தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
2 posters
Page 1 of 1
என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
என் வானிலே..
.
நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !
பேச : 98428 48860
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ் அவர்கள் கிராமர் மீடியா என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர் என்பதால் திரைப்பட இயக்குனர்களின் தொடர்பின் காரணமாக, நட்பின் காரணமாக, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான், சிங்கம்புலி மற்றும் திரு. செம்பை மணவாளன், கவிஞர் சு. பீர்முகமது ஆகியோரிடம் அணிந்துரை வாங்கி உள்ளார். அவர்களும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அணிந்துரை வழங்கி உள்ளனர்.
கவிஞருக்கு இயற்கை நேசிப்பு என்பது அவசியம். இயற்கை ரசிக்க மனம் இருப்பவர்களால் மட்டுமே இயற்கை பற்றி கவிதை எழுதிட முடியும்.
பூக்களின் புலம்பல் !
யாரங்கே? பூங்காவின் வாசலை இழுத்து மூடுங்கள்
மலர்கள் வாழும் சோலைக்குள்
மனிதர்களுக்கு என்ன வேலை?
மலரின் அருமை புரியுமா?
கல்லறைக்கும்-கட்டிலறைக்கும்
கற்சிலைக்கும்-சடலத்திற்கும்
எங்களை கசக்கிப் பிழிபவர்களே – உங்கள்
வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆம், மலர்கள் என்பது கண்டு ரசிப்பதற்கு மட்டுமே செடியிலிருந்து பறித்து மாலையாக்கி மகிழ்வதற்கு கண்டனத்தை மலர்கள் பேசுவது போலவே கவிதையாக வடித்த யுத்தி நன்று.
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னத செயலால் மக்களின் மனங்களில் வாழும் மாமனிதர் பென்னிகுக் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
கர்னல் பென்னிகுக்!
கண்ணீர் கண்ட நிலத்தில்
தண்ணீர் தவழச் செய்தவர்
தாகம் கண்ட நாக்கில்
தேகம் நனைத்தவர்!
தன் நாட்டில் இருந்த சொந்த சொத்துக்களை விற்று, பெற்று வந்த பணத்தில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சம் இனிக்க வைத்த மாமனிதரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தால் நாடு செழிக்கும். ஊழல் ஒழியும் அமைதி நிலவும்.
கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்குவதே முதலில் காதல் கவிதை பிறகு தான் சமுதாயக் கவிதை. இவரும் காதல் கவிதை வடித்துள்ளார் ஊறுகாய் போல, சாப்பாடு போல அல்ல.
அறிந்தும் அறியாமலும்!
ஏதோ சில தருணங்களில்
நாம் சந்திக்கும் போதெல்லாம்
என் விழிகளை – முத்தமிடும்
உன் கண் இமைகள்
அறிந்தும் அறியாமலும் !
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமை பற்றி குரல் கொடுக்காமல், படைக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. குறிப்பாக தமிழ் இன உணர்வு உள்ளவர்களால் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
மௌனம்!
அய்யகோ தமிழா!
அழியுது தமிழ்இனம் !
நம் உடன்பிறவாச் சகோதரன்
உடல் மண்ணில் புதைந்து கிடக்கு !
நம் உடன்பிறவாச் சகோதரி
தேகம் தெருவில் சிதைந்து கிடக்கு ...
இன்னும் மௌனம் எதற்கு?
மிச்சம் இருக்கும் மழலைகள் புதைக்கப்படுவதற்காகவா?
இளைஞர்கள் பொறுப்போடு வாழ் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தத்துவம் சொல்லும் விதமாக வடித்த கவிதை ஒன்று.
தொலைத்தேன்!
சிறுவயதில்-படிப்பைத்
தொலைத்தேன் விளையாட்டால்
பருவ வயதில் – திருமணத்தைத்
தொலைத்தேன் கேலிக்கூத்தாய்
முதுமை வயதில் – பணம் சேமிக்காததால்
தொலைத்தேன் வாழ்க்கையை.
காதல் என்பது சுகமான அனுபவம். எல்லாக் காதலும் வெற்றி பெறுவதில்லை. சில காதல்கள் மட்டும் வெற்றி அடைந்து திருமணத்தில் முடிகின்றன. பல காதல்கள் தோல்வி அடைந்து மனதில் சுவடுகளாக நிலைபெறுகின்றன.
நினைவுகள்!
நிஜங்கள் அழிவதில்லை
நீ என்னை பிரிந்தாலும்
என் நினைவுகளை வெறுத்தாலும்
நினைத்துக் கொண்டே இருப்பேன்.
பலவேறு பொருள்களில் புதுக்கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் இரண்டு வகை கவிதைகள் உள்ளன.
மலரை மனிதர்கள் பறிப்பதற்கான கண்டனத்தை புதுக்கவிதை மட்டுமன்றி ஹைக்கூ கவிதையிலும் நன்கு பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ்.
உன் காதலை வளர்க்க
என் உயிரைப் பறிக்கிறாய்
கதறியது மலர்!
காதலர் தினம் அன்று ரோஜா மலரை காதலிக்கு வழங்கிடும் காதலர்கள் கவனிக்க வேண்டிய ஹைக்கூ இது.
கண்டதும் காதல் என்பார்கள். காதலின் முன்னுரை கண்களால் தான் தொடங்குகின்றது. முடிவுரையும் கண்களால் கண்ணீராக வருவதும் உண்டு. காதலியின் கண்ணை வர்ணிக்கும் விதம் நன்று.
கவிதை சொல்லிடும்
காதல் புத்தகம்
கண்கள்!
சாதியின் பெயரால் மனிதன் மோதி விலங்காக மாறி வருகின்றான். பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. சாதி பற்று என்று தொடங்கி வெறியாக மாறி மோதி வீழும் அவலம் நாட்டில் நடந்து வருகின்றது.
ஜாதிகள் உண்டு
ஆனால் மோதிக் கொள்வதில்லை
பூக்கள்.
பூக்களை அக்ரினை என்கிறோம். ஆனால் அவைகளுக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என உணர்த்துவது சிறப்பு. மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.
மறந்தாய் போல் கை வைத்தேன்
அதற்கு மறதி இல்லை
தூக்கி அடித்தது – மின்சாரம்
குறுக்கு வழியில் கோடிகள் திரட்டலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் சறுக்கலையும் சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
எட்டிப்பிடிக்கும் ஏணிப்படி
எந்நேரத்திலும் சறுக்கலாம்
அரசியல்!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அந்தப் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ நன்று.
மரணத்தைத் தள்ளிப் போடும்
மத்தாப்பு
நகைச்சுவை.
நூலாசிரியர் கவிஞர் வேலு கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயந்திரமயமான சென்னையில் வாழ்ந்து கொண்டு இலக்கியத்திலும் தடம் பதிப்பதற்கு வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
.
நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !
பேச : 98428 48860
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ் அவர்கள் கிராமர் மீடியா என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர் என்பதால் திரைப்பட இயக்குனர்களின் தொடர்பின் காரணமாக, நட்பின் காரணமாக, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான், சிங்கம்புலி மற்றும் திரு. செம்பை மணவாளன், கவிஞர் சு. பீர்முகமது ஆகியோரிடம் அணிந்துரை வாங்கி உள்ளார். அவர்களும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அணிந்துரை வழங்கி உள்ளனர்.
கவிஞருக்கு இயற்கை நேசிப்பு என்பது அவசியம். இயற்கை ரசிக்க மனம் இருப்பவர்களால் மட்டுமே இயற்கை பற்றி கவிதை எழுதிட முடியும்.
பூக்களின் புலம்பல் !
யாரங்கே? பூங்காவின் வாசலை இழுத்து மூடுங்கள்
மலர்கள் வாழும் சோலைக்குள்
மனிதர்களுக்கு என்ன வேலை?
மலரின் அருமை புரியுமா?
கல்லறைக்கும்-கட்டிலறைக்கும்
கற்சிலைக்கும்-சடலத்திற்கும்
எங்களை கசக்கிப் பிழிபவர்களே – உங்கள்
வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆம், மலர்கள் என்பது கண்டு ரசிப்பதற்கு மட்டுமே செடியிலிருந்து பறித்து மாலையாக்கி மகிழ்வதற்கு கண்டனத்தை மலர்கள் பேசுவது போலவே கவிதையாக வடித்த யுத்தி நன்று.
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னத செயலால் மக்களின் மனங்களில் வாழும் மாமனிதர் பென்னிகுக் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
கர்னல் பென்னிகுக்!
கண்ணீர் கண்ட நிலத்தில்
தண்ணீர் தவழச் செய்தவர்
தாகம் கண்ட நாக்கில்
தேகம் நனைத்தவர்!
தன் நாட்டில் இருந்த சொந்த சொத்துக்களை விற்று, பெற்று வந்த பணத்தில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சம் இனிக்க வைத்த மாமனிதரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தால் நாடு செழிக்கும். ஊழல் ஒழியும் அமைதி நிலவும்.
கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்குவதே முதலில் காதல் கவிதை பிறகு தான் சமுதாயக் கவிதை. இவரும் காதல் கவிதை வடித்துள்ளார் ஊறுகாய் போல, சாப்பாடு போல அல்ல.
அறிந்தும் அறியாமலும்!
ஏதோ சில தருணங்களில்
நாம் சந்திக்கும் போதெல்லாம்
என் விழிகளை – முத்தமிடும்
உன் கண் இமைகள்
அறிந்தும் அறியாமலும் !
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமை பற்றி குரல் கொடுக்காமல், படைக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. குறிப்பாக தமிழ் இன உணர்வு உள்ளவர்களால் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
மௌனம்!
அய்யகோ தமிழா!
அழியுது தமிழ்இனம் !
நம் உடன்பிறவாச் சகோதரன்
உடல் மண்ணில் புதைந்து கிடக்கு !
நம் உடன்பிறவாச் சகோதரி
தேகம் தெருவில் சிதைந்து கிடக்கு ...
இன்னும் மௌனம் எதற்கு?
மிச்சம் இருக்கும் மழலைகள் புதைக்கப்படுவதற்காகவா?
இளைஞர்கள் பொறுப்போடு வாழ் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தத்துவம் சொல்லும் விதமாக வடித்த கவிதை ஒன்று.
தொலைத்தேன்!
சிறுவயதில்-படிப்பைத்
தொலைத்தேன் விளையாட்டால்
பருவ வயதில் – திருமணத்தைத்
தொலைத்தேன் கேலிக்கூத்தாய்
முதுமை வயதில் – பணம் சேமிக்காததால்
தொலைத்தேன் வாழ்க்கையை.
காதல் என்பது சுகமான அனுபவம். எல்லாக் காதலும் வெற்றி பெறுவதில்லை. சில காதல்கள் மட்டும் வெற்றி அடைந்து திருமணத்தில் முடிகின்றன. பல காதல்கள் தோல்வி அடைந்து மனதில் சுவடுகளாக நிலைபெறுகின்றன.
நினைவுகள்!
நிஜங்கள் அழிவதில்லை
நீ என்னை பிரிந்தாலும்
என் நினைவுகளை வெறுத்தாலும்
நினைத்துக் கொண்டே இருப்பேன்.
பலவேறு பொருள்களில் புதுக்கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் இரண்டு வகை கவிதைகள் உள்ளன.
மலரை மனிதர்கள் பறிப்பதற்கான கண்டனத்தை புதுக்கவிதை மட்டுமன்றி ஹைக்கூ கவிதையிலும் நன்கு பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ்.
உன் காதலை வளர்க்க
என் உயிரைப் பறிக்கிறாய்
கதறியது மலர்!
காதலர் தினம் அன்று ரோஜா மலரை காதலிக்கு வழங்கிடும் காதலர்கள் கவனிக்க வேண்டிய ஹைக்கூ இது.
கண்டதும் காதல் என்பார்கள். காதலின் முன்னுரை கண்களால் தான் தொடங்குகின்றது. முடிவுரையும் கண்களால் கண்ணீராக வருவதும் உண்டு. காதலியின் கண்ணை வர்ணிக்கும் விதம் நன்று.
கவிதை சொல்லிடும்
காதல் புத்தகம்
கண்கள்!
சாதியின் பெயரால் மனிதன் மோதி விலங்காக மாறி வருகின்றான். பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. சாதி பற்று என்று தொடங்கி வெறியாக மாறி மோதி வீழும் அவலம் நாட்டில் நடந்து வருகின்றது.
ஜாதிகள் உண்டு
ஆனால் மோதிக் கொள்வதில்லை
பூக்கள்.
பூக்களை அக்ரினை என்கிறோம். ஆனால் அவைகளுக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என உணர்த்துவது சிறப்பு. மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.
மறந்தாய் போல் கை வைத்தேன்
அதற்கு மறதி இல்லை
தூக்கி அடித்தது – மின்சாரம்
குறுக்கு வழியில் கோடிகள் திரட்டலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் சறுக்கலையும் சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
எட்டிப்பிடிக்கும் ஏணிப்படி
எந்நேரத்திலும் சறுக்கலாம்
அரசியல்!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அந்தப் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ நன்று.
மரணத்தைத் தள்ளிப் போடும்
மத்தாப்பு
நகைச்சுவை.
நூலாசிரியர் கவிஞர் வேலு கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயந்திரமயமான சென்னையில் வாழ்ந்து கொண்டு இலக்கியத்திலும் தடம் பதிப்பதற்கு வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கவிச்சுவை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை ;மா.கணேஷ்
» இறையன்பு கருவூலம். நூல் ஆசிரியர் கவிஞர் இரவி. மதிப்புரை மா. கணேஷ்.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இறையன்பு கருவூலம். நூல் ஆசிரியர் கவிஞர் இரவி. மதிப்புரை மா. கணேஷ்.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|