தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

குறிஞ்சிப் பூ இதழ்கள் !  நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Apr 27, 2017 3:51 pm

குறிஞ்சிப் பூ இதழ்கள் !


நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


செந்தமிழ்ப் பதிப்பகம், 37, 21வது கிராஸ் பாலாஜி லே அவுட்,

ஒய்சலா நகர், 3வது மெயின், இராமமூர்த்தி நகர் 

பெங்களூரு – 560 016 
விலை ரூ. 100 பக்கங்கள் 144.



     பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ, ஒருமுறை கொடைக்கானல் சென்று இருந்த போது கண்டு மகிழ்ந்தேன்.  குறஞ்சி ஆண்டவர் கோவில் என்று ஒன்று உள்ளது. அதன் பின்புறம் மலர்ந்து இருந்தன.  இந்த நூலின் தலைப்பான 'குறஞ்சிப்பூ இதழ்கள்' என்று படித்தவுடன் மலரும் நினைவுகளை மலர்வித்தன.


     இந்த நூல் ஆசிரியர் இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் அவர்களை நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள் பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார்.  நூலாசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர், பேச்சு, எழுத்து இரண்டிலும் நல்ல தமிழ் கடைபிடித்து வருபவர். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரிக்கரை கவியரங்கம், பாவாணர் பாட்டரங்கம் உள்ளிட்ட கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை பாடி வருபவர்.


     இந்த நூலில் 125 தலைப்புகளில் மரபுக் கவிதைகள் உள்ளன.  மரபுக் கவிதைகள் படிப்பது என்பது பழைய பாடல்கள் கேட்டதைப் போன்ற இனிய உணர்வு தருபவை.  சந்த நயம், ஓசை நயம் மட்டுமல்ல, சொற்களஞ்சியமாக நூல் உள்ளது.  


வளரும் கவிஞர்கள் இந்த நூல் படித்தால் தமிழின் அருமை, பெருமை மட்டுமல்ல, பல சொற்கள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். பல கவிதைகளில் சொற்களால் விளையாண்டு உள்ளார். சொற்கள் நடந்தால் வசனம். சொற்கள் நடனமாடினால் கவிதை.  இந்த நூலில் சொற்கள் களிநடனம் புரிந்து உள்ளன. 


கவிதைக்கு தலைப்பிடுவதும் ஒரு கலை. தலைப்பைப் படித்தாலே கவிதையைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன.  பதச்சோறாக சில தலைப்புகள் இதோ !


காதற்களியாடுவோம், கெண்டை விழிப்பார்வையால், கற்பனைக்குள் தள்ளினாள், நிகரேது தேனே,  உயிருக்கு  இன்பம் , ஏசுதடி என் நெஞ்சு, என்றும் தேயாது உன்முகம், குறளில் தேர்ந்தேன், மெய்தான் அன்பே, கூறடி கண்மணியே! - இப்படி 125 தலைப்புகள் உள்ளன.


     காதல் கவிதைகள் எந்த வயதிலும் எழுதலாம்.  வயது வரம்பு இல்லை.  நூல் ஆசிரியர் வயது 60 கடந்த போதும் அற்புதமான காதல் கவிதைகள் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதி வருவதால் இன்னும் இளமையாகவே வலம் வருகின்றார். 


 காதல் கவிதை எழுதுவது இளமையைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு யுத்தியாகவும் எழுதலாம்.  காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார்.  அறிஞர் அண்ணா எழுதிய நூலிற்கு கம்பரசம் என்று பெயர் உண்டு.  நூல் ஆசிரியர் நா. மகிழ்நன் எழுதிய இந்த நூலிற்கு காதல் ரசம் என்று வைத்து இருந்தால் பொருத்தமாக இருக்கும்.


     சங்க இலக்கியத்தில் வரும் தலைவன், தலைவி கூற்று போலவே அவள்-அவன், கணவன்-மனைவி, காதலன்-காதலி என இருவர் கூற்றாக கவிதைகள் வடித்துள்ளார்.


விலகிலேன் !


இனியப்பூந் தென்றல் இளைய நிலாவின்

மண்ணொளித் தாரால் இதழ்விரித் தின்பம்
இனிதே ஈந்திடும், வெண்முல்லை ஈர்ப்பு
இருள்வான் விரிபட் டாடை ஒப்பனைச்
செய்யும் செதுக்காத் தாரகை மின்னல் !



இவரது கவிதைகள் படித்த போது எனக்கு டி. ராஜேந்தர் அவர்களின் கவிதைகள் நினைவிற்கு வந்தன.  எதுகை, மோனை இயைபு என எதற்கும் பஞ்சமின்றி சொல் விளையாட்டு விளையாடி வர்ணனைகள் வடித்து உள்ளார். 


கவிதையுடன் ஏட்டில்?
[size]


ஈட்டியெனப் பாய்கின்ற 
ஓரவிழிக் காட்டி
பூட்டியெனை அகம் வைத்தாள் 
புன்முறுவல் கூட்டி
நாட்டியத்தின் நற்பங்கை 
நல்லிடையில் நாட்டி
பாட்டிசைக்கும் பாவலர்க்குப் 
படைத்தாளே போட்டி?


[/size]
தலைவி தோழியிடம் தலைவனைப் பற்றி கூறுவது போல கவிதைகள் வடித்துள்ளார். அதில் சொல்லும் உவமை மிக வித்தியாசமாக உள்ளது பாருங்கள்.
[size]


நெத்திலி மீன்சோறு !
அத்தை மகன் தந்துவிட் டப் பார்வை  
அடுப்பிலிட்ட நெத்திலிச் சாறாய் 
மரபுப் படி என்றன் நினைவில்  
அத்தான் நினைவாய் கொதித்து மணக்கும்!


[/size]
நூல் முழுவதும் காதல் காதல் காதல் காதலின்றி வேறில்லை என்று சொல்லுமளவிற்க்கு காதல் கவிதை விருந்து வைத்துள்ளார்.
[size]


காதற்கிறுக்கு !


கண்ணுக் கினியவளே காதலியே என்றமிழின்
பண்ணுக் கிசையாகும் பாவழகே – மண்ணுக்குள்
பொன்னழகுக் கோலமிட்ட எந்தமிழ்ப் பைங்கிளியே
மின்னுகின்றாய் என் நெஞ்சில் நீ!


[/size]
பாடலாகப் பாடிடும் வண்ணம் இசைப்பா வடிவிலும் கவிதைகள் உள்ளன.  இசையமைத்து பாடலாகப் பாடி விடலாம்.
[size]


தடுமாறிப் போகுது (இசைப்பா)


சங்கத் தமிழ் மெல்ல இங்கு 
நடந்து வந்தது!
நடந்து வந்த அழகைக் கண்டேன் 
கவிதைப் பிறந்தது!
கவிதையாகவும் தமிழ் அவளின் 
எழிலைச் சொன்னது – அந்த
எழிலைக் கண்ட கவிஞன் மனம் 
தடுமாறிப் போனது!


இலை பூவின் மொட்டு (இசைப்பா)


அவள் செந்தாழப் பூங்கட்டு – மலர் 
சூழ்ந்தாழும் தேன்சிட்டு
இவள் திருமேனி பயிராடும் 
இளம்பச்சை பட்டு
அவளிதழ் காட்டும் அழகோ 
இளம்பூவின் மொட்டு !


[/size]
இசைப்பாக்களை எள்ளல் சுவையுடனும் வடித்துள்ளார். நீண்ட நெடிய கவிதைகளும் சிறு சிறு கவிதைகளும் என பல்சுவை விருந்தாக உள்ளன.


முடித்தாள் (இசைப்பா)
[size]


விழியோரம் நெஞ்சுக்குத் தூது விட்டாள் – எனை
ஆழி நீர் சுழல் போல ஆட்டி வைத்தாள்!
பழிக்காரி என்றுரைத்து வழக்கு தொடுத்தேன் – கோவைப்
பழவிதழ் தந்தெனக்கு வழக்கு முடித்தாள்!


[/size]
நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் விதமாக கவிதைகள் உள்ளன.


மாந்தோப்பும் குலுங்குதடி ! (இசைப்பா)
[size]
வண்ண வண்ண நிறப் பூவாய்
வந்து விழும் உந்தன் சிரிப்பாலே
மண்ணும் இங்கே சிலிர்க்குதடி – உன்
மலர்ப்பாதம் பதிகையிலே
மாந்தோப்பும் குலுங்குது!


[/size]
மரபுக் கவிதைகளால் காதல் கவி விருந்து வைத்துள்ளார்.  காதல் கவிதை படிப்பது ஒரு சுகம்.  காதல் கவிதைகள் எப்போதும் சலிப்பதில்லை.  மறு வாய்ப்பு செய்தாலும் சுவை தரும்.  நூலாசிரியர் இனவெழுச்சிப் பாவலர் நூல் முழுவதும் நல்ல தமிழில் வடசொல் இன்றி குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் எதுவுமின்றி கவிதைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  கவிதை என்ற பெயரில் ஆங்கிலச் சொற்கள் கலந்து தமிங்கிலம்  வடிக்கும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். 


 நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோள்.  காதல் கவிதைகள் போதும் அடுத்த நூல் இனஎழுச்சிப் பாடலாக இருக்கட்டும்.

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com


http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அகமுகம்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» சல்லிக்கட்டு ! நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum