தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்

2 posters

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 -  ஓர் ஆய்வு  - 3. வீரம் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 10:50 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

3. வீரம்
கல்வி தறுகள் இசைமை கொடைமேனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
(தொல்-பொருள்-9)
வீரம் எவ்வெவற்றின் நிலைக்களனாய்ப் பிறக்கும் என்பதை விளக்கும் தொல்காப்பியனாரின் நாற்பாதான் மேலே குறிப்பிட்டுள்ளது. கல்வியாலும், அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமையாகிய தறுகண்ணாலும், பழியொடு வருவன செய்யாமையாகிய இசையாலும், எல்லாப் பொருளும் கொடுக்கும் கொடையாலும் வீரம் பிறக்கும்.
மெய்ப்பாடு எட்டு எனச் சொல்லிய தொல்காப்பியன், நகை முதலாகத் தொடங்கிக் கூறும் போது பெருமிதத்திற்கு அடுத்தாற்போல் வெகுளியை வைத்தார். வீரத்தின் பயனாகிய பிறர்க்கு வரும் வெகுளியை வீரமாகிய பெருமிதத்திற்குப் பின் வைத்தார் என்பது பேராசிரியர் மெய்பாட்டின் வைப்பு முறைக்குக் கூறும் விளக்கம். எனவே வீரத்தின் பயன் வெகுளி என்பது வெள்ளிடை மலை. ஆகவே வெகுளியை - சினத்தை வீரத்தோடு சேர்த்தே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வீரத்தைப் பற்றிப் பல பாடல்களில் வைரமுத்து பாடியுள்ள கருத்துக்கள் சுவையானவை.
தண்ணீருக்காகப் போராடும் இந்நாட்டு மன்னர்களின் - மக்களின் தாக யுத்தம். அஞ்சாமை வெளிப்படுகிறது.
வானம் இங்கு வந்தபோதும்
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு (1 - 7)
‘‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’’ என்ற பாரதிக்குத் தன்னை வாரிசாகக் காண்பித்து விட்டார் வைரமுத்து. காலச் சூழல் மாறினாலும் கருத்தின் அடித்தளம் ஒன்று தானே.
இரவில் சுதந்திரம் பெற்றதாலோ என்னவோ இந்நாட்டு மக்களுக்கு விடியவே இல்லை. எனினும் சிந்திக்கத் தெரிந்த மனிதன் சும்மா இருப்பானா? உழைப்பாளிகள் உழைத்து உழைத்து அவர்கள் கையில் ஆயுள் ரேகையே இல்லை. அப்படியானால் அவர் தம் ஆயுளின் நிலை என்ன என்பதை உட்பொருளாகக் கொண்டு கவிஞர் வினாத் தொடுக்கிறாரா? அவர்கள் வீட்டில் என்ன வசதி இருக்கிறதோ இல்லையோ, வறுமை மட்டும் வசதியாக வாழ்கிறது. அவர்கள் கண் சிவந்தால் இந்த மண்ணே சிவந்து போகும் என்பதைக் கவிஞர் எச்சரிக்கிறார்.
காச்சுப்போன எங்கள் கையில்
ஆயுள் ரேகை இல்லையே
வறுமை எங்கள் வீட்டில் வந்து வசதியாக வாழுதே
கண் சிவந்து போன பின்பு மண் சிவந்து போகுமே.
(1 - 7)
கவிஞரின் சினத்தின் நியாயம் நன்றாகவே புரிகிறது.
‘ஓடப்பராயிருப்போர் உதையப்பராய் மாறிவிடுங்கள்; அப்போது தான் ஓடப்பரும் உயரப்படும் எல்லாம் மாறி ஒப்பப்பராய் விடுவர்’ என்று எழுச்சியூட்டுகிறார்.
சிங்கக் கூட்டங்கள் குவிந்து கிடக்கக் கூடாது. வேர்வை விதைத்தவர் ரத்தப் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் - துன்பச்
சிறையின் கதவு தெறிக்கும்
...
ஏரு பிடித்தவர்; இருமி இளைத்தவர்
ரத்தப்பொட்டு வைத்துக்கொண்டால்
தர்மங்கள் தூங்காது. (1 - 8)
இனியும் இச்சமுதாயம் கோழையாக நிற்குமா?
பெண்கள் துவளும் கொடியாகலாம். காலம் சூழும்போது காளியாக மாறுவர் என்று கவிஞர் பெண்ணின் வீரத்தைப படமாக்குவார்.
பெண் என்பவள் காளியல்லோ
தர்மத்துக்கு வேலியல்லோ
சூலம் எடு சாணையிடு ஆணையிடு. (1 - 21)
பெண்களின் இந்த எழுச்சியால் தான் தர்மம் இன்றும் காப்பாற்றப்படுகிறது.
ஏழை மக்கள் படும் துன்பம் சொல்லும் தரமன்று. எனினும் உலகம் இயங்கவதே அவர்களால் தான். அவர்கள் சினம் கொண்டால்?
சுற்றி உரு வானெடுத்தால்
சுற்றும் பூமி நின்றுவிடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்துவிடும். (1 - 22)
அவர்கள் அன்னை பராசக்தியிடம் சூலத்தை இரவல் கேட்கிறார்கள்.
சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே. (1 - 22)
இனி போருக்கு அறை கூவல் விடுக்கிறார்.
மீசையில் கைபோடு
கத்திக்கு நெய்போடு தோழா தோழா (1 - 22)
எழுச்சி நிச்சயம் தானே.
தன் மச்சானின் வீரத்தில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. வீட்டில் தங்கமாக இருப்பவன் வெளியில் வேட்டைக்குப் போனால் சிங்கமாகிறான்.
பொண்ணுமச்சான் போற வழி பூவு உண்டாகும்
வீரமச்சான் கோபப்பட்டா பூமி ரெண்டாகும்
வீட்டுக்கு வந்தா தங்கமல்லோ
வேட்டைக்குப் போனா சிங்கமல்லோ!
யானைக்கொம்பு விறகொடிச்சு அடுப்பெரிப்பானே!
(1 - 26)
சங்க இலக்கியத்தை இங்கே தெளிவாக்குகிறார் கவிஞர்.
அத்தகைய வீரமிக்கவர்கள் இம்மண்ணில் கணக்கிலடங்கார். அவர்கள் விழி சிவந்துவிட்டால் எரிமலைக் குழம்பாக வடியும். தெருவினில் பாய்ந்தோடும் வேங்கைகள் சங்கீதம் கேட்டு உறங்குமா? கங்கைகளைக் கைகளால் தடுத்து நிறுத்த இயலுமா? நாடு முழுவதும் தீயின் மணம் வீசத்தொடங்கி விடும் என்பது கவிஞரின் எச்சரிக்கை.
சிறுத்தைகள் இருவிழி சிவந்தன
கதவுகள் திறந்தன வழிவிடுங்கள்
எரிமலைக் குழம்பு ஊருகுது
தெருவினில் வருகுது வரவிடுங்கள்
......
சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள்
கைகொண்டு மூடினால் நில்லாது கங்கைகள்
கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம்?
தோழனே காலம் வரும்.
அட தேசம் எங்கும் தீயின் வாசம் வீச
வேண்டுமே. (1 - 54)
நெடுத்தொகையாகிப் போன ஒருவனின் வீர வரலாறு இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. வீரத்தைப் பறை சாற்றுகிறது.
மம்பட்டியான் பேரு சொன்னாப்
புலி ஒதுங்கும் பாரு. (1 - 69)
கொடியவர்கள் தலைகளை வெட்டிச் சந்தையில் குவித்து வைத்தவன் மம்பட்டியான். கொடுமை எல்லாம் குட்டுப்பட்டன.
எட்டுத்தலை வெட்டி வெச்சான்
சந்தையில் கொட்டி வச்சான்
கொடுமையைத் தட்டி வச்சான்
வேறென்ன மிச்சம் வச்சான்? (1 - 69)
எனவே நீதியும் நியாயமும் கிடைக்காத போது போரிடத் தயக்கம் ஏன்?
நீதி எங்னே? அட நியாயமெங்கே?
நீயொரு வாளெடு பகையுடன் போரிடு--தயங்காதே
(1 - 97)
பூக்கிள்ளும் கூட்டம் கூடப் போராட வந்து விட்டால் கயவர்களின் மானம் கப்பலேறித் தானே போகும்.
சுமந்து வரும் காற்றாயிற்றே.
நெற்றியில் வியர்வை விட்டு - நீ
நேற்று என்பதை மாற்று - நம்மைக்
கட்டுப்படுத்த முடியாது - நாம்
கந்தகம் சுமந்த காற்று - (1 - 126)
அழுகை கோழையின் ஆயுதமல்லவா? அவர்கள் அடுப்பைக் கரையான் அரித்துவிடும். ஆயுதம் ஏந்தினால் அடிமைச் சங்கிலி நொறுக்கப்படும். குறைந்த அளவு, ஆளுக்கு ஒரு தலையாவது ஆறுத்திடல் வேண்டும்! கவிஞரின் எழுச்சி வரிகள் கோழையையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும். விதைத்த வீரம் முளைத்து எழும்.
அழுது ஒதுங்கிக் கிடந்தால் - உங்கள்
அடுப்பைக் கரையான் அரிக்கும்
ஆயுதம் ஏந்தி நடந்தால் - அந்த
அடிமைச் சங்கிலி தெறிக்கும்
ஆணவ நரிகளை அழிப்போம் - அட
ஆளுக்கொரு தலை அறுப்போம். (1 - 157)
கவிஞர் தம் வீரமிக்க செய்தியால் புதியதொரு பாதை காட்டுகிறார். மக்கள் உள்ளங்களைப் பண்படுத்தி, ஏழை என்ற சொல்லை இல்லாமல் ஆக்க வேண்டுகிறார். இதுவோர் சமுதாய மாற்றம்.
எல்லோரும் வாளெடுப்போம்
பொற்காலம் நாளையடா
பேச்சினால் செயல் வீச்சினால்
மக்கம் மனங்களை உழுது
ஏழையே இனி இல்லையே
என்னும் நரித்திரம் எழுது. (2 - 42)
இங்கே கவிஞர் ஒரு சமுதாயச் சிற்பியாகக் காணப்படுகிறார்.
இக்கூற்றுக்கு உரம் சேர்க்கிறது. மற்றோரு பாட்டு. கதவு திறக்காது. அதனை உடைத்துப் படையை நடத்து என்று பாடுவார். இன்று தடையாகிய கதவு உடைக்கப்பட்டால் என்றேனும் அமைதி வந்தே தீரம்.
கதவை உடைத்துப் படையை நடத்து
மனிதன் தலைவிதி மாறும்
கதவை உடைப்பது இன்று
அமைதி கிடைப்பது என்று? (2 - 63)
அவன் இளைஞன். ஆண் அல்லவா! எனவே வீரம் கொப்புளிக்கிறது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்கிறான். இரத்தம் சிந்தாமல் மாற்றம் இல்லை. எனவே ஆயுதம் ஏந்திடுவோம். அங்கே நக்சலிசம் விதைக்கப்பட்டுவிட்டது.
ரத்தம் சிந்தாமல் நடந்நது என்ன?
.....
ஆயுதம் ஏந்தாமல் எது இங்கு மாறும்?
.....
விழிகள் சிவந்தால்
உலகில் ஒளியுண்டு
.....
முள்ளை முள்ளால் எடுத்தால் தவறல்ல. (2 -65)
மந்தையாகிப் போன மக்கள், இங்கே காந்திக்கு வேலையில்லை. அவர் கைத்தடிக்குத்தான் வேலை. இரசாயன மாற்றம் நடைபெற வேண்டுமானால் சூடு பிறந்து தானே ஆக வேண்டும். அதைத்தான் கவிஞர் எடுத்துக் காட்டுகிறார்.
காந்தி போல வாழ்ந்திருந்தோம் ஏழைங்க -
இப்போ கைத்தடிக்கு வேலைதரப் போறாங்க
செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க (2 - 71)
குடும்ப மானம் பாழ்படுத்தப்பட்ட போது சினம் எழுகிறது. அவன் இரத்தத்தால் வாய் கொப்பளித்தான். அழிக்கும் கடவுளாகிய அரனாக மாறுகிறான். அச்சினத்தின் அடிப்படையும் மானம் காக்கும் வீரம் தானே.
தங்கச்சியப் பண்ணை கற்பழிச்சான் - இவன்
ரத்தத்துல வாயக் கொப்புளிச்சான்
இன்னும் பழிவாங்காது
கண்ணில் இமை சாயாது
எனவே இவனே சிவனாய் ஆரம்பிச்சான். (2 - 84)
இத்தகைய தனி மனித வீர உணர்வும் இல்லையெனில் இத்தரணியே கொடியவர்களின் வேட்கைக் காடாக மாறிவிடுமே.
இந்தத் தனிமனித வீரம்தான் சமுதாயத்தில் ஒன்று சேரும்போது யுகப்பிரளயம் பிறக்கிறது. அங்கே இரத்தம் தெறிக்கட்டும்.
சுரண்டும் நரிகள் எங்கே? எங்கே?
திரண்டு வருகிறோம் அங்கே! அங்கே!
வரம்பு கடந்து நரம்பு எழுந்து துடிக்குதே
யுத்தம் பிறக்கட்டுமே ரத்தம் தெறிக்கட்டுமே.
(2 - 117)
காரி கதனஞ்சான் பாய்ந்த களையைக் குத்திக் சூடர் சரியக் கிழிந்தது. அவனுக்கே அவள் மலையிட்டாள். இல்லையில்லை அவன் வீரத்துக்கு மாலையிட்டாள். இதுபோன்ற முல்லைக் கலிக் காட்சியையும் கவிஞர் காட்டாமல் விடவில்லை.
பெண்மை ணென்றால் வீரனுக்கே மாலை
தந்துவிடும்
தீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடு (2 - 120)
பிள்ளைக்குச் சோறூட்டும் போதே வீரத்தையும் சேர்ந்தே ஊட்டுகிறாள்; பண்பாட்டையும் தான்.
மானம் ஒன்றே வாழ்க்கை என்றே
மண்ணை ஆளவா
வீரம் ஒன்றே வேதம் என்றே
விண்ணை சாடிவா. (2 - 137)
அவன் நாட்டைக் காக்கும் வீரன் - போர்வீரன் போரென்று வந்துவிட்டால் அன்னியர்கள்-பகைவர்கள் நுழையாவண்ணம் அவன் கூட்டம் தானே வேலியாக நின்று நாட்டைக் காக்கிறது. அவர்களுக்குள்ளே பாசம் பந்தம் என்ற உணர்வுகளெல்லாம் ஓடிப்போய் விடுகின்றனவே. இது தான் வீரத்தக்கு இலக்கணமோ?
யுத்தங்கள் வந்தா - இங்கு நாம் தானே வேலி
ஆடுங்கடா!
தேசத்தைக் காப்பாற்றப் பாசத்தை விட்டோமடா
பலே! பலே! பலே! பலே! (2 - 141)
கோழைகளாக, பூனைகளாக முடங்கிக் கிடந்த மனித இனம் நேரம் வந்தபோது யானையாக மாறிப் போருக்குத் தயாராகும். களிறுகள் பிளிறத் தொடங்கும். சின்னஞ்சிறுசுகள் கூட ஆயுதம் ஏந்திப் படையாக மாறும்.
பூனைகளாகக் கெடந்த சினம்
யானையானதே
சின்னஞ்சிறுசும் கத்தி எடுத்து
சேனையானதே
வீரம் சுயமானம் அது வேணும் - இனி
ஊரெல்லாம் ஒண்ணாகிப் போரடும். (2 - 155)
‘பகை என ஒன்று எழுந்து வந்து விட்டால் வாளெடுத்துப் போருக்குச் செல்லுங்கள். எனக்கும் செய்தி அனுப்புங்கள். நானும் தோளோடு தொள் கொடுத்துப் போராடுவேன்’ என்கிறது ஒரு காளை.
சுற்றி ஒரு பகை எழுந்தால் வாளை எடுங்கள்
தோள்கொடுப்பேன்-எனக்கு ஒரு ஓலை விடுங்கள்.
(2 - 194)
அராஜகம் அழிய வேண்டும். போர் தான் உடனடி நிவாரனம். தலைகள் உருளட்டும். அப்பகைவர் பிணத்தின் மீது தான் சொர்க்கம் தெரியும்.
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம். (2 - 187)
சினம் இல்லாமல் வீரமில்லை. வீரமில்லாமல் போரில்லை. அது சமுதாயக் கேடுகளாகிய பகையானாலும் நாட்டையே நாசமாக்கும் உட்பகையானாலும் வெளிப்பகையானாலும் எழுச்சி சினம் போர் என்ற அளவிலேதான் பாதுகாப்புப் பெற முடியும் - சமுதாயச் சீர்திருத்தம் பெற முடியும், என்பதை எல்லாம் வைரமுத்து அவர்கள் எடுத்துக் காட்டிப் பாடியிருப்பது நம்மைச் சிந்திக்கத் தூண்டுவனவாம்.

Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 -  ஓர் ஆய்வு  - 3. வீரம் Empty Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 16, 2011 11:27 am

அருமையான ஆய்வு அதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முனைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 27. தொலைக்காட்சித் தொடர்கள்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum