தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆன்மிக தகவல் -2

Go down

ஆன்மிக தகவல் -2 Empty ஆன்மிக தகவல் -2

Post by அ.இராமநாதன் Mon Jul 18, 2016 3:04 pm




1. மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் கூன் நிமிர்ந்த பின் ஏற்பட்ட பெயர்....
நின்றசீர் நெடுமாறன்

2. ஆதிசங்கரர் முக்தி பெற்ற திருத்தலம்...
முக்திநாத்(நேபாளம்)

3. "சரவணபவ' என்பதன் பொருள் ....
நாணல் காட்டில் பிறந்தவன்

4. வசிஷ்டமுனிவர் வளர்த்த பசு.....
நந்தினி

5. கவுசிகன் என்பது.... ரிஷியின் பெயர்
விஸ்வாமித்திரர்

6. அர்ஜூனனுக்கு வில்லினால் ஏற்பட்ட பெயர்...
காண்டீபன்


7. ராமனின் அம்பு .... வடிவத்தில் இருக்கும்
பிறை சந்திரன்

8. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்...
ராமானுஜர்

9. ஆதிசேஷனின் அம்சமாகப் பிறந்த ராமனின் தம்பி....
லட்சுமணன்

10. "சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர் 


1. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

2. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

3. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

4. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)


5. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

6. கர்நாடகா திருநாராயணபுரத்தில் இருக்கும் ராமானுஜரை .... என்பர்.
தமர் உகந்த திருமேனி (தனக்குத் தானே வடித்த சிலை)

7. அகோபிலம் என்ற சொல்லின் பொருள்...
சிங்ககுகை(அகோ- சிங்கம், பிலம்- குகை)

8. திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து கைங்கர்யம் செய்தவர். .....
அனந்தாழ்வார்

9. வைகுண்டத்தில் பெருமாள் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்....
நித்யசூரிகள்(முக்தி பெற்றவர்கள்)

10. பிருந்தா என்னும் சொல்லின் பொருள்....
துளசி. 
ஆன்மிக தகவல் -2 Blank

1. குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர்...
திருஇரும்பூளை

2. உலக உயிர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர்.....
தட்சிணாமூர்த்தி(சிவபெருமான்)

3. ராசிசக்கரத்தில் பெயர்ச்சி பெறும் குரு யார்?
நவக்கிரக குருவான பிருகஸ்பதி 

4. குருவிற்குரிய நட்சத்திரம்...
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 


5. ஜாதகத்தில் குருதிசை எத்தனை ஆண்டுகள் நடக்கும்?
16 ஆண்டுகள்

6. குரு பார்க்கும் பார்வை எத்தனை?
ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் பார்வைகள்

7. மேஷ குருவின் பார்வை பெறும் ராசிகள்...
சிம்மம், துலாம், விருச்சிகம் 

8. குருவிற்கு உகந்த மலர்...
முல்லை

9. பிருகஸ்பதி என்பதன் பொருள்...
கல்வியில் சிறந்தவர்

10. குருவை வழிபடுவதால் ஏற்படும் பலன்...
செல்வவளம், திருமணயோகம், புத்திரப்பேறு, ஞானம். 


1. ராமனுக்காக படையெடுக்க முயன்ற ஆழ்வார்...
குலசேகராழ்வார்

2. சுக்கில பட்சம் என்று எதைக் குறிப்பிடுவர்?
வளர்பிறை

3. வெள்ளியம்பலம் என்று போற்றப்படும் சிவத்தலம்....
மதுரை

4. பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

5. கோயிலில் துர்க்கையம்மனை எத்திசை நோக்கி அமைப்பர்?
வடக்கு


6. சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

7. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

8. தெய்வீக திசைகள் என்று கருதப்படுபவை....
வடகிழக்கு(ஈசானம்) தென்மேற்கு(கன்னிமூலை)

9.முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு... கண்கள் எத்தனை?
பதினெட்டு (முகத்துக்கு ஒரு நெற்றிக்கண்ணும் உண்டு என்பது ஐதீகம்)

10. சுக்ரீவன் என்பதன் பொருள்....
நல்ல கழுத்தைக் கொண்டவன். 


1. வேதம் தமிழ் செய்மாறன் என்றுபோற்றப்படுபவர்...
நம்மாழ்வார்

2. சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

3. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

4. அஷ்டாங்கவிமானத்தில் எத்தனை கருவறைகள் இருக்கும்?
மூன்று கருவறைகள்

5. கேசி என்ற அரக்கன் கண்ணனைக் கொல்ல எந்த உருவத்தில் வந்தான்?
குதிரை


6. அன்னதானம் செய்த மணிமேகலையுடன் ஒப்பிடப்படும் தெய்வம்....
அன்னபூரணி

7. விஷ்ணுவை அடைய பக்தி நெறியை விட எளிய சாதனமாக கருதப்படுவது....
பிரபத்தி நெறி (விஷ்ணுவை சரணடைதல்)

8. பெருமாள் கள்ளழகராக அருள்பாலிக்கும் தலங்கள்
அழகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) கள்ளபிரான் கோயில்

9. திருமாலின் ஆயுதங்களில் பெண்ணாக கருதப்படுவது....
கவுமோதகி என்னும் கதாயுதம்

10. மதுரையின் எல்லையை பாம்பு காட்டியதால் உண்டான பெயர்....
ஆலவாய். 




1. அக்னிப்பூ என்பது எந்தக் கடவுளைக் குறிக்கும்?
முருகப்பெருமான்

2. வாரணமாயிரம் என்பதன் பொருள்....
ஆயிரம் யானைகள்

3. "எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல்...
திருப்பாவை, திருவெம்பாவை

4. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்


5. மன்மதன் பவனிவரும் தேர்...
பூந்தென்றல்

6. "உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

7. காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம்(விசிறி) வீசி சேவை செய்தவர்...
திருக்கச்சிநம்பிகள்

8. தமருகந்த திருமேனியாக (தனக்குத்தானே எழுப்பியது) ராமானுஜர் அருள்புரியும் தலம்....
மேல்கோட்டை(கர்நாடகா)

9. திருநாவுக்கரசரின் உடன் பிறந்த சகோதரி....
திலகவதியார்

10. கந்தரநுபூதி பாடிய முருகனைப் போற்றியவர்...
அருணகிரிநாதர் 


1. இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

2. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

3. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

4. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

5. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

6. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

7. "மாயனுக்காக கனா கண்டேன் தோழீ நான்' என்று கூறியவர்....
ஆண்டாள்

8. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

9. "வாடினேன் வாடி வருந்தினேன்' என்று பெருமாளிடம் வருத்தப்பட்டவர்...
திருமங்கையாழ்வார்

10. "நாரணன் அன்னை நரகம் புகாள்' என்று பாசுரம் பாடியவர்....
பெரியாழ்வார். 




1. திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

2. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

3. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

4. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

5. ஏழு கடல் மணலை விடவும் அதிக பிறவி எடுத்ததாகப் பாடியவர்...
அருணகிரிநாதர்


6. கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

7. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

8. மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள அடையாளம்....
ஸ்ரீவத்சம் 

9. கண்ணனைக் கொல்ல வந்த பேய் வடிவ அரக்கி....
பூதனை

10. "அயோநிஜர்' என்று குறிப்பிடப்படும் மூவர்....
பொய்கையாழ்வர், பூதத்தாழ்வார், பேயாழ்வார் 


1.சப்தமாதர்களில் திருமாலின் அம்சமாக விளங்குபவள்...
வைஷ்ணவி

2. சுவாமிமலையின் புராணப் பெயர்....
திருவேரகம்

3. "நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

4. முருகன் வள்ளியை மணம் செய்த முறையை.... என்பர்
களவு மணம்

5. யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்


6. ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்களை எப்படி குறிப்பிடுவர்?
மங்களாசாசனம் பெற்ற தலங்கள்

7.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

8. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

9. "மறந்தும் புறம் தொழா மாந்தர்' (திருமாலைத் தவிர மற்றவர்களை வணங்காதவர்)என்னும் பாடல் அடி இடம்பெற்ற நூல்...
நான்முகன் திருவந்தாதி

10. நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர்...
திருமழிசையாழ்வார். 


1. கிருஷ்ணருக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம்.....
ஓம் நமோ பகவதே வாசுதேவாய (ஓம் என்பது ஒரே எழுத்து)

2. கிருஷ்ணர் உபதேசித்த கீதைக்குரிய கோயில் எங்குள்ளது?
குரு÷க்ஷத்திரம்

3. கிருஷ்ணர் நாரதருக்கு .... இசைக்க பாடம் நடத்தினார் தெரியுமா?
வீணை


4. கிருஷ்ணாவதாரமே மகாவிஷ்ணுவின் .... அவதாரம் என்று சிறப்பிப்பர்
முழுமையான(பூர்ண)

5. பாகவதத்தில் கிருஷ்ணரைப் போற்றும் பகுதி.....
பத்தாவது அத்தியாயம்

6. எட்டு ராணிகளுடன்(அஷ்ட மகிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம்....
துவாரகை

7. கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம்...
மதுரா

8. எல்லா உறவுநிலைகளிலும் கண்ணனைப் போற்றிப் பாடியவர்...
பாரதியார்

9. கிருஷ்ணலீலா தரங்கிணியைப் பாடிய அருளாளர்...
நாராயண தீர்த்தர்

10. மன்னார்குடியில் பசுமேய்த்த கோலத்தில் இருப்பவர்.....
ராஜகோபாலன் 


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum