தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?

Go down

நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?  Empty நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?

Post by பட்டாம்பூச்சி Wed Nov 10, 2010 5:06 pm

‘‘சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்’’ (லூக்கா 18 : 1)
‘‘புருஷர்கள் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ண வேண்டும்’’ (1 தீமோ 2 : 8)
மிகவும் முக்கியமானதும், உங்களுடைய உடனடி ஆலோசனைக்குப் பாத்திரமானதுமான ஒரு கேள்வியை நான் உங்களுக்கு முன்னர் வைக்க விரும்புகின்றேன். உங்களுடைய கண்கள் நோக்குகின்ற இந்தச் செய்தியின் தலைப்பே அந்தக் கேள்வியாகும். அது இரண்டே இரண்டு சிறிய வார்த்தைகளடங்கிய ‘‘நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?’’ என்பதாகும்.

இந்தக் கேள்வியானது மற்ற எவரும் உங்கள் ஸ்தானத்தில் உங்களுக்காக நின்று பதில் சொல்லாமல் நீங்கள் மட்டுமே விடையளிக்கக் கூடிய கேள்வியாக இருக்கின்றது. நீங்கள் உங்கள் ஆலய ஆராதனையில் கலந்து கொள்ளுவீர்களோ இல்லையோ அது உங்கள் குருவானவருக்கே தெரியும். நீங்கள் உங்கள் குடும்ப ஜெபங்களில் பங்கு எடுப்பீர்களோ இல்லையோ அது உங்கள் இனத்தவர்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் தனிமையில் ஜெபிக்கின்றீர்களோ இல்லையோ அது உங்களுக்கும் உங்கள் ஆண்டவருக்கும் இடைப்பட்ட காரியமாகும்.

வாசிப்போனே, நான் உங்களுக்கு முன்பாக என் நெஞ்சார்ந்த அன்போடு கொண்டு வரும் கேள்வியை நீங்கள் உடனடியாக ஆராய்ந்து பாருங்கள். நான் உங்களிடம் கேட்கும் கேள்வியானது உங்கள் மூச்சைத் திணறப்பண்ணக்கூடிய மிகவும் இரகசியமான கேள்வி என்று நீங்கள் சொல்லாதேயுங்கள். தேவனுடைய பார்வையில் உங்கள் இருதயம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை பயமுறுத்த அந்தக் கேள்வியில் எதுவுமே இல்லை. ‘‘உங்களுடைய ஜெபத்தை நீங்கள் சொல்லிக் கொண்டிருங்கள்’’ என்று கூறி எனது கேள்வியை நீங்கள் அப்பால் தள்ளிப் போடாதேயுங்கள். ஜெபத்தைச் சொல்லுவது என்பது ஒரு காரியமாகும். ஆனால் ஜெபிப்பது என்பது அதி மேன்மையானதாகும். எனது கேள்வி தேவையற்றது என்று என்னிடம் சொல்லாதேயுங்கள். நான் சொல்லுவதை சில நிமிடங்கள் நீங்கள் பொறுமையாக இருந்து கேட்பீர்களானால் நான் கேட்கும் கேள்வியானது எத்தனை அவசியமானது என்பதை நான் உங்களுக்கு விளக்கிக் காண்பிப்பேன்.

1. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா? என்று நான் உங்களைக் கேட்பதன் காரணம், ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு ஜெபம் இன்றியமையாத தேவையாகும்.


ஆம், ஜெபம் அத்தியாவசியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். குழந்தைகளோடும், முட்டாள்களோடும் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கவில்லை. தேவனை அறியாத அஞ்ஞானிகள் வாழ்கின்ற நாட்டின் காரியத்தை நான் சீராக்க எழுந்து நிற்கவில்லை. யாரிடத்தில் கொஞ்சமாகக் கொடுக்கப்படுகின்றதோ அவர்களிடம் கொஞ்சமாகக் கேட்கப்படும் என்பதை நான் அறிவேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற கிறிஸ்தவர்களால் நிரம்பி வழியும் நம்முடைய சொந்த நாடான இங்கிலாந்து தேசத்தைப் பார்த்துக் கூறுகின்றேன். இதில் வாழ்கின்ற எந்த ஒரு மனிதனும், ஸ்திரீயும் ஜெபிக்காத பட்சத்தில் இரட்சிப்படைய முடியவே முடியாது.

‘‘கிருபையினாலே இரட்சிப்பு’’ என்ற காரியத்தை யாரைக் காட்டிலும் வலுவாக நான் உயர்த்திக் காண்பிப்பேன். இந்தப் பூமியின் முகத்தில் வாழ்கின்ற பாவிகள் யாவரிலும் கொடிய மாபெரும் பாவிக்கு தேவனுடைய ஈவும் இலவசமுமானதும் முழுமையானதுமான பாவ மன்னிப்பை நான் மிகுந்த மனமகிழ்வோடு வாக்குப்பண்ணுவேன். அந்தப் பாவியின் மரணப்படுக்கையண்டை எந்த ஒரு தயக்கமுமில்லாமல் நான் நின்று ‘‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இப்பொழுது விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்’’ என்று சொல்லுவேன். ஆனால், அந்த பாவியான மனிதன் தன்னளவில் வாய் திறந்து அந்த இரட்சிப்பை தன் ஆண்டவரிடம் கேட்காமல் பெற்றுக் கொள்ளுவது என்பது நான் வேதத்தில் பார்க்க முடியாத ஒரு காரியமாகும். தனது அந்தரங்க ஆத்துமாவை தேவ சமூகத்துக்கு நேராக கண்ணீரின் பெருமூச்சோடு ஏறெடுத்து தனது பாவங்களுக்கான மன்னிப்பை ‘‘அன்பின் ஆண்டவர் இயேசுவே, எனது பாவங்களை மன்னித்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் எனக்குத் தாரும்’’ என்று கதறாத எந்த ஒரு மனிதனுக்கும் அது கிடைத்ததை நான் எங்கும் காணவில்லை.

ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் தனது வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பது முழுமையான அவசியம் இல்லை. ஒரு மனிதன் படிப்பறிவில்லாத நிர்மூடனாகவோ அல்லது கண் பார்வை இழந்த கபோதியாகவோ இருப்பினும் இரட்சகர் இயேசு அவனது உள்ளத்தில் வாசம் செய்கின்றவராக இருக்கலாம். அதே போல, சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் ஒரு இடத்தில் ஒரு மனிதன் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படாத இடத்தில் அவன் ஒருக்கால் வாழலாம் அல்லது அவன் நோய் பிணியால் கட்டில் கிடையாகக் கிடக்கலாம் அல்லது காது கேட்காத செவிடனாக இருக்கலாம். ஜெபத்தைக் குறித்து இந்தவிதமான தாற்பரியங்கள் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் உள்ளம் நொறுங்குண்டு தேவ சமூகத்தில் ஜெபிக்க வேண்டியது தீராத அவசியமாகும்.

சரீர சுகத்துக்கடுத்த காரியமானாலும் சரியே அல்லது கல்விக்கடுத்த விஷயமானாலும் சரியே அதற்காக எந்த ஒரு தனிப்பட்ட ராஜ பாதையும் கிடையாது. இளவரசர்களானாலும், ராஜாக்களானாலும், ஏழை மக்களானாலும், விவசாயிகளானாலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய சரீர சம்பந்தப்பட்ட காரியங்களானாலும், அறிவுக்கடுத்தக் காரியங்களானாலும் எந்த ஒரு வேற்றுமையுமின்றி அவரவர் காரியங்களை அவர்களேதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக புசிக்கவோ, குடிக்கவோ, அல்லது தூங்கவோ முடியாது. எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக தன்னளவில் மொழியின் அரிச்சுவடியைப் படிக்க இயலாது. இந்தக் காரியங்கள் யாவும் மாந்தர் அவரவருடைய பிரயோஜனத்துக்காக அவர்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியங்களாகும். அப்படி அவர்கள் செய்யாதபட்சத்தில் அவர்கள் ஒருக்காலும் அதின் பயனை அனுபவிக்க இயலவே இயலாது.

அதைப்போலவேதான், மனது, சரீரம், ஆத்துமாவின் காரியங்களும் இருக்கின்றன. ஆத்துமாவின் ஆரோக்கியத்திற்கும் அதினுடைய வளர்ச்சிக்கும் சில முக்கியமான நடபடிகள் தவிர்க்க முடியாத, அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. இந்தக் காரியங்களை சம்பந்தப்பட்ட அந்தந்த தனிப்பட்ட நபர்களே பொறுப்பெடுத்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே மனந்திரும்ப வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே இயேசு இரட்சகரை தங்கள் இருதயத்தில் சொந்த இரட்சகராக ஏற்று நெஞ்சார அவரை அனுபவிக்கவேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே ஆண்டவர் இயேசுவோடு பேசவேண்டும், அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும், அவரை நோக்கிக் கெஞ்ச வேண்டும். அந்தக் காரியத்தை நீ ஒருவனேதான் உன் மட்டாக செய்தாக வேண்டும். உனக்குப் பதிலாளாக இந்தக் காரியத்தை வேறு எவராலும் செய்யவே இயலாது.

‘‘அறியப்படாத ஒரு தெய்வத்தால்’’ நீ எப்படி உனது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஜெபம் இல்லையேல் நீ தேவனை எவ்வாறு அறிந்து கொள்ளுவாய்? இந்த உலகத்திலுள்ள மக்களுடன் நீ பேசி பழகி இருக்காத பட்சத்தில் அவர்களைக்குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது அல்லவா? அப்படித்தானே, உன் ஆண்டவருடன் ஜெபத்தின் மூலமாகப் பேசாதபட்சத்தில் உன்னால் தேவனை அறிந்து கொள்ள முடியாது. உன் ஆண்டவருடன் மோட்சத்தில் நீ இருக்க விரும்புவாயானால் ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இந்தப் பூவுலகத்தில் கண்டிப்பாக வாழ்ந்தாக வேண்டும். ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இருக்க விரும்புவாயானால் நீ கட்டாயம் ஜெபித்தே ஆக வேண்டும்.

வாசிப்போனே, கடைசி நாளில் கிறிஸ்துவின் வலது பக்கத்தில் அநேகர் நின்று கொண்டிருப்பார்கள். வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பரிசுத்தவான்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஒருவராலும் எண்ணித் தொகையிட முடியாத திரள் கூட்டம் அது. அந்த திரள் கூட்டத்தினரின் மீட்பின் காரியம் இறுதியாக நிறைவடையும்போது மீட்பின் ஜெய கீதம் அவர்கள் அனைவரின் வாயிலிருந்தும் வெடித்துக் கிளம்பும். மெய்யாகவே அந்தப் பாடல் மகிமையான ஒரு பாடலாகும். அனைவராலும் ஒரே நேரத்தில் பாடப்படுகின்ற அந்தப் பாடலின் ஓசையானது திரளான தண்ணீர்களின் இரைச்சல்களைப் பார்க்கிலும், பெரும் இடி முழக்கங்களைப் பார்க்கிலும் பலத்த ஓசையுடையதாகவிருக்கும். ஆனால் மகா ஆச்சரியமானதொரு காரியம் என்னவெனில், அந்தப் பாடலில் எந்த ஒரு ஏற்றத் தாழ்வோ அல்லது மாறுபட்ட, வித்தியாசமான கருத்துக்களோ இல்லாமல் அந்தப் பாடல் ஒரே நிலையில் அற்புதமாக அமைந்திருக்கும். அதைப் பாடுகின்ற அந்த திரள் கூட்டம் ஒரே இருதயத்தோடும் ஒரே குரலோடும் அந்தப் பாட்டைப் பாடுவார்கள். அவர்கள் அனைவரின் அனுபவங்களும் மொத்தத்தில் ஒன்றாகவேதான் இருக்கும். அவர்கள் எல்லாரும் விசுவாசித்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் அனைவரும் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தால் தங்கள் பாவங்களறக் கழுவப்பட்டிருப்பார்கள். அவர்கள் யாவரும் மறுபடியும் பிறந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஜெபிக்கிறவர்களாயிருப்பார்கள். ஆம், பூலோகத்தில் நாம் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். பூலோகத்தில் நாம் ஜெபிக்காவிட்டால் பரலோகத்தில் நாம் நிச்சயமாக ஆண்டவரை பாடித் துதிக்க முடியாது.

வாசிப்போனே, ஜெபிக்காமலிருப்பது என்பது தேவனில்லாமல் இருப்பது என்பதாகும். ஜெபிக்கமாலிருப்பது என்பது கிறிஸ்து இரட்சகர் இல்லாமலிருப்பது, தேவ கிருபை இல்லாமலிருப்பது, நம்பிக்கை இல்லாமலிருப்பது, மோட்சம் இல்லாமலிருப்பது என்பதுவே அதின் பொருளாகும். அந்த வழி நரகத்தின் வழியாகும். ‘‘நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?’’ என்று நான் உங்களிடம் கேட்ட கேள்வியின் தார்ப்பரியம் இப்பொழுது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன். நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum