் இங்கே வந்துள்ளேன்! அவளை இங்கே அழைப்பாயாக!” என்று படபடவெனப் பேசினான்.
அத்தனையையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் நின்ற தோழி,
“தலைவா! மன்னிக்கவும்! நடந்ததைக் கூறுவதற்குத் தயக்கமாக ................ உள்ளது .................!”
“என்ன? என்ன? ஏன் தயக்கம்? தயங்காமல் கூறு” என்று அச்சத்துடன் - நடக்கக் கூடாதது ஏதோ நடந்துவிட்டதோ என்ற கலக்கத்துடன் கேட்டான்.
“தலைவா! தலைவியை அவளுடைய பெற்றோர்கள் இரவு நேரங்களில் எங்கும் செல்லக் கூடாது எனத் தடை பிறப்பித்து உள்ளனர். காவலும் கடுமையாக இடப்பட்டுள்ளது. அதாவது இற்செறிக்கப்பட்டுள்ளாள். அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
“தங்கள் மீதும் ஒரு குறை உள்ளது!”
“என்ன என் மீதா? என்ன குறை? சொல்!”
“இப்படி இரவு நேரங்களில் அவளைச் சந்தித்து இன்பம் காண்பதிலேயேதான் காலத்தைக் கழிக்க நினைக்கிறீர்! எப்பொழுதும் பிரியாமல் இருக்கக் கூடி திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறீர். எனவே, இனிமேல் இரவு குறியாமல் - இரவு நேரங்களில் இந்த ஓடைக்கரையில் அவளைத் தாங்கள் சந்திக்க இயலாது. அவள் வர மாட்டாள். இனியாவது மணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!” தோழி உள்ள நிலையை - தலைவியின் உள்ள நிலையைப் பக்குவமாய்ப் பகர்ந்தாள்.
இதனைக் கேட்டு இடிந்துபோன தலைவன் சோர்ந்து போன முகத்துடன், சோகம் தோய்ந்த முகத்துடன் - தளர்ந்து போன நடையுடன் திரும்பினான்.
திரும்புகிறவன் மனம் நொந்து, தனக்குத்தானே பலவாறு புலம்பிக் கொண்டே வந்தான்.
“ஏ! மனமே! இன்று உனக்கு ஏற்பட்ட சோதனையைப் பார்த்தாயா?”
இரவுக் குறிக்கு வருகிறேன் - வர உடன்படுகிறேன் என்று இனிய நல்ல சொற்களைக் கூறாமல், வரமாட்டேன் - வர உடன் பட மாட்டேன் என்னும் தீய சொற்களைத் தலைவியின் தோழி கூறி விட்டாளே! அந்தச் சொற்களை அந்தச் சொற்களை இன்று நீ கேட்க வேண்டியது ஆயிற்றே!
இரவுக் குறிக்கு உடன்படத் தலைவி மறுத்துவிட்டாளே! தகுமா இது? பச்சை மண்ணால் செய்து வேக வைக்கப்படாத மண்பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்?
மழையை எதிர்க்க முடியாத - மழை நீரில் கரைந்து போகக் கூடிய பச்சை மண் பாண்டம் போல் உன்னால் அடைய முடியாத ஆசையை உள்ளத்தில் உண்டாக்கி வளர்த்துக் கொண்டாய் - உன்னால் பெற முடியாத ஒன்றைப் பெற முனைந்தாய் - தாங்கிக் கொள்ள முடியாத ஆர்வத்தை உருவாக்கி வைத்தாய்!
வேக வைக்கப்படாத பச்சை மண் பாண்டம்! அதற்குள் தண்ணீரை ஊற்றினாலே போதும். அது தாங்கிக் கொள்ளாது - சிதைந்து போகும்.
அப்படிப் பட்ட பசு மண் பாண்டம் மழை நீரை எப்படித் தாங்கும்?
அதைப்போல், இரவுக் குறிச் சந்திப்புக்கும் பகல் குறிச் சந்திப்புக்கும் ஏற்பட்ட இடையூறையே தாங்கிக் கொள்ள முடியாத நீ கூடவே இல்லாத - சந்திப்பே இல்லாத - குறிமறுப்பை எப்படித் தாங்கிக் கொள்வாய?
உயர்ந்த மரக்கிளை! அந்த மரக்கிளையில் ஒரு மந்தி! குட்டி தன்னைக் கவ்விக் கொள்ள அதனையும் தாங்கிக் கொண்டே வலிமையுடன் செல்லும்!
அந்த மந்தியைப் போல் அன்புடன் உன்னை அரவணைத்துக் கொள்ள யாருமே இல்லையே! - ஆறுதல் சொல்ல ஆதரவு காட்ட யாருமே இல்லையே!
உனக்கு ஆதரவு காட்டி, அரவணைத்துக் கொள்ளும் அன்பு கொண்டவர்கள் யாரேனும் இருநதால், அவர்கள் முன்னே நீ இப்படிப் புலம்பினால் அவர்கள் தேற்றி உன் துன்பத்தைப் போக்குவர். நீ புலம்புவதால் நன்மை உண்டாகும்.
ஆனால், அப்படிப்பட்டவர் தாம் யாருமே இப்பொழுது இல்லையே! எனவே நீ புலம்புவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? ஆகவே உன் புலம்பல் வீணானது தான். எனவே புலம்பாதே!
தனியே தலைவி இருக்கிறாளே, அவள் கல்நெஞ்சக்காரி! நீ ஆறுதல் பெறாமைக்கு - அமைதி பெறாமைக்குக் காரணம் அவளுடைய கன்னெஞ்சமே ஆகும்.
காக்க வேண்டிய குட்டியைத் தாங்கி உள்ள மந்தியானது அதற்காக மரத்தை மிக உறுதியாகப் பற்றித் தழுவுவது போல் - தாவுவதுபோல் போற்ற வேண்டிய அன்பினைப் பெற்றுள்ள தலைவி என்னைச் சேர்ந்திருந்தால் தானே என் துயர் தீரும்!
அப்படி அவள் இல்லையே!
ஆகவே நீ வீணே புலம்புவதால் எப்பயனும் இல்லை! என்று தன்னிரக்க உரையாக, தனக்குத்தானே புலம்பிக் கொண்டு, தன்னையே தேற்றிக் கொண்டு சென்றான்.
“நல்உரை இகந்து, புல்உரை தா அய்,
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அலாவுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகன்உறத் தரீஇக் கேட்குநர்ப் பெறினே!
குறுந்தொகை 29
எழுத்து : டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர் 558286.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
உனக்கு ஆதரவு காட்டி, அரவணைத்துக் கொள்ளும் அன்பு கொண்டவர்கள் யாரேனும் இருநதால், அவர்கள் முன்னே நீ இப்படிப் புலம்பினால் அவர்கள் தேற்றி உன் துன்பத்தைப் போக்குவர். நீ புலம்புவதால் நன்மை உண்டாகும்
ரொம்ப அருமையாகவும் என்னை கவர்ந்தும் உள்ளது.பாராட்டுக்கள்
ரொம்ப அருமையாகவும் என்னை கவர்ந்தும் உள்ளது.பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உருக்குலைந்த உறவு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
RAJABDEEN wrote:உனக்கு ஆதரவு காட்டி, அரவணைத்துக் கொள்ளும் அன்பு கொண்டவர்கள் யாரேனும் இருநதால், அவர்கள் முன்னே நீ இப்படிப் புலம்பினால் அவர்கள் தேற்றி உன் துன்பத்தைப் போக்குவர். நீ புலம்புவதால் நன்மை உண்டாகும்
ரொம்ப அருமையாகவும் என்னை கவர்ந்தும் உள்ளது.பாராட்டுக்கள்
:héhé: :héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஒளியினைத் தேடும் குத்துவிளக்கு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» கலங்கமற்ற காதல் உள்ளம் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» அதுவரை பொறுத்திரு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» தொடர்கின்ற பயணம்! - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» கார்கால நினைவுகள் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» கலங்கமற்ற காதல் உள்ளம் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» அதுவரை பொறுத்திரு - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» தொடர்கின்ற பயணம்! - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
» கார்கால நினைவுகள் - டாக்டர் மா.தியாகராசன் சிங்கப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|