தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இமானுவல் கான்ட்

Go down

இமானுவல் கான்ட் Empty இமானுவல் கான்ட்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:07 am

இமானுவல் கான்ட் Moz-screenshot-1இமானுவல் கான்ட் 10
1இமானுவல் கான்ட் Moz-screenshot1.08.10 உலகப் புகழ்பெற்ற மனிதர்
மானுவல்
கான்ட் என்னும் அறிஞர்,ஜெர்மனிய நாட்டிற்குச் சில கிலா மீட்டர்
தூரத்திலுள்ள கோனிக்ஸ்பர்க் என்னும் நகரத்தில் 1724ஆம் ஆண்டு பிறந்தார்.
''நெருப்பு, மரங்களை எரித்து அழிக்கும்; ஆனால், இரும்பினைக்
கடினமானதாக்கும்" என்னும் ஜெர்மானியப் பழமொழிக்கு ஏற்ப, கான்டின் இளமைக்கால
அனுபவம் அவர் மனம் பக்குவப்படக் காரணமாய் அமைந்தது.



முடிவில்லாப் போர் :

கான்டின்
முன்னோர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்தார்கள். அடிக்கடி போரில்
ஈடுபட்டதால் ஐரோப்பிய மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.ஐரோப்பாவில்
நடந்த முடிவில்லாப் போரின் காரணமாகச் சுமார் எழுபது சதவிகித மக்கள்
வாழ்க்கையை இழந்து தவித்தார்கள்.எண்ணற்ற மக்கள் பட்டினியால் வாடினர்.
பசிக்கொடுமைக்கு அஞ்சிப் பலர் பிற நாடுகளுக்குச் சென்று வாழத்
தலைப்பட்டனர்.கான்டின் மூதாதையரும் ஐரோப்பாவிலிருந்து புறப்பட்டு
கோனிக்ஸ்பர்கில் குடியேறி வாழத் தலைப்பட்டனர்.

கான்ட்டின் தந்தையார்
இமானுவல் என்பவர். அவர் தோல் அறுக்கும் பணியினைச் செய்து வந்தார். அவர்
தன் சொற்ப வருமானத்தில் தன் குடும்பத்தினை நடத்தி வந்தார். மேலும், கான்ட்
இமானுவலுக்கு பதினொரு குழந்தைகள் இருந்தன. அக்குழந்தைகளுக்குப் போதுமான
உணவினைக் கொடுக்க இயலாமல் வேதனையில் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவரால் தன்
மக்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவினைக் கொடுக்க
முடியவில்லையானாலும் மன ஆரோக்கியத்திற்கான பயிற்சியினைக் கொடுத்து வந்தார்.
பைபிளிலிருக்கும் நீதிக் கதைகளை எடுத்துக் கூறினார். நல்லொழுக்கத்தில்
ஈடுபாடு கொள்ளச் செய்தார்.

பசியும் குடும்ப வறுமையும் கான்டின் மனம்
தூய்மையடையக் காரணமாய் அமைந்தன.பைபிள் கதைகள் அவரது மனத்திற்கு
மகிழ்ச்சியைத் தந்தன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் எண்ணம் அவர்
உள்ளத்தில் வேரூன்றி வளரத் தொடங்கியது. தெய்வ நம்பிக்கையும் தூய
சிந்தனையும் உள்ளவர்களாகத் தன் குழந்தைகள் வளர்ந்தது குறித்து கான்டின்
தந்தையார் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்.

மத ஒழுக்கங்களில் சிறந்து
விளங்கிய ஜெர்மானிய பியூரிடென்ஸ் வாழ்க்கைக் குறிப்புகள் கான்டின்
உள்ளத்தில் உலக அமைதி என்னும் கொள்கை உருவாகக் காரணமாக இருந்தன.

எதிர்காலச் சந்ததி இவரால் பயன் எய்தும்!

கான்ட்
தந்தையாரால் கான்டை பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்பிக்க இயலவில்லை. எனவே,
கான்ட் ஆரம்ப காலத்தில் மதக் கல்வியே கற்றார். அக்கல்வியினால் கான்டிற்கு
மனக்கட்டுப்பாடும் நீதியின் மீது அசைக்க முடியாத பற்றும் ஏற்பட்டன. எனவே,
அவர் தன் வாழ்நாள் முழுவதும் நீதி தவறாத ஒழுக்க சீலராக வாழ்ந்து வந்தார்.

ஆரம்ப
காலக் கல்வியைப் போதித்த ஆசிரியர் கான்டின் திறமையைக் கண்டு வியந்தார்.
அவர் கான்ட், பிற்காலத்தில் சிறந்த அறிஞராகவும் உயர்ந்த சிந்தனையாளராகவும்
அமைதியை விரும்புபவராகவும் விளங்குவார்;அவரை எந்தத் தீய சக்தியாலும் அழிக்க
முடியாது என்று உத்தரவாதம் வழங்கினார்.

கான்ட் தொடர்ந்து கல்வி
கற்க வேண்டும். அவ்வாறு அவர் கற்றால், அவரால் பிற்காலச் சந்ததியினருக்கு
எண்ணிக்கையில்லாப் பயன்கள் கிட்டும் என்று அறிவுறுத்தினார் ஆசிரியர்.
அதனால், கான்டின் கல்விப் பயணம் தொடர்ந்தது.

வறுமையிலும் அறிவை வளப்படுத்திக் கொண்டார்

கான்ட்,மதப்பள்ளியில்
எட்டு ஆண்டுகள் ஒழுக்கக் கல்வியைக் கற்றபின்,உயர்படிப்பிற்காக கோனிஸ்பர்க்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.நல்லிதயம் கொண்டவர்களின் உதவியினால் அவர்
அக்கல்வியைக் கற்க முடிந்தது.

கான்ட்,தன் கல்லூரி வாழ்க்கையை
வறுமையிலேயே கழித்தார். கல்வியில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு
ஓய்வு நேரத்தில் தனியாகப் பாடம் கற்றுக் கொடுத்தார்.அதன் மூலம் அவருக்குச்
சிறிது பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தன் உணவு, உடை
ஆகியவற்றைப் பெற்றுச் சமாளித்தார். சில சமயம் மாணவர்கள் தனியாகப் பாடம்
கற்றுத் தருவதற்குப் பணம் தராமல் இருந்து விடுவர்.அப்படிப்பட்ட நேரங்களில்,
கான்ட் பல நாட்கள் பட்டினியோடு கல்லூரிக்குச் சென்று விடுவார்.

கான்ட்
தூய்மையாக உடை அணிந்து கொள்ளவே விரும்பினார். தன்னிடமுள்ள ஓரிரு ஆடைகளைச்
சுத்தமாகச் சலவை செய்து மடிப்புக் கலையாமல் பலநாட்களுக்கு உடுத்திக்
கொள்வார்.

கான்ட், அடிக்கடி பசி பட்டினியில் துன்புற்றாலும் தம்
உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்துவார். நோய் எதுவும் ஏற்பட்டுவிடாமல்
ஜாக்கிரதையாக இருப்பார். பனிக்காலத்தில் வெளியில் வர நேர்ந்தால் எவருடனும்
வாய் திறந்து பேச மாட்டார். மூக்கினால் மட்டுமே சுவாசிப்பார்.நிமோனியா
நோய்க்கிருமிகள் காற்றுடன் கலந்திருப்பதால் வாய்வழியாக உடலுக்குள் சென்று
நோயை உண்டுபண்ணிவிடும். அவர், தனக்கு நோய் ஏற்பட்டால் கவனிப்பதற்கு ஆளும்
இல்லை, பணவசதியும் இல்லை; மேலும், நோயை எதிர்க்குமளவிற்குத் தன்னுடலில்
வலிமையும் இல்லை என்று அவர் கருதினார்.

பெரும்பாலும் கல்வி
கற்பவர்கள் உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்னும் நோக்கில் கல்வி கற்பர்.
ஆனால், கான்ட் தன் சிந்தனையை வளர்த்துக் கொள்ளவே கல்வி கற்றார். எனவே,
அவரது கவனம் தத்துவக் கல்வியிலேயே சென்றது. அதற்கு டஸ்க், நெட்சன் ஆகிய இரு
பேராசிரியர்களும் காரணமாய் இருந்தனர். தத்துவத் துறையில் அவர்கள் இருவரும்
தலைசிறந்து விளங்கினர். அவர்கள் சிந்தனை விஞ்ஞான ரீதியில் அமைந்தது.
அவர்களின் தூண்டுதலால் கான்ட் மெட்டா ஃபிஸிக்ஸ் மட்டும் கற்காமல் அதனோடு
தொடர்பு கொண்டுள்ள இயற்பியல் (ஃபிஸிக்ஸ்), நிலக்கணக்கியல் (ஜியோமெட்ரி),
இயற்கணிதம் (அல்ஜிப்ரா), உளவியல் (சைகாலஜி), வானியல் அளவைநூல் (லாஜிக்)
ஆகிய பாடங்களையும் நன்கு ஆராய்ந்து கற்கத் தொடங்கினார். மேலும், அவர் தான்
வாழ்ந்த காலத்தில் உலக நாடுகளில் காணப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகளைப்
பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

ஆரம்ப காலத்தில்
பிரபஞ்சத்தைப் பற்றிய பொதுவான கொள்கையே அவருக்கு இருந்தது. எல்லையற்ற பரந்த
உலகம் வெளித் தோற்றம் இல்லாத கடவுளின் கருணையால் இயங்குவதாக
நம்பினார்.பின் அக்கருத்தினை மாற்றிக்கொள்ள வேண்டிய அனுபவம் அவருக்குக்
கிடைத்தது.

கான்ட் தன் வாழ்க்கையை உலக ஆராய்ச்சியிலும், கடவுளைப்
பற்றிய உண்மைகளை அறிவதிலும் செலவிட்டார். அவர் மனம் முழுவதும் உலகைப்பற்றி
ஆராய்வதில் ஈடுபட்டாலும், வாழ்க்கை நடத்துவதற்கு


இமானுவல் கான்ட் 10a

வருமானம் தேவையல்லவா? எனவே, வேலை தேட
வேண்டிய
நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.அதற்கிடையில் அவர் தன்
பட்டப்படிப்பினையும் முடித்திருந்தார். கோனிக்ஸ் பல்கலைக் கழகத்தில் பகுதி
நேரப் பயிற்சித் துணைவர் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்பணிக்குக் குறைவான
சம்பளமே கிடைத்தது. எனவே, மாணவர்களுக்குத் தனியாகப் பாடங்கற்றுத் தந்து தன்
வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைத் தேடிக் கொண்டார்.

கான்ட், தன்
வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் தவறு, தன் கல்வி முடிந்த பின்பு அவர் தன்
குடும்பத்தினைக் கவனியாது விட்டுவிட்டதாகும்.அவர் குடும்பம் அவரையே
நம்பியிருந்தது. ஆனால், கான்டின் போக்கினைக் கண்டு மனம் வருந்திய அவர்
சகோதரிகள், வீட்டு வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்தினர். ஏறக்குறைய கான்ட்
ஒன்பது ஆண்டுகள் பயிற்சித் துணைவர் (டியூட்டர்) வேலையைச் செய்து வந்தார்.
அப்போது, அவர் தன் தத்துவச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளப் போதுமான நேரமும்
சூழ்நிலையும் அமைந்தன. கான்டின் நுண்ணறிவையும் போதிக்கும் திறனையும்
உணர்ந்த பல்கலைக்கழகம், 1755 ஆம் ஆண்டில், ஆசிரியர் (இன்ஸ்பெக்டர்)பணியை
அவருக்குக் கொடுத்து ஊக்கமளித்தது. அதுமுதல் அவரது ஆராய்ச்சிப் பணியும்
செவ்வனே தொடர்ந்தது.

கான்ட் எப்போதும் படித்துக்கொண்டும்
சிந்தித்துக் கொண்டும் இருப்பார்.ஓய்வு நேரங்களில் பில்லியர்ட்
விளையாட்டினை விளையாடுவார்.விலையுயர்ந்த ஆடைகளை வாங்கி அணிந்து
கொள்வார்.கோனிக்ஸ்பர்க் நகரத்தைவிட்டுச் சில கிலோ மீட்டர் தூரம் வரை கூட
கான்ட் சென்றதில்லை. ஆனால், அவர்தம் சிந்தனை உலக அறிஞர்களின் மனத்தில்
மலையாக உயர்ந்தது. சிறிது காலத்தில், கான்ட் கோனிக் பர்க்ஸ்
பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக ஆனார்.

ஆரம்ப காலத்தில்
கான்டின் ஆராய்ச்சிகள் விஞ்ஞானத் துறையிலேயே அமைந்தன. காலம் செல்லச் செல்ல
அவரது கவனம் தத்துவத்தின்பால் திரும்பியது.

நன்றி
-தமிழ்மணி
குமுதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum