தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் சுவாச காற்றே... (புவனா)

2 posters

Go down

என் சுவாச காற்றே... (புவனா)  Empty என் சுவாச காற்றே... (புவனா)

Post by udhayam72 Thu May 09, 2013 8:47 pm

என் சுவாச காற்றே... (புவனா)




"ஏய் வேண்டாம்டா, என்னை கொலைகாரி ஆக்காதே"

"போடி இவளே...நீ கொல்ற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா?"

"கடைசியா சொல்றேன், பேசாம போய்டு"

"நானும் கடைசியா கேக்கறேன், இல்ல இல்ல கடைசியா warn பண்றேன், ஒழுங்கா ஒத்துக்கோ"

"போடா..." (sensored)

"போடி..." (sensored)

"ஏன் இப்படி ரெண்டு பேரும் அடிச்சுகறீங்க? என்ன பிரச்சனை இப்ப புதுசா?"

"பாட்டி இதுல நீ தலை இடாதே"

"ரகு, சின்ன பொண்ணுடா மதி, நீ கொஞ்சம் விட்டு குடுத்தா என்ன?"

"பாட்டின்னா பாட்டி தான், என் செல்ல பாட்டி" என்று கழுத்தை கட்டி கொண்டாள் மதி

"பாட்டி என்ன பிரச்சனைனே தெரியாம நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற. உன் மகளோட மக, இந்த அரை லூசு பேத்தி தான் உனக்கு முக்கியமா? உன் ஒரே மகனோட ஒரே மகன். உன்னோட மொதல் பேரன், நான் முக்கியமில்லையா?"

"டேய்...லூசு கீசுனா மண்டைய ஒடைச்சுடுவேன்"

"கொஞ்சம் சும்மா இரு மதி குட்டி. ரகு, பிரச்சனை என்னனு சொன்னா தான தெரியும்"

"பாட்டி என்னோட friends இந்த வாரம் நம்ம வீட்டுக்கு stay பண்ண வராங்க. சனிக்கிழமை ஒரு நாள் இவளோட ரூம் பெருசா இருக்கே அதை குடுன்னு கேட்டா என்னமோ சொத்தையே கேட்ட மாதிரி பிகு பண்றா"

"என்னடா ரகு, வயசு பொண்ணு இருக்கற வீட்டுல பசங்க வந்து தங்கினா பாக்கறவங்க நாலு விதமா பேச மாட்டாங்களா?"

"நீ யாரை சொல்ற? இந்த கொரங்கு மூஞ்சியவா? இதை யாரு பாட்டி பாக்க போறா"

"ரகு நீ ஓவரா பேசற, பாட்டி என்னை இப்படி எல்லாம் பேசறத நீ வேடிக்கை பாக்கற இல்ல, நான் எங்க அம்மா அப்பா கிட்டே போறேன்"

"அப்பாடா நிம்மதி, போய் தொல. ஆனா ஒரே நாளுல திருப்பி அனுப்பிடுவாங்க"

"ஐயோ ரகு கொஞ்சம் பேசாம இரேன்டா. மதிம்மா, ஒரு நாள் தானே விட்டு குடு தங்கம்"

"முடியாது முடியாது முடியாது"

"நீ என்னடி எனக்கு விட்டு குடுக்கறது. இது எங்க தாத்தா வீடு. இந்த வீட்டுக்கு ஒரே பேரன் நான். நான் போடினா நீ போகத்தான் வேணும்"

"நீ மட்டும் தான் வாரிசா. நானும் தான். எங்க அம்மா பிறந்த வீடு இது. உங்க அம்மாவ மாதிரி ஒண்ணும் சொத்துக்கு ஆசைபடற புத்தி எங்களுக்கு இல்ல. ஆனா இருக்கற உரிமைய விட்டு தர மாட்டேன்"

"எங்க அம்மாவ பத்தி பேசினா நாக்க அறுத்துடுவேன்"

"ஐயோ மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா? மதி, எனக்காக இந்த பாட்டிக்காக ஒத்துக்க மாட்டியா. வீட்டுக்கு வர்றவங்களுக்கு நல்ல வசதி செஞ்சு தரணும் இல்லையா. என் செல்லம் இல்ல"

"நீ கெஞ்சற ஒரே காரணத்துக்காக ஒத்துக்கறேன் பாட்டி. ஆனா என்னோட ரூம் கிளீனா இருக்கணும். இல்லைனா நீ தான் பொறுப்பு"

"சரி சரி போய் அவங்க அவங்க வேலைய பாருங்க"

ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு சென்றனர்

பெற்றோர்கள் வேலை நிமித்தம் வேறு ஊரில் இருக்க, பாட்டியுடன் வாழும் இவர்களுக்குள் ஏன் இந்த ஒற்றுமையின்மை?


கண்டதும் வருவது
கந்தர்வ காதல்...
மோதலில் தொடங்கி
மோகத்தில் முடிவது
சினிமா காதல்...
ஆதிஅந்தம் அறியாமல்
ஆகாசமாய் உயர்ந்துநிற்பது
அன்பே - நம் காதல்...


அத்தை மகள் மாமன் மகன் என்றால் ஜாலி கலாட்டா இல்லாமல் பாம்பும் கீரியுமாய் இருக்க காரணம் என்ன? அதுக்கு ஒரு பயங்கரமான flashback இருக்கு....அது என்னன்னா...

Transfer ஆகற அரசு வேலைல அப்பாக்கள் இருக்கறதால காலேஜ் சேந்ததும் ரகுவும் மதியும் பாட்டியிடம் சேர்ந்தனர். கணவரை இழந்து தனியாய் இருந்த பாட்டிக்கு சிறந்த துணையாகவும் இருந்தனர். ரகு இன்ஜினியரிங் மூன்றாம் வருடமும் மதி BBM முதல் வருடமும் படித்து வந்தனர்

ரகுவின் அப்பா ராம்குமாரும் மதியின் தாய் ரஞ்சனியும் பாசமான அண்ணன் தங்கை. ஆனால் ரஞ்சனி அண்ணனின் திருமணத்திற்கு பின்னும் அண்ணனிடம் அதே உரிமையும் எதிர்பார்ப்பும் கொண்டது தான் பிரச்சனையின் ஆணி வேர்

பல சமயங்களில் தன் பெற்றோர் அத்தையின் பொருட்டு சண்டை இடுவதை பார்த்த ரகு அந்த கோபத்தை மதியின் மேல் காட்டி வந்தான். அதே போல் தன் உரிமையை ரகுவின் அம்மா தட்டி பறிப்பதாய் பல முறை கண்ணீர் சிந்தும் அன்னையை கண்டு அந்த கோபத்தை ரகுவிடம் தீர்த்து கொள்வாள் மதி

ஆனா இப்படியே மொறைச்சுட்டு இருப்பாங்களான்னு guarantee இல்ல. என்ன வேணா நடக்கலாம்...

************

சனிக்கிழமை நண்பர்கள் புழாம் சூழ ரகு மகிழ்ச்சியில் இருந்தான்

"வாவ் உங்க வீடு சூப்பர்ஆ இருக்கு ரகு"

"தேங்க்ஸ் மகேஷ். என்ன சாப்பிடறீங்க எல்லாரும்?"

"ரகு இந்தாப்பா...எல்லாருக்கும் ஜூஸ் எடுத்து குடு" என்றபடி பாட்டி வந்தாள்

"தேங்க்ஸ் பாட்டி" என்றனர் எல்லோரும்

"மதிம்மா நீயும் கொஞ்சம் ஜூஸ் சாப்பிடு வா"

"எனக்கு வேண்டாம்" உள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்

"யாரு அது" என்று கேட்ட மகேஷிடம்

"அவ என் பேத்தி, ரகுவோட அத்தை பொண்ணு"

மதி வெளியே வந்தால் நண்பர்கள் முன் ஏதேனும் வம்பு செய்வாளோ என "பாட்டி நாங்க தோட்டத்துக்குள்ள போயிட்டு வரோம்"

"வெயில் நேரம் ஆய்டுச்சு ரகு. சாபிட்டுட்டு வெயில் தாழ போலாமே"

"இல்ல பாட்டி. இப்ப தான ஜூஸ் குடிச்சோம். கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறோம். ஒரு சின்ன ரவுண்டு போயிட்டு வரோம்" என்றபடி ரகு நண்பர்களுடன் நழுவினான்

தோட்டத்திற்குள் நடக்க தொடங்கியதும் "டேய் ஆனந்த். பாத்தியாடா இந்த ரகுவ. வீட்டுலையே ஒரு மொற பொண்ணு. இது வரைக்கும் மூச்சு விட்டு இருக்கானா?" என்று மகேஷ் வார

ரகு: "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கும் அவளுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். அதான் சொல்லல"

ஆனந்த்: "அட அட...இதை நாங்க நம்பணுமா?"

மகேஷ்: "ஆகாத அத்தை மகளை கொஞ்சம் எங்களுக்கு introduce பண்ணினா நாங்களாச்சும்...." முடிக்கும் முன்

"டேய்...மகேஷ் என்ன ஒளர்ற" என்றான் ரகு நிஜமான கோவக்குரலில்

மகேஷ்: "ரகு டென்ஷன் ஆகாதடா. சும்மா ஜோக் பண்ணினேன். ஏழாம் பொருத்தமாம். சும்மா ஒரு பேச்சுக்கு இப்படி கோவம் வருது...ம்...நம்பிட்டோம்...நம்பிட்டோம்"

"ஓஹோ" என்று நண்பர்கள் கலாய்க்க, தனக்கு ஏன் இப்படி கோவம் வந்தது என புரியாமல் திகைத்தான் ரகு

"என்ன சார் அதுக்குள்ள டூயட்ஆ" மகேஷ் கேட்க

"ச்சே...அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவ என் cousin thats it " என்றான் ரகு

"ஒகே ஒகே...." என்றனர் கோரசாக

திரும்பி வந்த போது மதி வாசல் திண்ணையில் இருந்தாள். பாட்டி அவள் தலைக்கு சம்பராணி புகை போட்டு கொண்டு இருந்தாள்

அவள் நிறத்திற்கேற்ற சிவப்பு சல்வாரில் காற்றில் கூந்தல் பறக்க தேவதை போல் இருந்தாள்

அனைவரிடமும் பொதுவாக "ஹாய்" என்றாள்

மகேஷ்: "நீங்க தான் ஜூஸ் குடிக்க கூப்டப்ப வெளிய வராததா?"

மதி: "சாரி, கொஞ்சம் தலை வலியா இருந்தது. அதான்"

மகேஷ்: "இட்ஸ் ஒகே. இப்ப தலை வலி பரவால்லையா?"

மதி: "ம்..இப்ப ஒகே" என்று சிரித்தபடி கூறியவள் தன்னை யாரோ உற்று நோக்குவதாய் தோன்ற அந்த திசையை பார்க்க ரகுவின் கோப பார்வைக்கான அர்த்தம் புரியாமல் விழித்தாள்

எப்பொதும் சண்டை இடும் போது பார்க்கும் கோப பார்வைக்கும் இந்த பார்வைக்கும் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். ஆனால் அது என்னவென புரியவில்லை அவளுக்கு

"சரி எல்லாரும் சாப்பிடலாம் வாங்க" என்று பாட்டி அழைத்தார்

மதி இலை போட்டு தண்ணீர் வைத்தாள். அனைவரும் அமர "மதி, நீயும் உக்காரு. நான் போடறேன்" என்று பாட்டி கூற

"இல்ல பாட்டி நான் வெக்கறேன். நீங்க உக்காருங்க"

என்ன இவ இன்னிக்கி இப்படி சீன் போடறா ஒரு நாளாவது எனக்கு ஒரு டம்ளர் தண்ணி குடுத்து இருப்பாளா, இன்னிக்கி எவன் எவனுக்கோ சாப்பாடு போடறா என்று யோசனையாய் ஏறிட்டான் ரகு

ச்சே என்னோட friends ஐ நானே அப்படி நெனைக்க கூடாது என்று சமாதானம் செய்து கொண்டான்

"எல்லாமே ரெம்ப நல்லா இருக்கு பாட்டி. அல்வா தான் சூப்பர்" என்றான் மகேஷ்

"அல்வா மதி செஞ்சது தம்பி. எங்க மதி ரெம்ப நல்லா சமையல் செய்வா" என்று பாட்டி பெருமை பேச "ரெம்ப அவசியம்" என்று மனதிற்குள் புழுங்கினான் ரகு

"வாவ்...நான் எதிர்பாக்கவே இல்ல மதி. நீங்க சமையல் கூட செய்வீங்களா?"

"ஏதோ சுமாரா செய்வேன்"

"இது சுமாரா...சூப்பர்ங்க...இந்த அல்வாவுக்கே சொத்தை எழுதி வெக்கலாம்" என்று மகேஷ் புகழ ரகு இடத்தை விட்டு அகன்றான்

கலாட்டாவில் அவன் எழுந்து சென்றதை கூட யாரும் கவனிக்காதது அவனை மேலும் வருத்தியது

ஆனால் அவன் எழுந்து சென்றதை கண்டு ஒரு உள்ளம் சிரிப்பாய் சிரித்தது. அது வேறு யாரும் அல்ல. ரகுவின் அத்தை பெற்ற ரத்தினம் மதி தான்


செல்லமே...
என் இதயத்தை சிதைப்பதில்
என்ன மகிழ்ச்சி உனக்கு...
என்னுள் இருப்பதுஉனது இதயமேஎன
எப்போது நீ உணரப்போகிறாய்...

என்னை நீ கோபித்தபோது
என்னவளின் உரிமைஎன மகிழ்ந்தேன்
இன்னொருவனுடன் நீ சிரித்தபோதோ
இதயம் வலிக்க அழுதேன்...
இன்னொருவனின் காதலியாய் உன்னை
கற்பனைகூட இயலவில்லை எனக்கு
கொலையும் செய்வாள் பத்தினி என்பதை
கொஞ்சமும் நம்பியதில்லை
இன்று நீ என் இதயத்தை கொல்லும்வரை...

சிறுவயது முதலே மதிக்கு பிடிக்காததை ரகுவும் ரகுவுக்கு பிடிக்காததை மதியும் செய்து வெறுப்பேற்றுவது அவர்களின் விளையாட்டு பொழுதுபோக்கு. அதையே தான் இப்போது மதி செய்தாள், அதனால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்...

மகேஷ்: "என்னடா ரகு. அதுக்குள்ள சாப்டாச்சா? நீ எந்திரிச்சு வந்ததையே நான் பாக்கல?"

ரகு: (மனதிற்குள்) உனக்கு அவளத்தவிர எதுவும் தான் இப்ப கண்ணு தெரியறது இல்லையே

மகேஷ்: "என்னடா ரகு நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேன்கற"

ரகு: "கொஞ்சம் தலைவலியா இருக்கு மகேஷ், வேற ஒண்ணும் இல்ல" என்று சமாளித்தான்

"யாருப்பா வெத்தல போடறீங்க" என்றபடி பாட்டி வந்தார்

"இல்ல பாட்டி நீங்க போடுங்க" என்றான் மகேஷ்

"கடைல பீடானு வித்தா போடுவீங்க. இந்த கெழவி குடுத்தா புடிக்குமா உங்களுக்கு"

"அப்படி இல்ல பாட்டி''

"மகேஷ், எங்க பாட்டி வெத்தல இடிச்சு குடுத்தா சூப்பர்ஆ இருக்கும்" ரகுவின் வெளிறிய முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தும் பார்காதவளாய் மதி சொல்ல

"மதி சொன்னா சரியாதான் இருக்கும் குடுங்க பாட்டி" என்று மகேஷ் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற

அதற்கு மேல் தாங்க இயலாதவனாய் "ரெம்ப தலை வலிக்குது. நான் மாத்திரை போட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கறேன்டா. நீங்களும் ரெஸ்ட் எடுங்க" என்றான் ரகு

"சரிடா நீ ரெஸ்ட் எடு நாங்க அப்படியே தோட்டத்துக்குள்ள ஒரு சுத்தி சுத்திட்டு வரோம் " என்றனர் நண்பர்கள்

"ரகு கண்ணு நீ சரியா சாப்ட்ட மாதிரியும் தெரியல. கொஞ்சம் சூடா ரசம் சாதம் கரைச்சு தரவா?" என்று பாட்டி கேட்க

"இல்ல பாட்டி கொஞ்ச நேரம் கண்ண மூடி படுத்தா சரி ஆய்டும்" என்றான் ரகு

மதி வேண்டும் என்றே ரகுவின் பார்வையை தவிர்த்து கண்ணாமூச்சி ஆடினாள்

-------------

மதியின் சிரிப்பு சத்தம் கேட்டு கண் விழித்த ரகு சுவர் கடிகாரத்தை பார்த்து "அடடா ரெண்டு மணி நேரமா தூங்கினேன்" என தனக்கு தானே கூறியபடி எழுந்தான். அதற்குள் மகேஷின் பேச்சும் மதியின் தொடர்ந்த சிரிப்பும் பொய்யாய் சொன்ன தலைவலி நிஜமாய் வரும்போல் தோன்றியது

அறை வாயிலில் தயங்கி நின்றவனை கண்டும் காணாதது போல் மதி உரையாடி கொண்டு இருந்தாள். மகேஷும் மற்ற நண்பர்களும் பாட்டியும் கூட மதிக்கு எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்ததால் பத்தடி தொலைவில் அறை வாயிலில் நின்ற ரகுவை கவனிக்கவில்லை

"மதி உன்னோட fullname மதி தானா" என்று மகேஷ் கேட்க

"ஆமா தம்பி. எங்க மதி பெறந்தப்ப நிலா கணக்கா அத்தன அழகா இருப்பா. அவங்க அப்பா தான் மதின்னா நிலான்னு அர்த்தம்னு இந்த பேரு வெச்சாரு" என்று பாட்டி தன் மருமகனின் பெருமை பேச

"பாட்டி மதின்னா மலையாளத்துல அறிவுனு கூட ஒரு அர்த்தம் இருக்கு" என்றான் மகேஷ்

"இதோட ஏன் நிறுத்திட்ட. இன்னும் மத்த உலக பாஷை எல்லாத்துலயும் இந்த சனியன் புடிச்சவ பேருக்கு என்ன அர்த்தம்னு ஆராய்ச்சி பண்ணி phd வாங்க வேண்டியது தான" என்று ரகுவின் மனதிற்குள் சுனாமி பொங்கியது

"மதி எங்க எல்லாருக்கும் ரகுவோட வயசு தான். எங்கள நீ வாங்க போங்கனு சொல்றது ஒரு மாதிரி இருக்கு. வா போனே சொல்லு. நான் சொல்றது சரி தானே பாட்டி" என்று உரிமையுடன் மகேஷ் சொல்ல மற்ற நண்பர்களும் ஆமோதிக்க

கூட பொறந்த பொறப்பு மாதிரி கள்ளமில்லாம பேசறாங்க நல்ல பிள்ளைக என்று நினைத்த பாட்டி "மகேஷ் சொல்றது சரி தான் மதி. ஏன் வித்தியாசமா பாக்கற" என்று பாட்டியும் கூற மதி சரி என்றாள்

ரகுவின் எரிக்கும் பார்வை மதியை அவனை மேலும் சீண்டி பார்க்கும் ஆவலை தூண்ட "மகேஷ் ஒரு விசயம் கவனிச்சயா? நம்ம ரெண்டு பேர் பேரும் ஒரே லெட்டர்ல ஆரம்பிக்குது"

"வாவ். நல்ல ஒற்றுமை இல்ல மதி" என்று மகேஷ் மகிழ

ரகு: (மனதிற்குள்) "ரெண்டு பேருக்கும் மூளையே இல்லைங்கறது கூட நல்ல ஒற்றுமை தான். அதை ஏன் விட்டீங்க" என்று பெருமினான்

இதுக்கு மேல இவங்கள பேச விட்டா சரிவராது எனத்தோன்ற தொண்டையை செருமியபடி ரகு வந்தான்

மகேஷ்: "ஹேய் ரகு. இப்ப தலைவலி எப்படிடா இருக்கு?"

ரகு: (மனதிற்குள்) "நீ கெளம்பற வர அப்படியே தான் இருக்கும்" (வெளியே) "ஓகே டா. பரவால்ல"

"காபி சாப்பிடறயா ரகு, நாங்க எல்லாம் சாப்டாச்சு" என்று பாட்டி கேட்க

மதி: "நீ இரு பாட்டி நான் காபி போடறேன்" என்று நழுவ இதுதான் சமயமென அவளை தொடர்ந்தான் ரகு

ரகு: "மதி என்ன நெனைச்சுட்டு இருக்க?" என்றான் அடிக்குரலில்

மதி: "என்ன?" என்றாள் வேண்டுமென்றே சத்தமாக

ரகு: "கத்தாதே, மெதுவா பேசு"

மதி: "இப்ப என்ன வேணும் உனக்கு?" என்றாள் ஒன்றும் தெரியாதது போல்

ரகு: "எதுக்கு இப்படி லொடலொடன்னு எல்லாரோடவும் பேசற"

மதி: "நான் எப்பவும் போல் தான் இருக்கேன். உனக்கு தான் என்னமோ கெளம்பிருச்சு" என முதுகு காட்டி நின்றாள்

ஆவேசத்துடன் அவளை தன் புறம் திருப்பினான். இதுவரை எத்தனையோ முறை அடித்து கொண்டபோது இருந்த தொடுகை போல் இல்லாமல் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள்

என்னவாயிற்று இவனுக்கு என்று அவன் கண்ணை நோக்கியவள் ஒரு கணம் பேச்சிழந்தாள்

ரகுவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவள் நெஞ்சை உலுக்குவது போல் தோன்றியது


இந்த அவஸ்தையின் பெயர் தான் காதல் என்றால்
ஈரேழு ஜென்மமும் எனக்கிது வேண்டும்...
இதயம் பிசையும் இந்த வலி
இன்னும் வேண்டுமென தோன்றுவதேன்...
இந்த நிமிடமே மரணித்தாலும் சரியென
இதுஎன்ன கொடுமையான தோணல்...
இன்றே புதியதாய் பிறந்து போல் உணர்வு
இதை எப்படி உணர்த்துவேன் உனக்கு - கண்மணி
சேயாய் தவிக்கும் எனக்கு
உன்தாய் மடி தருவாயா?...

மருண்ட பார்வையுடன் இத்தனை நெருக்கத்தில் அவளை கண்டவுடன் காலை முதல் தனக்குள் இருந்தது வெறும் கோபம் அல்ல என்பதை அவன் மனம் உணர்ந்தது. மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த ஒரு புதிய உணர்வில் தத்தளித்தான்...

ரகுவின் இந்த புதிய பார்வையின் அர்த்தம் விளங்காமல் அவன் பிடியில் இருந்து திமிறினாள் மதி

அவளை விட்டுவிட மனம் இன்றி "மதி ப்ளீஸ் கோபப்படாம சொல்றத கேளு"

"முடியாது நான் சொல்றத நீ எப்பவாச்சும் கேட்டு இருக்கயா?"

தன்னை அவள் உணரவில்லையே என்ற ஆதங்கம் கோபமாய் மாற "மதி...." என்று பிடியை இறுக்கினான்

அதை ரகுவின் வழக்கமான கோபம் என நினைத்து "விட்றா...இல்லேன்னா பாட்டிய கூப்பிடுவேன்" என்றபடி "பாட்டி...." என்று சத்தமாக அழைத்தாள்

"டேய் ரகு. என்னடா அவளோட வம்பு" என பாட்டி கேட்டுகொண்டே சமையல் அறைக்கு வர அவளை பிடித்து இருந்த கை விட்டு விலகி நின்றான்

"ஒண்ணும் இல்ல பாட்டி. சக்கர கொஞ்சம் extra போடசொன்னா சண்டைக்கு வர்றா" என சமாளித்தான்

"என்ன மதிம்மா இது?" என்ற பாட்டியிடம்

"இல்ல பாட்டி...அவன் தான்...'' அவள் முடிக்கும் முன் பாட்டிக்கு பின் நின்றபடி ஆட்காட்டி விரல் உயர்த்தி கோப பார்வையால் அடக்கினான் அவளை. அவளும் ஏனோ மௌனம் காத்தாள்

"சரி விடு...ரகு மகேஷ் தம்பிகிட்ட நம்ம கோவில் பத்தி சொல்லிட்டு இருந்தேன், பாக்கணும்னுச்சு. காப்பிய குடிச்சுட்டு இருட்டறதுக்குள்ள வெரசா போயிட்டு வாங்க"

"சரி பாட்டி" என்று ரகு முடிக்கும் முன்

"நானும் போறேன் பாட்டி" என்று வேண்டுமென்றே மதி கூற

"ஒரு மண்ணும் வேண்டாம். நீ வீட்லயே இரு" என்று ரகு மறுக்க

"நான் வந்தா உனக்கு என்ன? பாரு பாட்டி இவன"

"கூட்டிட்டு தான் போயேண்டா. இவளுக்கு தனியாவா வண்டி கட்ற. நடந்து போறது தான"

"என் friends கூட நான் ஜாலியா இருந்தா அவளுக்கு பொறுக்காது பாட்டி. அதை கெடுக்க தான் வர்றேன்கறா" என்று ஏதேதோ சொல்லி அவளை அழைத்து செல்வதை தவிர்க்க முயன்றான்

"எல்லாம் சும்மா பாட்டி. இவன் பண்ற திருட்டுத்தனம் எல்லாம் எனக்கு தெரிஞ்சுடும்னு..." வேண்டுமென்றே ரகுவிற்கு ஏட்டிக்கு போட்டியாய் மதி பேச

"மதி நீ போய் மொகம் அலம்பி கெளம்பு. ரகு அவளையும் கூட்டிட்டு சீக்கரம் போயிட்டு வா" என்று பெரியவள் கட்டளை போல் சொல்ல அதற்கு மேல் பேச வழியற்று மௌனியானான் ரகு

"கடவுளே எப்படி தான் நாளைக்கி வரைக்கும் சாமாளிக்க போறேனோ? நைட் தங்கமாட்டோம் என்ற நண்பர்களை நிச்சியம் தங்கவேண்டும் என வற்புறுத்தி அழைத்தது தான் தானே" என மனதிற்குள் நொந்து கொண்டான் ரகு

"இந்த மதி ஏன் இப்படி நடந்துக்கறா? ச்சே சித்ரவதையா இருக்கு" என மேலும் குழம்பினான்

---------------

ரகுவிற்கு இந்த புதிய உணர்வு முழுதாய் புரிபடவில்லை என்றே சொல்லலாம். புதியதாய் காணும் பெண் என்றால் மனமாற்றத்தை உணர்வது எளிதாக இருக்கும். குழந்தை பருவம் முதல் ஓடி விளையாடிய உறவில் உண்டான மாற்றத்தை இனம் காண முடியாமல் தவித்தான்

மதிக்கும் ரகுவின் மனமாற்றம் புரியவில்லை. தான் அவன் நண்பர்களுடன் பேசினால் ரகுவை பற்றிய ரகசியங்களை மதி அறிந்து கொள்வாள் என அவன் கோபப்படுவதாய் எண்ணினாள்

கோவிலுக்கு என்பதால் அழகிய பாவாடை தாவணியில் தேவதையாய் நின்ற மதியை கண்டதும் மனதில் இருந்த கோபம் எல்லாம் பனியாய் உருக முகம் மலர்ந்தான் ரகு

அதற்குள் அங்கு வந்த மகேஷ் "சூப்பர் மதி. மகாலட்சுமி மாதிரி மகாலட்சுமி மாதிரின்னு சொல்லி கேட்டு இருக்கேன். இப்ப தான் நேர்ல பாக்கறேன்" எனவும் மலர்ந்த ரகுவின் முகம் கோபத்தில் சிவந்தது

"தேங்க்ஸ் மகேஷ். சில ரசனை கெட்ட ஜென்மங்க நான் தாவணி போட்டா பட்டிகாடுனு சொல்லும்" ரகு முன்பொருமுறை தன்னை கேலி செய்ததை மறைமுகமாய் சொல்லி காட்டினாள் மதி

"நோ நோ...நெஜமாவே உனக்கு ரெம்ப நல்லா இருக்கு" மகேஷ் சொல்லி முடிக்கும் முன்

"சரி போலாம் டைம் ஆச்சு" என்றான் ரகு

எப்படியோ ஒரு யுகமாய் ஒரு நாளை நகர்த்தினான் ரகு. நண்பர்கள் புறப்பட்டதும் தான் மனம் நிம்மதியானது. மகேஷ் விடைபெற்றபோது மதியின் வாடிய முகம் வேறு குழப்பியது
அடுத்து வந்த ஒரு வாரம் மதியின் பெற்றோர் வரவு அவளை தனியே காணும் வாய்ப்பே இல்லாமல் போனது ரகுவிற்கு. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் மட்டுமே உடன் இருக்கும் பெற்றோரை விட்டு ஒரு கணமும் விலக மாட்டாள் மதி

ஒரு வாரம் காத்திருந்து அவளுடன் தனியே பேசும் வாய்ப்பு அன்று

பாட்டி தோட்டத்தில் ஏதோ வேலையென சென்று விட்டாள்

"மதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் ரகு

"என்ன?"

"வந்து....."

"போன் அடிக்குது அதை மொதல்ல எடு. அப்புறம் வந்து போய் எல்லாம் பேசலாம்" என்றாள் கேலியாக

மற்றொரு சமயம் என்றால் சண்டை வலுத்திருக்கும். இப்போது எதுவும் பேச தோன்றாமல் தொலைபேசியை எடுத்தான்

"ஹலோ"

"....."

"ஹலோ யாரு?"

"......"

"மகேஷ் நான் அப்புறம் கூப்பிடறேன்..." அவன் சொல்லி முடிக்கும் முன்

"ஐ... மகேஷா?" என்று போன்ஐ பிடுங்கினாள்

"ஹாய் மகேஷ் எப்படி இருக்க?"

"...."

"ம்.....நான் நல்லா இருக்கேன்"

"...."

"ம்....அந்த சிடு மூஞ்சி நல்லா தான் இருக்கு" என்றாள் இவனை பார்த்த படி. கோபத்தில் ரகுவின் முகம் சிறுத்ததை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தாள்

"ம்... சொல்லு மகேஷ் சாப்டாச்சா"

"...."

"ஒ எஸ். சாப்டேன். தோசை தக்காளி சட்னி"

"...."

"அப்படியா. அடுத்த தரம் வர்றப்ப கண்டிப்பா செஞ்சு தரேன்"

"...."

"ஹா ஹா ஹா ...." அடக்கமாட்டாமல் சிரித்தாள்

எரிச்சல் மிக "மதி போன் குடு" என்று இழுத்தான்

"விடு பேசிட்டு இருக்கேன்ல manners இல்லையா?"

"மதி...ஒழுங்கா குடு...." பிடுங்கி இழுத்து "மகேஷ் நான் அப்புறம் பேசறேன்" என்று பதிலை கூட எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான்

"டேய் உனக்கு கொஞ்சமாவாது மூளை இருக்கா. பேசிக்கிட்டு இருக்கறப்ப வாங்கி கட் பண்ற"

"பேசினது போதுணும்னு தான்"

"நான் பேசினா உனக்கு என்ன"

"எதுக்கு அப்படி ஊருக்கே கேக்கற மாதிரி சிரிச்சு பேசற"

"உனக்கு என்ன?"

"மதி என் கோவத்த கிளப்பாதே"

"உனக்கு தான் கோவம் வருமா எனக்கு வராதா"

"மதி...கொஞ்சம் பொறுமையா கேளு"

"எதுக்கு இப்ப போன் கட் பண்ணின. அதை மொதல்ல சொல்லு"

"நீ பொண்ணா லச்சணமா இல்லாம அவன் கூட அப்படி பேசறது எனக்கு புடிக்கல போதுமா?"

"அப்ப....அப்ப...நீ என்ன சந்தேக படற. அப்படி தான"

"மதி...ப்ளீஸ்...நான் சொல்றத கொஞ்சம்"

"நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லு. என்மேல சந்தேக படறயா?" அவள் பிடிவாதம் ஆத்திரமூட்ட

"ஆமா அப்படி தான்" ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டினான்

"அப்படிதாண்டா பேசுவேன்...அதை கேக்க நீ யாரு"

"நான் யாரா?" கோபத்தில் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்றே உணராமல் தான் உயிராய் நினைப்பவள் தன்னை யார் என்று கேட்டதை தாங்கமாட்டாமல் அவள் கன்னத்தில் விரல் பதிய அறைந்தான்

ஒரு கணம் தான், மதியின் கலங்கிய கண்கள் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது

தன் தவறை உணர்ந்து "மதி..."என்று சமாதானம் செய்ய முயல

வலி கோபம் வருத்தம் எல்லாம் ஒன்று சேர "போதும்...நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இந்த ஜென்மத்துல என்கூட பேசாத"

"மதிம்மா...ப்ளீஸ்" கண்ணீர் வழிய அவள் நின்றதை காண இயலாமல் மார்போடு அணைக்க விழைய

"என்ன தொடாத....I hate you ... I just hate you ..." பேச்சிழந்து அவன் நிற்க கதறியவளாய் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள். எத்தனை கெஞ்சியும் பேச மறுத்தாள்

ரகுவிற்கு அன்று இரவு ஒரு நிமிடம் கூட கண்மூட இயலவில்லை. மதியின் கலங்கிய முகமே கண்முன் வந்து சித்ரவதை செய்தது

இதற்கு முன் எத்தனையோ முறை இருவரும் சண்டை இடும் போது அவன் அவளை அடித்ததுண்டு. அவளும் திருப்பி அடிப்பாள். சில சமயம் அழுதும் இருக்கிறாள். கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடுவாள்

ஆனால் இன்று அவள் கலங்கிய கண்களுடன் தான் அவளை சந்தேகம் கொண்டதை தாங்க இயலாமல் கதறிய காட்சி நெஞ்சை அறுப்பதாய் இருந்தது

தன்னை தானே மன்னிக்க இயலாமல் தவித்தான். ஆனால் இந்த நிகழ்வு அவள் மேல் தான் கொண்ட காதலை அவனுக்கு தெளிவாய் உணர்த்தியது. அவள் இல்லாத ஒரு வாழ்வு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தான்...


கண்மணி...
இத்தனை சக்தியா உன் கண்ணீருக்கு
இதயத்தையே சுக்குநூறாக்கி விட்டதே
இன்னொரு முறை கலங்கிவிடாதே
இழக்க இன்னோர் இதயம் இல்லை என்னிடம்
மன்னித்துவிடு கண்ணம்மா
மனதார பொய் சொன்னதற்கு
இன்னோர் இதயம் இருக்கிறது
இழக்கத்தான் மனமில்லை எனக்கு
இது உன்னிடமிருந்து திருடியது என்பதால்...


"மதி..."

"...."

"மதி ப்ளீஸ்...சாரி மதி. நான் வேணும்னு அடிக்கல...நீ அப்படி பேசினது தாங்காம தான். சாரிமா ப்ளீஸ் மதி. இப்படி பேசாம இருக்காத ப்ளீஸ். கஷ்டமா இருக்குடா ப்ளீஸ். வேணும்னா நீயும் கோபம் தீர என்னை அடிச்சுக்கோ"

"...."

"மதிம்மா ப்ளீஸ். ஒரு வாரமா என்னால தூங்கவே முடியல. நீ அழுத முகமா நின்னது தான் கண்முன்னாடி வருது. நீ ஒரு வாரம் பேசாம இருக்கறது ஒரு யுகமா இருக்கு மதி ப்ளீஸ் ப்ளீஸ் மா"

"...." அவன் பேச்சே காதில் விழாதது போல் ஏதோ புத்தகத்தை படித்து கொண்டு இருந்தாள்

"மதி....." பொறுமை இழந்தவனாய் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்களால் கைது செய்ய முயன்றான்

மனம் கவர்ந்தவளின் நெருப்பு பார்வையை தாங்க இயலாமல் கரைந்தான்

"ப்ளீஸ் குட்டிமா...நீ என்ன சொன்னாலும் கேக்கறேன். இப்படி யாரோ மாதிரி முகம் திருப்பாத"

"...." எப்பொழுதும் சண்டைக்கி வரும் ரகுவின் இந்த கொஞ்சலும் கெஞ்சலும் மனதை வருத்தினாலும் தன்னை எப்படி அவன் சந்தேகிக்கலாம் என்பதே நெஞ்சை நெரித்தது. எதுவும் பேசாமல் அவன் கை விலக்கினாள்

"மதி இங்க பாரு....மதி இப்படி பிடிவாதம் செஞ்சா எப்படிடா. நான் என்ன செஞ்சா உன் கோவம் கொறயும்னு சொல்லு"

"நீ என்ன செஞ்சாலும் என்மேல சந்தேகப்பட்டது இல்லைனு ஆய்டுமா?" ஒரு வாரத்திற்கு பின் பேசிய முதல் வார்த்தை என மகிழ்ந்தான்

"இல்ல மது...அது...சந்தேகம்னு இல்ல...நீ என்னை புரிஞ்சுகலைன்னு தான்..."

"உன்ன என்ன புரிஞ்சுக்கணும் நான்..."

மண்டையில் அடித்தது போல் இருந்தது. ஐயோ இன்னும் தன் காதலை அவளிடம் தான் கூறவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தான்

"மதி...அதை எப்படி சொல்றதுன்னு...நான் வந்து.....அது..."

"உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல...நான் படிக்கணும்....please leave me alone . உன் தொல்ல தாங்காம தான மொட்ட மாடில வந்து படிச்சுட்டு இருக்கேன் போ இங்க இருந்து"

"மதி ப்ளீஸ் இப்படி கோபபட்டா நான் எப்படி..."

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்...இனி நீ யாரோ நான் யாரோ"

"மதி ப்ளீஸ் அப்படி சொல்லாத"

"ரகு கடைசியா சொல்றேன். நீ அப்படி பேசினத என்னால எப்பவும் மறக்க முடியாது. நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ என்ன காயபடுத்தினது மாறாது. விட்டுடு"

"விட முடியாது மதி. எனக்கு நீ வேணும்...எனக்கு காலம் பூரா நீ வேணும்"

"என்ன?"

"ஆமா மது எனக்கு நீ வேணும் குட்டிமா ப்ளீஸ். என்ன கல்யாணம் பண்ணிப்பயா?"

"...." இதை எதிர்பாராத மதி பேச்சிழந்து நின்றாள்

"மதி இப்படி எதுவும் பேசாம இருந்தா பயமா இருக்கு மது ப்ளீஸ். say something "

"வெளயாடாத ரகு"

"மது நான் சத்தியமா சொல்றேன். I love you Madhu "

"ஆனா ...ஏன்.....எப்படி...."

"இதுக்கெல்லாம் என்கிட்டே பதில் இல்ல கண்ணம்மா. ஆனா நீ எனக்கு வேணும்"

"இப்படி திடீர்னு..."

"நான் உண்மைய தெளிவா சொல்லிடறேன் மதி. ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் என் மனசுல இந்த எண்ணம் எதுவும் இல்லைன்னு சொன்னா நம்பறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்"

"குழப்பற ரகு" என்றாள் நிஜமான குழப்பத்துடன்

"இல்ல...எனக்கு எந்த குழப்பமும் இப்ப இல்ல. நீ மகேஷ் கிட்ட closeஆ பேசினத என்னால ஏத்துக்க முடியல. நீ எனக்கு சொந்தமானவனு உணர்ந்த தருணம் அது. எனக்குள்ள இருந்த possessiveness அப்பத்தான் வெளிபட்டதுனு நெனைக்கிறேன்"

"அதான் சந்தேகபட்டயா?" இதை இப்போது சொல்லும் போது கூட அவள் குரல் தழுதழுத்தது. அவனால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை

அவள் சம்மதத்திற்கு காத்திருக்கும் பொறுமை கூட அற்றவனாய் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்

அவளும் மறுக்காமல் பேசாமல் ஒட்டி நின்றாள். ஏதோ எல்லா கவலையும் பஞ்சாய் பறந்து மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில இருப்பதாய் உணர்ந்தாள். இது தான் காதல் என்பதா என்ற பாடல் மின்னலாய் மனதில் தோன்றி மறைந்தது. ஆனாலும் அவன் சந்தேகித்தது முள்ளாய் உறுத்தியது. சிறிது சிறிதாய் தேம்பல் கேவலானது. அழுததும் மனம் சமாதானம் அடைந்தது போல் இருந்தது


"ப்ளீஸ் baby . அழாத ராஜாத்தி. என் செல்லம் இல்ல, ப்ளீஸ்"

"என்னால தாங்க முடியல....எப்படி நீ...என்ன...அதுவும் மகேஷ் கூட...அவன் எனக்கு அண்ணன் மாதிரி. அவன் கூட ஒரு தடவை சொன்னான். எனக்கு உன்ன மாதிரி ஒரு சிஸ்டர் இருந்தா வீட்டுல செம ஜாலியா இருக்கும்னு"

"மது அப்போ அதை புரிஞ்சுக்கற பொறுமை எனக்கு இருக்கலடா. ஏன் நீ அவன் கூட பேசறது எனக்கு கோவம் வருதுனு புரியாம குழப்பம். என் மனசுல நீ இருகேங்கரத உணர முடியாம ரெம்ப தவிச்சுட்டேன் மது"

"இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"என்ன..?" என்று புரியாமல் கேட்டான்

"நான் உன்மனசுல இருகேங்கறது இப்ப மட்டும் என்ன நிச்சியம்"

"இதோ இப்படி கைபிடிக்குள்ள நெஞ்சுக்கு பக்கத்துல வெச்சுட்டு இருக்கேனே உன்ன. இன்னும் நம்பலையா?"

"உம்ஹும்...."

"என்ன செஞ்சா நம்புவ சொல்லு செய்றேன்" என்றான் நிஜமான ஆதங்கத்துடன்

"எங்க அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டு கழுத்துல தாலி கட்டு அப்புறம் நம்பறேன்"

"அடிப்பாவி நீ என்ன விட fast ஆ இருக்க"

"பொண்ணுங்க எப்பவும் முடிவு பண்ணிட்டா அப்புறம் fast தான்"

"அப்படியா பசங்க எத்தனை fast னு இப்ப காட்டட்டுமா?" என்று முகத்தை நோக்கி குனிந்தான்

"ச்சே...ரெம்ப மோசம் நீ" என்றவாறே அவன் பிடியில் இருந்து விலக முயன்றாள்

"ஒகே ஒகே நான் ஒண்ணும் செய்யல. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பக்கத்துல இரு மது ப்ளீஸ்"

அதுவே தன் விருப்பமும் என்பது போல் உரிமையாய் அணைத்து நின்றாள்

"நம்ம வீட்டுல என்ன சொல்வாங்கன்னு நீ நெனைக்கற" என்றாள் யோசனையாய்

"இப்போதைக்கி கொஞ்ச நாள் எதுவும் சொல்ல வேண்டாம் மது. திருட்டுத்தனமா காதலிக்கறதுல ஒரு த்ரில் இருக்கு இல்லையா. அதை கொஞ்சம் அனுபவிக்கலாம். studies எல்லாம் முடிச்சுட்டு அப்புறம் சொல்லலாம் சரியா?"

"எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டு சும்மா பேச்சுக்கு கேக்கற இல்லையா? கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது. ஞாபகம் வெச்சுக்க" என்று செல்லமாய் மது மிரட்ட அதற்கே காத்திருந்தவன் போல்

"உத்தரவு மகாராணி" என்று தலை பணிய அங்கு ஒரு இனிய சங்கமம் உதயம் ஆகியது. இனி சுவாச காற்றுக்குக்கூட அவர்களுள் இடைவெளி இல்லை....


என் சுவாச காற்றே...
சுவாசமின்றி காற்றில்லை
காற்றின்றி சுவாசமில்லை - அதுபோல்
நீயன்றி நானில்லை
நானின்றி நீஇல்லை
நம் காதலிலே
நீ நான் பேதமில்லை....
சுவாச காற்றே....
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

என் சுவாச காற்றே... (புவனா)  Empty Re: என் சுவாச காற்றே... (புவனா)

Post by கலைநிலா Fri May 10, 2013 10:33 am

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum