தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.4 சதவீத வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும், குறைந்தபட்தமாக கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் 68.7 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தில் 80.9 சதவீதமும், தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும், துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஏ.ராஜா போட்டியிட்டுள்ள வீரபாண்டி தொகுதியில் 89.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஜா வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில், 85.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில், 83.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொங்கு மண்டலம் எனப்படும் மேற்குப் பிராந்தியம் முழுவதும் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அமைதியாகவும்,கள்ள ஓட்டுக்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமலும் நடந்து முடிந்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
நேற்று தமிழக சட்டசபைக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவு வாக்காளர்கள் காலையிலிருந்தே விறுவிறுப்புடன் வாக்குகளைப் பதிவு செய்தனர். வழக்கத்தை விட அதிக அளவில் வாக்காளர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் வழக்கமாக நகர்ப்புறங்களில் மந்தமாக காணப்படும் வாக்குப் பதிவு நேற்று தலைகீழாக மாறியிருந்தது. நகரங்களிலும் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
அசம்பாவிதம் இல்லாத வாக்குப் பதிவு
சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குப் பிறகும் சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. அதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கியூவில் நின்று வாக்களித்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் 70.22 சதவீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதைவிட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர். இதற்கு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடியது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காரணம். இதனால், வாக்காளர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வாக்குப்பதிவில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. 65 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் 11 எந்திரங்கள் உடனடி சரிசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. எஞ்சிய 54 எந்திரங்கள் மாற்றப்பட்டன.
மொத்தம் 4 இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. அதில் 2 இடங்களில் சரிசெய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வல்லையாவட்டம், பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் இடமாறிவிட்டது. அந்த வாக்காளர்களுக்கு பஸ் வசதி செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்த பிறகும் அவர்கள் அங்குபோய் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. பின்னர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.
ரூ. 45 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்:
இந்த தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம் மற்றும் பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது என்று புகார் சொல்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் விதிமுறைதான். தமிழகத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றார் அவர்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு:
வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு, வாக்களிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு கிடைத்த பலனாக இது கருதப்படுகிறது.
நேற்றைய வாக்குப்பதிவின்போது காலையில் நல்ல கூட்டம் காணப்பட்டது. பலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்து வாக்களித்தனர். ஆனால் மதியத்தில் கூட்டம் குறைந்தது. இதனால் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் மாலை4 மணியளவில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 5 மணி முடிந்தபோதும் நூற்றுக்கணக்கானோர் பல பூத்களில் நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் பிரசாரம் மந்தமாக இருந்தபோதிலும் வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் பெரும் ஆரவாரத்தோடு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் மனதில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.
யாருக்கு வாக்களித்தார்களோ, என்னவோ, வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்கள் மனதில் அதிகரித்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம்தான்.
படித்தவர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படும் கேரளாவை விட தமிழகத்தில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் இன்னொரு முக்கிய விஷயம். அதேபோல புதுச்சேரியிலும் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் கவனிப்புக்குரியது.
நன்றி தேட்ஸ் தமிழ்
மிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும், குறைந்தபட்தமாக கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் 68.7 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தில் 80.9 சதவீதமும், தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும், துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஏ.ராஜா போட்டியிட்டுள்ள வீரபாண்டி தொகுதியில் 89.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஜா வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில், 85.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடும் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில், 83.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொங்கு மண்டலம் எனப்படும் மேற்குப் பிராந்தியம் முழுவதும் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அமைதியாகவும்,கள்ள ஓட்டுக்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமலும் நடந்து முடிந்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
நேற்று தமிழக சட்டசபைக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவு வாக்காளர்கள் காலையிலிருந்தே விறுவிறுப்புடன் வாக்குகளைப் பதிவு செய்தனர். வழக்கத்தை விட அதிக அளவில் வாக்காளர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் வழக்கமாக நகர்ப்புறங்களில் மந்தமாக காணப்படும் வாக்குப் பதிவு நேற்று தலைகீழாக மாறியிருந்தது. நகரங்களிலும் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
அசம்பாவிதம் இல்லாத வாக்குப் பதிவு
சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குப் பிறகும் சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. அதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கியூவில் நின்று வாக்களித்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் 70.22 சதவீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதைவிட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர். இதற்கு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடியது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காரணம். இதனால், வாக்காளர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வாக்குப்பதிவில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. 65 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் 11 எந்திரங்கள் உடனடி சரிசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. எஞ்சிய 54 எந்திரங்கள் மாற்றப்பட்டன.
மொத்தம் 4 இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. அதில் 2 இடங்களில் சரிசெய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வல்லையாவட்டம், பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் இடமாறிவிட்டது. அந்த வாக்காளர்களுக்கு பஸ் வசதி செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்த பிறகும் அவர்கள் அங்குபோய் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. பின்னர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.
ரூ. 45 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்:
இந்த தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம் மற்றும் பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது என்று புகார் சொல்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் விதிமுறைதான். தமிழகத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றார் அவர்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு:
வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு, வாக்களிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு கிடைத்த பலனாக இது கருதப்படுகிறது.
நேற்றைய வாக்குப்பதிவின்போது காலையில் நல்ல கூட்டம் காணப்பட்டது. பலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்து வாக்களித்தனர். ஆனால் மதியத்தில் கூட்டம் குறைந்தது. இதனால் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் மாலை4 மணியளவில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 5 மணி முடிந்தபோதும் நூற்றுக்கணக்கானோர் பல பூத்களில் நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் பிரசாரம் மந்தமாக இருந்தபோதிலும் வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் பெரும் ஆரவாரத்தோடு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் மனதில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.
யாருக்கு வாக்களித்தார்களோ, என்னவோ, வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்கள் மனதில் அதிகரித்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம்தான்.
படித்தவர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படும் கேரளாவை விட தமிழகத்தில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் இன்னொரு முக்கிய விஷயம். அதேபோல புதுச்சேரியிலும் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் கவனிப்புக்குரியது.
நன்றி தேட்ஸ் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்
ஜனநாயக கடமை ஆற்றிய அனைவருக்கும் பாரட்டுக்கள் !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்
[You must be registered and logged in to see this image.]கவிக்காதலன் wrote:ஜனநாயக கடமை ஆற்றிய அனைவருக்கும் பாரட்டுக்கள் !!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
![-](https://2img.net/i/empty.gif)
» கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
» ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
» பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
» ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
» பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|