தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது
தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல திரு. இறையன்பு இஆப அவர்களின் படைப்பை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்தார்கள். தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் தொகுத்துள்ளார்கள், இன்னும் பல இளைஞர்கள் தொகுத்து வருகிறார்கள், இன்னும் தொகுப்பார்கள், அந்த அளவிற்கு அவரது படைப்பு மனிதரை நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும்,பண்படுத்தும்,தன்னம்பிக்கை விதைக்கும் ஆற்றல் கொண்டது. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் இரண்டும் அறிந்தவர். பல நூல்கள் நாளும் படிப்பவர்.
என்பது நூல்களை எழுதிக் குவித்த எழுத்துக் கரங்களுக்கு சொந்தக்காரர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன். இவர் சங்கத்தமிழ் முதல் இன்றைய இளம் கவிஞரின் ஹைக்கூ நூல் வரை கரைத்துக் குடித்தவர்.தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர், நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர். வீட்டுக்கொரு நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் இவரோ,”நூலகத்தில் வீடு” என்று சொல்லுமளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் நூல்களை சொத்தாக வைத்து இருப்பவர் மட்டுமல்ல, தினந்தோறும் வாசிப்பவர்.
திரு.இறையன்பு இஆப அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. 25 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என பன்முக ஆற்றலாளர். இயங்கிக் கொண்டே இருங்கள் என்று அடுத்தவர்களுக்கு போதிப்பதோடு நின்று விடாமல், தானும் இயங்கிக் கொண்டே இருப்பவர். “புதிய தலைமுறை” இதழில் “பயணங்கள் முடிவதில்லை” என்ற அறிவார்ந்த தொடர் எழுதி வருபவர். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட, மயிலாட நடக்குதே என முகம் சுளிப்பவர்களுக்கு ஆறதலாக இவரது தரமான பட்டிமன்றம் ஒளிப்பரப்பாகி வருகின்றது.
இந்த நூல் அறிவுக் களஞ்சியம் என்றே சொல்லலாம். இதனை வாசிப்பதோடு நின்று விடாமல், வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி உறுதி. மந்திரச் சொற்களாக உள்ளது. தொகுப்பாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது. திரு. இறையன்பு அவர்களின் படைப்புகள் எனும் மலர்களில் இருந்து தேனை எடுத்து இலக்கிய விருந்து படைத்துள்ளார்.மூல ஆசிரியரால் தொகுப்பு ஆசிரியருக்கு பெருமையா? தொகுப்பு ஆசிரியரால் மூல ஆசிரியருக்குப் பெருமையா? ஏன பட்டிமன்றமே நடத்தலாம் அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக உள்ளது. வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் இல்லை,மனிதன் கவலை, விரக்தி, சோர்வு வரும் போதெல்லாம் எடுத்து வாசித்து தெம்பு ஏற்றிக் கொள்ளக்கூடிய டானிக் இந்த நூல்.
“ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கு ஏற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது” என்பார் இறையன்பு என்று தொகுப்பாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் வாசகம் அல்ல,இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகர் உள்ளத்திலும் நம்பிக்கை விளக்கேற்றுகின்றது என்பது உண்மையிலும் உண்மை. படித்துப் பார்த்தால் உணர்வீர்கள் நீங்களும்.
முனைவர் திரு.வெ. இறையன்பு இஆப அவர்களின் அனைத்து படைப்புகளுமே கனி போன்றவை. தொகுப்பாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் கனிச்சாறாக வழங்கி உள்ள தரத்திற்குப் பாராட்டுக்கள். இரசாயணம் கலக்காத தூய கனிச்சாறு இது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயக்கும் நல்ல நூல்
இரும்பும் கரும்பும்
இதயம் இரும்பானால் இரும்பு யுகம்
உள்ளம் கரும்பானால் தங்க யுகம்
அவ்வளவு தான்
இந்த வைர வரிகளை இனவெறியர் ராஜபக்சே படித்து உணர்ந்து இருந்தால் லட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். படுகொலைகள் நடந்து இருக்காது.
நம்மில் பலர், எனக்கு நேரமே இல்லை என்று சொல்லிக் கொண்டு நேரத்தை முறைப்படி திட்டமிடாமல் விரயம் செய்து வருகின்றோம். அவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பொன்மொழி இதோ!
உழைப்பவர்களுக்கு நேரம் அதிகம்
நேரத்தைக் குறித்து ஒரு விதி உண்டு
யார் அதிகம் உழைக்கிறார்களோ
அவர்களுக்கே நேரம் அதிகம் இருக்கிறது.
உலகப் பொதுமறையாம் திருவள்ளுவர் சொன்ன, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற திருக்குறளுக்கு இனிய விளக்கம் போல், ஒர் இனிய பொன்மொழி இதோ!
வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும்,
ரணப்படுத்தவும் முடியும்.
இதனை வாசகர்கள் உள்வாங்கிக் கொண்டு குணப்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ரணப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
திரைப்படத்தில் வருவதைப் போல் நில நிமிடங்களிலேயே உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கான விடை இதோ!
உயர்ந்த இலக்கை அடைவது என்பது
ஒரேயடியாக நிகழ்வது இல்லை
ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு
நொடியையும், ஒவ்வொரு படியையும்
உன்னிப்பாக உற்று நோக்குவதில் அது அடங்கியிருக்கிறது.
பல மணி நேரங்களை விரயம் செய்து விட்டு,உயர்ந்த இலக்கை அடைய முடியவில்லையே என விரக்தி கொள்கிறோம். ஓவ்வொரு நொடியையும் பயனள்ளதாக்கிக் கொண்டால்,இலக்கு என்பது நம்மை இலகுவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இது வாசிக்கும் நூல் மட்டுமல்ல, நேசிக்கும் நூலும் ஆகும்.
இறையன்பு –கருத்துக்களஞ்சியம் என்பதை மெய்ப்பிக்கும் நூல்.
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது
தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல திரு. இறையன்பு இஆப அவர்களின் படைப்பை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தொகுத்தார்கள். தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் தொகுத்துள்ளார்கள், இன்னும் பல இளைஞர்கள் தொகுத்து வருகிறார்கள், இன்னும் தொகுப்பார்கள், அந்த அளவிற்கு அவரது படைப்பு மனிதரை நெறிப்படுத்தும், ஆற்றுப்படுத்தும்,பண்படுத்தும்,தன்னம்பிக்கை விதைக்கும் ஆற்றல் கொண்டது. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் இரண்டும் அறிந்தவர். பல நூல்கள் நாளும் படிப்பவர்.
என்பது நூல்களை எழுதிக் குவித்த எழுத்துக் கரங்களுக்கு சொந்தக்காரர் தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன். இவர் சங்கத்தமிழ் முதல் இன்றைய இளம் கவிஞரின் ஹைக்கூ நூல் வரை கரைத்துக் குடித்தவர்.தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர், நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர். வீட்டுக்கொரு நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் இவரோ,”நூலகத்தில் வீடு” என்று சொல்லுமளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் நூல்களை சொத்தாக வைத்து இருப்பவர் மட்டுமல்ல, தினந்தோறும் வாசிப்பவர்.
திரு.இறையன்பு இஆப அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. 25 நூல்களுக்கு மேல் எழுதிக் குவித்தவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என பன்முக ஆற்றலாளர். இயங்கிக் கொண்டே இருங்கள் என்று அடுத்தவர்களுக்கு போதிப்பதோடு நின்று விடாமல், தானும் இயங்கிக் கொண்டே இருப்பவர். “புதிய தலைமுறை” இதழில் “பயணங்கள் முடிவதில்லை” என்ற அறிவார்ந்த தொடர் எழுதி வருபவர். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட, மயிலாட நடக்குதே என முகம் சுளிப்பவர்களுக்கு ஆறதலாக இவரது தரமான பட்டிமன்றம் ஒளிப்பரப்பாகி வருகின்றது.
இந்த நூல் அறிவுக் களஞ்சியம் என்றே சொல்லலாம். இதனை வாசிப்பதோடு நின்று விடாமல், வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி உறுதி. மந்திரச் சொற்களாக உள்ளது. தொகுப்பாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது. திரு. இறையன்பு அவர்களின் படைப்புகள் எனும் மலர்களில் இருந்து தேனை எடுத்து இலக்கிய விருந்து படைத்துள்ளார்.மூல ஆசிரியரால் தொகுப்பு ஆசிரியருக்கு பெருமையா? தொகுப்பு ஆசிரியரால் மூல ஆசிரியருக்குப் பெருமையா? ஏன பட்டிமன்றமே நடத்தலாம் அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக உள்ளது. வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் இல்லை,மனிதன் கவலை, விரக்தி, சோர்வு வரும் போதெல்லாம் எடுத்து வாசித்து தெம்பு ஏற்றிக் கொள்ளக்கூடிய டானிக் இந்த நூல்.
“ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஓர் உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கு ஏற்றுவது வாழ்க்கையின் பொருளை முழுமையாக்குவது” என்பார் இறையன்பு என்று தொகுப்பாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் வாசகம் அல்ல,இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொரு வாசகர் உள்ளத்திலும் நம்பிக்கை விளக்கேற்றுகின்றது என்பது உண்மையிலும் உண்மை. படித்துப் பார்த்தால் உணர்வீர்கள் நீங்களும்.
முனைவர் திரு.வெ. இறையன்பு இஆப அவர்களின் அனைத்து படைப்புகளுமே கனி போன்றவை. தொகுப்பாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் கனிச்சாறாக வழங்கி உள்ள தரத்திற்குப் பாராட்டுக்கள். இரசாயணம் கலக்காத தூய கனிச்சாறு இது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயக்கும் நல்ல நூல்
இரும்பும் கரும்பும்
இதயம் இரும்பானால் இரும்பு யுகம்
உள்ளம் கரும்பானால் தங்க யுகம்
அவ்வளவு தான்
இந்த வைர வரிகளை இனவெறியர் ராஜபக்சே படித்து உணர்ந்து இருந்தால் லட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். படுகொலைகள் நடந்து இருக்காது.
நம்மில் பலர், எனக்கு நேரமே இல்லை என்று சொல்லிக் கொண்டு நேரத்தை முறைப்படி திட்டமிடாமல் விரயம் செய்து வருகின்றோம். அவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பொன்மொழி இதோ!
உழைப்பவர்களுக்கு நேரம் அதிகம்
நேரத்தைக் குறித்து ஒரு விதி உண்டு
யார் அதிகம் உழைக்கிறார்களோ
அவர்களுக்கே நேரம் அதிகம் இருக்கிறது.
உலகப் பொதுமறையாம் திருவள்ளுவர் சொன்ன, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற திருக்குறளுக்கு இனிய விளக்கம் போல், ஒர் இனிய பொன்மொழி இதோ!
வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும்,
ரணப்படுத்தவும் முடியும்.
இதனை வாசகர்கள் உள்வாங்கிக் கொண்டு குணப்படுத்தும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ரணப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
திரைப்படத்தில் வருவதைப் போல் நில நிமிடங்களிலேயே உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். அதற்கான விடை இதோ!
உயர்ந்த இலக்கை அடைவது என்பது
ஒரேயடியாக நிகழ்வது இல்லை
ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு
நொடியையும், ஒவ்வொரு படியையும்
உன்னிப்பாக உற்று நோக்குவதில் அது அடங்கியிருக்கிறது.
பல மணி நேரங்களை விரயம் செய்து விட்டு,உயர்ந்த இலக்கை அடைய முடியவில்லையே என விரக்தி கொள்கிறோம். ஓவ்வொரு நொடியையும் பயனள்ளதாக்கிக் கொண்டால்,இலக்கு என்பது நம்மை இலகுவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இது வாசிக்கும் நூல் மட்டுமல்ல, நேசிக்கும் நூலும் ஆகும்.
இறையன்பு –கருத்துக்களஞ்சியம் என்பதை மெய்ப்பிக்கும் நூல்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Re: இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
வாழ்க்கை மனிதனுக்கு பல அரிய அனுபவப்பாடங்களை தருகிறது அனுபவங்களை கற்ற மனிதன் அதன் மூலம் தனது தவறுகளை திருத்திக்கொள்வதில்லை, மீண்டும் மீண்டும் தவறு செய்து வருந்துவதே அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது, வாழ்க்கையினை ரசித்து, ருசித்து அனுபவித்தால் மட்டுமே அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளை தவறாது பின்பற்றி வாழ்வில் வெற்றி பெறலாம் அத்தகைய வாழ்வே பின்வரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதை மறுக்க முடியாது, அரியதோர் படைப்பாளிகளின் வாழ்க்கை முறை இன்று நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை பன்பட்ட வாழ்க்கை முறை என்பதை மறுக்க முடியுமா என்ன?
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010
Similar topics
» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் ,முனைவர் நிர்மலா மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|