தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Go down

மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி Empty மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Post by அ.இராமநாதன் Wed Sep 28, 2016 11:07 pm

-
நெல்லிக்கனி
நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி 
என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் 
ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு 
அருமையான நண்பன் எனலாம். 
-
இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் 
இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.
-
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த 
பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு 
நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் 
தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக
 அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்
சாறு பாதுகாக்கிறது.
-
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் 
சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். 
ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து 
உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்
-
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
-
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள 
சத்துகள்.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி Empty Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Post by அ.இராமநாதன் Wed Sep 28, 2016 11:08 pm

மருத்துவக் குணங்கள்:
-
பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். 
அருமையான கண் பார்வை தரும்.
-
நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். 
-
பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த 
அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
-
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு 
என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். 
ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என 
உரைத்திருக்கின்றனர்.
-
ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. 
முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
-
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை 
அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை 
துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் 
செய்யும் சக்தி இதற்குண்டு.
-
பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய 
காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் 
தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் 
தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு.
-
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் 
சி சத்து நிறைந்துள்ளது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. 
அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்
கனியில் உள்ளது.
-
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள 
இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
-
எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி Empty Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Post by அ.இராமநாதன் Wed Sep 28, 2016 11:09 pm

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை
நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
-
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், 
கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.
-
நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து 
ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.
-
15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி 
ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என 
நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
-
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 
1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என 
காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் 
கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.
-
நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து 
கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை 
அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சி
பெறும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி Empty Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Post by அ.இராமநாதன் Wed Sep 28, 2016 11:09 pm

-
நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை 
அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் 
நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் 
திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ 
கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் 
வாழலாம்.
-
குறிப்பு:
நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின்  C குறைவதில்லை. 
மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
-
----------------
Madhavan R
http://aadimaruthuvam.blogspot.in/
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி Empty Re: மூலிகை பயன்கள் - நெல்லிக்கனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum