தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிரெழுத்தில் பழமொழிகள்

3 posters

Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:14 pm

தமிழ்ப் பழமொழிகள் - அ
[*]அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
[*]அகல உழுகிறதை விட ஆழ உழு.
[*]அகல் வட்டம் பகல் மழை.
[*]அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
[*]அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
[*]அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
[*]அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
[*]அடக்கமே பெண்ணுக்கு அழகு.
[*]அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
[*]அடாது செய்தவன் படாது படுவான்.
[*]அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
[*]அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
[*]அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
[*]அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
[*]அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
[*]அந்தி மழை அழுதாலும் விடாது.
[*]அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
[*]அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
[*]அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
[*]அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
[*]அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
[*]அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
[*]அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
[*]அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
[*]அழுத பிள்ளை பால் குடிக்கும்.
[*]அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
[*]அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
[*]அறச் செட்டு முழு நட்டம் .
[*]அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
[*]அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
[*]அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
[*]அறமுறுக்கினால் அற்றும் போகும்.
[*]அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
[*]அறிய அறியக் கெடுவார் உண்டா?
[*]அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
[*]அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
[*]அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
[*]அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
[*]அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
[*]அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
[*]அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
[*]அற்ப அறிவு அல்லற் கிடம்.
[*]அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
[*]அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
[*]அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
[*]அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
[*]அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:15 pm

தமிழ்ப் பழமொழிகள் - ஆ
[*]ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
[*]ஆரால் கேடு, வாயால் கேடு.
[*]ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
[*]ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
[*]ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
[*]ஆழமறியாமல் காலை இடாதே.
[*]ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
[*]ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
[*]ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
[*]ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
[*]ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
[*]ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
[*]ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
[*]ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
[*]ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
[*]ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
[*]ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
[*]ஆனைக்கும் அடிசறுக்கும்.
[*]ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
[*]ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:16 pm

தமிழ்ப் பழமொழிகள் - இ,ஈ
[*]இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
[*]இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
[*]இஞ்சி இலாபம் மஞ்சளில்.
[*]இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
[*]இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
[*]இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
[*]இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
[*]இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
[*]இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
[*]இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
[*]இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
[*]இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
[*]இராச திசையில் கெட்டவணுமில்லை
[*]இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
[*]இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
[*]இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
[*]இருவர் நட்பு ஒருவர் பொறை.
[*]இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
[*]இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
[*]இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
[*]இளங்கன்று பயமறியாது
[*]இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
[*]இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
[*]இறங்கு பொழுதில் மருந்து குடி
[*]இறுகினால் களி , இளகினால் கூழ்.
[*]இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
[*]இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
[*]இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
[*]இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
[*]ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
[*]ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
[*]ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
[*]ஈர நாவிற்கு எலும்பில்லை.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:16 pm

தமிழ்ப் பழமொழிகள் - உ,ஊ
[*]உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
[*]உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
[*]உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
[*]உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
[*]உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
[*]உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
[*]உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
[*]உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
[*]உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
[*]உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
[*]உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
[*]உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
[*]உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
[*]உலோபிக்கு இரட்டை செலவு.
[*]உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
[*]உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
[*]உளவு இல்லாமல் களவு இல்லை.
[*]உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
[*]உள்ளது போகாது இல்லது வாராது.
[*]உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
[*]உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
[*]உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
[*]ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
[*]ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
[*]ஊண் அற்றபோது உடலற்றது.
[*]ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
[*]ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
[*]ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
[*]ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:16 pm

தமிழ்ப் பழமொழிகள் - எ,ஏ
[*]எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
[*]எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[*]எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
[*]எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
[*]எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
[*]எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
[*]எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
[*]எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
[*]எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
[*]எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
[*]எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
[*]எதார்த்தவாதி வெகுசன விரோதி.
[*]எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
[*]எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
[*]எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
[*]எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
[*]எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
[*]எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
[*]எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
[*]எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
[*]எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
[*]எலி அழுதால் பூனை விடுமா?
[*]எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
[*]எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
[*]எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
[*]எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
[*]எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:17 pm

*]எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
[*]எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
[*]எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
[*]எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
[*]எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
[*]எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
[*]எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
[*]எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
[*]எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
[*]எறும்பு ஊர கல்லுந் தேயும்.
[*]எறும்புந் தன் கையால் எண் சாண்
[*]ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
[*]ஏரி நிறைந்தால் கரை கசியும்.
[*]எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
[*]ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
[*]ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
[*]ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
[*]ஏழை என்றால் எவர்க்கும் எளிது
[*]ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
[*]ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:17 pm

தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள
[*]ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
[*]ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
[*]ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
[*]ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
[*]ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
[*]ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
[*]ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
[*]ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
[*]ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
[*]ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
[*]ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
[*]ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
[*]ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
[*]ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
[*]ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
[*]ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
[*]ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
[*]ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
[*]ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
[*]ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
[*]ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
[*]ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
[*]ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
[*]ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
[*]ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
[*]ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
[*]ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 01, 2013 7:18 pm

நன்றி [*]நன்றி [*]http://www.muthu.org/web/டமில்பழமொழிகள்
நன்றி அமர்க்களம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 02, 2013 5:15 pm

ம்... வியப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 6:15 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 03, 2013 12:29 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 03, 2013 5:17 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிரெழுத்தில் பழமொழிகள்  Empty Re: உயிரெழுத்தில் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum