தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உச்சி மோந்த தமிழ்க் கன்னி

Go down

உச்சி மோந்த தமிழ்க் கன்னி Empty உச்சி மோந்த தமிழ்க் கன்னி

Post by kowsy2010 Sat Apr 09, 2011 7:03 pm

வண்ணச் சொல்லும் வகைவகையாய்ப் பொருளும் கலந்து வாரி என்னை அணைத்து மகிழும் எழுத்து வள்ளல்களே! எனக்காய்த் தரப்படும் சில மணித்துளிகள் என் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

நான் பிறக்கும் போதே சுந்தரத் தோற்றத்துடனும் இலக்கண அமைப்புடனும் இலகுவற்ற முறையுடனும் இனிமையாகத் தான் தோன்றினேன். என் தந்தையார் பிரமன் ஆணையிலும் குறுமுனி அகத்தியன் அறிவிலும் அகிலத்தில் அவதரித்தேன். கடந்து வந்த பாதையிலே நான் பதித்து வந்த கோலங்கள், காலவாரியாக மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. மூவேந்தர் ஆட்சியிலே பூரித்து நின்ற என்னைக் கடல்கோள்கள் அச்சுறுத்தின. எனினும் காலன் என்னைக் கவரவில்லை. முதல், இடை, கடை என்று முறையே சங்கங்கள் வைத்து என்னை வளர்க்க மன்னர்களும் புலவர்களும் தங்களைப் போல் முனைந்து நின்றனர். சங்கப்பலகையிலே நான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டென அழகு அணிகளில் பொய்யாமொழி, நான் பொய்யாமல் இருக்க, நீங்கள் என்னை அடிக்கடித் தொட்டுக் கொள்ளும் குறள்வெண்பாவால் ஆரம் சூட்டினான். காதல், வீரம், மேவி நின்ற காலத்திலே காதலால் மேம்பட்டேன். துறவு மேவி நின்ற காலத்தில் மேம்பட்டேன். காதலால் துறவு மேவிநின்ற காலத்தில் துறவினால் மேம்பட்டான்.

அடுத்து வந்த பல்லவர் காலத்திலே பக்திப்பாடல்களால் என்னைத் தூவி மகிழ்ந்தனர். தாழிசை, துறை, விருத்தம் கலந்த பாக்களினால் பாடல்களைச் சமர்ப்பித்தனர். சோழர்காலத்திலே நளவெண்பா, பரணி, பிள்ளைத்தமிழ் என வகைவகையாய்ப் படைத்தளித்தனர். நாயக்கர் ஆட்சிக்காலத்திலே விகடகவி, சிலேடைக்கவி, வசைக்கவி போன்ற சிறப்புமிக்க வடிவங்களை வடித்து எனக்கு அளித்ததுடன் சந்தச் சுவை கலந்த பாடல்களையும் அருணகிரிநாதர் என்னும் முருகபக்தன் எனக்களித்தான். குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்தங்கள் இக்காலத்தில் என்னை அலங்கரித்ததுடன் இவற்றிற்குச் சிந்து முதலிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்கள் கையாளப்பட்டமையை, தற்கால எளிய போக்கிற்கு நாயக்கர் காலமே வித்திட்டது. என மனதில் நான் நினைப்பதுண்டு. நாயக்கர் காலத்தில் என்னை அலங்கரிக்க வடமொழி தழுவினர். ஐரோப்பியர் இலக்கியங்களின் போக்கைத் தழுவினர். ஐரோப்பிய நாட்டார் தம்மதம் பரப்ப என்னைத் தாராளமாக ஆய்ந்து கற்று எனக்கே பல படைப்புக்கள் ஆக்கி வைத்தார்கள் என்றால், என் பெருமையை என்னென்பேன். இக்காலத்து என்னுள் பதிந்த இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், அத்தனையையும் பட்டியலிட்டு அழகாய் எடுத்துரைக்க எனக்காய் அமைக்கப்பட்ட நேரம் போதாது. ஆதலால், ஆவலாய் என்னை அளக்கிறேன், அளவாய் இப்போது. 20ம் நூற்றாண்டிலே பாரதியை, கம்பதாசனை, கவிமணியை இவர்கள் போன்ற எண்ணற்றோரை நாவாரப் புகழுகின்றேன்.

இன்று 21ம் நூற்றாண்டிலே புதுமைப் பெண்ணாய் நான் வலம் வருவதென்றால், இலகுநடையிலே பட்டிதொட்டி எங்கும் வாழும் அத்தனை மக்களின் மனதிலும் என்னை விதைக்கின்றீர்களே. கணனிப் பரப்பில் முகநூல் வடிவினுள் முனைந்து நிற்கும் நான் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தினுள் நுழைகின்றேன். அதுமட்டமல்ல, உலகெங்கும் வாழும் என் அருமைக் குழந்தைகள், '' தேமதுரைத் தமிழோசை உலகு எல்லாம் பரவும் வகை'' செய்து தாங்கள் வாழுகின்ற உலகு எங்கும் தங்கள் சின்னஞ்சிறிய விரல்கள் எடுத்து என்னுள் குதித்து விளையாடுகின்றனர். எனக்காய்ப் படைத்த படைப்புக்கள் அத்தனையும் தாம் வாழும் நாட்டு மொழியில் மொழி பெயர்க்க முன் வந்துள்ளனர். இதைவிட மகிழ்ச்சி எனக்கு என்ன தேவை? மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே! உங்கள் உச்சிமோந்து நான் வாழ்த்துகின்றேன். இக்குழந்தைகளின் அணைப்பினாலும் எனது தந்தையின் ஆசியினாலும் காலம் தோறும் தோன்றும் புலவர்கள், ஆர்வலர்களின் அன்பளிப்புக்களினாலும் காலன் கண்ணில் அகப்படாமல்;, கன்னியாய்க் காலங்கழிக்கின்றேன்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum