தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Today at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
Page 1 of 1
இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
இலக்கிய இணையர் படைப்புலகம்!
(பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள்
ஓர் ஆய்வு)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர்
கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
நூல் பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
நூல் பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் : 230. விலை : ரூ.175/-
: “
*****
: “
*****
எண்ணற்ற நூல்களின் இணையற்ற படைப்பாளர்களை பேரா. இரா. மோகன் – பேரா. நிர்மலா இணையரின் நூல்கள் பலவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்து மகிழ்ந்து, உரைத்துப் பதிப்பித்திருக்கிறார் இலக்கிய உலகில் அவர்களது மாணவராகவும், வளர்ப்புப் பிள்ளையாகவும் விளங்குகிற கவிஞர் இரா. இரவி அவர்கள். அவர் தேர்ந்திருக்கிற அத்தனைத் தொகுதிகளுமே ஏற்கெனவே பலரால், பத்திரிகைகளால் பாராட்டப்பட்டவை. கவிஞர் இரவி அவர்களின் மதிப்புரைகளில் அந்நூல்களின் சிறந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்ந்து தொகுத்த அப்பகுதிகள் தேனாய் இருக்கின்றன. முதல் நூல் கணினியுகத்திற்குத் திருவள்ளுவர், இந்நூலின் உள்ளடக்கம் பேரா. மோகன் அவர்களின் உரையாகும். இது சென்னை கம்பன் கழக நிகழ்வொன்றில் வழங்கப்பட்டது. பின்னர் நூலாகவும் வெளியிடப்-பட்டது. 12 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். கணினி யுகம் இது. இதில் நுழைவோர்க்கு வள்ளுவர் வழங்கியிருக்கிற செய்திகளைத் தொகுத்தமை சிறப்பு. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒருவர் எனுமாறு பன்னிரு பேரறிஞர் தம் கருத்துகளை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. பேரா. மோகன் அவர்களின் ஆற்றல்மிக்கப் படைப்பெனும் இரவியின் மதிப்பீடே நமது மதிப்பீடுமாகும்.
‘சங்க இலக்கியச் சால்பு’, ‘சங்க இலக்கியச் சாறு’ ஆகிய இரு நூல்களிலும் சுவையான சிலிர்ப்பான தேர்ந்த இலக்கியக் காட்சிகளை பேரா. மோகன் தந்திருப்பதைப் பாராட்டியிருக்கிறார் கவிஞர் இரா. இரவி. பேரறிஞர் தமிழண்ணல் உரைத்திருப்பது போல், “ஒருவன் தமிழ் உரைநடையில் சிறந்த பயிற்சி பெற வேண்டுமெனில் உரையாசிரியர்களின் உரைநடை-களையும் உரைகளையும் படித்தே ஆக வேண்டும்” என்ற கருத்துக்கிசைந்து வளர்ந்தவர் பேரா. இரா.மோகன் என்பது குறிப்பிடத்-தக்கது.
. ‘பன்முக நோக்கில் புறநானூறு’ அமெரிக்காவில் நடந்த புறநானூறு மாநாட்டில் வழங்கப்பட்ட பேருரையின் தொகுப்பு என்பதிலும் மேலாய், படப்பிடிப்பு எனும் வண்ணம் காட்சிப்படுத்தப்-பட்டுள்ளது. இந்நூல் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் இலக்கிய மகுடத்தில் வைரக்கல் என்கிறார் கவிஞர். இதுபோலவே பன்முக நோக்கில் குறுந்தொகையும் தொடர்ந்து, “தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்கள்” மதிப்பீடும் சங்க இலக்கியச் சிறப்பினை வெளிப்படுத்துகின்றது.
பேரா. இரா. மோகன் அவர்கள் தம் அணிந்துரை-களால் பல நூல்களை அணிசெய்து மகிழ்ந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பு ‘இலக்கிய மாலை’, கவிஞர் இரா. இரவியின் ‘சுட்டும் விழி’யோடு எழுத்தாளர் சௌந்தரராஜனின் நூலுக்கும் தாம் அமெரிக்கா செல்லும் பரபரப்பிலும் அணிந்துரை வழங்கிய அன்பை நெகிழ்ந்து குறிப்பிடும் கவிஞர் இரவி. மோகன் அவர்களின் அணிந்துரைகளை ‘அக்மார்க்’ முத்திரைக்கு இணையாகச் சொல்வது அழகு.
அணிந்துரை தருவதை பேரா. இரா. மோகன் அவர்கள் தொல்லையாகக் கருதுவதில்லை. தூய நட்பின் வெளிப்பாடாகவும், தமிழ்த் தொண்டாகவும் கருதுவார். பேராசிரியரின் தனித்த படைப்புகள் போலவே, பேரா. நிர்மலா அவர்களுடனும் இணைந்து பல நூல்கள் தந்துள்ளார்.
‘பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்’ நூலைச் சுவையாக்க நவீன கவிதையொன்றையும் இலக்கிய இணையர் மேற்கோள் காட்டி இருக்கிறார்கள். இவை புதிய தமிழ்க் கவிதைகளில் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக அமைந்துள்ளன. வாழ்க்கை வரலாறுகளைப் பொறுத்தமட்டில் மு.வ. (3 நூல்கள்), மீரா, வ.சு.ப. மாணிக்கம், டாக்டர் ஔவை நடராசனார், சிற்பு, ஒளவை துரைசாமி, தி.க.சி., அப்துல் கலாம், குலோத்துங்கன், இறையன்பு என்று பல இலக்கிய ஆளுமைகளுக்குப் புத்தகச் சிறப்பளித்துள்ள பெருந்தன்மையப் போற்றி உள்ளார் இரவி. மகிழ்ச்சி மந்திரம், நல்லவை நாற்பது, இனியவை நாற்பது, படித்தாலே இனிக்கும் போன்ற நூல்களில் பேரா. மோகன் அவர்களின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
கவிதைக் களஞ்சியம், அயலகக் கவிதைக் குயில்கள், கவிதை ஒளி, கவிதை வெளியினிலே, கவிதை அலைவரிசை, ஏர்வாடியும் எல்லோரும் நலம் வாழ ஏர்வாடியாரின் சிந்தனைகள் போன்ற நூல்களில் கவிஞர்கள் பலரது கவிதை வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டும் பரந்த மனதை கவிஞர் இரவி வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியர் மோகன், பேரா. நிர்மலா மோகன் இணையருக்கு கவிஞர் இரா. இரவி போர்த்திச் சிறப்பித்துள்ல பொன்னாடை இந்நூல்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2590
Points : 6206
Join date : 18/06/2010

» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு
» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|