தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
2 posters
Page 1 of 1
ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
பெற்றவர்கள் யாரென்று அறியா நங்கை
-------புத்தியது தெரிந்திட்ட நாளி ருந்து
முற்றுமவள் வளர்ந்ததெலாம் அநாதை இல்லம்!
-------முறையுடனே தான்வளர்ந்தாள் முறைகே டில்லை!
பற்றுகளில் சிறியதான பற்றை யெல்லாம்
-------பற்றிதினம் வளர்ந்திட்ட மழலைப் பெண்ணாள்
பற்றுக்கும் பற்றையூட்டும் பருவ மெய்தி
-------பற்றிமிக எரியவிட்டாள் ஆண்கள் நெஞ்சை!
(வேறு)
கடைவிழிப் பார்வை காட்டுவாள்; நெஞ்சைக்
--------குகையினைப் போலவே குடையும்!
"இடைவெளி கொஞ்சம் இடைவிடு பிழைக்க"
--------என்னுமா றிதயமே உடையும்!
இடைவெளி கொஞ்சம் இடைவிடும் போதும்
-------"இத்தனை வஞ்சமேன்?" என்னும்!
நடைவழி வந்தே படைகொளும் வீரன்
--------போலவள் மயக்கமே தின்னும்!
"எத்தனை அழகு! எத்தனை அழகு!"
--------என்றொரு இதயமே கொஞ்சும்!
"இத்தனைக் கடிதா மனதினை அடக்கல்?"
---------என்றொரு இதயமே துஞ்சும்!
"அத்தனை எளிதா என்மனம் அசைத்தல்?"
---------என்றிடும் ஞானியர் நெஞ்சும்
""மத்"தனை நெஞ்சை நித்தமும் கடைந்தாய்
---------"மத்த"னைக் கா!"வெனக் கெஞ்சும்!
கைவளைச் சற்றும் குலுங்கிட முற்றும்
---------காளையர் வாலிபம் குலுங்கும்!
மைவளைத் துள்ள மைவிழித் துள்ள
---------மாற்றிலை அதற்கொரு விலங்கும்!
ஐவளைத் துள்ளும் ஐம்புல னெலிகள்
---------ஆடுமோர் பாம்பென இலங்கும்!
நைபவர் பூசை செய்பவர் கண்டு
---------நல்லவள் நெஞ்சமும் கலங்கும்!
மென்னிடை நோக்கித் தன்னெடை நோக்கப்
---------பின்னிடை இறங்கும் குழல்தான்!
பின்னிடை மேடை தன்னிடை இரண்டு
---------மத்தளம் கொட்டிடும் எழில்தான்!
விண்ணிடை மின்னல் பொன்னிடை கண்டால்
---------"உன்னிடை ஒளிவிடும் நிழல்நான்"!
என்றிடு மென்னில் ஏங்குவார் நெஞ்சில்
----------தூங்குமோ காதலின் அழல்தான்?
காணுவார் நெஞ்சம் பூணுமோர் நகையப்
---------பூவையின் பூமுக மாகும்!
நாணுவார் ஆண்கள் மட்டுமே யல்ல
---------நாயகி தோழிகள் தாமும்!
காணுமா றுரைக்கும் காரிகை தோழி
---------மாருடன் ஏகுவள் மாலை!
வேணுமோர் கேலி வார்த்தைகள் ஆடி
---------கல்லூரி விட்டதோர் வேளை!
(வேறு)
கல்லூரி வளாகந் தன்னில்
-------காட்சிய ளித்தி ருந்த
தெள்ளிய பலகை யொன்று
-------தெரிவிக்கும் "நாளை மாலை
கல்லூரி இருபத் தைந்து
-------ஆண்டுகள் நிறைவை யொட்டி
நல்லதோர் விழவு" என்று
-------நறுங்கொடி தானுங் காண்பாள்!
----(காவியம் தொடரும்)
------ரௌத்திரன்
-------புத்தியது தெரிந்திட்ட நாளி ருந்து
முற்றுமவள் வளர்ந்ததெலாம் அநாதை இல்லம்!
-------முறையுடனே தான்வளர்ந்தாள் முறைகே டில்லை!
பற்றுகளில் சிறியதான பற்றை யெல்லாம்
-------பற்றிதினம் வளர்ந்திட்ட மழலைப் பெண்ணாள்
பற்றுக்கும் பற்றையூட்டும் பருவ மெய்தி
-------பற்றிமிக எரியவிட்டாள் ஆண்கள் நெஞ்சை!
(வேறு)
கடைவிழிப் பார்வை காட்டுவாள்; நெஞ்சைக்
--------குகையினைப் போலவே குடையும்!
"இடைவெளி கொஞ்சம் இடைவிடு பிழைக்க"
--------என்னுமா றிதயமே உடையும்!
இடைவெளி கொஞ்சம் இடைவிடும் போதும்
-------"இத்தனை வஞ்சமேன்?" என்னும்!
நடைவழி வந்தே படைகொளும் வீரன்
--------போலவள் மயக்கமே தின்னும்!
"எத்தனை அழகு! எத்தனை அழகு!"
--------என்றொரு இதயமே கொஞ்சும்!
"இத்தனைக் கடிதா மனதினை அடக்கல்?"
---------என்றொரு இதயமே துஞ்சும்!
"அத்தனை எளிதா என்மனம் அசைத்தல்?"
---------என்றிடும் ஞானியர் நெஞ்சும்
""மத்"தனை நெஞ்சை நித்தமும் கடைந்தாய்
---------"மத்த"னைக் கா!"வெனக் கெஞ்சும்!
கைவளைச் சற்றும் குலுங்கிட முற்றும்
---------காளையர் வாலிபம் குலுங்கும்!
மைவளைத் துள்ள மைவிழித் துள்ள
---------மாற்றிலை அதற்கொரு விலங்கும்!
ஐவளைத் துள்ளும் ஐம்புல னெலிகள்
---------ஆடுமோர் பாம்பென இலங்கும்!
நைபவர் பூசை செய்பவர் கண்டு
---------நல்லவள் நெஞ்சமும் கலங்கும்!
மென்னிடை நோக்கித் தன்னெடை நோக்கப்
---------பின்னிடை இறங்கும் குழல்தான்!
பின்னிடை மேடை தன்னிடை இரண்டு
---------மத்தளம் கொட்டிடும் எழில்தான்!
விண்ணிடை மின்னல் பொன்னிடை கண்டால்
---------"உன்னிடை ஒளிவிடும் நிழல்நான்"!
என்றிடு மென்னில் ஏங்குவார் நெஞ்சில்
----------தூங்குமோ காதலின் அழல்தான்?
காணுவார் நெஞ்சம் பூணுமோர் நகையப்
---------பூவையின் பூமுக மாகும்!
நாணுவார் ஆண்கள் மட்டுமே யல்ல
---------நாயகி தோழிகள் தாமும்!
காணுமா றுரைக்கும் காரிகை தோழி
---------மாருடன் ஏகுவள் மாலை!
வேணுமோர் கேலி வார்த்தைகள் ஆடி
---------கல்லூரி விட்டதோர் வேளை!
(வேறு)
கல்லூரி வளாகந் தன்னில்
-------காட்சிய ளித்தி ருந்த
தெள்ளிய பலகை யொன்று
-------தெரிவிக்கும் "நாளை மாலை
கல்லூரி இருபத் தைந்து
-------ஆண்டுகள் நிறைவை யொட்டி
நல்லதோர் விழவு" என்று
-------நறுங்கொடி தானுங் காண்பாள்!
----(காவியம் தொடரும்)
------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
""மத்"தனை நெஞ்சை நித்தமும் கடைந்தாய்
---------"மத்த"னைக் கா!"வெனக் கெஞ்சும்!
---------"மத்த"னைக் கா!"வெனக் கெஞ்சும்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-3)
நன்றி நண்பரே!-------------ரௌத்திரன்
ரௌத்திரன்- மல்லிகை
- Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்
Similar topics
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-5)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-1)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-2)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்" (பகுதி-4)
» ரௌத்திரனின் "குற்ற நெஞ்சம்-காவியம்"-முன்னுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|