தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
படித்ததில் பிடித்தது ! .நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S. நூல்:THIRUKKURAL(Pearls of inspiration) மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
2 posters
Page 1 of 1
படித்ததில் பிடித்தது ! .நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S. நூல்:THIRUKKURAL(Pearls of inspiration) மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
படித்ததில் பிடித்தது !
.நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S.
நூல்:THIRUKKURAL(Pearls of inspiration)
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
தோரண வாயில்:
தெள்ளுதமிழ்ப்பேசும் தென்பாண்டித்திருநாட்டின் நான்மாடக்கூடலில் அங்கயற்கண்ணியுடன் வீற்றிருக்கும் ஆலவாயான்அருளிய சங்கப்பலகையில், அரங்கேறிய அற நூலே திருக்குறள்.பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ?பாரிலுள்ள நூலெல்லாம்வள்ளுவர்செய் நூலாமோ?என்று வியக்கும்படி உருவானதே 'உத்திரவேதம்'- எனப்புகழப்படும் உலகின் உயிர்நூலாம்திருக்குறள்.கலம் ஏறி கடல் கடந்து வந்து திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தார் வீரமாமுனிவர் அன்று!கல்வித்துறையில்இருந்து கொண்டு,கற்கண்டினும் இனிமையாக திருக்குறளை,அகிலத்தையே ஆளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் டாக்டர்எம்.இராஜாராம் இன்று!தேனி கூடு கட்டுவதும்,சிலந்தி வலை பின்னுவதும் அரியகலை என்பார் அரும்பெரும் மூதாட்டியாம்ஔவையார்.மொழிபெயர்ப்பும் ஓர் அரிதான,அதே வேளையில் அழகான கலையே என்பதனை முனைவர் .இராஜாராமின்THIRUKKURAL(Pearls of inspiration) நூல் நிரூபணம் செய்கின்றது.பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிக்கின்றதுஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இந்நூலுக்குத் தந்திருக்கும் அணிந்துரை.
அலைகடல் தாண்டி...
தண்டமிழின் பெருமையை தரணி முழுவதும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு அகரத்தில் துவங்கி னகரத்தில் நிறைவுறும்திருக்குறள் நூலுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. No language combines greater force with equal brevity than Tamil--எனும்Rev.Percival- கூற்றும், Tamil is most highly cultivated language-- என்ற அறிஞர் Maxmuller-இன் வாசகமும் திருக்குறள் நூலுக்கு சாலவேபொருந்தும்..இத்தகைய தமிழின் சீர்மையை அலைகடல் தாண்டி கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்நூலைஉருவாக்கிய ஆசிரியருக்கு முதலில் நன்றி.
கயிற்றின் மேல் கழைக்கூத்தாடி:
படைக்கப்பட்ட கவிதை இலக்கியத்தின் மொழி,அந்த இலக்கியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழி-என இவ்விருமொழிகளுக்குரிய இலக்கண விதிகள்,மரபுத்தொடர்கள்,எழுத்து மரபு -இவை அனைத்திலும் முழுமையான தெளிவு பெற்றிருந்தால்மட்டுமே மொழிபெயர்ப்புத்துறையில் இறங்க இயலும்.மேற்கூறியத் திறம் டாக்டர் இராஜாராம் அவர்களுக்கு உள்ளதுஎன்பதைஇம்மொழிபெயர்ப்புநூல்நிரூபிக்கின்றது.இடைச்சொற்கள்(Conjunction) இழையோட,உரிச்சொற்களோ(Attributive)உறவாட,இனிமை (Rhythm)
நதியோட்டமாய்,மொழிநடை ஒயிலாட்டமாய்,பண்புநலன்களோ (Abstract Noun)குவியல்களாய்,வியப்பிடைச்சொல்லும் (Interjection),வினாச்சொல்லுமாய்(Interrogation)குறிப்பும், (Symbolic)வியங்கோளுமாய்(operativeverb)சந்தநயம்,சொல்நயம்,பொருள்நயம்-என மொத்தத்தில் ஓர் இலக்கணப்புதையலாய் இந்நூல் உள்ளது. உலகின் எந்தக்கோடியில் வசிப்பவர் வாசித்தாலும் ,கருமேகம் உடனுக்குடன் மழையைப் பொழிவதுபோல் அவரவர் தாய்மொழிக்கு தானாகவே மொழிமாற்றம் செய்துவிடும் வல்லமையை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்தந்துவிடும் என்பது உறுதி. பெயர்ச்சொல் உருபு ஏற்கும்முறை (Declensions)வினைச்சொல்உருபுஏற்கும்முறை(Conjunction) இவையெல்லாம் மொழிக்கு மொழி மாறுபடினும்,எவ்விதசொற்சிதைவும்,பொருட்சிதைவுமில்லாது எவ்வெச்சொற்களோடு எதனெதனை எங்கெங்கே எவ்வெவ்வாறு இணைக்க வேண்டும்என்பதில்
கயிற்றின் மேல் நடனம் ஆடும் கழைக்கூத்தாடி போல் கவனத்தோடு மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் டாக்டர் இராஜாராம்
அழுத்தமும் திருத்தமுமாய்..
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.(குறள்.979)
எனும் குறள்
Greatness is free from vanity
Pettings rides on vanity.
என, சொல்லும் பொருளும் பிறழாமல் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று.
What is stronger than destiny? என வினவி, பின் It is a power that prevails over human endeavour(kural.380)- என்று விடையளிப்பதன் வழிதிருவள்ளுவர் கூறிய ஊழின் வலிமை ஆங்கிலத்தில் அழுத்தமாய் ஆசிரியரால் சொல்லப்படுகிறது.
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை மதலையால்
சார்பு இல்லார்க்கு இல்லை நிலை.(குறள்.449)
என்ற குறளை,
Without capital there is no profit
And no stability without support.
என ‘நச்’ என்று நூலை வாசிப்போர் மனதில் பதியுமாறு ஆசிரியர் மொழிபெயர்த்திருப்பது வியக்கத்தக்கது.
கற்பூரஜோதி:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து(குறள்.645)
என்ற இந்த குறளானது ,
Select and speak only such words
Not excelled by other words.
என மொழிபெயர்க்கப்பட ,கற்பூரம் எவ்விதம் அக்னியை உடன் பற்றிக்கொள்கின்றதோ அதைப்போல மொழிபெயர்ப்பின் எளிமைநம் மனதில் பற்றிக்கொள்வதோடு அதனை வாழ்வில் பின்பற்றவும் தூண்டுகின்றது.
புரியாத புதிரும் புரியும்:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புண்கண் உடைத்தற் புணர்வு.(குறள்.1152)
என்ற குறளுக்கு நாம் அகராதியும் ,தெளிவுரையும் பார்த்தால் கூட புரிவது கடினம்.ஆனால் மொழிபெயர்ப்பு ஆசிரியரோ,
The very sight of the lover was once delightful
Fear of departure now makes ever the union fearful.
என எழிலுற மொழிபெயர்த்திருக்கின்றார்.
பாலுக்குள் நெய்யா?உள்ளங்கை நெல்லிக்கனியா?
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.(குறள்.1062)
என்ற குறளுக்கு
If the creator of the world intends begging as human fate, He
himself should wander and perish.
என தெளிவுரைத்ததோடு மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உரைத்த அங்கதச் சுவை (Sarcasm) மாறாமல் அழகுபடச்சொல்லி if – conditional clause- இல் புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுகின்றார் டாக்டர் இராஜாராம்.
.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅ அய் வாழிய நெஞ்சு.(குறள்.1200)
எ ன தமிழில் வாசிக்கும் பொழுது தோன்றாத நாடகநயம் ஆங்கிலத்திலோ-
O heart! Why tell the heartless your pains?
Rather fill the Sea of sorrow with tears
.என மிளிர்கின்றது.-
Delight at thought and cheer at sight
Are peculiar not to liquor but to lust.
எ ன்ற ஆங்கிலத்தில் அமைந்த குறளை வாசித்தவுடனேயே
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.(குறள்.1281)
என சூரியனைக் கண்ட தாமரையைப்போல நம் மனமானது நம்மையறியாமலேயே உடனே மொழிபெயர்த்துவிடுவதில்ஆசிரியரின்மொழிபெயர்ப்புத் திறம் புலப்படுகின்றது.
மனதார...
பகலவனின் ஒளியைப் பெற்று பால்மதி பிரதிபலிப்பதைப்போல தமிழ்மொழியின் சீர்மையையும்,செம்மையையும் டாக்டர்.இராஜாராம் இ.ஆ.ப.அவர்கள் திருக்குறள் நூல் வழி உள்வாங்கி. ஐம்பத்துமூன்று நாடுகளின் அலுவலகமொழியாய் இருக்கும் மொழி - என்ற சிறப்பினைப் பெற்ற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இப்புத்தகம் உலகம் போற்றும்பன்னாட்டுச் சுற்றுலாத் தளங்கள்தோறும்காட்சிக்கும் ,விற்பனைக்குமாக வைக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அறுசுவைஉணவை வழங்கிப் பின் அவ்விருந்தை தாம்பூலத்துடன் நிறைவு செய்வதுபோல்,ஒவ்வொரு குறளையும் மொழிபெயர்த்ததோடுமட்டுமல்லாது,அதற்கான தெளிவுரையும் தந்து மொழிவிருந்து படைத்திருக்கும் டாக்டர் இராஜாராம் அவர்களின்தமிழ் ப் பணிதொடரட்டும்! “When rare and ripe opportunity arrives venture at once into the rare deeds”(kural.489)- எனும் உதடு ஒட்டாமல் உச்சரிக்கக் கூடிய உன்னதக் குறளுக்கு தானே இலக்கணமாகத் திகழும் டாக்டர்.இராஜாராம் இ.ஆ.ப.அவர்க ளின் பெயரும் புகழும்திருவள்ளுவ ரது பொய்யாமொழியின் புகழைப்போல நெடிதாகட்டும்!-என- என்போன்ற இலக்கிய வாசகர்கள் மனமாரவாழ்த்தக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
.நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S.
நூல்:THIRUKKURAL(Pearls of inspiration)
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
தோரண வாயில்:
தெள்ளுதமிழ்ப்பேசும் தென்பாண்டித்திருநாட்டின் நான்மாடக்கூடலில் அங்கயற்கண்ணியுடன் வீற்றிருக்கும் ஆலவாயான்அருளிய சங்கப்பலகையில், அரங்கேறிய அற நூலே திருக்குறள்.பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ?பாரிலுள்ள நூலெல்லாம்வள்ளுவர்செய் நூலாமோ?என்று வியக்கும்படி உருவானதே 'உத்திரவேதம்'- எனப்புகழப்படும் உலகின் உயிர்நூலாம்திருக்குறள்.கலம் ஏறி கடல் கடந்து வந்து திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தார் வீரமாமுனிவர் அன்று!கல்வித்துறையில்இருந்து கொண்டு,கற்கண்டினும் இனிமையாக திருக்குறளை,அகிலத்தையே ஆளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் டாக்டர்எம்.இராஜாராம் இன்று!தேனி கூடு கட்டுவதும்,சிலந்தி வலை பின்னுவதும் அரியகலை என்பார் அரும்பெரும் மூதாட்டியாம்ஔவையார்.மொழிபெயர்ப்பும் ஓர் அரிதான,அதே வேளையில் அழகான கலையே என்பதனை முனைவர் .இராஜாராமின்THIRUKKURAL(Pearls of inspiration) நூல் நிரூபணம் செய்கின்றது.பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிக்கின்றதுஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இந்நூலுக்குத் தந்திருக்கும் அணிந்துரை.
அலைகடல் தாண்டி...
தண்டமிழின் பெருமையை தரணி முழுவதும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு அகரத்தில் துவங்கி னகரத்தில் நிறைவுறும்திருக்குறள் நூலுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. No language combines greater force with equal brevity than Tamil--எனும்Rev.Percival- கூற்றும், Tamil is most highly cultivated language-- என்ற அறிஞர் Maxmuller-இன் வாசகமும் திருக்குறள் நூலுக்கு சாலவேபொருந்தும்..இத்தகைய தமிழின் சீர்மையை அலைகடல் தாண்டி கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்நூலைஉருவாக்கிய ஆசிரியருக்கு முதலில் நன்றி.
கயிற்றின் மேல் கழைக்கூத்தாடி:
படைக்கப்பட்ட கவிதை இலக்கியத்தின் மொழி,அந்த இலக்கியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய மொழி-என இவ்விருமொழிகளுக்குரிய இலக்கண விதிகள்,மரபுத்தொடர்கள்,எழுத்து மரபு -இவை அனைத்திலும் முழுமையான தெளிவு பெற்றிருந்தால்மட்டுமே மொழிபெயர்ப்புத்துறையில் இறங்க இயலும்.மேற்கூறியத் திறம் டாக்டர் இராஜாராம் அவர்களுக்கு உள்ளதுஎன்பதைஇம்மொழிபெயர்ப்புநூல்நிரூபிக்கின்றது.இடைச்சொற்கள்(Conjunction) இழையோட,உரிச்சொற்களோ(Attributive)உறவாட,இனிமை (Rhythm)
நதியோட்டமாய்,மொழிநடை ஒயிலாட்டமாய்,பண்புநலன்களோ (Abstract Noun)குவியல்களாய்,வியப்பிடைச்சொல்லும் (Interjection),வினாச்சொல்லுமாய்(Interrogation)குறிப்பும், (Symbolic)வியங்கோளுமாய்(operativeverb)சந்தநயம்,சொல்நயம்,பொருள்நயம்-என மொத்தத்தில் ஓர் இலக்கணப்புதையலாய் இந்நூல் உள்ளது. உலகின் எந்தக்கோடியில் வசிப்பவர் வாசித்தாலும் ,கருமேகம் உடனுக்குடன் மழையைப் பொழிவதுபோல் அவரவர் தாய்மொழிக்கு தானாகவே மொழிமாற்றம் செய்துவிடும் வல்லமையை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்தந்துவிடும் என்பது உறுதி. பெயர்ச்சொல் உருபு ஏற்கும்முறை (Declensions)வினைச்சொல்உருபுஏற்கும்முறை(Conjunction) இவையெல்லாம் மொழிக்கு மொழி மாறுபடினும்,எவ்விதசொற்சிதைவும்,பொருட்சிதைவுமில்லாது எவ்வெச்சொற்களோடு எதனெதனை எங்கெங்கே எவ்வெவ்வாறு இணைக்க வேண்டும்என்பதில்
கயிற்றின் மேல் நடனம் ஆடும் கழைக்கூத்தாடி போல் கவனத்தோடு மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் டாக்டர் இராஜாராம்
அழுத்தமும் திருத்தமுமாய்..
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.(குறள்.979)
எனும் குறள்
Greatness is free from vanity
Pettings rides on vanity.
என, சொல்லும் பொருளும் பிறழாமல் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று.
What is stronger than destiny? என வினவி, பின் It is a power that prevails over human endeavour(kural.380)- என்று விடையளிப்பதன் வழிதிருவள்ளுவர் கூறிய ஊழின் வலிமை ஆங்கிலத்தில் அழுத்தமாய் ஆசிரியரால் சொல்லப்படுகிறது.
முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை மதலையால்
சார்பு இல்லார்க்கு இல்லை நிலை.(குறள்.449)
என்ற குறளை,
Without capital there is no profit
And no stability without support.
என ‘நச்’ என்று நூலை வாசிப்போர் மனதில் பதியுமாறு ஆசிரியர் மொழிபெயர்த்திருப்பது வியக்கத்தக்கது.
கற்பூரஜோதி:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து(குறள்.645)
என்ற இந்த குறளானது ,
Select and speak only such words
Not excelled by other words.
என மொழிபெயர்க்கப்பட ,கற்பூரம் எவ்விதம் அக்னியை உடன் பற்றிக்கொள்கின்றதோ அதைப்போல மொழிபெயர்ப்பின் எளிமைநம் மனதில் பற்றிக்கொள்வதோடு அதனை வாழ்வில் பின்பற்றவும் தூண்டுகின்றது.
புரியாத புதிரும் புரியும்:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புண்கண் உடைத்தற் புணர்வு.(குறள்.1152)
என்ற குறளுக்கு நாம் அகராதியும் ,தெளிவுரையும் பார்த்தால் கூட புரிவது கடினம்.ஆனால் மொழிபெயர்ப்பு ஆசிரியரோ,
The very sight of the lover was once delightful
Fear of departure now makes ever the union fearful.
என எழிலுற மொழிபெயர்த்திருக்கின்றார்.
பாலுக்குள் நெய்யா?உள்ளங்கை நெல்லிக்கனியா?
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.(குறள்.1062)
என்ற குறளுக்கு
If the creator of the world intends begging as human fate, He
himself should wander and perish.
என தெளிவுரைத்ததோடு மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உரைத்த அங்கதச் சுவை (Sarcasm) மாறாமல் அழகுபடச்சொல்லி if – conditional clause- இல் புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுகின்றார் டாக்டர் இராஜாராம்.
.
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅ அய் வாழிய நெஞ்சு.(குறள்.1200)
எ ன தமிழில் வாசிக்கும் பொழுது தோன்றாத நாடகநயம் ஆங்கிலத்திலோ-
O heart! Why tell the heartless your pains?
Rather fill the Sea of sorrow with tears
.என மிளிர்கின்றது.-
Delight at thought and cheer at sight
Are peculiar not to liquor but to lust.
எ ன்ற ஆங்கிலத்தில் அமைந்த குறளை வாசித்தவுடனேயே
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.(குறள்.1281)
என சூரியனைக் கண்ட தாமரையைப்போல நம் மனமானது நம்மையறியாமலேயே உடனே மொழிபெயர்த்துவிடுவதில்ஆசிரியரின்மொழிபெயர்ப்புத் திறம் புலப்படுகின்றது.
மனதார...
பகலவனின் ஒளியைப் பெற்று பால்மதி பிரதிபலிப்பதைப்போல தமிழ்மொழியின் சீர்மையையும்,செம்மையையும் டாக்டர்.இராஜாராம் இ.ஆ.ப.அவர்கள் திருக்குறள் நூல் வழி உள்வாங்கி. ஐம்பத்துமூன்று நாடுகளின் அலுவலகமொழியாய் இருக்கும் மொழி - என்ற சிறப்பினைப் பெற்ற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இப்புத்தகம் உலகம் போற்றும்பன்னாட்டுச் சுற்றுலாத் தளங்கள்தோறும்காட்சிக்கும் ,விற்பனைக்குமாக வைக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அறுசுவைஉணவை வழங்கிப் பின் அவ்விருந்தை தாம்பூலத்துடன் நிறைவு செய்வதுபோல்,ஒவ்வொரு குறளையும் மொழிபெயர்த்ததோடுமட்டுமல்லாது,அதற்கான தெளிவுரையும் தந்து மொழிவிருந்து படைத்திருக்கும் டாக்டர் இராஜாராம் அவர்களின்தமிழ் ப் பணிதொடரட்டும்! “When rare and ripe opportunity arrives venture at once into the rare deeds”(kural.489)- எனும் உதடு ஒட்டாமல் உச்சரிக்கக் கூடிய உன்னதக் குறளுக்கு தானே இலக்கணமாகத் திகழும் டாக்டர்.இராஜாராம் இ.ஆ.ப.அவர்க ளின் பெயரும் புகழும்திருவள்ளுவ ரது பொய்யாமொழியின் புகழைப்போல நெடிதாகட்டும்!-என- என்போன்ற இலக்கிய வாசகர்கள் மனமாரவாழ்த்தக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: படித்ததில் பிடித்தது ! .நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S. நூல்:THIRUKKURAL(Pearls of inspiration) மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|