தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டெய்ஸி எனும் பூச்செடி

Go down

டெய்ஸி எனும் பூச்செடி Empty டெய்ஸி எனும் பூச்செடி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 12, 2011 5:22 pm

ஒரு கிராமத்தின் சாலையோரத்தில் ஒரு வீடு
இருந்தது. அந்த வீட்டின் வாசலில் நிறையப் பூச்செடிகள் இருந்தன. வாசலைச்
சுற்றி வண்ணம் பூசிய வேலி அமைத்திருந்தார்கள். வேலிக்கு அப்பால் அழகான
பச்சைப் புற்களின் நடுவில் ஒரு சிறிய டெய்ஸி பூச்செடி இருந்தது. அந்தச்
செடியிலும் சூரிய வெளிச்சம் பதிந்தது. செடி வளர்ந்துகொண்டிருந்தது.

ஒரு காலைப் பொழுதில் அந்தச் செடியில் ஒரு அழகான பூ மலர்ந்தது. நடுவில்
மஞ்சள் நிறத்துடனும் சுற்றிலும் வெள்ளை நிறத்துடனும் இருந்தது அந்தப் பூ.
அதுதான் சின்னஞ்சிறிய டெய்ஸி பூ. அது மகிழ்ச்சியுடன் சூரியனைப்
பார்த்துக்கொண்டு நின்றது. அதே நேரம் உயரத்தில் பறக்கிற வானம்பாடியின்
பாட்டைக் கேட்டு ரசித்தது.

விடுமுறை நாட்களென்றால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமல்லவா, அதுபோல டெய்ஸி
எப்போதும் சந்தோஷத்துடன் இருந்தது. ஆனாலும் அன்று திங்கட்கிழமை. குழந்தைகள்
எல்லோரும் பள்ளிக்கூடத்தில் இருந்தார்கள்.

அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது டெய்ஸி, சூரியனையும் தனக்குச்
சுற்றிலுமுள்ள அனைத்தையும் பார்த்துப் படித்துக்கொண்டிருந்தது. "நான்
அமைதியாக அனுபவிக்கிற அதே மகிழ்ச்சி, அந்த வானம்பாடியின் பாட்டிலும் உண்டு'
என்று நினைத்த டெய்ஸி சிரித்தது. பறக்கவும் பாடவும் செய்கிற அந்தப்
பறவையை டெய்ஸி பெருமையுடன் பார்த்துக்கொண்டிருக்கும். அது இப்படி
நினைத்தது:

"எனக்கு பார்க்கவும் கேட்கவும் முடியும். சூரியன் என்மீது ஒளி வீசுகிறது. எனக்கு இயற்கை நிறையப் பரிசுகளை வழங்கியிருக்கிறது!'

வேலிக்கு உள்ளே வீட்டு வாசலில் அழகான நிறையப் பூக்கள் கர்வத்துடன்
நின்றுகொண்டிருந்தன. பெரிய பூக்கள். வண்ணங்கள் நிறைந்த பூக்கள்.
மற்றவர்களின் கவனத்தைக் கவர்வதற்காகவே உயர்ந்து நின்றிருந்தன. அந்தப்
பூக்கள், வேலிக்கு வெளியே நிற்கிற டெய்ஸியைக் கவனிக்கவே இல்லை. ஆனால்
டெய்ஸி அந்தப் பூக்களைப் பார்த்துச் சொன்னது:

""நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்! உங்களின் அருகே நிற்பதே எனக்குப் பெருமைதான். உங்கள் அழகைப் பார்த்து ரசிக்கலாமே!'

அப்போதுதான் வானம்பாடி பறந்து வந்து தரையில் நின்றது. அது மற்ற பூக்களின்
அருகே செல்லவில்லை, டெய்ஸிக்குப் பக்கத்தில் வந்து நின்றது. டெய்ஸியைச்
சுற்றிவந்து நடனமாடிப் பாடியது. பிறகு தனக்குத் தானே சொல்லிக்கொண்டது:

""இந்தச் சிறிய பூ மிகமிகவும் அழகாக இருக்கிறதே! இது மிகவும் இனிய அன்பான மனதைப் பெற்றிருக்கிறது!''

இதைக் கேட்டு அந்த டெய்ஸி பூ எவ்வளவு சந்தோஷப்பட்டதென்று யாராலும் சொல்ல
முடியாது. வானம்பாடி டெய்ஸியை முத்தமிட்டது. அதற்காக நிறையப் பாடல்களைப்
பாடியது. பிறகு பறந்து சென்றது. டெய்ஸிக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

சற்று வெட்கத்துடனும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் அது, வேலிக்குள்
இருந்த பூக்களைப் பார்த்தது. டெய்ஸிக்கு வானம்பாடி அளித்த கெüரவத்தையும்,
அதனால் டெய்ஸி அடைந்த மகிழ்ச்சியையும் வாசல் வேலிக்குள் இருந்த பூக்கள்
பார்த்துக்கொண்டுதான் இருந்தன. அதைப் பார்த்து சில பூக்கள் புன்னகைத்தன,
சில பூக்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டன. முகத்தைத்
திருப்பிக்கொண்டதற்குக் காரணம் பொறாமைதான்.

அப்போது ஒரு சிறுமி சிறிய கத்தியுடன் வந்தாள். வாசலில் நின்றிருந்த சில
பூக்களை அறுத்தெடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அதைப் பார்த்து டெய்ஸி,
"ஐயோ பாவம்! அவர்களின் கதை முடிந்துவிட்டதே!' என்று வருந்தியது.

தான் இன்னும் உயிருடன் இருப்பதற்காக டெய்ஸி இயற்கைக்கு நன்றி சொன்னது.
சூரியன் மறைந்தபோது அது இதழ்களை மடக்கிக்கொண்டு உறங்கியது. இரவு முழுதும்
அது வானம்பாடியைக் குறித்தும், சூரியனைக் குறித்தும் கனவு கண்டது.

அடுத்த நாள் காலையில் அது மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் இதழ்களை
மலர்த்தியது. காற்றைச் சுவாசித்தது. சூரிய ஒளியில் குளித்தது.
வானம்பாடியின் பாடலை ஆர்வத்துடன் கேட்டது. ஆனால் இப்போது அந்தப் பறவையின்
பாட்டு துயரத்துடன் இருந்தது. ஏனென்றால் யாரோ அந்தப் பறவையைப்
பிடித்துக் கூண்டில் அடைத்துவிட்டார்கள்.

அந்தக் கூண்டை, திறந்த சன்னலின் அருகே தொங்கவிட்டிருந்தார்கள். வானம்பாடி
இப்போது எதைப் பற்றிப் பாடிக்கொண்டிருக்கிறது? சுதந்திரத்தைப் பற்றியும்,
வெளியே ஆனந்தமாக பறந்து திரிவதைப் பற்றியும், வயல்களில் உள்ள தானியமணிகளைப்
பற்றியும் துயரத்துடன் பாடியது. ஆனால் அந்தப் பறவை இப்போது கூண்டிற்குள்
அடைபட்டுக் கிடந்தது.

வானம்பாடிக்கு உதவி செய்ய நினைத்தது டெய்ஸி. ஆனால் அந்தப் பூவால் என்ன
செய்ய முடியும்? அது, கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப் பற்றியும், அதற்குத்
தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்பது பற்றியும் மிகவும்
வருந்தியது.

அந்த நேரம் இரண்டு சிறுவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அவர்கள் இருவரும் டெய்ஸியின் அருகே வந்து நின்றார்கள். அவர்கள் கையில் ஒரு
கத்தி இருந்தது. அவர்கள் எதற்காக தன் அருகே வந்து நிற்கிறார்கள் என்று
டெய்ஸிக்குப் புரியவில்லை.

சிறுவர்களில் ஒருவன் சொன்னான்:

""நாம் வானம்பாடிக்காக இங்கிருந்து புல்தரை வெட்டி எடுக்கலாம்.''

பிறகு அவன் டெய்ஸிக்குச் சுற்றிலும் சதுரமாக புல்தரையைப் பெயர்த்து
எடுக்கத் தொடங்கினான். தான் வெட்டி எடுக்கும் பகுதியில் பூச்செடி
இருக்கவேண்டும் என்று நினைத்தான் அவன். அப்போது இன்னொரு சிறுவன் சொன்னான்:

""அந்தப் பூவைப் பிடுங்கி எறிந்துவிடு.''

டெய்ஸி பயந்து நடுங்கியது. பிடுங்கி எறிந்தால் அதன் வாழ்க்கை
முடிந்துவிடும். அது இன்னும் வாழ விரும்பியது. குறிப்பாக இப்போது. வெட்டி
எடுக்கப்பட்ட புல் தரையுடன் தான் வானம்பாடியின் கூண்டில் வைக்கப்படுவதை
மிகவும் விரும்பியது அது.

அப்போது இன்னொரு பையன் சொன்னான்:

""வேண்டாம். அந்தப் பூ அப்படியே இருக்கட்டும். அது நல்ல அலங்காரமாக இருக்கும்.''

அப்படி பூ, தான் நின்றிருந்த இடத்துடன் வானம்பாடியின் கூண்டில்
வைக்கப்பட்டது. அப்போது வானம்பாடி தான் இழந்த சுதந்திரத்தைப் பற்றிப்
புலம்பி அழுதது. கூண்டின் இரும்புக் கம்பிகளில் சிறகால் அடித்தது.
வானம்பாடிக்கு ஆறுதல் சொல்ல நினைத்தது டெய்ஸி. ஆனால் அதற்கு பேசத் தெரியாது
அல்லவா!

மதியப் பொழுதானது. வானம்பாடி தனக்குத்தானே பேசிக்கொண்டது: ""கூண்டிற்குள்
தண்ணீர் இல்லை. அந்தப் பையன்கள் வெளியே சென்றிருக்கிறார்கள். எனக்குத்
தண்ணீர் வைப்பதற்கு அவர்கள் மறந்துவிட்டார்கள். என் தொண்டை மிகவும்
வறண்டுவிட்டது. நான் இப்போது இறந்துவிடுவேன்! சூரிய வெளிச்சம், புற்பரப்பு,
இயற்கையின் எல்லா அழகுகளையும் விட்டு நான் போகப்போகிறேன்!''

வானம்பாடி தன் அலகை புற்களோடு சேர்த்து வைத்தது. சற்றுக் குளிர்ச்சி
கிடைப்பதற்காகத்தான் அப்படி செய்தது. அது டெய்ஸியைப் பார்த்தது. அதன் இதழை
முத்தமிட்டுச் சொன்னது:

""பாவமான பூவே, நீயும் இங்கிருந்து உலர்ந்துபோய்விடுவாயே...வெளி உலகம்
முழுதும் என்னுடையதாயிருந்தது. அதற்குப் பதிலாக நீ நிற்கும் சிறிய தரையை
அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். நான் எவ்வளவு இழந்திருக்கிறேன்
என்பதை உன்னைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்கிறேன்...''

"என்னால் இந்தப் பறவையைச் சமாதானப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைத்தது டெய்ஸி.

வானம்பாடிக்குத் தாகத்தால் மயக்கம் வருவதுபோலிருந்தது. அது டெய்ஸியையே
பார்த்துக்கொண்டிருந்தது. மாலை நேரமானது. அப்போதும் வானம்பாடிக்கு யாரும்
நீர் தரவில்லை. அது மயக்கத்துடன், பைத்தியம்பிடித்ததுபோல கூண்டிற்குள்
சுழன்றது. இறக்கைகளைப்போட்டு அடித்துக்கொண்டது. அப்போதும் அது
பாடியது. ஆனால் அது சோகம் மிகுந்த பாடலாக இருந்தது. கடைசியில் அது தன்
தலையை டெய்ஸியின் மீது சாய்த்தது. அப்படியே இறந்துவிட்டது.

துக்கத்தின் சுமை தாளாமல் டெய்ஸி துவண்டு வானம்பாடியின் மீதே விழுந்தது.

அடுத்த நாள் காலையில்தான் அந்த இரண்டு சிறுவர்களும் வந்தார்கள். இறந்துபோன
வானம்பாடியைக் கண்டு அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்கள் ஒரு குழி
தோண்டினார்கள். அதைச் சுற்றி பூக்களால் அலங்கரித்தார்கள். வானம்பாடியை ஒரு
சிறிய பெட்டியில் வைத்து மிகவும் மரியாதையுடன் அடக்கம் செய்ய
நினைத்தார்கள்.

வானம்பாடி பாட்டுப்பாடி மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்
வாழ்ந்துகொண்டிருந்தபோது அதைச் சிறைப்படுத்தியவர்கள், அது
இறந்ததற்குப் பிறகு அழுகிறார்கள். அதன் சவஉடலை அலங்கரிக்கிறார்கள்.

டெய்ஸி நின்றிருந்த புல்தரையை அவர்கள் பாதையில் வீசி எறிந்தார்கள்.
வானம்பாடிப் பறவையை நேசித்த, அதற்கு ஆறுதல் சொல்ல ஆசைப்பட்ட அந்தப் பூவைப்
பற்றி யாருக்கும் தெரியவில்லை.


ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன்
தமிழில்: கதிரவன்

[You must be registered and logged in to see this image.] தினமணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum