தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆன்மிக தகவல் -4

Go down

ஆன்மிக தகவல் -4 Empty ஆன்மிக தகவல் -4

Post by அ.இராமநாதன் Mon Jul 18, 2016 3:43 pm

1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

2. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

3. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

4. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... 
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

6. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

7. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 
1997, டிசம்பர் 12

8. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

9. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

10 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)  

1. நாரதரின் கையிலிருக்கும் வாத்தியம்...
மகதி யாழ்

2. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

3. ராமானுஜர் அவதரித்த திருத்தலம்..
ஸ்ரீபெரும்புதூர்

4. கந்தபுராணத்தை வடமொழியில் எப்படி குறிப்பிடுவர்?
ஸ்காந்தம்

5. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர்?
விநாயகர்

6. அகிலாண்டநாயகியின் அருள்பெற்ற தமிழ்ப்புலவர்..
கவிகாளமேகப்புலவர்

7. தேவாரத்தில் முருகனை "செட்டியப்பன்' என்று சொன்னவர்...
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

8. நான்கு திவ்யதேசங்கள் ஒரு சேர அமைந்த கோயில்...


காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் 

9. பாலமுருகன் வீற்றிருக்கும் மயிலின் பெயர்.... 
இந்திரமயில் 

10. நரசிம்மர் அவதரித்த தூண் எத்தலத்தில் உள்ளது?
அகோபிலம்(ஆந்திரமாநிலம்)- உக்கிர ஸ்தம்பம்


(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு

(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை

(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி

(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
ஸ்ரீராமர் பாதம்.

(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....


"வெள்ளம் குடி' அல்லது படுக்கை  
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
மணிகண்டன்

(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
41 நாட்கள்

(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
நாகராஜா, நவக்கிரகங்கள்

(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
வாபர்

10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
 "சுவாமியே சரணம் ஐயப்பா' 

1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது அவசியம்
இருமுடி

2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....
நெய்

3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....
ஹரிவராசனம்

4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது...
1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார்.

5. ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?
பூதநாத புராணம்

6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்...
மகிஷி

7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும் ஐயப்பநாமம்...
தர்ம சாஸ்தா

8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....
வாபர்

9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்
மாளிகைப்புறத்தம்மன்

10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?
பேட்டை துள்ளல் 


1. ஹரிஹர சுதன் என்பதன் பொருள்....
சிவ, விஷ்ணுவின் மகன்

2. ஐயப்பனை.... கிரக தோஷ பரிகாரமாக வழிபடுவர்.
சனிகிரகம்

3. திருவிதாங்கூர் ராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய தங்கி அங்கியின் எடை...
450 பவுன்

4.தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி....
மகிஷி

5. ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரம்....
(பங்குனி) உத்திரம்

6. எருமேலியில் பக்தர்கள் வண்ணம் பூசியபடி ஆடுவது...
பேட்டை துள்ளல்

7. பேட்டை துள்ளலில் சொல்லும் சரணகோஷம்.....
சாமி திந்தக்கதோம்! ஐயப்ப திந்தக்கதோம்!

8. ஐயப்பனின் அன்புக்காக காத்திருக்கும் அம்மன்...
மாளிகைபுறத்தம்மன்

9. ஐயப்பனுக்கு விருப்பமான பிரசாதம்....
அரவணை என்னும் கட்டிப்பாயாசம்

10. சபரிமலையில் இரவு பூஜையின் போது பாடப்படும் பாடல்....
ஹரிவராஸனம். 



1. கண்ணன் இன்றும்  மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம்...
துவாரகை

2. விநாயகப்பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்...
ஆதிசங்கரர்

3. பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமான் மீது பாடிய கவசநூல்...
சண்முகக் கவசம்

4. "நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? 
திருவாசகம்

5.தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?



அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)  

6. யாதுமாகி நின்றாய் காளி என்று உமையவளைப் போற்றிய புலவர்...
பாரதியார்

7. வெற்றியைத் தரும்முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்....
வேலு(ம்) மயிலும்

8. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

9. "கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்று வருந்திப் பாடிய அருளாளர்....
வள்ளலார்

10. ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்...
குலசேகராழ்வார் 
 

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார  தாண்டவம்

7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... 
களி.  

1. சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
ஆரோக்கியம்

2. ராசி மண்டலத்தில் சூரியனுக்குரிய ராசி...
சிம்மம்

3. சூரியவழிபாட்டுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

4. சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் மதத்தை.... என்று அழைத்தனர்.
சவுரம்

5. சூரியபகவானுக்குரிய நவரத்தினம்....
மாணிக்கம்

6. வேதமந்திரங்களில் சூரியன் .....மந்திரத்திற்கு உரியவராவார்
காயத்ரி

7. சூரியனும் குருவும் சம்பந்தப்பட்டால் ஒருவருக்கு ....உண்டாகும்
பக்தியோகம்(அ) ஆன்மிக யோகம்

8. சூரியதேவனை....... நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்
நவக்கிரகநாயகன்

9. சூரியனின் வடதிசைப்பயணமான உத்ராயணத்திற்குரிய காலம்...
தை முதல் ஆனி வரை

10. எருக்குஇலை வைத்து நீராடி சூரியனை வழிபடும் நாள்...
ரதசப்தமி(தை சப்தமி) 

1. நாரதரால் மகரிஷியாக மாறிய வால்மீகியின் இயற்பெயர்.
ரத்னாகரர்

2. சரஸ்வதி அந்தாதியைப் பாடிய புலவர்....
கம்பர்

3. அயோத்தி என்பதன் பொருள்...
யுத்தமில்லாத இடம்

4. தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி...
ரிஷ்யசிருங்கர்

5. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ராமனின் தம்பி...
லட்சுமணர்

6. விஸ்வாமித்திரருக்கு ராஜரிஷி பட்டம் வழங்கியவர்...
பிரம்மா

7. பிரகலாதன் என்பதன் பொருள்....
எல்லோராலும் நேசிக்கப்படுபவன்

8. விதேகநாட்டில் பிறந்ததால் சீதைக்கு .... என்று பெயர்.
வைதேகி

9. இந்திரனுக்கு உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்த முனிவர்...
கவுதமர்

10. தசரதரின் அவையின் தலைமைப்புரோகிதர்...
சதானந்தர் 

1. திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

2. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

3. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

4. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

5. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.

6. மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர்...
திருமங்கையாழ்வார்

7. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்....
கந்தபுராணம்

8. தமிழ்வியாசர் என்று அழைக்கப்படுபவர்....
நாதமுனிகள்(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)

9. ஆண்டாளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட திருப்பாவை ஜீயர்...
ராமானுஜர்

10. விப்ரநாராயணர் என்பது யாருடைய இயற்பெயர்...
தொண்டரடிப்பொடியாழ்வார் 



1. முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
சுவாமிமலை(மலை அமைப்பில் கட்டப்பட்டகோயில்)

2. விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

3. சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர் 

4. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

5. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

6. ராமநாமத்தை கருடபுராணம் எப்படி குறிப்பிடுகிறது?




அமுதம் 
7. திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்.....
நம்மாழ்வார்

8. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை எனப்படும் பாகவதப் பகுதி....
பத்தாம்பகுதியான கிருஷ்ணரின் வரலாறு

9. இறைவனும் இறைநாமமும் ஒன்றே என்று கூறியவர்....
ராமகிருஷ்ண பரமஹம்சர்

10. கர்நாடகத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற சிவத்தலம்...
திருக்கோகர்ணம் 


1.பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தைவீழ்த்தியவர்....
கிராதமூர்த்தி(வேடுவராக வந்த சிவன்)

2.கும்பகோணத்தில் அருளும் மங்களாம் பிகை.... பீடம்
மந்திரபீடேஸ்வரி பீடம்

3. கும்பேசர் குறவஞ்சி எழுதிய புலவர்....
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்

4. கும்பகோணம் தலத்தின் விசேஷமான தீர்த்தங்கள்....
காவிரியாறு, மகாமகக்குளம்

5.கும்பகோணத்தைத் தமிழில்...என்று அழைப்பர்
குடமூக்கு, குடந்தை

6. ஆழ்வார் என்று அழைக்கப்படும் பெருமாள்...
கும்பகோணம் ஆராவமு தாழ்வார்- சாரங்கபாணிப்பெருமாள்

7. சாரங்கபாணி கோயிலில் உள்ள இருவாசல்கள்...
உத்ராயண, தட்சிணாயன வாசல்கள்

8. மாசிமகத்தன்று 
சூரியன்....ராசியிலிருந்து.... ராசியைப் பார்க்கிறார். கும்பத்திலிருந்து சிம்மத்தை

9."நடந்தகால் நொந்ததோ' என்று குடந்தை சாரங்கபாணியிடம் உருகியவர்....
திருமழிசையாழ்வார்

10. மூலவரும் உற்சவரும் சமம் என்பதால் சாரங்கபாணிகோயிலுக்கு .... என்று பெயர்
உபயபிரதான திவ்யதேசம் 

1. திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்) 

2. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

3. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

4. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

5. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

6. மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

7. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன் 

8. நடுக்கம் தீர்த்தவிநாயகர் அருள்பாலிக்கும் சிவத்தலம்...
வேதாரண்யம்

9. ஆண்டாள் பாடிய ""வாரணமாயிரம்'' என்பதன் பொருள்...
ஆயிரம் யானை

10. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பெரியாழ்வார் எத்தலத்தில் பாடினார்?
மதுரை கூடலழகர் கோயில்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum