தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயமும், மிகு இரத்த அழுத்தமும்

Go down

இதயமும், மிகு இரத்த அழுத்தமும் Empty இதயமும், மிகு இரத்த அழுத்தமும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 4:46 pm

மிகு இரத்த அழுத்தம் இதயத்தை இரண்டு வகைகளில் பாதிக்கும். இதயத்தமனி மிகு இரத்த அழுத்தத்தால் சுருக்கமடைவதால் இதயத்திற்கு தேவையான அளவு இரத்தம் செலுத்தப்படாத நிலை ஏற்படும். இரத்தக்-குழாய்கள் சுருக்கம் சில நொதியங்களாலும், இதயத்தமனி உட்சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் படிந்து, அவை கெட்டிப்படுவதாலும் இதயத்தமனி உள்சுற்று சிறுத்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும். மாரடைப்பு நோய்க்கு பெரும்பாலும் மிகு இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயுமே பெரும்பாலான காரணிகளாக உள்ளன.

நாள்பட்ட மிகு இரத்த அழுத்தம் இடது வெண்டிரிக்-கள் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் செலுத்த அதிக அளவில் சுருங்கி விரியும். இதனால் இதயத்தின் சதைகள் பருத்துவிடும். இதில் இடது வெண்டிரிக்கள் அதிக அளவு பெருத்து விடும் நிலை சில வருடங்களில் உண்டாகி விடும். இதனால் இதயச் செயல்பாடுகள் குறைந்து இதயம் செயலிழக்கத் துவங்கும். இதனால், நுரையீரல்களில் நீர்கோக்க துவங்கும். அதனால் மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டு இறுதியில் இதயம் முழுமையாக செயல்பாட்டை நிறுத்திவிடும். இதனால் மரணம் ஏற்படும். இதயம் மிகு இரத்த அழுத்தத்தால் மேற்சொன்ன இரண்டு வகையில் பாதிக்கப்பட்டாலும், மாரடைப்பால் ஏற்படும் மரணம் எதிர்பாராமல் திடீரென்று ஏற்படும். இதயம் செயலிழப்பதால் ஏற்படும் மரணம் மெதுவாக நிகழும். ஆகையால் மிகு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியமாகும்.

மூளையும் மிகு இரத்த அழுத்தமும்: இரத்த அழுத்தம் லேசாக கூடுதலாக இருக்கும்பொழுது தலைவலி, தலைச்சுற்றல், லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். ஆனால் அதுவே இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது, இரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் படிவங்கள் பிய்ந்து, இரத்த ஓட்டத்தோடு சென்று பெருமூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்ளும். இதை ‘பெருமூளை தமனி அடைப்பு’ என்று சொல்வர். சில சமயங்களில் இதே தமனிகள் வெடித்து இரத்தப் போக்கு மண்டை ஓட்டுக்குள் ஏற்படக்கூடிய நிகழ்ச்சியும் நடக்கலாம். இதை ‘பெருமூளை இரத்தப் போக்கு’ என்று கூறுவர். நம் மூளை மிகவும் செயல்படக்கூடிய பகுதி. அது செயல்படத் தேவையான சத்துக்கள் இரத்தம் மூலம்தான் செல்கிறது. திடீரென்று மிகு இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் குழாய் வெடிப்போ, மூளையை செயலிழக்கச் செய்யும். மூளை செயலிழப்பதால், அதிலிருந்து செல்லும் நரம்புகளும் செயலிழந்து விடும்.

இதனால் அந்த நரம்புகள் பரவியுள்ள இடம் முழுமை-யாக செயலிழந்து விடும். இதையே பக்க வாதம் என்று சொல்கிறோம். இது மிகவும் ஆபத்தான நிலை. உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அதிலும் பெருமூளை உதிரப்போக்கு ஏற்பட்ட ஒரு சில நிமிடங்களில் நோயாளி தன் நினைவு இழந்த நிலைக்குச் சென்று விடுவார். இந்த நிலையில் உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் நோயாளியின் மரணம் தவிர்க்க முடியாததாகி விடும். இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிக அளவாக இருக்கும்பொழுது முதலில் லேசான அளவு மூளைக்கு செல்லும் இரத்த அளவால், சில நரம்புகள் பாதிக்கப்படும். அதனால் முதலில் லேசாக கை, கால்களில் மரப்பு உணர்ச்சி, கை, கால் விரல்களின் நுனியில் துடிப்புப் போன்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படும். இது நமது மூளை நமக்கு விடும் எச்சரிக்கையாகும். இதுபோன்ற உணர்வுகள் உண்டானால், உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மேற்சொன்ன பேரபாயம் நேர்ந்துவிடும். எனவே மிகு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத தேவையாகும்.

மூளையும், சிறுநீரகங்களும்: நம்முடைய சிறுநீரகங்கள் ஒரு பெரிய தொழிற்சாலை. நம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை வெளியேற்றி ஒரு பெரும் சுத்திகரிப்புப் பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. மிகு இரத்த அழுத்த நோயில் ஆரம்ப நிலையில் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனால் நாளடைவில் சிறுநீரகங்களுக்குச் செல்லும் மிக மெல்லிய, கண்களுக்கு புலப்படாத தந்துகளில் அடைப்பு ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகள் குறையத் தொடங்கும். இதனால் சிறுநீரில் நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்துப் பொருள்கள் வெளியேறத் துவங்கும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு அதிகமாக, அதிகமாக சிறுநீரகங்கள் நச்சுப் பொருள்களை உடலிலிருந்து பிரித்து, வெளியேற்றும் செயல்பாடு பாதிப்படையும்.

இதனால் யூரியா, யூரிக் ஆசிட், நைட்ரஜன் போன்ற வெளியேற வேண்டிய நஞ்சுகள் மீண்டும் உடலில் சேரும். இது உயிருக்கு ஆபத்தானதாகும். இந்த நஞ்சுகள் ஓரளவிற்கு மேல் சென்றால் நோயாளி ‘தன் நினைவிழப்பார்’. இந்த நிலையில் சரியான மருத்துவம் செய்யாவிடில் சிறு நீரகங்கள் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடும். நோயாளியின் உடலில் தேங்கும் நஞ்சுகளால் நோயாளி மரணமடைவார். இதை ‘யூரிமியா’ என்றழைப்பர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum