தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!
3 posters
Page 1 of 1
ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!
மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்?
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?
வாழ்வில் அர்த்தமற்றதாக இருக்கும் ஒவ்வோர் நொடிப் பொழுதுகளும் எப்போது அர்த்தமுள்ளதாக்கப்படுகின்றதோ, அப்போது தான் அந்த அர்த்தங்களின் பின்னே ஒரு பெண் இருந்திருப்பாள் என்று வரலாறு கூறுகின்றது. நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது. "ஒரு மனிதனுள் உணர்ச்சிகள் இருக்கின்றது எனும் உண்மையினை உணரச் செய்கின்ற காதல் மோகினியாக பெண் இருக்கின்றாளாம்"- நான் சொல்லவில்லை. தமிழ் இலக்கிய உலகம் செப்பி நிற்கின்றது.
ஆண்டுகள் ஒன்றென்றாலும் அன்பே உன் உடல் தாண்டி நான் வாழ்ந்தால் தப்பேதும் இல்லையே எனும் எண்ணத்தை சில பெண்கள் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் அவளும் என்னுள் நுழைந்தாள். என் மனத் திரைகளின் ஓரத்தில் ஸ்ரெல்லா பற்றிய குறிப்புக்களே அதிகம் நிரம்பி வழிகின்றது. குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா.
இன்னும் அவள் அழகைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். ஆனாலும் அவள் பற்றிய அவஸ்தையை அதிகரிக்க விரும்பிடாத மனமோ இத்தோடு நிறுத்தச் சொல்கிறது. பழகும் வேளைகளில் இனிமை தருவாள். பருவக் கனவிற்குச் சுதந்திரம் கொடுப்பாள். மனதில் எழும் எண்ண அலைகள் கரை புரண்டோடி விடாதபடி மயக்கம் கொடுப்பாள். ஸ்ரெல்லா ஒரு கிறிஸ்துவப் பெண் என்பதனையும் தாண்டி மதங்களை வென்று விடும் மனங்களின் போர்க் களமாக எம் காதல் மொட்டு விட்டது. "இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்" ஆண் பெண் எனும் பாலினங்களிற்கிடையேயான புரிதல் எனக்கும் அவளுக்குமிடையேயான ஆலாபனையாக மாற்றம் பெற்று விட்டது.
"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். மேல்த் தட்டில் சொர்க்கம்- கீழ்த் தட்டில் சொப்பனம் என ஏதேதோ கற்பித்தாள். வாழ்வில் இனிமையான தருணங்களில் இரண்டறக் கலந்து, கல்லூரி நாட்களில் கதை பேசி மகிழ்ந்த; என் காது மடல்களை வருடிக் காதல் ரசம் பருகிய ஸ்ரெல்லாவுடனான அந்த நாட்கள் போர் மேகங்களின் சூறாவளித் தாக்குதல்களால் நிலை குலைந்து விட்டது.
இப்போது எஞ்சியிருப்பது அவளைப் பற்றிய ஞாபகச் சிதறல்கள் மட்டுமே. நினைக்க நினைக்க சுகம் தரும் ஞாபக அலைகள் பெண் மனத்தை விட்டுப் பறந்து சென்றதும் வலி தருகின்றன. நரக அவஸ்தை என்பது இன்று எனக்குள் நகரும் நொடிப் பொழுதாய் மாற்றம் பெற்றிருக்கின்றது. மறுபடியும் அவளைக் காண மாட்டேனா எனும் ஏக்கத்தை விட, மனதினுள்ளே கூடு கட்டி, என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.
ஓ..ஞாபகச் சிதறல்களில் சிக்கி நான் படும் நரக அவஸ்தை இது தானோ?
மெதுவாய் வந்து, என் மேனி தன்னில் ஒரு தொடுகையிட்டு, அருகே நான் இருக்கின்றேன் ஆருயிரே என அவள் சொன்னால்- என் இரவும் இனிமை ஆகாதோ?
பூவாய் மணம் பரப்பி, புன்னகையால் கோல விழியசைத்து, மோவாய் திருப்பி, மேனி தன்னில் முத்தமிட, பாவாய் அவளும் வாராளோ!
"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்!
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு: திருக்குறள்-1158
[You must be registered and logged in to see this link.]
பொழிப்புரை: எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?
வாழ்வில் அர்த்தமற்றதாக இருக்கும் ஒவ்வோர் நொடிப் பொழுதுகளும் எப்போது அர்த்தமுள்ளதாக்கப்படுகின்றதோ, அப்போது தான் அந்த அர்த்தங்களின் பின்னே ஒரு பெண் இருந்திருப்பாள் என்று வரலாறு கூறுகின்றது. நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது. "ஒரு மனிதனுள் உணர்ச்சிகள் இருக்கின்றது எனும் உண்மையினை உணரச் செய்கின்ற காதல் மோகினியாக பெண் இருக்கின்றாளாம்"- நான் சொல்லவில்லை. தமிழ் இலக்கிய உலகம் செப்பி நிற்கின்றது.
ஆண்டுகள் ஒன்றென்றாலும் அன்பே உன் உடல் தாண்டி நான் வாழ்ந்தால் தப்பேதும் இல்லையே எனும் எண்ணத்தை சில பெண்கள் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் அவளும் என்னுள் நுழைந்தாள். என் மனத் திரைகளின் ஓரத்தில் ஸ்ரெல்லா பற்றிய குறிப்புக்களே அதிகம் நிரம்பி வழிகின்றது. குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா.
இன்னும் அவள் அழகைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். ஆனாலும் அவள் பற்றிய அவஸ்தையை அதிகரிக்க விரும்பிடாத மனமோ இத்தோடு நிறுத்தச் சொல்கிறது. பழகும் வேளைகளில் இனிமை தருவாள். பருவக் கனவிற்குச் சுதந்திரம் கொடுப்பாள். மனதில் எழும் எண்ண அலைகள் கரை புரண்டோடி விடாதபடி மயக்கம் கொடுப்பாள். ஸ்ரெல்லா ஒரு கிறிஸ்துவப் பெண் என்பதனையும் தாண்டி மதங்களை வென்று விடும் மனங்களின் போர்க் களமாக எம் காதல் மொட்டு விட்டது. "இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்" ஆண் பெண் எனும் பாலினங்களிற்கிடையேயான புரிதல் எனக்கும் அவளுக்குமிடையேயான ஆலாபனையாக மாற்றம் பெற்று விட்டது.
"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். மேல்த் தட்டில் சொர்க்கம்- கீழ்த் தட்டில் சொப்பனம் என ஏதேதோ கற்பித்தாள். வாழ்வில் இனிமையான தருணங்களில் இரண்டறக் கலந்து, கல்லூரி நாட்களில் கதை பேசி மகிழ்ந்த; என் காது மடல்களை வருடிக் காதல் ரசம் பருகிய ஸ்ரெல்லாவுடனான அந்த நாட்கள் போர் மேகங்களின் சூறாவளித் தாக்குதல்களால் நிலை குலைந்து விட்டது.
இப்போது எஞ்சியிருப்பது அவளைப் பற்றிய ஞாபகச் சிதறல்கள் மட்டுமே. நினைக்க நினைக்க சுகம் தரும் ஞாபக அலைகள் பெண் மனத்தை விட்டுப் பறந்து சென்றதும் வலி தருகின்றன. நரக அவஸ்தை என்பது இன்று எனக்குள் நகரும் நொடிப் பொழுதாய் மாற்றம் பெற்றிருக்கின்றது. மறுபடியும் அவளைக் காண மாட்டேனா எனும் ஏக்கத்தை விட, மனதினுள்ளே கூடு கட்டி, என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.
ஓ..ஞாபகச் சிதறல்களில் சிக்கி நான் படும் நரக அவஸ்தை இது தானோ?
மெதுவாய் வந்து, என் மேனி தன்னில் ஒரு தொடுகையிட்டு, அருகே நான் இருக்கின்றேன் ஆருயிரே என அவள் சொன்னால்- என் இரவும் இனிமை ஆகாதோ?
பூவாய் மணம் பரப்பி, புன்னகையால் கோல விழியசைத்து, மோவாய் திருப்பி, மேனி தன்னில் முத்தமிட, பாவாய் அவளும் வாராளோ!
"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்!
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு: திருக்குறள்-1158
[You must be registered and logged in to see this link.]
பொழிப்புரை: எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.
nirupanblog- புதிய மொட்டு
- Posts : 30
Points : 50
Join date : 30/03/2011
Age : 40
Location : Jaffna
Re: ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» மழை வெள்ளத்தில் சிக்கி சிறுத்தை பலி
» பீஹாரில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் பலி
» பனியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனேடியச் சிறுமி! (பட இணைப்பு)
» உரிமையாளர் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் கொச்சி அணிக்கு, 30 நாள் கெடு
» பிராத்திப்போம் - அண்ணன் உதுமான் மைதீன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்
» பீஹாரில் கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் பலி
» பனியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனேடியச் சிறுமி! (பட இணைப்பு)
» உரிமையாளர் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் கொச்சி அணிக்கு, 30 நாள் கெடு
» பிராத்திப்போம் - அண்ணன் உதுமான் மைதீன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|