தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி
3 posters
Page 1 of 1
ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி
கர்நாடக மாநிலத்திலுள்ள புண்ணிய தலங் களில் ஒன்று கட்டீல். அங்குள்ள ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது; சக்தி வாய்ந்தது. ஆற்றின் நடுவே அமைந்துள்ள இவ்வாலயத்தைக் காண்பதே ஓர் இனிய அனுபவமாக உள்ளது.
கொடுமை புரிந்த அரக்கர்களான சும்ப- நிசும்பர்களை தேவியானவள் வதம் செய்த போது, அசுரர் படைத் தலைவனான அருணா சுரன் என்பவன் மட்டும் தப்பிச் சென்று விட்டான். அதன் பிறகு அரக்கர்களின் தலைவனானான். முனிவர்கள் நடத்தும் யாகங்களை அழித்தான். அதனால் நாட்டில் மழை அற்றுப் போனது. நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடின. அதனால் பெரிதும் துன்புற்ற மக்கள் ஜாபாலி முனிவரிடம் சென்று முறையிட்டனர்.
மக்களின் துயரம் நீங்க ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார் அவர். அதற்காக தேவேந்திரனிடம் சென்று யாகத்தில் கோபூஜை செய்ய காமதேனுவை அனுப்பும்படி கேட்டார். ஆனால் அப்போது காமதேனு வருண லோகம் சென்றிருந்ததால், அதற்குப் பதிலாக காமதேனு வின் மகளான நந்தினிப் பசுவை அழைத்துச் செல்லுமாறு கூறினான் தேவேந்திரன்.
ஜாபாலி முனிவர் நந்தினியிடம் சென்று தன்னுடன் வரும்படி அழைத்தார். நந்தினிப் பசுவோ பூலோகத்தையும், பூலோகவாசிகளையும், அங்குள்ள முனிவர்களையும் இழிவாகப் பேசியது. அதனால் கோபம் கொண்ட முனிவர் நந்தினிப் பசுவைப் பார்த்து, ""நீ பூலோகத்தில் ஒரு ஆறாக ஓய்வில்லாமல் ஓடக்கடவது!'' என்று சாபமிட்டார். தன்னுடைய தவறை உணர்ந்த நந்தினி, தனது சாபம் தீர என்ன வழி என்று முனிவரிடம் கேட்க, ""நீ பூலோகம் சென்று ஆதிசக்தியை வணங்குவாயாக'' என்றார். அதன்படி பூவுலகம் வந்த நந்தினி ஆதிசக்தியை வணங்கி, தனக்கு சாபவிமோசனம் தருமாறு கேட்டது. ""முனிவர் இட்ட சாபத்தை மாற்ற என்னால் மட்டுமல்ல; யாராலும் முடியாது. அதை அனுபவித்துதான் தீரவேண்டும். அதனால் நீ ஆறாக ஓடத்தான் வேண்டும். ஆனால் ஒரு பெருமையை உனக்களிக்கிறேன். நான் உனது மகளாகப் பிறக்கிறேன். அதன் மூலம் உன்னு டைய சாபம் தீரும்'' என்றாள் ஆதிசக்தி.
தேவியின் கருணையையும், தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் நினைத்த நந்தினிப் பசு, கனககிரி என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகி ஆறாக ஓடியது. (அந்த ஆற்றின் நடுவில் அமைந்துள் ளதுதான் இந்தக் கோவில்.) தாயின் கருப்பையில் உள்ள நீர்க்குடத்தின் நடுவே குழந்தை வளர்வது போல, இந்த ஆற்றின் நடுவில் ஆதிசக்தி வளர்ந்து வந்தாள்.
அந்தக் காலகட்டத்தில், அருணாசுரனுக்கு தனக்கு மரணம் வந்துவிடுமோ என்ற பயம் தோன்றியது. அதைத் தவிர்க்க பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் புரிந்தான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா அவன்முன் தோன்றி, ""என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.
""எனக்கு மும்மூர்த்திகளாலோ, தேவர்
களாலோ, ஆண்களாலோ, பெண்களாலோ அல்லது இரண்டு கால்கள், நான்கு கால்கள் கொண்ட பிராணிகளாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது'' என்று கேட்டான்.
""அப்படியே ஆகட்டும்'' என்று பிரம்மா வரம் தந்தார். சரஸ்வதியும் அவனுக்கு காயத்ரி மந்திரத் தைக் கற்றுக் கொடுத்தாள். பிரம்மா கொடுத்த வரங்களோடு, சரஸ்வதி தந்த காயத்ரி மந்திரத்தின் சக்தியும் சேர்ந்துகொள்ளவே, அருணாசுரனு டைய அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று. தேவர்களை வென்று தேவலோகத்தை யும் கைப்பற்றினான். தேவர்களும் இந்திரனும் மும்மூர்த்திகளும் அவனை ஒன்றும் செய்ய இயலாமல் ஆதிசக்தியின் உதவியை நாடினர்.
ஆனால் அவளாலும் அவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று தோன்றவில்லை. காரணம், அருணாசுரனிடம் இருந்த காயத்ரி மந்திர சக்தி. அவன் அந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டு - அந்த மந்திர ஒலியைக் காதில் கேட்டுக் கொண்டிருக்கும் வரை யாரும் அவனை அழிக்க முடியாது. ஆகவே அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கூறினாள் ஆதிசக்தி.
தேவர்கள் தேவகுருவான பிரகஸ்பதியின் உதவியை நாடினர். அவர்களுக்கு உதவ எண்ணிய பிரகஸ்பதி அருணாசுரனிடம் சென்று அவனை வானளாவப் புகழ்ந்தார். அதன் மூலம் அவன் காதுகள் காயத்ரி மந்திர ஒலியைக் கேட்காத வண்ணம் செய்து அவனது தவத்தைக் கலைத்தார்.
இதை உணராத அருணாசுரன் மக்களைத் துன்புறுத்தி தன்னையே கடவுளாக வணங்கும் படி வற்புறுத்தினான். முனிவர்களின் யாகங்களை யும் அழித்தான். இதுவே தக்க தருணம் என்று உணர்ந்தாள் தேவி. காண்போரை மயக்கும் மோகினி வடிவம் கொண்டு, அருணாசுரனின் வனத்திற்குச் சென்று மலர் பறிப்பவளைப் போல அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள். அவளது அழகைக் கண்ட அருணாசுரனின் படைத் தலைவர்களான சண்டன், பிரசண்டன் ஆகியோர் உடனே அருணாசுரனிடம் சென்று நந்தவனத்தில் தாங்கள் பார்த்த அழகியைப் பற்றிக் கூறினர். உடனே தேவி இருந்த இடத் திற்குச் சென்ற அருணாசுரன் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். ""நீங்கள்தான் ஒரு பெண்ணுக்குப் பயந்து (சாமுண்டிதேவி) ஓடிப் ஒளிந்த வீரராயிற்றே?! உங்களையா திருமணம் செய்து கொள்வது?'' என்று அவனை எள்ளி நகையாடினாள் தேவி.
அவனுடைய கோபம் தலைக்கேறியது. அவளை பலவந்தமாகத் தூக்கிச் செல்ல முயன்றான். உடனே தேவி பெரிய கற்பாறையாக மாறினாள். அருணாசுரன் அந்தக் கற்பாறையைத் தன் வாளால் உடைத்தான். பாறை உடைந்தது தான் தாமதம், நூற்றுக்கணக்கான விஷ வண்டு கள் உடைந்த பாறையின் உள்ளிருந்து வந்து அருணாசுரனைக் கொட்டின. அவன் பயந்து அலறினான். தேவியானவள் ப்ராமரா என்று கூறப்படும் பெரிய வண்டு உருவம் எடுத்து அவனைப் பல இடங்களில் கொட்டினாள். அவனுடைய இறுதிமூச்சு அடங்கியது.
அப்போதும் சினம் தணியாமல் உக்ரமாக இருந்தாள் தேவி. தேவர்களும் முனிவர்களும் தேவியைக் குளிர வைக்க, தேவலோகத்தில் இருந்து இளநீர் கொண்டு வந்து அவளுக்கு அபிஷேகம் செய்து, சாந்த சொரூபத்துடன் உலக மக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண் டனர். அவர்களது வேண்டுகோளின்படி தேவி, வண்டின் உருவத்திலிருந்து கல்லாலான லிங்க வடிவாக மாறி, ஆற்றின் நடுவில் உள்ள இடத்தை பூலோகத்தில் தான் வசிக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்தாள். அந்த இடத்தில்தான் கட்டீலில் உள்ள ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி கோவிலின் மூலஸ்தானம் இருக்கிறது.
சிறிய கர்ப்பகிரகத்தின் உள்ளே கல்லாலான லிங்க வடிவத்தில் துர்க்கா பரமேஸ்வரி காட்சி தருகிறாள். இந்தத் தோற்றத்தை காலை ஆறரை மணிக்கு நடக்கும் பூஜை சமயத்தில் மட்டுமே பார்க்கலாம். மற்ற சமயங்களில் திருவுருவத்திற்கு அங்கி சாற்றிவிடுவார்கள். கோவிலில் "பலி' என்று சொல்லப்படும் சடங்கு நடக்கும்போது, ருத்திராட்ச மாலை அணிந்த உற்சவமூர்த்தி துர்க்கா பரமேஸ்வரியை ஒரு அர்ச்சகர் தலையில் வைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வருகிறார். தங்கம்போல் மின்னும் தண்டத்தை ஒருவர் எடுத்து வர, பின்னால் சிலர் அலங்காரக் குடை களை எடுத்து வருகின்றனர். கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, மீண்டும் உற்சவ விக்ரகம் கருவறையில் கொண்டு வைக்கப் படுகிறது.
தினசரி உச்சி வேளையிலும் இரவிலும் அன்னதானம் உண்டு. இதை தேவியின் பிரசாத மாகக் கருதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உண்டுவிட்டே செல்கின்றனர். இந்தக் கோவிலில் "யக்ஷகானம்' என்னும் கலை நிகழ்ச்சி வழிபாடாக நடத்தப்படுகிறது. தேவிக்கு மிகவும் பிடித்த வழிபாடு இது என்கிறார்கள். கோவிலின் உள்ளும் புறமும் ரதத்தை இழுத்துச் செல்லும் வழி பாடும் உண்டு. துலாபாரமும் உண்டு. திருமண மாகாத பெண் களுக்காக பார்வதி சுயம்வர கலா அர்ச்சனை நடத்தப்படுகிறது. இன்னும் பலவிதமான பூஜை களும் உண்டு. பக்தர்கள் மிகவும் பக்தியுடன் -நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கோவில் தினசரி காலை 4.00 முதல் 12.30 மணி வரையிலும்; மாலை 5.00 முதல் இரவு 10.00 மணி வரையிலும் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில் இரவு 12.00 மணி வரை திறந்திருக்கும்.
மங்களூரிலிருந்து 29 கி.மீ. தூரத்திலும்; உடுப்பியிலிருந்து 34 கி.மீ. தூரத்திலும் இவ்வால யம் அமைந்துள்ளது. இவ்விரு ஊர்களிலிருந்தும் கட்டீலுக்குச் செல்ல பேருந்து வசதியுண்டு.
சகல ஐஸ்வரியங்களையும் தருகிறாள் கட்டீல் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி. நீங்களும் சென்று ஒருமுறை தரிசியுங்கள்.
கொடுமை புரிந்த அரக்கர்களான சும்ப- நிசும்பர்களை தேவியானவள் வதம் செய்த போது, அசுரர் படைத் தலைவனான அருணா சுரன் என்பவன் மட்டும் தப்பிச் சென்று விட்டான். அதன் பிறகு அரக்கர்களின் தலைவனானான். முனிவர்கள் நடத்தும் யாகங்களை அழித்தான். அதனால் நாட்டில் மழை அற்றுப் போனது. நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடின. அதனால் பெரிதும் துன்புற்ற மக்கள் ஜாபாலி முனிவரிடம் சென்று முறையிட்டனர்.
மக்களின் துயரம் நீங்க ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார் அவர். அதற்காக தேவேந்திரனிடம் சென்று யாகத்தில் கோபூஜை செய்ய காமதேனுவை அனுப்பும்படி கேட்டார். ஆனால் அப்போது காமதேனு வருண லோகம் சென்றிருந்ததால், அதற்குப் பதிலாக காமதேனு வின் மகளான நந்தினிப் பசுவை அழைத்துச் செல்லுமாறு கூறினான் தேவேந்திரன்.
ஜாபாலி முனிவர் நந்தினியிடம் சென்று தன்னுடன் வரும்படி அழைத்தார். நந்தினிப் பசுவோ பூலோகத்தையும், பூலோகவாசிகளையும், அங்குள்ள முனிவர்களையும் இழிவாகப் பேசியது. அதனால் கோபம் கொண்ட முனிவர் நந்தினிப் பசுவைப் பார்த்து, ""நீ பூலோகத்தில் ஒரு ஆறாக ஓய்வில்லாமல் ஓடக்கடவது!'' என்று சாபமிட்டார். தன்னுடைய தவறை உணர்ந்த நந்தினி, தனது சாபம் தீர என்ன வழி என்று முனிவரிடம் கேட்க, ""நீ பூலோகம் சென்று ஆதிசக்தியை வணங்குவாயாக'' என்றார். அதன்படி பூவுலகம் வந்த நந்தினி ஆதிசக்தியை வணங்கி, தனக்கு சாபவிமோசனம் தருமாறு கேட்டது. ""முனிவர் இட்ட சாபத்தை மாற்ற என்னால் மட்டுமல்ல; யாராலும் முடியாது. அதை அனுபவித்துதான் தீரவேண்டும். அதனால் நீ ஆறாக ஓடத்தான் வேண்டும். ஆனால் ஒரு பெருமையை உனக்களிக்கிறேன். நான் உனது மகளாகப் பிறக்கிறேன். அதன் மூலம் உன்னு டைய சாபம் தீரும்'' என்றாள் ஆதிசக்தி.
தேவியின் கருணையையும், தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் நினைத்த நந்தினிப் பசு, கனககிரி என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகி ஆறாக ஓடியது. (அந்த ஆற்றின் நடுவில் அமைந்துள் ளதுதான் இந்தக் கோவில்.) தாயின் கருப்பையில் உள்ள நீர்க்குடத்தின் நடுவே குழந்தை வளர்வது போல, இந்த ஆற்றின் நடுவில் ஆதிசக்தி வளர்ந்து வந்தாள்.
அந்தக் காலகட்டத்தில், அருணாசுரனுக்கு தனக்கு மரணம் வந்துவிடுமோ என்ற பயம் தோன்றியது. அதைத் தவிர்க்க பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் புரிந்தான். அவன் தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா அவன்முன் தோன்றி, ""என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.
""எனக்கு மும்மூர்த்திகளாலோ, தேவர்
களாலோ, ஆண்களாலோ, பெண்களாலோ அல்லது இரண்டு கால்கள், நான்கு கால்கள் கொண்ட பிராணிகளாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது'' என்று கேட்டான்.
""அப்படியே ஆகட்டும்'' என்று பிரம்மா வரம் தந்தார். சரஸ்வதியும் அவனுக்கு காயத்ரி மந்திரத் தைக் கற்றுக் கொடுத்தாள். பிரம்மா கொடுத்த வரங்களோடு, சரஸ்வதி தந்த காயத்ரி மந்திரத்தின் சக்தியும் சேர்ந்துகொள்ளவே, அருணாசுரனு டைய அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று. தேவர்களை வென்று தேவலோகத்தை யும் கைப்பற்றினான். தேவர்களும் இந்திரனும் மும்மூர்த்திகளும் அவனை ஒன்றும் செய்ய இயலாமல் ஆதிசக்தியின் உதவியை நாடினர்.
ஆனால் அவளாலும் அவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்று தோன்றவில்லை. காரணம், அருணாசுரனிடம் இருந்த காயத்ரி மந்திர சக்தி. அவன் அந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டு - அந்த மந்திர ஒலியைக் காதில் கேட்டுக் கொண்டிருக்கும் வரை யாரும் அவனை அழிக்க முடியாது. ஆகவே அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கூறினாள் ஆதிசக்தி.
தேவர்கள் தேவகுருவான பிரகஸ்பதியின் உதவியை நாடினர். அவர்களுக்கு உதவ எண்ணிய பிரகஸ்பதி அருணாசுரனிடம் சென்று அவனை வானளாவப் புகழ்ந்தார். அதன் மூலம் அவன் காதுகள் காயத்ரி மந்திர ஒலியைக் கேட்காத வண்ணம் செய்து அவனது தவத்தைக் கலைத்தார்.
இதை உணராத அருணாசுரன் மக்களைத் துன்புறுத்தி தன்னையே கடவுளாக வணங்கும் படி வற்புறுத்தினான். முனிவர்களின் யாகங்களை யும் அழித்தான். இதுவே தக்க தருணம் என்று உணர்ந்தாள் தேவி. காண்போரை மயக்கும் மோகினி வடிவம் கொண்டு, அருணாசுரனின் வனத்திற்குச் சென்று மலர் பறிப்பவளைப் போல அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தாள். அவளது அழகைக் கண்ட அருணாசுரனின் படைத் தலைவர்களான சண்டன், பிரசண்டன் ஆகியோர் உடனே அருணாசுரனிடம் சென்று நந்தவனத்தில் தாங்கள் பார்த்த அழகியைப் பற்றிக் கூறினர். உடனே தேவி இருந்த இடத் திற்குச் சென்ற அருணாசுரன் தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். ""நீங்கள்தான் ஒரு பெண்ணுக்குப் பயந்து (சாமுண்டிதேவி) ஓடிப் ஒளிந்த வீரராயிற்றே?! உங்களையா திருமணம் செய்து கொள்வது?'' என்று அவனை எள்ளி நகையாடினாள் தேவி.
அவனுடைய கோபம் தலைக்கேறியது. அவளை பலவந்தமாகத் தூக்கிச் செல்ல முயன்றான். உடனே தேவி பெரிய கற்பாறையாக மாறினாள். அருணாசுரன் அந்தக் கற்பாறையைத் தன் வாளால் உடைத்தான். பாறை உடைந்தது தான் தாமதம், நூற்றுக்கணக்கான விஷ வண்டு கள் உடைந்த பாறையின் உள்ளிருந்து வந்து அருணாசுரனைக் கொட்டின. அவன் பயந்து அலறினான். தேவியானவள் ப்ராமரா என்று கூறப்படும் பெரிய வண்டு உருவம் எடுத்து அவனைப் பல இடங்களில் கொட்டினாள். அவனுடைய இறுதிமூச்சு அடங்கியது.
அப்போதும் சினம் தணியாமல் உக்ரமாக இருந்தாள் தேவி. தேவர்களும் முனிவர்களும் தேவியைக் குளிர வைக்க, தேவலோகத்தில் இருந்து இளநீர் கொண்டு வந்து அவளுக்கு அபிஷேகம் செய்து, சாந்த சொரூபத்துடன் உலக மக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண் டனர். அவர்களது வேண்டுகோளின்படி தேவி, வண்டின் உருவத்திலிருந்து கல்லாலான லிங்க வடிவாக மாறி, ஆற்றின் நடுவில் உள்ள இடத்தை பூலோகத்தில் தான் வசிக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்தாள். அந்த இடத்தில்தான் கட்டீலில் உள்ள ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி கோவிலின் மூலஸ்தானம் இருக்கிறது.
சிறிய கர்ப்பகிரகத்தின் உள்ளே கல்லாலான லிங்க வடிவத்தில் துர்க்கா பரமேஸ்வரி காட்சி தருகிறாள். இந்தத் தோற்றத்தை காலை ஆறரை மணிக்கு நடக்கும் பூஜை சமயத்தில் மட்டுமே பார்க்கலாம். மற்ற சமயங்களில் திருவுருவத்திற்கு அங்கி சாற்றிவிடுவார்கள். கோவிலில் "பலி' என்று சொல்லப்படும் சடங்கு நடக்கும்போது, ருத்திராட்ச மாலை அணிந்த உற்சவமூர்த்தி துர்க்கா பரமேஸ்வரியை ஒரு அர்ச்சகர் தலையில் வைத்துக் கொண்டு கோவிலைச் சுற்றி வருகிறார். தங்கம்போல் மின்னும் தண்டத்தை ஒருவர் எடுத்து வர, பின்னால் சிலர் அலங்காரக் குடை களை எடுத்து வருகின்றனர். கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, மீண்டும் உற்சவ விக்ரகம் கருவறையில் கொண்டு வைக்கப் படுகிறது.
தினசரி உச்சி வேளையிலும் இரவிலும் அன்னதானம் உண்டு. இதை தேவியின் பிரசாத மாகக் கருதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உண்டுவிட்டே செல்கின்றனர். இந்தக் கோவிலில் "யக்ஷகானம்' என்னும் கலை நிகழ்ச்சி வழிபாடாக நடத்தப்படுகிறது. தேவிக்கு மிகவும் பிடித்த வழிபாடு இது என்கிறார்கள். கோவிலின் உள்ளும் புறமும் ரதத்தை இழுத்துச் செல்லும் வழி பாடும் உண்டு. துலாபாரமும் உண்டு. திருமண மாகாத பெண் களுக்காக பார்வதி சுயம்வர கலா அர்ச்சனை நடத்தப்படுகிறது. இன்னும் பலவிதமான பூஜை களும் உண்டு. பக்தர்கள் மிகவும் பக்தியுடன் -நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கோவில் தினசரி காலை 4.00 முதல் 12.30 மணி வரையிலும்; மாலை 5.00 முதல் இரவு 10.00 மணி வரையிலும் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில் இரவு 12.00 மணி வரை திறந்திருக்கும்.
மங்களூரிலிருந்து 29 கி.மீ. தூரத்திலும்; உடுப்பியிலிருந்து 34 கி.மீ. தூரத்திலும் இவ்வால யம் அமைந்துள்ளது. இவ்விரு ஊர்களிலிருந்தும் கட்டீலுக்குச் செல்ல பேருந்து வசதியுண்டு.
சகல ஐஸ்வரியங்களையும் தருகிறாள் கட்டீல் ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி. நீங்களும் சென்று ஒருமுறை தரிசியுங்கள்.
rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
Re: ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி
நன்றி அண்ணா பகிர்வுக்கு ...
கட்டீல் இந்த ஊரை எங்கோ கேள்வி பட்டிருக்கிறேன்
கட்டீல் இந்த ஊரை எங்கோ கேள்வி பட்டிருக்கிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|