தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

3 posters

Go down

சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review Empty சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by udhayam72 Mon Jul 01, 2013 12:47 am

 சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum இயக்குநர் நலன் குமரசாமி குறும்பட உலகில் ஒரு ஸ்டார் இயக்குநர். அவரது ஆரம்ப கால குறும்படங்களில் நாங்க டீம் நிஞ்சா.. இப்பதான் சினிமா கத்துக்குறோம் தப்பா எடுத்தா கண்டுக்காதீங்க என அடக்கமாய் எடுத்திருந்தாலும் அவற்றில் ஒரு தரம் இருந்தது. அந்த நலன் இப்பொது நன்றாக தன்னை தயார்படுத்திக்கொண்டு எடுக்கும் முழு நீள திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ஒரு பக்கம்.


சூது கவ்வும் படத்தில் முதல் டிசைனிலிருந்து ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் காட்சிவரை ஒவ்வொரு ஸ்டெப்பாக ஆச்சர்யத்தை கிளப்பிய கிரியேட்டிவிட்டி இன்னொரு பக்கம்.


எனவே ஒரு தரமான படத்தை எதிர்பார்த்துத்தான் சென்றேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார் நலன். இந்த அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கவில்லை.


எந்த விதத்திலும் ரிஸ்க் எடுக்காமல், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் சொகுசாய் ஆட்களை கடத்தி காசு சம்பாதிக்கும் பிஸினெஸ்மேன் விஜய் சேதுபதி. இவர் இன்னும் சில பேரை சேர்த்துக்கொண்டு கடத்தல் வேலைகளை செய்ய அதன் தொடர்ச்சியாய் இன்னொரு வேலை வர, அதை செய்யப்போய் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கரு.


கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால்
கதாபாத்திரங்களை உருவாக்கியதில் நலன் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றிக்கான பிள்ளையார் சுழியாய் இருந்திருக்கவேண்டும்.


மேலும் ஒரு திரைக்கதை எழுத்தாளராய் நலன் பின்னிப்பெடலெடுக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அழகாய் செதுக்கி, சொல்ல வேண்டியதை சொல்லி, அதை காமெடியாக்கி ரசிக்கவைத்து, அதே நேரத்தில் பர்பார்மென்ஸ்கும் ஸ்கோப் குடுத்து என எல்லா விதங்களிலும் கவனமாய் கையாண்டிருக்கிறார்.


காட்சிக்கு காட்சி எதாவது விதத்தில் சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் டாப் க்ளாஸ். கடைசி காட்சியில் அந்த அடி உதையின் உச்சகட்ட வேதனையில் இதுதான் இருட்டறையில் முரட்டுக்குத்தா என கேட்டு சிரிக்கும் காட்சி இருக்கிறதே.. தியேட்டரே அதிர்கிறது.


விஜய் சேதுபதி.. இந்த வருடத்தில் அதிகம்பேர் பொறாமைப்படக்கூடிய நடிகர். எப்படித்தான் இந்தாளுக்கு மட்டும் இப்படி மாட்டுதோ என பலர் வியத்தாலும், இனி மேல் இந்த குறும்பட இயக்குநர்கள் தான் இன்டஸ்ட்ரியை ஆட்டிவைக்கப்போகிறார்கள் என ஏதோ ஒரு விதத்தில் யூகித்து அவர்களை மதித்து, நட்பாகி, நெருக்கமாகி தன்னை உருவாக்கிகொண்ட அவரது புத்திசாலித்தனம் கலந்த எளிமைத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த தொடர் வெற்றிகள்.


இந்தப் படத்தில் தாஸ் என்ற ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் விளையாடுகிறார். ஹீரோயிசம் என்றால் கிலோ எவ்வளவு என கேக்கும் அளவுக்கு கொஞ்சம் அசட்டுத்தனமும், நேர்மையும் கலந்த ஒரு ப்ராடாய் வருகிறார். கூடவே ஒரு காதலியையும் கூட்டிக்கொண்டு அலைகிறார் பாருங்கள்… சிரிப்பு மூட்டும் வசனங்களோ அல்லது பாடி லாங்வேஜோ இல்லாமல் எல்லோரையும் சிரிக்க வைப்பது சாதாரண விசயமில்லை. சிறப்பாக எழுதப்பட்ட காட்சியும், அதை உணர்ந்து வெளிப்படுத்தும் நடிப்பும் மட்டுமே அத்தகைய ரிசல்டை கொடுக்கும்.


இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்களில் சிம்ஹா, ரமேஷ்,அசோக் மற்றும் கருணா. சிம்ஹாவின் இயல்பான வெகுளித்தனமான முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் வெகுவாய் கைகொடுக்கிறது. இவர்கள் அணைவருக்கும் இந்தப் படம் ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும்.


அதே போல முரட்டுத்தனமா போலிஸ் அதிகாரி பிரம்மா, படம் எடுக்கும் டாக்டர் ரவுடியாய் தாஸ் என எவருமே சளைக்காமல் கலக்கியிருக்கிறார்கள்.


இவர்களுக்கிடையே முரட்டுக்காட்டில் ஒரு பூங்கொத்தாய் சஞ்சிதா ஷெட்டி.. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கதாநாயகி ரோல். களையாய் கலகலப்பாய் இருக்கிறார்.


சென்னை 600028 பார்த்தபோது ஒரு ஃப்ரெஷ்ஸா இருந்த்தல்லவா.. அதே போல இந்தப் படமும் ரொம்ப ஃப்ரெஷ்ஸாக இருக்கிறது.


ஒரு நல்ல படம்னா அது இப்படித்தான் இருக்கும் என நாம் வைத்திருக்கும் ஒரு கணக்கையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிய கருத்தோ, மனதை தொடும் சம்பவங்களோ இல்லை. கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்க முடியாது. ஆனாலும் எல்லா இடத்தில் என்ஜாய் பண்ண முடியும் என மிகததிறமையாய் எழுதப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படத்தின் நிஜ ஹீரோ.


அதே போல இன்னொரு முக்கியமாய் குறிப்பிட வேண்டிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குநர் எந்த அளவுக்கு காட்சிகளில் புதுமையை கொண்டுவருகிறாரோ அதே அளவுக்கு இசையிலும் இவர் ஜமாய்க்கிறார். இவரது இசை படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை.


ஒளிப்பதிவாளர் தினேஷும் நிறைவாய் செய்திருக்கிறார் தன் பணியை.


அட்டகாசமான திரைக்கதை, அதற்கேற்ற நடிகர்களின் தேர்வு, அவர்களின் கச்சிதமான நடிப்பு.. ஒரு தேர்ந்த இயக்குநருக்கான லாவகத்துடன் இயக்கம் என படம் நம்மை அசரடிக்கிறது. இது முழுக்க முழுக்க நலன் குமரசாமியின் ஷோ. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் உடனடியாய் சேர்ந்துவிடும் அத்தனை தகுதிகளும் இவருக்கிருக்கிறது. அவருக்கும், அவரைக் கண்டெடுத்து இயக்குநராக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review Empty Re: சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 01, 2013 12:00 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review Empty Re: சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by Muthumohamed Mon Jul 08, 2013 10:06 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review Empty Re: சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum