தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
+6
அ.இராமநாதன்
ருக்மணி
kowsy2010
ஹிஷாலீ
பேனாமுனைபாரதி
கவியருவி ம. ரமேஷ்
10 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே :: உரைநடை, கட்டுரை, அனுபவம்
Page 1 of 1
பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கு உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவகைமையும்... இந்த இழையில் பதியவும். அதாவது மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி போட்டிப் படைப்புகளைப் பதிய வேண்டும். புதிய பதிவிட என்பதனைப் பயன்படுத்திப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
பூந்தோட்டம் - அனுபவம்
எனக்கு பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம் .
நான் எங்கு பூச்செடி பார்த்தாலும் உடனே அந்த வீட்டாரிடம் சென்று ஒரு செடி தருமாறு கேட்பேன். கொடுப்பவர்கள் தப்பினார். தர மறுக்கும் நபர்கள் இடத்தில் உள்ள செடி மறுநாள் பார்த்தால் என் வீட்டு தோட்டத்தில் இருக்கும் . அவர்கள் இடம் வெற்று நிலமாக தான் இருக்கும் . அந்த அளவிற்கு எனக்கு பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம்.
நேற்று முன் தினம் பேரூர் அருகில் ஒரு கார்டன் சென்று நிறைய செடிகள் வாங்கி நட வேண்டும் என சென்றேன். நான் ஒரு வெள்ளை செம்பருத்தி செடி 80 ரூபாய் சொன்னார்கள். எவ்வளவு குறைத்து கேட்பினும் தர மருத்து விட்டனர்.
சரி திரும்பி வரும் போது வாங்கி கொள்கிறேன் என்று கூறி சென்றேன். ஈசா சென்று திரும்பி வரும் போது கேட்டேன். இப்பொழுதும் அதே விலை என்றனர் .
சரி தம்பி ஒரு கிலோ மீட்டர் போனால் ஒரு பெட்ரோல் பங்க் வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வா பார்த்து குறைத்து தருகிறேன் என்றாள் அந்த அம்மா.
சரி என்று போனால் 3 கிலோ மீட்டர் சென்றதும் ஒரு பெட்ரோல் பங்க் வந்தது. வாங்கி கொண்டு வந்து தந்தேன். 40 ரூபாய்க்கு செம்பருத்தி மற்றும் ஒரு ரோஜா செடி மற்றும் ஒரு உரம் தந்து அனுப்பினார்கள் .
இது ஒரு நல்ல அனுபவம். என் வீட்டு பூதோட்டம் சிறப்பாக அமைத்து விட்டேன் . என் விருப்பமான எல்லா பூக்களும் இருக்கிறது .
நன்றி
என் அனுபவம் தொடரும் ...................!
நான் எங்கு பூச்செடி பார்த்தாலும் உடனே அந்த வீட்டாரிடம் சென்று ஒரு செடி தருமாறு கேட்பேன். கொடுப்பவர்கள் தப்பினார். தர மறுக்கும் நபர்கள் இடத்தில் உள்ள செடி மறுநாள் பார்த்தால் என் வீட்டு தோட்டத்தில் இருக்கும் . அவர்கள் இடம் வெற்று நிலமாக தான் இருக்கும் . அந்த அளவிற்கு எனக்கு பூந்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் அதிகம்.
நேற்று முன் தினம் பேரூர் அருகில் ஒரு கார்டன் சென்று நிறைய செடிகள் வாங்கி நட வேண்டும் என சென்றேன். நான் ஒரு வெள்ளை செம்பருத்தி செடி 80 ரூபாய் சொன்னார்கள். எவ்வளவு குறைத்து கேட்பினும் தர மருத்து விட்டனர்.
சரி திரும்பி வரும் போது வாங்கி கொள்கிறேன் என்று கூறி சென்றேன். ஈசா சென்று திரும்பி வரும் போது கேட்டேன். இப்பொழுதும் அதே விலை என்றனர் .
சரி தம்பி ஒரு கிலோ மீட்டர் போனால் ஒரு பெட்ரோல் பங்க் வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வா பார்த்து குறைத்து தருகிறேன் என்றாள் அந்த அம்மா.
சரி என்று போனால் 3 கிலோ மீட்டர் சென்றதும் ஒரு பெட்ரோல் பங்க் வந்தது. வாங்கி கொண்டு வந்து தந்தேன். 40 ரூபாய்க்கு செம்பருத்தி மற்றும் ஒரு ரோஜா செடி மற்றும் ஒரு உரம் தந்து அனுப்பினார்கள் .
இது ஒரு நல்ல அனுபவம். என் வீட்டு பூதோட்டம் சிறப்பாக அமைத்து விட்டேன் . என் விருப்பமான எல்லா பூக்களும் இருக்கிறது .
நன்றி
என் அனுபவம் தொடரும் ...................!
பேனாமுனைபாரதி- புதிய மொட்டு
- Posts : 32
Points : 66
Join date : 01/03/2012
Age : 41
Location : கோயம்புத்தூர்
தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்...
கட்டுரை என்ற தலைப்பில்
உங்கள் ஹிஷாலீ
மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் கண் முன்
தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:
மற்றப்பூகள்: தாமரையை பார்த்து நீ எங்களை விடப் பெரியவளோ?
தாமரை : இல்லையே நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரியே
பூக்களில் பெரியவள் சிறியவள் என்று பாகுபாடில்லையே
மற்றப்பூகள் :அப்படி என்றால் உன்னை மட்டு ஏன் பெண்கள் தலையில் சூடுவதில்லை?
தாமரை: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதிரிகளே நான் இறைவனுக்காக படைக்கப் பட்டவள் இல்லை பெண்மையின் கற்பை புனிதப் படுத்தும் உவமைக்காக படைக்கப்பட்டவள்
மற்றப்பூகள்:புரியவில்லையே ....?
தாமரை: நீங்கள் அழகு பெண்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை தலையில் பூ சூட்டி மகிழும் மென்மை மனம் கொடவர்கள் மேலும் பூஜைக்கும் உங்களை உபயோகிக்கிறார்கள் அதற்கு மேலும் இறந்தபோதும் இன்னும் இறக்காமல் வாழும் பெண் மக்களுக்கு நீங்கள் தியாக உள்ளத்துடன் உதவி புரிகிறேர்கள்,
எல்லா மங்கள காரியங்களுக்கும் உங்களுக்கே முதல் உரிமை கொடுகிறார்கள்
அப்படி பாட்ட தியாகம் உள்ளம் கொண்ட உங்களை கண்டு மற்றவர்கள் ஜாதி மதம் இனம் மொழி என வேறுபாடு அறியாமல் யாவரும் ஒன்றே என உணரவேண்டும்
மேலும் இந்த உலகில் மனித உயிர்கள் உங்களை போல் உதிரும் நிலையை கொண்டது .அவரவர் விதி அவரவருக்கே தெரியாது என்பதை புரியும் வகையில் உங்களை கடவுள் படைத்துள்ளார் இதை யாவரும் அறிந்து உணர்வதற்காகவே நீங்கள் காலையில் பூத்து மாலையில் மறைகிறேர்கள்.
நானோ காதல் மோகத்தில் சில பெண்களின் தவறுகளை உணர்த்தவே நான் கடவுளின் திருவடியில் பூஜிக்கிறேன் அதாவது பெண்மையின் கற்பு தன் கணவனின் ஒருவனுக்கே உரியது என்பதை மனதில் நிறுத்தி பெண்கள் தாமைரைபோல் தன் கற்பை காத்து கடவுளாகிய கணவனுக்கே சொந்தமாக்கி வாழவேண்டும்
எப்படி நான் கதிரவனின் காதலில் விரிந்தாலும் கை தொடா வாசத்தில் இறைவனின் திருவடியை அடைந்து என் பெண்மையை காத்து கடவுளுக்கு விருந்தாகிறேன் இதனால் தான் என்னை தேசிய மலராக பெயர் சூட்டி நம் இந்தியப் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை பேணி காக்கும் அருவுரைகளை எடுத்துரைக்கவும் மண்ணில் நான் தாமரையாக பிறப்பெடுத்தேன்
தெய்வ மலர்
தேசிய மலர்
தாமரை
என்ற பேருக்கினங்க வாழ்கிறேன் போதுமா ...
மற்றப்பூகள்:ம்ம்ம் இப்போது புரிந்தது நீ கூறுவதும் முற்றிலும் உண்மையே இந்த உண்மையே எங்களுக்கு உணர்த்த காரணமான தமிழ் தோட்டத்திற்கும் மேலும் என்னை போல் உன் பெருமையை அறியாத பெண்களுக்கும் உன் உரையாடல் ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடை பெறுகிறேம் நன்றி வணக்கம்.
என் காதல் பள்ளி கொண்டது
இறைவன் சன்னதியில்
தாமரை பூக்கள்
உங்கள் ஹிஷாலீ
மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் கண் முன்
தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:
மற்றப்பூகள்: தாமரையை பார்த்து நீ எங்களை விடப் பெரியவளோ?
தாமரை : இல்லையே நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரியே
பூக்களில் பெரியவள் சிறியவள் என்று பாகுபாடில்லையே
மற்றப்பூகள் :அப்படி என்றால் உன்னை மட்டு ஏன் பெண்கள் தலையில் சூடுவதில்லை?
தாமரை: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதிரிகளே நான் இறைவனுக்காக படைக்கப் பட்டவள் இல்லை பெண்மையின் கற்பை புனிதப் படுத்தும் உவமைக்காக படைக்கப்பட்டவள்
மற்றப்பூகள்:புரியவில்லையே ....?
தாமரை: நீங்கள் அழகு பெண்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை தலையில் பூ சூட்டி மகிழும் மென்மை மனம் கொடவர்கள் மேலும் பூஜைக்கும் உங்களை உபயோகிக்கிறார்கள் அதற்கு மேலும் இறந்தபோதும் இன்னும் இறக்காமல் வாழும் பெண் மக்களுக்கு நீங்கள் தியாக உள்ளத்துடன் உதவி புரிகிறேர்கள்,
எல்லா மங்கள காரியங்களுக்கும் உங்களுக்கே முதல் உரிமை கொடுகிறார்கள்
அப்படி பாட்ட தியாகம் உள்ளம் கொண்ட உங்களை கண்டு மற்றவர்கள் ஜாதி மதம் இனம் மொழி என வேறுபாடு அறியாமல் யாவரும் ஒன்றே என உணரவேண்டும்
மேலும் இந்த உலகில் மனித உயிர்கள் உங்களை போல் உதிரும் நிலையை கொண்டது .அவரவர் விதி அவரவருக்கே தெரியாது என்பதை புரியும் வகையில் உங்களை கடவுள் படைத்துள்ளார் இதை யாவரும் அறிந்து உணர்வதற்காகவே நீங்கள் காலையில் பூத்து மாலையில் மறைகிறேர்கள்.
நானோ காதல் மோகத்தில் சில பெண்களின் தவறுகளை உணர்த்தவே நான் கடவுளின் திருவடியில் பூஜிக்கிறேன் அதாவது பெண்மையின் கற்பு தன் கணவனின் ஒருவனுக்கே உரியது என்பதை மனதில் நிறுத்தி பெண்கள் தாமைரைபோல் தன் கற்பை காத்து கடவுளாகிய கணவனுக்கே சொந்தமாக்கி வாழவேண்டும்
எப்படி நான் கதிரவனின் காதலில் விரிந்தாலும் கை தொடா வாசத்தில் இறைவனின் திருவடியை அடைந்து என் பெண்மையை காத்து கடவுளுக்கு விருந்தாகிறேன் இதனால் தான் என்னை தேசிய மலராக பெயர் சூட்டி நம் இந்தியப் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை பேணி காக்கும் அருவுரைகளை எடுத்துரைக்கவும் மண்ணில் நான் தாமரையாக பிறப்பெடுத்தேன்
தெய்வ மலர்
தேசிய மலர்
தாமரை
என்ற பேருக்கினங்க வாழ்கிறேன் போதுமா ...
மற்றப்பூகள்:ம்ம்ம் இப்போது புரிந்தது நீ கூறுவதும் முற்றிலும் உண்மையே இந்த உண்மையே எங்களுக்கு உணர்த்த காரணமான தமிழ் தோட்டத்திற்கும் மேலும் என்னை போல் உன் பெருமையை அறியாத பெண்களுக்கும் உன் உரையாடல் ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடை பெறுகிறேம் நன்றி வணக்கம்.
என் காதல் பள்ளி கொண்டது
இறைவன் சன்னதியில்
தாமரை பூக்கள்

ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
பூக்களின் படைப்பு (அநுபவம்)
பூக்கள் அநுபவம்
எங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம். வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள்.
பாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில் தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா! என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா! என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.
அம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன்.
உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும். நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்
எங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம். வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள்.
பாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில் தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா! என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா! என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.
அம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன்.
உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும். நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
போட்டி நடுவர்களுக்கு (நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) களுக்குத் தமிழ்த்தோட்டம் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
நடுவர்கள் தாங்கள் முதல் மூன்று இ்டத்துக்காக முன்னிருத்தும் தகுதியான படைப்புகளை 29 ஆம் தேதிக்குள் அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் (அந்தந்தப் பிரிவிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி) வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நடுவர்கள் தாங்கள் முதல் மூன்று இ்டத்துக்காக முன்னிருத்தும் தகுதியான படைப்புகளை 29 ஆம் தேதிக்குள் அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் (அந்தந்தப் பிரிவிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி) வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
முதல் இடம்
by kowsy2010 on Sun May 20, 2012 11:33 am
இரண்டாம் இடம்
by ஹிஷாலீ on Tue May 08, 2012 3:55 பிஎம்
மூன்றாம் இடம்
by பேனாமுனைபாரதி on Mon May 07, 2012 1:33 pm
முதல் இடம்
by kowsy2010 on Sun May 20, 2012 11:33 am
இரண்டாம் இடம்
by ஹிஷாலீ on Tue May 08, 2012 3:55 பிஎம்
மூன்றாம் இடம்
by பேனாமுனைபாரதி on Mon May 07, 2012 1:33 pm
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 35
Location : சூரத்
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
என்னை தேர்வு செய்த நிர்வாகத்திற்கு அன்பு நன்றிகள் மேலும் வெற்றி பெற இருவருக்கும் அன்பு பாராட்டுகள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...


அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
மூவருக்கும் வாழ்த்துக்கள்!

பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 45
Location : பெங்களூரு
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
வெற்றியாளருக்கு எனது வாழ்த்துகள்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
என் படைப்புக்கு முதல் இடம் வழங்கிய நிருவாக்கத்திர்க்கு மிக்க நன்றி. அத்துடன் வெற்றி பெற்ற மற்றைய இருவருக்கும் வாழ்த்துகள்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
வெற்றி பெற்ற அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.அத்தோடு இதற்கு நடுவராக இருந்த சகோதரருக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.































































RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
எனக்குறிய பரிசுகளைக்கானோமே.............



RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 100
Location : அன்பு உள்ளங்களில்
Re: பூ (பூக்கள்) உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
அதுக்கெல்லாம் போட்டியில் கலந்துக்கிறவங்களுக்குத்தான் கொடுப்போம் (எனக்கேவா இப்படி? என்று திரும்ப கேட்கக்கூடாது. - அப்பாடி எப்படியோ கலாய்ச்சிட்டேன்னு நெனக்கிறேன்)RAJABDEEN wrote:எனக்குறிய பரிசுகளைக்கானோமே.............![]()
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

» மழை - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» பொங்கல் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» பொங்கல் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி
» சினிமா - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» தீபாவளி - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே :: உரைநடை, கட்டுரை, அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|