தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

+3
அப்துல்லாஹ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 25, 2011 11:54 am

மின்னஞ்சலில் வந்தது

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண
மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று
அன்று"

- 'தமிழர் சமயம்' என்ற நூலில் தமிழ்ப் பெரும் புலவர், கா.சுப்பிரமணிய(ன்)
பிள்ளை

'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும்
புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும்,
தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை'

- "மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் பேராசிரியர் அ.கி.

பரந்தாமனார்

'தீபாவளி சமண சமயப் பண்டிகை. பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக்
கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்கால நாளே தீபாவளியாகும்.
தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு
தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை' (தீபம் -
விளக்கு, ஆவலி - வரிசை)

-"சமணமும் தமிழும்" என்ற நூலில் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி '

ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" "ஆரியரின்
இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான
நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து
பேசப்படுவராயினர்.'-

- "தமிழர் மதம்" மற்றும்"வேளாளர் நாகரிகம்" ஆகிய நூல்களில்

தமிழ்க்கடல் - மறைமலை அடிகள்

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர்
நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி
என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டா
டப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு
கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படி-யானால் இரணியன், இராவணன், இடும்பன்
மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்-களைக் கொன்றதற்கு கொண்டாட்டம்
இருக்க-வேண்டும். ஆகவே நரகாசுரனைக் கொன்ற-தற்கும் தீபாவளிக்கும் தொடர்பு
இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.

- வாரியார் விரிவுரை விருந்து நூலில் திருமுருக கிருபானந்தவாரியார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 12:04 pm

அறிந்துக்கொள்ள தந்தமைக்கு நன்றி ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by அப்துல்லாஹ் Tue Oct 25, 2011 12:18 pm

பயனுள்ள செய்தி ஆயினும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... தோட்டத்தின் மலர்களுக்கு.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 12:47 pm


தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, எங்க அப்பாவும் சொல்லுவாங்க அண்ணா இப்படித்தான் ...
:héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by kowsy2010 Tue Oct 25, 2011 2:07 pm

எதைத் தான் நாங்கள் நம்புவது. கொண்டாடுங்கள் என்று சின்ன வயதில் சொன்ன போது கேட்டுச் செய்தோம். கொடுமை செய்தவன் யாராக இருந்தாலும் அழியத்தானே வேண்டும் . கொண்டாடத்தானே வேண்டும். இப்படியெல்லாம் பழைய புராணக் கதைகள் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இப்படி மங்கிப்போய் இருக்கின்றோம். எல்லாத்துக்கும் தலை ஆட்டுவோம். அப்போது நாம் நல்லவர்கள்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by அ.இராமநாதன் Tue Oct 25, 2011 3:00 pm

பல மதத்தவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி ஆகும்
இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர், பௌத்தர், சீக்கியர்
ஆகியோரும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்


-
பதினேழாம் நூற்றாண்டில் அரசாண்ட முகலாய மன்னர்
அக்பரின் அரசவைப் புலவர் ‘அபுல் பாஸல்’ என்பவர்
‘அக்பர் பாதுஷா’ தீபாவளி பண்டிகையில் கலந்து
கொண்டதாகக் குறித்துள்ளார். தீபாவளியன்று பட்டாசுகள்
வெடிக்கும் பழக்கம் முகலாய வம்சத்தைத் தோற்றுவித்த
பாபர் காலத்திலிருந்து ஏற்பட்டதாக அறிகிறோம்.

-
ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் நிர்வாணமடைந்த தினமாகக்
கொண்டாடுவர்.

-
தீபாவளி அன்று லட்சுமி எண்ணெயிலும், கங்கை வெந்நீரிலும்
இருப்பதாக ஐதீகம்.
சிலர் காசிக்குச் சென்று கங்கையில் ஸ்நானம் செய்வார்கள்.
தீபாவளி அமாவாசை காசியில் மிகவும் விசேஷம்.
-
சீக்கிய மதத்தை சிறுவிய குருநானக் தேவர் பூதவுடலைத்
துறந்து புகழுடம்பு அடைந்ததும்,
அவர் வழியில் வந்து குரு கோவிந்தர் முகம்மதியருக்கு
எதிராக போர் புரிய ‘கல்சா’ என்னும் சமய அமைப்பை
ஏற்படுத்தியதும்
ஆதிசங்கரர் ஞான பீடங்களை ஸ்தாபித்ததும்,
ஆரிய சமாஜ இயக்கத்தின் தந்தையான சுவாமி தயானந்த சரஸ்வதி
இப்பூவுலகை விட்டு நீங்கியதும் இத் தீபாவளித் திருநாளன்றே ஆகும்.

-
ஸ்ரீஇராமபிரான் வனவாசத்தை முடித்துக்கொண்டு சீதையோடும்
லக்ஷ்மணனோடும் அயோத்திக்குத் திரும்பி
அரியணை அமர்ந்த நன்னாள் இத்தீபாவளித் திருநாளாகும்
-
நமக்கு ஏற்படும் துக்கத்தையும் துயரத்தையும் ஒரு பொருட்டாக
எண்ணாமல் உலகம் க்ஷேமமாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும்
என்று நாம் அனைவரும் எண்ண வேண்டும்.


அப்படிப்பட்ட நல்ல பக்குவமான மனோநிலையைத் தந்தருள வேண்டும்
என்று எம்பெருமானிடம் பிரார்த்திக்க வேண்டும்.

இந்த உண்மைத் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய தீபாவளிப்
பண்டிகையைக் கொண்டாடி சகல மங்களங்களையும் பெறுவோமாக!



அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by muthuselvi Tue Oct 25, 2011 4:09 pm

நன்றி இராமநாதன் , ரமேஷ் அவர்களுக்கு....

தீபாவளியின் சிறப்பை உணர்த்தி எழுதிய இராமநாதன் அய்யாக்கு நன்றி...
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 5:27 pm

கூடுதல் தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 25, 2011 6:08 pm

வரிவான தகவல் நன்றி ஐயா
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by அ.இராமநாதன் Tue Oct 25, 2011 7:04 pm

தீபாவளியின் சிறப்பை
படித்து ரஸித்தவர்களுக்கு நன்றி...
-

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன? Empty Re: தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum