தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சல்லிக்கட்டு ! நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

சல்லிக்கட்டு !  நூல் ஆசிரியர் : பாவலர்   புதுவைத் தமிழ்நெஞ்சன் !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Empty சல்லிக்கட்டு ! நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Mar 26, 2018 8:52 pm

சல்லிக்கட்டு !
நூல் ஆசிரியர் : பாவலர்   புதுவைத் தமிழ்நெஞ்சன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


வெளியீடு :
தமிழ்மொழிப் பதிப்பகம், 01, முருகன் கோவில் தெரு, சண்முகபுரம், புதுச்சேரி – 605 009. பேச : 94421 88915
பக்கம் : 32, விலை : ரூ. 25


******
நூலாசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் உணர்ச்சிப் பாவலர். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பட்டென உரைப்பவர். எழுதுபவர். தமிழின உணர்வு மிக்கவர். பகுத்தறிவாளர். புதுச்சேரியில் துளிப்பாவை ஹைக்கூவை முன்னெடுத்துச் செல்பவர். ஹைக்கூ நூற்றாண்டு விழாவை புதுவையில் கோலாகலமாக கொண்டாடி இந்த நூலை வெளியிட்டார்கள்.
நூலின் தலைப்பு ‘சல்லிக்கட்டு’. சல்லிக்கட்டு போராட்டத்தில் உலகம் வியக்கும் வண்ணம் வென்ற வரலாற்றை ஹைக்கூ கவிதைகளில் வடித்து இருப்பது சிறப்பு. நூலிலிருந்து சில கவிதைகள்.
தமிழினப் பண்பாட்டின்
நுழைவாயில்
வாடிவாசல்!

வாடிவாசல் வழி காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும் போது இளம்காளைகள் பாய்ந்து அடக்கும் வீரம் உலகில் எங்கும் காண முடியாது. வாடிவாசல் என்பது தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்த்தி உள்ளார்.
விளையாட்டல்ல
சல்லிக்கட்டு
வரலாறு.

விளையாட்டு தானே என்று விளையாட்டாக தடையிட்டுப் பார்த்து வீறுகொண்டு தமிழர்கள் உலகம் முழுவதும் எழுந்தது கண்டு தடை, தவிடுபொடியானது. தமிழர்களின் வீர வரலாறு என்பது உண்மை.
நிலா முகத்தில்
சுருக்கங்கள்
குளத்தில் அலை!

இயற்கையைப்பற்றி ஹைக்கூ வடிப்பதில் சப்பானியக் கவிஞர்-களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல புதுவைக் கவிஞர்கள் என்பதை மெய்ப்பிக்கும் கவிதை குளத்தையும் நிலவையும் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
அம்பானி அதானிக்கு
வைப்பகக் கடன்
மக்கள் பணம் பறிப்பு!

தினந்தோறும் வரும் செய்திகள் என்னவென்றால் கோடிகள் கொள்ளையடித்து மோசடி செய்து வெளிநாடுகளுக்கு ஓட்டம். ஆனால் சாமான்ய மக்களை வங்கிகளின் வாசலில் நிறுத்தி பல உயிர்களைப் பலி வாங்கிய கொடூரத்தை நினைவூட்டி உள்ளார்.
காளைகளின் குளம்படியில்
நசுங்கிப் போனது
பீட்டா!

பீட்டா என்ற அமைப்பு உலகமகா கேடி அமைப்பு. விலங்குகள் காப்போம் என்ற போர்வையில் நமது காளை இனத்தை அழிக்க வந்த கைக்கூலிகள். தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டு விட்டனர். காரணம் உலகத்தமிழர்களின் ஒற்றுமைக் குரல்.
சுடும் வெயில்
கொடும் பனி
தொடரும் மாணவப் போர்!

ஆண், பெண் பேதமின்றி குடும்பம் குடும்பமாக மாணவர்கள், இளையோர் அனைவரும் அணிதிரண்டு சல்லிக்கட்டின் தடையினைத் தகர்த்தனர்.
வேலி போட்டும்
தாண்டிப் போகும்
மல்லிகை மணம்!

மல்லிகை என்றவுடன் நினைவிற்கு வந்தது மதுரை. இங்கு தான் தினந்தோறும் ஏற்றுமதி ஆகின்றது மணக்கும் மல்லிகை.
முகிலாடைக்குள்
முகம் மறைத்து
கண்ணாமூச்சி!

நூலாசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் இயற்கை ரசிகர். மலர்களையும் செடிகளையும் ரசித்து படம்பிடித்து முகநூலில் பதிவு செய்து வருபவர். வானத்தையும் ரசித்து ஹைக்கூ வடித்தது சிறப்பு.
தமிழினத்தை
ஒன்றிணைத்தது
தமிழ்!

உண்மை தான். உலகம் முழுவதும் வாழும் ஒப்பற்ற தமிழர்கள் ஒன்று திரண்டனர். உலகமே தமிழர்களின் ஒற்றுமையை ஆற்றலை வீரத்தை, தீரத்தைக் கண்டு வியந்தது. உலகின் முதல் மொழி தமிழ் உலகின் முதல் மனிதன் தமிழன். வீரத்தமிழன் என்பதை உலகம் உணர்த்திட உதவியது சல்லிக்கட்டு போராட்டம்.
மரப்பாச்சிக்கு
மாராப்புப் போட்டாள்
தமிழச்சி!

உண்மை தான். தமிழ்க்குழந்தைகளின் கையில் மரப்பாச்சி இருக்கும். ஆடையின்றி இருக்கும் அப்பொம்மைக்கு அடை அணிவித்து மகிழும் குழந்தை. அதனைக் காட்சிப்படுத்தியது சிறப்பு. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தியது சிறப்பு.
கையடக்க சிறிய நூல் என்றாலும் தமிழ் உணர்வு, தமிழ் இன உணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.
நீண்ட நெடுங்காலமாக குடும்பமாக புதுவைத் தமிழ்நெஞ்சன் மட்டுமின்றி அவரது மனைவியும் அவரது புதல்வி தமிழ்மொழி அவரது சகோதரர் சீனு தமிழ்மணி என்று குடும்பம் முழுவதும் ஹைக்கூ படைப்பாளிகள். தொடர்ந்து நூல்கள் வழங்கி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்படி குடும்பமாக ஹைக்கூ எழுதுபவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் இனஉணர்வுடன் வாழும் உணர்வாளர்கள் புதுவைத் தமிழர்கள். காரணம் பாவேந்தர் பாரதிதாசன் தந்த இன உணர்வு.
அருள்வடிவான கடவுளின்
கைகளில் இருக்கிறது
அறுவாள் வேல் சூலம்!

இறுதிக் கவிதையில் பகுத்தறிவு சிந்தனையும் விதைத்துள்ளர். அனபே வடிவான அருள்புரியும் கடவுளர்களின் கரங்களில் ஆயுதங்கள் எதற்கு? என்று கேட்டு சிந்திக்க வைத்துள்ளார்.
நூலின் இறுதியில் காளைமாடுகளின் 92 வகையின் பெயர்களை பதிவு செய்து இருப்பது மிகச் சிறப்பு. பாராட்டுக்கள்
 



.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குடை மறந்த மழை ! நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ் நெஞ்சன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அகமுகம்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கல்லெழுத்து ! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum