தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
யாரணங் குற்றனை கடலே
4 posters
Page 1 of 1
யாரணங் குற்றனை கடலே
ஏங்க என்ன ஆச்சு?
ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க?
என்ன பிரச்சனை?
என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் விழுக்காடு அதிகமாகிவருகிறது.
“வாழப் பிடிக்கவில்லையென்றால்
தற்கொலை செய்துகொள்!
ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும்
துணிவிருந்தால்...
வாழ்ந்துபார்!
என்பது அலெக்சான்டர் வாக்கு.
என வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போரடிக்கொண்டிருக்கும் வாழ்வில்,
பகிர்தல்
புரிதல்
ஆகியன குறைந்துவிட்டன.
பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.
வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.
இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்..
சரி எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறீங்களா?
எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைங்க!
இதுதான் பெரிய பிரச்சனை!
என்னைச் சுற்றியிருப்பவர்களிள் பிரச்சனைகளைப் பலவகைப்படுத்தலாம். பல பிரச்சனைகளையும் ஒரே சொல்லில் அடையாளப்படுத்தவேண்டுமென்றால் “பணம்“ என்று சொல்லாம்.
பணத்துக்கு அடுத்தபடியாகக் காலம் காலமாகவே தீராத பிரச்சனைகளுள் ஒன்று காதல்.
சங்க காலம் முதல் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீரவேயில்லை.
உடன்போக்கு,இற்செறித்தல், அலர் என அந்தப் பிரச்சனைகளின் பெயர் வேண்டுமானால் கால மாற்றத்தால் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கலாம். ஆனால் இந்த சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.
பணம் - காதல் இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்.
பணம் - காதல் இரண்டும் சிலர் பின்னால் ஓடுகின்றன.
காதலுக்குப் பல வழிகளில் பிரச்சனைகள் வரும்.
திருக்குறள் சுட்டும் தலைவியின் நிலை,
தலைவனின் பிரிவால் வாடும் தலைவி,
மாலைப் பொழுதிடம் பேசுகிறாள்….
ஏ மாலைப் பொழுதே உன் துணைவரும் என் துணைவரைப் போல வன்மனம் கொண்டவரோ?
நீயும் என்போலவே ஒளியிழந்து காணப்படுகிறாய்?
என்று கேட்கிறாள்.குறள் இதோ,
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (திருக்குறள்)
சங்ககாலத் தலைவியின் நிலை,
தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலைப் பார்க்கிறாள்.
மீன்களை உண்ணவந்த கொக்கினங்கள் பரவியிருக்கின்ற கடல் பார்ப்பதற்கு வெள்ளாடுகள் கூட்டமாகப் பரவியிருப்பது போல உள்ளது.
கடல் அலையாக வந்து கரையிலிருக்கும் வெண்மையான மலர்களைக் கொண்ட தாழையை அடித்துச் செல்கிறது. அந்த ஒலி கேட்கும் தலைவி,
ஏ கடலே..
நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே?
யாரால் வருத்தமுற்றாய்?
என்று வினவுகிறாள். பாடல் இதோ,
யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.
தலைவி கூற்று
குறுந்தொகை - 163.
அம்மூவன்.
நள்ளிரவில் தன்னுடன் தூங்காமல் விழித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கடல் தன்னைப் போலவே துன்புறுவதாக எண்ணிக்கொள்கிறாள் தலைவி.
ஒப்பீடு.
திருக்குறள் சுட்டும் தலைவிக்கு மாலை - பெண்ணாகத் தெரிகிறது.
குறுந்தொகைத் தலைவிக்குக் கடல் - பெண்ணாகத் தெரிகிறது.
கடல் ஆணா? பெண்ணா?
கடலை ஆண்கடல் என்றும், பெண்கடல் என்றும் அழைப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சீற்றம் அதிகமான கடல் ஆண்கடலென்றும்,
சீற்றம் குறைவான கடல் பெண்கடலென்றும் அழைப்பார்கள்.
இதில் எனக்கு நீண்டகாலம் ஐயம் உண்டு.
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் தானே அதிகம் பேசுகிறார்கள்..
சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்
இரண்டும் இயைபுபட்டுவருவது சி்ந்திக்கத்தக்கதாகவுள்ளது.
சரி நாம் பாடலுக்கு வருவோம்,
இரு தலைவியரிடமும் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளில்லை.
அதனால் மனஅழுத்தம் கொண்ட தலைவியரின் நிலை மாலைப்பொழுதிடமும், கடலிடமும் புலம்புவதுவரை சென்றுள்ளது.
ஆனால் இரு தலைவியரும் தன்னிடம் தான் யாரும் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும் மாலைப்பொழுதிடமும், கடலிடமும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.
மனஅழுத்தம் அதிகமானால் அது மனப்பிறழ்வாக மாறும்.
இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..
இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….
இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனதோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.
○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..
இவ்வாறு பேசுவதால் மனஅழுத்தம் நீங்கும் இந்த உளவியல் கூறுகளைத் தாங்கி வரும் சங்கப்பாடல்களை நோக்கும் போது, சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது. [img][/img]
ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க?
என்ன பிரச்சனை?
என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் விழுக்காடு அதிகமாகிவருகிறது.
“வாழப் பிடிக்கவில்லையென்றால்
தற்கொலை செய்துகொள்!
ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும்
துணிவிருந்தால்...
வாழ்ந்துபார்!
என்பது அலெக்சான்டர் வாக்கு.
என வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போரடிக்கொண்டிருக்கும் வாழ்வில்,
பகிர்தல்
புரிதல்
ஆகியன குறைந்துவிட்டன.
பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.
வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.
இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்..
சரி எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறீங்களா?
எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைங்க!
இதுதான் பெரிய பிரச்சனை!
என்னைச் சுற்றியிருப்பவர்களிள் பிரச்சனைகளைப் பலவகைப்படுத்தலாம். பல பிரச்சனைகளையும் ஒரே சொல்லில் அடையாளப்படுத்தவேண்டுமென்றால் “பணம்“ என்று சொல்லாம்.
பணத்துக்கு அடுத்தபடியாகக் காலம் காலமாகவே தீராத பிரச்சனைகளுள் ஒன்று காதல்.
சங்க காலம் முதல் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீரவேயில்லை.
உடன்போக்கு,இற்செறித்தல், அலர் என அந்தப் பிரச்சனைகளின் பெயர் வேண்டுமானால் கால மாற்றத்தால் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கலாம். ஆனால் இந்த சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.
பணம் - காதல் இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்.
பணம் - காதல் இரண்டும் சிலர் பின்னால் ஓடுகின்றன.
காதலுக்குப் பல வழிகளில் பிரச்சனைகள் வரும்.
திருக்குறள் சுட்டும் தலைவியின் நிலை,
தலைவனின் பிரிவால் வாடும் தலைவி,
மாலைப் பொழுதிடம் பேசுகிறாள்….
ஏ மாலைப் பொழுதே உன் துணைவரும் என் துணைவரைப் போல வன்மனம் கொண்டவரோ?
நீயும் என்போலவே ஒளியிழந்து காணப்படுகிறாய்?
என்று கேட்கிறாள்.குறள் இதோ,
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (திருக்குறள்)
சங்ககாலத் தலைவியின் நிலை,
தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலைப் பார்க்கிறாள்.
மீன்களை உண்ணவந்த கொக்கினங்கள் பரவியிருக்கின்ற கடல் பார்ப்பதற்கு வெள்ளாடுகள் கூட்டமாகப் பரவியிருப்பது போல உள்ளது.
கடல் அலையாக வந்து கரையிலிருக்கும் வெண்மையான மலர்களைக் கொண்ட தாழையை அடித்துச் செல்கிறது. அந்த ஒலி கேட்கும் தலைவி,
ஏ கடலே..
நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே?
யாரால் வருத்தமுற்றாய்?
என்று வினவுகிறாள். பாடல் இதோ,
யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.
தலைவி கூற்று
குறுந்தொகை - 163.
அம்மூவன்.
நள்ளிரவில் தன்னுடன் தூங்காமல் விழித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கடல் தன்னைப் போலவே துன்புறுவதாக எண்ணிக்கொள்கிறாள் தலைவி.
ஒப்பீடு.
திருக்குறள் சுட்டும் தலைவிக்கு மாலை - பெண்ணாகத் தெரிகிறது.
குறுந்தொகைத் தலைவிக்குக் கடல் - பெண்ணாகத் தெரிகிறது.
கடல் ஆணா? பெண்ணா?
கடலை ஆண்கடல் என்றும், பெண்கடல் என்றும் அழைப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சீற்றம் அதிகமான கடல் ஆண்கடலென்றும்,
சீற்றம் குறைவான கடல் பெண்கடலென்றும் அழைப்பார்கள்.
இதில் எனக்கு நீண்டகாலம் ஐயம் உண்டு.
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் தானே அதிகம் பேசுகிறார்கள்..
சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்
இரண்டும் இயைபுபட்டுவருவது சி்ந்திக்கத்தக்கதாகவுள்ளது.
சரி நாம் பாடலுக்கு வருவோம்,
இரு தலைவியரிடமும் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளில்லை.
அதனால் மனஅழுத்தம் கொண்ட தலைவியரின் நிலை மாலைப்பொழுதிடமும், கடலிடமும் புலம்புவதுவரை சென்றுள்ளது.
ஆனால் இரு தலைவியரும் தன்னிடம் தான் யாரும் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும் மாலைப்பொழுதிடமும், கடலிடமும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.
மனஅழுத்தம் அதிகமானால் அது மனப்பிறழ்வாக மாறும்.
இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..
இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….
இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனதோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.
○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..
இவ்வாறு பேசுவதால் மனஅழுத்தம் நீங்கும் இந்த உளவியல் கூறுகளைத் தாங்கி வரும் சங்கப்பாடல்களை நோக்கும் போது, சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது. [img][/img]
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: யாரணங் குற்றனை கடலே
அழகான, அமைதியான இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரம் புரிந்துக்கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், ஒன்றுபடுதல் என்பதே ஆகும் இந்த அடிப்படையை புரிந்துக்கொண்டோமானால் மிக அற்புதமான வாழ்க்கையை வழிநடத்தி செல்ல நீங்களே தகுதியானவர்.
அடுத்தவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள் நீங்கள் விட்டுக்கொடுங்கள் அடுத்த முறை விட்டுக்கொடுக்க அவரே வருவார் உங்களை தேடி! விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து பின் விட்டுக்கொடுக்க ஒன்றுமில்லை என்றாகி ஒன்றுபடுதல் மலர்ந்த்துவிடாதா உங்கள் வாழ்க்கையில்.
விட்டுக்கொடுத்தல் இல்லாத போதுதான், மன அழுத்தங்களும், வீணான பிரச்சனைகளும், மன அழுத்தங்கள் மிகும் போது தான் யாராவது தன்னோடு பேசி தன் மன அழுத்தத்தை குறைக்கமாட்டார்களா என்ற நிலை உறுவாகும் இயலாத போது தற்கொலைகளும் தண்டவாளங்களும்
முடிவாகின்றன.
புரிந்துக்கொள்ளுங்கள், விட்டுக்கொடுங்கள், ஒன்றுபடுங்கள்
வாழ்க வளமுடன்.
அடுத்தவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள் நீங்கள் விட்டுக்கொடுங்கள் அடுத்த முறை விட்டுக்கொடுக்க அவரே வருவார் உங்களை தேடி! விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து பின் விட்டுக்கொடுக்க ஒன்றுமில்லை என்றாகி ஒன்றுபடுதல் மலர்ந்த்துவிடாதா உங்கள் வாழ்க்கையில்.
விட்டுக்கொடுத்தல் இல்லாத போதுதான், மன அழுத்தங்களும், வீணான பிரச்சனைகளும், மன அழுத்தங்கள் மிகும் போது தான் யாராவது தன்னோடு பேசி தன் மன அழுத்தத்தை குறைக்கமாட்டார்களா என்ற நிலை உறுவாகும் இயலாத போது தற்கொலைகளும் தண்டவாளங்களும்
முடிவாகின்றன.
புரிந்துக்கொள்ளுங்கள், விட்டுக்கொடுங்கள், ஒன்றுபடுங்கள்
வாழ்க வளமுடன்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: யாரணங் குற்றனை கடலே
அழகாககச் சொன்னீர்கள் நண்பா..
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: யாரணங் குற்றனை கடலே
இல்லறம் இனிய நல்லறம் ஆக சொல்லறம் காட்டிச்சென்றவர்கள் நம் சங்கச்சான்றோர்கள் என்பதை தங்கள் எழுத்தறம் காட்டியுள்ளது.. தொடர்ந்து சங்கத்தமிழை எங்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டு இருப்பதற்கு..மிக்க நன்றி குணா ...
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: யாரணங் குற்றனை கடலே
மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது ஆதிரா..
இயந்திர உலகில் இலக்கியம் ரசிப்பவர்கள் விந்தை மனிதர்களெனச் சொல்கிறது ஒருமனது..
இல்லை அவர்கள் தான் வாழ்க்கை வாழத்தெரிந்தவர்கள் என்கிறது இன்னொரு மனது?
இயந்திர உலகில் இலக்கியம் ரசிப்பவர்கள் விந்தை மனிதர்களெனச் சொல்கிறது ஒருமனது..
இல்லை அவர்கள் தான் வாழ்க்கை வாழத்தெரிந்தவர்கள் என்கிறது இன்னொரு மனது?
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: யாரணங் குற்றனை கடலே
***இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..
இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….
இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனத்தோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.***
உண்மைதான்.
நல்ல செய்திகளைத் தந்ததற்கு நன்றி.
இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….
இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனத்தோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.***
உண்மைதான்.
நல்ல செய்திகளைத் தந்ததற்கு நன்றி.
குணமதி- மல்லிகை
- Posts : 91
Points : 145
Join date : 22/06/2010
Re: யாரணங் குற்றனை கடலே
கருத்துரைக்கு நன்றி குணமதி.
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|