தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி)

3 posters

Go down

மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி) Empty மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 24, 2011 2:19 pm

3. அசை பிரித்தல்



சீர் குறித்துத் தெரிந்து
கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முற்றே உலகு.

– இந்தக் குறளை ஏழு பகுதியாகப் பிரித்து எழுதுகிறோம்.

அகர
முதல
எழுத்தெல்லாம்
ஆதி
பகவன்
முதற்றே
உலகு
- இவற்றைச் சீர்கள்
என்கிறோம்.

சீர் பற்றிய விளக்கம் பின்னர்
காண்போம்.

அசை பற்றிப் படித்தோம் அல்லவா?
இப்போது சீர்களில் அசை பிரிப்பது எவ்வாறு
எனத் தெரிந்து கொள்வோம்.

அசை பிரிப்பதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

1. இரண்டு குறில்கள் சேர்ந்து வரின்
இணைக்குறில் – நிரையசை.

மூன்று குறில் சேர்ந்து வரின்,
முதல் இரண்டும் இணைக்குறில் – எனவே நிரையசை அடுத்துள்ளது தனிக்குறில்
ஆக – நேரசை.

நான்கு குறில் சேர்ந்து வரின்,
முதல் இரண்டும் ஓர் இணைக்குறில் – நிரையசை; அடுத்த இரண்டும் இன்னொரு
இணைக்குறிலாக இன்னொரு நிரையசை.

2. அசை பிரிக்கும் போது, ஓர் அசையை அடுத்து நிற்கும் புள்ளி(ஒற்று)
எழுத்தையும் அசையின் இறுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு :

(அ). குதிக்கும் – என்கின்ற ஒரு
சீரில்,

குதிக் – என்பதை இணைக்குறில்
ஒற்று எனப்பிரித்து நிரையசை என்று கொள்ள வேண்டும்;

கும் – குறில் ஒற்று எனக்கொண்டு
நேரசையாகக் கருத வேண்டும்.


(ஆ) பார்க்கிறேன் – என்கின்ற ஒரு
சீரில்.

பார்க் – என்பதை (இரண்டு புள்ளி
எழுத்தையும் சேர்த்து) நெடில் ஒற்று எனக்கொண்டு நேரசையாக ஏற்க
வேண்டும்.

கிறேன் – என்பது குறில் நெடில்
ஒற்று; எனவே நிரையசையாக்க்கொள்ள வேண்டும்.


3. சீரின் முதலிலும் இடையிலும் தனிக்குறில்
ஓர் அசை ஆகாது. சீரின் இறுதியில் தனிக்குறில் அசை ஆகும்.

காண்க : அகர என்பதில்
அக
- இணைக்குறில் ஓர் அசை ஆனது.
சீரின் இறுதியில் ர – தனிக்குறில்
அசை ஆனது.

மிகா – என்றால், குறில்நெடில் -
நிரையசையாகவே வரும்.
ஆனால்,
காமி – என்று வந்தால்,
– தனி நெடில் - நேரசை;
மி – சீரின் இறுதியில்
தனிக்குறில் - நேரசை. இவ்வாறு இரண்டு அசைகளாகும்.


4. சீரின் தொடக்கத்தில் நிற்கும்
வரிசை எழுத்துக்கள் நெடிலாகக்
கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும்
அவை குறிலாகக்
கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் – கை – நெடில் -
நேரசை.(சீரின் முதலில் வரிசைச்
சொல்)

போகையில் – கையில் – குறில்இணை
ஒற்று - நிரையசை (சீரின் இடையில்
வரிசைச் சொல்)

புன்னகை – னகை – குறிலிணை -
நிரையசை. ( சீரின் இறுதியில்
வரிசைச்சொல்)

5. அசை பிரிக்கும் போது பொருள் பார்த்தல் கூடாது. பெரும்பாலான
அசைகளுக்குப் பொருளே இராது.

6. ஒரு சீரில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அசையாகப் பிரித்தல்
வேண்டும்; மற்றொரு சீரில் உள்ள எழுத்தைச் சேர்த்துப் பிரித்தல் கூடாது.

7.இடையில் மெய்யெழுத்து இருந்தால் அசை வேறாகப்பிரிந்துவிடும்

* * * * *** *** ***

இனி, அக் குறளின் சீர்களை அசை பிரித்துப்
பார்ப்போம்.

அகர என்ற சீரில்,

அக – இணைக் குறில் (ஈருயிர்) எனவே
நிரையசை.

அடுத்துள்ள தனிக்குறில்
(ஓருயிர்) எனவே நேரசை.


முதல என்ற சீரில்,

முத – இணைக்குறில் -
நிரையசை

அடுத்துள்ள தனிக்குறில் -
நேரசை


எழுத்தெல்லாம் என்ற சீரில்,

எழுத் – இணைக்குறில் ஒற்று -
நிரையசை

தெல் – குறில்ஒற்று -
நேரசை

லாம் – நெடில் ஒற்று -
நேரசை


ஆதி என்ற சீரில்,

– தனிநெடில் -
நேரசை

தி – தனிக்குறில் -
நேரசை


பகவன் என்ற சீரில்,

பக – இணைக்குறில் -
நிரையசை

வன் – குறில்ஒற்று -
நேரசை


முதற்றே என்ற சீரில்,

முதற் – இணைக்குறில் ஒற்று -
நிரையசை

றே – தனி நெடில் -
நேரசை


உலகு என்ற சீரில்,

உல – இணைக்குறில் -
நிரையசை


கு – தனிக்குறில் -
நேரசை




அசை பிரித்தல் கவனத்தோடு புரிந்து கொள்ள
வேண்டிய பகுதி.

இதில் கண்டிப்பாக ஐயம் எழ வாய்ப்புண்டு.

தயங்காமல் கேளுங்கள்.




அசை பிரித்தல் பயிற்சி



அடுத்து சீர் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்




வளரும்.......

--

நன்றி
தமிழநம்பி





பயிற்சி குறித்து எழும் ஐயங்களை எழுதுங்கள்
[You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி) Empty Re: மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி)

Post by கலைநிலா Thu Nov 24, 2011 2:54 pm

ஐயாவின் படத்தை
தந்த தலைக்கு நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி) Empty Re: மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி)

Post by பட்டாம்பூச்சி Fri Nov 25, 2011 2:04 pm

பயனுள்ள நல்ல குறிப்புகள் குறித்துக்கொண்டேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி) Empty Re: மரபுப் பா பயிலரங்கம் பாடம் 3. அசை பிரித்தல் (ஆசிரியர்- தமிழநம்பி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum