தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:51 pm

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சிலகேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள்முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின்சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனதுகருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறுமருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பதுநன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்டகலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவிதகனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத்தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லாபெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை.சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல்போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தைஅடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோஅல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும்நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.
[You must be registered and logged in to see this link.]அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்றுவிதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன்போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்குஇருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம்,கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்றசமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையானஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய்திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகையசூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்படவேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவதுநல்லது.

[You must be registered and logged in to see this link.]அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாகமட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும்.இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாகநினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது.மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாகசுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாகவெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டுநிலைமை சிக்கலடையும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:52 pm

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாகவெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாகமீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால்அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறுமருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வதுநல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவதுமாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும்.இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன்செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பலகாரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின்உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில்சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்றசூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவானகுழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கியஉறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசுசெய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்தமுறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தைதாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய்பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக்அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறானபழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள்,மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியைகருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்றசுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால்உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம்கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இதுமிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்டபெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்புகுழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மைஉண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:52 pm

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில்அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாகஅமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன்அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால்அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன்கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு)எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனைஅதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மதுஅருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளைஎடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும்காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவிஇருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன்மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல்நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வதுநல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரைஅணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவதுபயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனைகட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்துஅதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல்கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள்ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனைமுடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கைஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்துகாப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கியதேவையாக இருக்கிறது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!! Empty Re: கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum