தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !

Go down

ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் ! Empty ஜோக்கர் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !

Post by eraeravi Tue Aug 16, 2016 8:32 pm

ஜோக்கர் !

திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

எழுத்து - இயக்கம் : ராஜூ முருகன் !


*****

       குக்கூ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மளமளவென படம் இயக்காமல் நின்று நிதானமாக, பொறுமையாக காலம் எடுத்துக்கொண்டு இயக்கி இருக்கும் தரமான படம் ஜோக்கர்.  இயக்குனர் ராஜூமுருகன் அவர்களுக்கு முதல் பாராட்டு.
       குப்பைப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு பெறும் காலத்தில், மிக நல்ல படத்திற்கு ஆங்கிலப்பெயர் சூட்டி வரிவிலக்கை இழந்துள்ளார்.  நல்படம் என்பதால் விதிவிலக்கு செய்து வரிவிலக்கு வழங்கலாம்.  ஜோக்கர் என்பதற்கு பதிலாக கோமாளி என்றோ, தென்னாலி என்றோ பெயர் சூட்டி விவாதம் இன்றி வரிவிலக்கு பெற்று இருக்கலாம்.
       ஒரு படத்தின் வெற்றிக்கு வரிவிலக்கும் உதவி புரியும். இதனை கவனத்தில் கொண்டு இருக்கலாம்.
       நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் படத்தை இயக்கி உள்ளார்.  கிராமத்து மெல்லிய காதல் கதை, கழிவறை அவசியம், அரசியல் ஊழல், காவல்துறை அராஜகம் என ஒரே படத்தில் நாட்டுநடப்பை தோலுரித்துக் காட்டி உள்ளார்.  கதாநாயகனுக்கு படத்தில் பாத்திரத்தின் பெயர் "மன்னர்மன்னன்".  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தன் மகனுக்கு சூட்டி மகிழ்ந்த பெயர் "மன்னர்மன்னன்".  படம் முழுவதும் பல புரட்சிக்கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி உள்ளார்.  வசனம் மிக நன்று.  படம் பார்க்கும் பார்வையாளர்கள்.  அனைவரையும் சிந்திக்க வைக்கும் நல்ல படம்.
       பாரத பிரதமரின் கழிவறை கட்டும் திட்டத்தில் கூட நடக்கும் ஊழல், மணல் கொள்ளை தடுப்பவர்களை கொலை செய்யும் கொடூரம், அரசியல்வாதிகள் கூட்டத்திற்கு ஆள் பிடித்துச் செல்லும் அவலம் என்று நாட்டில் நடக்கும் அனைத்தையும் துணிவுடன் படத்தில் சுட்டிக் காட்டி உள்ளார்.
       பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு படத்தில் மிக நல்ல பாத்திரம்.  உருவத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் போல வருகிறார்.  கதாநாயகன் மன்னர் மன்னன் பாத்திரத்தில் மனம் சிதைந்து தன்னைத்தானே குடியரசுத்தலைவர் என்று அறிவித்துக் கொண்டு அலைபேசி கோபுரத்தில் ஏறி பதவி ஏற்றுக் கொள்வது.  பொதுமக்களிடம், காவலர்களிடம் பேசும் போது இந்தியாவின் ஜனாதிபதி என்று சொல்லி பேசும் போது நகைச்சுவையாக இருந்தாலும் பேசும் வசனம் அனைத்தும் அர்த்தம் உள்ளவை.அருகில் அக்கினிச்சிறகுகள் நூல் வைத்து இருக்கிறார் .தோற்றத்தில் மனிதர் அப்துல் கலாம் போல  காட்சியளிக்கிறார் .


படத்தில் பலம் வசனம் என்றே சொல்ல வேண்டும் .குறிப்பான சில வசனங்கள் இதோ ! "குண்டு வைக்கிறவனை விட்டுடுங்க.கோயிலில் உண்டக்கட்டி வாங்கறவனைப்பிடிங்க" .  "குளிர்பானத்தைத்தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு பிடிக்கல ".மேகியை தடை பண்ணுனா சீனாவுக்குப்   பிடிக்கல ".இப்படி சிந்திக்க வைக்கும் பல வசனங்கள் உள்ளன .பாராட்டுக்கள் .


       கட்டெறும்பைப் பார்த்தால் நசுக்கி விடும் இயல்பு சராசரி மனிதர்களுக்கு உண்டு. ஆனால் கட்டெறும்பு தன்மீது ஊறிய போதும் நசுக்காமல் அப்படியே எடுத்து உயிரோடு அனுப்பி விடும் நேயம்.  மணல் லாரி ஏறி காயம்பட்ட ஆட்டுக்கு  நீதி வேண்டி போராடி மனுநீதிச்சோழனை நினைவூட்டுகின்றார். மன்னார் மன்னன் தோழி இசையின் உதவியுடன் முகநூலை நன்கு பயன்படுத்தி அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளிடம் போராடி ஆட்டுக்குட்டிக்கு இழப்பீட்டு வாங்கித் தருகிறான்.
  கடைசியில் மன்னர் மன்னனையும், மணல் லாரி ஏற்றி கொலை செய்து விடுகிறார்கள்.  அவருக்கு உதவியாளராக வரும் இசை, போராட்டம் அறிவிக்க படம் முடிகின்றது.சராசரி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மனிதநேயம் ,விலங்கு நேயம் ,பூச்சிநேயம் யாவும் புத்தி பேதலித்தவனுக்கு உள்ளது .என்பதை இயக்குனர் நன்கு உணர்த்தி உள்ளார் .


இன்றைய இளம் பெண்கள் வருங்கால கணவன்  குறித்தும் கணவன் இல்லம்  குறித்தும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர் .மன்னர் மன்னன் விரும்பிய கிராமத்துப்பெண்ணும் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறாள். வீட்டில் கழிவறை இருக்க வேண்டும் .என்பதே .இவன் வீட்டில் இல்லை .கட்ட முயற்சி செய்கிறான் அரசை நாடுகிறான் .அரை குறையாக கட்டிய கழிவறைக்குச் சென்ற நிறைமாத கர்ப்பிணி மீது சுவர்கள் இடிந்து விழுந்து காயம் அடைகிறாள் .கிராமத்திற்கு குடியரசுத் தலைவர் வருகை தருவதால் மருத்துவமனை கொண்டு செல்ல விடாமல் காவல் துறை தடுக்கின்றது .பின் தாமதமாகக் கொண்டு சென்றதால் குழந்தை இறந்து  விடுகிறது .அவள் கோமா நிலைக்கு செல்கிறாள் .


       கோமாவில் இருக்கும் மனைவி நலம் பெற சகல மத வழிபாடுகளும் செய்கிறான், அலகு குத்துகிறான், சவுக்கடி தனக்குத் தானே தருவித்துக் கொள்கிறான், ஆனால் எந்த மதக்கடவுளும் மனைவிக்கு நலம் தரவில்லை.  இவனே மனைவியின் சிறுநீர் எடுத்து சுத்தம் செய்வது, கேட்க பாடல் ஒலிபரப்புவது, மனைவி தந்த ரோஜாச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது என்று ஒரு கணவன், மனைவியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் இயக்குனர் ராஜூ முருகன்.
       கோமாவிலிருந்து விடுபடாமல் மனைவி மிகவும் கஷ்டப்படுவதால், கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுகின்றான்.  வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று கருணைக்கொலைக்கு அனுமதி தர முடியாது என்று வழக்கு தள்ளுபடி ஆகின்றது.  அகிம்சைவாதியான காந்தியடிகள் கூட, துடிக்கும் கன்றுக்க்குட்டியை கொன்று விடலாம் என்று கருணைக் கொலைக்கு ஆதரவு தந்த போதும், நமது நாட்டு சட்டம், நீதிமன்றம் கருணைக் கொலைக்கு அனுமதி தரவில்லை என்பதை படத்தில் உணர்த்தி உள்ளார்.
       தூக்குத் தண்டனையை எதிர்ப்பது போலவே கருணைக் கொலையையும் எதிர்ப்பவன் நான்.  இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.  காரனம் கோமாவில் பல ஆண்டுகள் இருந்து விட்டு, பின்னர் நினைவு திரும்பி நலம் பெற்றவர்கள் உண்டு.  உயிரைக் கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
       அரசியல்வாதிகளின் ஊழல், அரசு அதிகாரிகளின் ஊழல் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டி உள்ளார்.  இந்தப்படத்திற்கு தேசிய விருது வழங்க வேண்டும்.  படத்தில் துணிவுடன் உண்மை பேசி இருப்பதால் விருது தர யோசிக்கலாம். மதுரையில், படம் பார்க்க வந்தவர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கரவொலி தந்தார்கள்.  இது பல தேசிய விருதுகளுக்கு சமம்.
       கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் பல கோடி ஊதியம் தந்து, வெளிநாடு சென்று, பல கார்களை உடைத்து பிரமாண்ட செட்டுகள் போட்டு, குத்துப்பாட்டு, வெட்டு, குத்து வைத்து மசாலாப்படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம்.
       படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அந்த பாத்திரமாகவே மாறி படத்தில் வாழ்ந்து உள்ளனர்.  படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து படத்தில் ஒன்றி விடுகிறோம்.  ‘மக்கள் கூட கதாநாயகனை விட வில்லன்களையே விரும்புகிறார்கள் என்ற வசனம் சிந்திக்க வைத்தது.  பொதுநல வழக்கு போடும் நல்லவர்கள், கொடுமைகளுக்கு, ஊழல்களுக்கு எதிராகப் போராடும் போராளிகளை நினைவுபடுத்தும் மிக நல்ல படம்.  படத்தில் துளி கூட ஆபாசம் இல்லை.  வன்முறை இல்லை.  குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம்.  இந்தப்படத்தை வெற்றிப்படமாக்குவது நமது கடமை. நல்ல படம் தொடர்ந்து வந்திட வாய்ப்பாக அமையும்.
******


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குக்கூ ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! இயக்கம் ; ராஜு முருகன் !
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum