தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
+17
dhilipdsp
அரசன்
சிசு
அ.இராமநாதன்
கவிக்காதலன்
கலைநிலா
thaliranna
சம்பத்குமார்
kowsy2010
muthuselvi
தங்கை கலை
தமிழன்
jeba
vinitha
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
21 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
First topic message reminder :
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...
மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...
மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..
பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...
பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!
பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..
இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....
உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு #009
புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள்
மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள்
அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட
ராட்சதன் தான்..
அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?
இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?
கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)
செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton
இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்
என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??
ஆனால்.............
இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!
உண்மை
பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று
படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில்
இருந்து 2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.
அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!
சரி, முதல் படம் சரி.. மற்றவை??
இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]
மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு
நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா,
தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!
எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது: "Skeleton of Giant" Is Internet Photo Hoax
IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம்.
ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம்
வருகிறது.!!
நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்
எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள்
அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட
ராட்சதன் தான்..
அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?
இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?
கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)
செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton
இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்
என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??
ஆனால்.............
இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!
உண்மை
பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று
படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில்
இருந்து 2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.
அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!
சரி, முதல் படம் சரி.. மற்றவை??
இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]
மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு
நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா,
தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!
எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது: "Skeleton of Giant" Is Internet Photo Hoax
IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம்.
ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம்
வருகிறது.!!
நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்
எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
படை எடுக்காத ஒரே நாடு #010
நமது
இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ
எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த
பரப்பபடுகிறது:
உண்மை
பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின்
மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..
மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:
1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.
"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.
"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால், அது ஒரு படையெடுப்பே!!!
எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ
எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த
பரப்பபடுகிறது:
இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.
இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை
உண்மை
பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின்
மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..
மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:
- இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
- 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா
(ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து
கைப்பற்றினான்.
இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:
1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.
"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.
"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால், அது ஒரு படையெடுப்பே!!!
எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றிகள் பல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் #11
11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும் 11 ஐப் பற்றியது தான்!!
சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார்
என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர்
அறிந்து இருப்பீர்கள்.
உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை
பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும்
சொல்லப்படுகின்றது.
பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை
என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி
இருக்கின்றன.
இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.
இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற
பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி
விடுவார் இந்திய பெண்.
எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது.
தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை
இந்த செய்தி எந்தளவு உண்மை??
இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.
செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!
எப்படி?
சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011
இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள்
குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.
அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!
இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:
இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11
நன்றி: ஹோக்ஸ்லேயர்
சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார்
என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர்
அறிந்து இருப்பீர்கள்.
உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை
பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும்
சொல்லப்படுகின்றது.
பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை
என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி
இருக்கின்றன.
இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.
இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற
பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி
விடுவார் இந்திய பெண்.
எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது.
தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை
இந்த செய்தி எந்தளவு உண்மை??
இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.
செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!
எப்படி?
சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011
இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள்
குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.
அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!
இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:
இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11
நன்றி: ஹோக்ஸ்லேயர்
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்களுக்கு ஆஸ்துமாவா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!
» உங்களுக்கும் இப்படியா?
» உங்களுக்கும் லவ் ஃபெயிலியரா?
» இது நெடு நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நம்ம கோவை ரவி அண்ணவுக்கு
» கடவுளுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள தூரம்..!
» உங்களுக்கும் இப்படியா?
» உங்களுக்கும் லவ் ஃபெயிலியரா?
» இது நெடு நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நம்ம கோவை ரவி அண்ணவுக்கு
» கடவுளுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள தூரம்..!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|