தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

3 posters

Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by ரௌத்திரன் Fri Mar 01, 2013 11:31 pm

பஞ்சணை மீதில் இன்பப்
-------பழவுடல் கிடக்கும்; சோகம்
நெஞ்சணை உடைக்கும்; உள்ளே
-------நெருக்குமோர் நினைவி னாலே!
அஞ்சன விழியி ரண்டும்
-------அழுதிடும் கேணி தன்னை
மிஞ்சிட நினைத்தாற் போல
-------முப்போதும் நீர்சு ரந்து!

காவியம் பேசும் கண்கள்
-------கவலைகள் பேச; ஆண்கள்
ஆவியைப் பறிக்கும் பார்வை
-------ஆற்றாமை பேச; சிரிப்பு
ஓவியம் தீட்டு கின்ற
--------இதழ்களோ வாட்டம் பேச
நீவிட விரல்கள் இன்றி
-------நீள்குழல் வெளுக்கப் பார்க்கும்!

ஆறுதல் சொல்வ தற்கு
---------அன்புள உறவும் இல்லை!
ஆறுதல் சொன்னால் கூட
---------ஆறிடும் காய மில்லை!
ஆறுதல் தானே கொள்ள
---------அத்தனை முதியள் இல்லை!
ஆறுதல் அவளுக் குண்டேல்
---------அதன்பெயர் சாவின் எல்லை!

ஓர்ஆளன் இன்றி நாளும்
--------ஒடிவாளைத் தனிமை மேலும்
ஓர்வாளைப் போல வாட்டும்!
--------நிராயுத பாணி யாகப்
போர்வாளின் முன்த விக்கும்
--------போர்வீரன் போல நின்றாள்!
கூர்வாளாம் கண்கள் கூட
--------மழுங்கிய வள்என் செய்வாள்?

இச்சித்து வாழு கின்ற
-------இனிதான வாழ்வு இல்லாள்
இச்சென்ற ஒன்றி னின்று
-------இதயத்தை மீட்கப் பார்த்தால்
"இச்"சென்று பல்லி கூட
-------இசைத்திடும் வேண்டு மென்றே!
கச்சணி மாது நெஞ்சைக்
--------கசக்கிடும் எண்ணம் கொண்டே!

தாகமே தீரு முன்பு
-------நீர்க்குடம் கவிழ்ந்தாற் போல
ராகமே இசைக்கு முன்பு
-------வீணைதான் எரிந்தாற் போல
வகையைச் சூடு முன்பு
-------கழுத்துதான் அறுந்தாற் போல
சோகமே வடிவாய்க் கொண்டு
--------சேயிழை நின்றா ளம்மா!

நகையினை இழந்த பாவை
--------நெஞ்சத்து பாரம் தன்னில்
முகையிதழ் மேனி சற்று
--------மெலிந்தனள்; எனினும் கூட
புகையது நெருப்பு இன்னும்
---------அணைந்திட வில்லை யென்று
பகர்வது போலக் காமம்
---------பாவையைப் படுத்தி வைக்கும்!

இருபத்து ஏழு அந்த
--------இனியவள் வயது; கொஞ்சம்
முறுவலை இழந்த தாலே
---------முப்பத்து நான்கு போல
ஒருபெருந் தோற்றம் காட்டும்!
---------ஓ!அவள் முடிந்த தெல்லாம்
பருவத்துத் தோட்டந் தன்னில்
---------பகல்கனா பூக்க ளென்பேன்!


கட்டிலின் சுகத்தைக் கண்டு
-------கனியுடல் சிலிர்த்தா ளில்லை!
கட்டிய கணவன் மார்பில்
-------கண்மூடிக் கிடந்தா ளில்லை!
கட்டிய கணவன் உண்டு
--------கழுத்தினில் தாலி இல்லை!
விட்டமே பார்த்தும் பார்த்தாள்
--------விசனமே குறைய வில்லை!

மயக்குறு வாழ்வு பெற்று
--------மனமது நிறையா பெண்ணாள்
வயிற்றினை நிரப்ப வேண்டி
--------வேலைக்குப் போவாள்; ஆங்கே
"வயப்படு வாளா?" என்றே
--------வடிவுடல் சுவைக்கப் பார்க்கும்
நயவஞ்ச எண்ணங் கொண்ட
--------நாய்களால் இதயம் நைவாள்!

எட்டிய வாழ்வை விட்டு
--------எட்டியே சென்ற நாளை
எட்டிய வாழ்வு தன்னில்
--------ஏங்கியே நின்ற நாளை
எட்டிய வாழ்வு முற்றும்
--------எட்டியாய் ஆன நாளை
சொட்டிய விழியின் நீர்தான்
--------சுட்டியே காட்டக் காண்பாள்!





(காவியம்-தொடரும்)

-------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 02, 2013 10:54 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 12, 2013 2:46 pm

தொடருங்கள்... காத்திருக்கிறோம்... மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2) Empty Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum